Saturday, March 3, 2018

வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை – Rev. Billy Graham




உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. (யாக்கோபு 4:14)
வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் பெரிய ஆச்சரியமான காரியம் என்ன என்று அனேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக மாணவர் என்னிடம்  கேட்டார். “ வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை ” என நான் உடனே பதில் சொன்னேன். பெரும்பாலும் நாம் இந்த உண்மையை அறிவதற்கு முன்னமே, ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன, வாழ்க்கை அதன் இறுதி காலத்தை நெருங்கிவிடுகிறது.
ஒரு பக்கத்தில், வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை  நமக்கு அறைகூவல் விடுகிறது. நாம் கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, அவரைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய காலம் என்ற ஒன்று இருந்தால், அது இப்பொழுதே! ”ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” என்று இயேசு சொன்னார் (யோவான் 9:4).
வாழ்க்கையின் மிகவும் குறுகிய கால தன்மை  நம்மை ஆறுதல்படுத்தவும் செய்கிறது. வாழ்க்கை மிகவும் குறுகியது – நமக்கு முன்னே இருப்பது நித்தியம்!  உபத்திரவங்கள்  அல்லது போராட்டங்கள் நம்மை மேற்கொள்ளும்போது அல்லது கடினமான சூழ்நிலைகள் நம்மை தீவிரமாக தாக்கும்போது, அவை சீக்கிரத்தில் கடந்து போகும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள்” (2 கொரிந்தியர் 4:17-18).
இந்த  உலக வாழ்க்கை நீண்டகாலம் நிலைத்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழாதீர்கள். அது நடக்காது. மாறாக, நித்தியத்தை உங்கள் கண்முன் வைத்துக் கொண்டு வாழுங்கள்.

(Rev. பில்லி கிரகாம் அவர்கள் எழுதிய  “Hope for Each Day” என்ற தின தியான நூலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது)

Friday, February 9, 2018

சுய பரிசோதனை – யார் அவன், விழுந்து போன ஆராதனை வீரன்???!!!



சமீபத்தில் ஒரு சபையில் பாடப்பட்ட பாடல் வரிகள் நன்றாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட பாடலை நான் திரும்ப் படித்த போது, இதைப் பாடியவர் யார் தெரியுமா? என்ற ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேர்ந்தது. அதன் பின் அந்தப் பாடலை என்னால் பாட முடியவில்லை அல்லது விருப்பமில்லை. ஒரு இசைக் கலைஞராக அந்தப் பாடலின் வரிகளும், இசையும் நன்றாக இருப்பதை நான் ஒப்புக் கொண்டாலும், அதன் பின் இருக்கும் நோக்கத்தையும் ஆவியையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னை நானே ஒரு சுய பரிசோதனைக்குள்ளாக்கிக் கொண்டேன்.
எனக்கும் சம்பந்தப் பட்டவருக்கும் எந்தவிதமான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நேரில் கூட பார்த்தது கிடையாது. நான் செய்வது தவறா அல்லது சரியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். எழுதியவர் யாராக இருந்தால் என்ன, அந்தப் பாடலைப் பாடுவதில் என்ன தவறு என்று ஒரு தற்பரிசோதனைக் கேள்வி ஒன்றை முன் வைத்து சிந்திக்க ஆரம்பித்தேன். அடுத்த சில விநாடிகளில் விடை கிடைத்தது. கர்த்தரே அதை நினைவுபடுத்தினார் என்று நம்புகிறேன்.

சாத்தான் யார், அவன் என்னவாக முன்பு இருந்தான் என்ற கேள்வியிலேயே எனக்கான பதிலும் கிடைத்தது.
இதை வாசிக்கும் சிலர், சாத்தானைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா, அவன் மிகவும் கேவலமானவன், தேவனுடைய சித்ததிற்கும், தேவனுடைய பிள்ளைகளுக்கும் எப்போதும் எதிர்த்து நிற்பவன் மாத்திரம் அல்ல இரவும் பகலும் அவர்கள் மேல் குற்றம் சாட்டுபவன் அல்லவா என்று நினைக்கக் கூடும். வேதாகமத்தில் எசேக்கியேல் 28: 12-19 ஐ வாசிக்கும்போது நாம் சாத்தான் அவன் வீழ்ச்சிக்கு முன் என்னவாக இருந்தான் என்பதை அறியலாம்.
ஏசாயா 14:12ல் “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே” எனத் துவங்கும் வேத பகுதிக்கு முன் பின்வரும் வசனத்தை வாசிக்கிறோம்.
உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை.

இதை எழுதுவதற்குச் சற்றுக் கடினமாக இருப்பினும், எழுத வேண்டிய தருணம் இது என்பதால் எழுதுகிறேன்.
ஆவியானவர்  சபைகளுக்குச் சொல்கிறதை காதுள்ளவன் கேட்கக் கடவன்.
(வெளி. 3:22).