Showing posts with label Tamil Christian poem. Show all posts
Showing posts with label Tamil Christian poem. Show all posts

Sunday, October 6, 2019

சோர்ந்து போகாதே...


தடைகள் பெருகி தடுமாறும் போது,
ஆதரவின்றி அனாதை போல உணரும்போது,
செய்யாத குற்றம் உன் மேல் சுமரும்போது,
பகைவர்கள் எள்ளி நகையாடும்போது
உதவ வேண்டியவர் உதறிக் கைவிடும்போது
நீ சோர்ந்து போகாதே


யார் இல்லை எனினும் நான் உண்டு
உனக்காக உயிரையே தந்த நான்
உன் வேதனைகளை அறியாதிருப்பேனோ
மீட்பின் வழி திறந்த நான்
சோதனைகளில் உன்னுடனே இருப்பேன்
கவலை மறந்து தோள்களில் சாய்ந்து
அனைத்தையும் என்னிடம் விட்டுவிடு
நான் தரும் சந்தோச சமாதானம்
அதற்கு எதுவுமில்லை சமானம்!
இலவசம்! விலையொன்றுமில்லை
அன்புக்கேது விலை!

இயேசு: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28)

Wednesday, July 25, 2018

ஏசுவைப் பாடுவேன் ஏனென்று கேட்காதீர்கள்

ஏசுவைப் பாடுவேன்
ஏனென்று கேட்காதீர்கள்
ஏழை என் மனதிலுள்ள
ஏக்கங்கள் அனைத்திலும்
ஏமாற்றாமலெனை மாற்றினார்
ஏசியவர்கள் மத்தியில்
ஏளனம் செய்தவர் காண
ஏற்றமுறச் செய்தாரவர்

ஏன் என்ற கேள்விகள்
ஏராளம் இருந்தன
ஏதேதோ குழப்பங்கள்
ஏவினவன் மகிழ்ந்தான்
ஏதேனினின் தொடர்ச்சி என
ஏகடியம் செய்து வீழ்த்தப் பார்த்தான்

ஏந்தினார் தம் கரங்களில்
ஏதுக்கழுகிறாய் நான் இருக்கிறேன்
ஏகாதிபதி, என் கைகளில் அதிகாரம்
ஏசாயா முதலிய தீர்க்கருரைத்தபடி
ஏறினேன், கொல்கதாவில் பாவத்தை கொன்றுபோட்டேன்
ஏனெனில் நீ என் பிள்ளை, உனக்காகவே உயிர்கொடுத்தேன்
ஏற்பாட்டில் உள்ள படி உயிர்த்தெழுந்தேன்
ஏற்ற தந்தை நானிருக்க கலங்காதே
ஏக மனதோடு என்னிடம் வா என்றவர்
ஏனையோர் விலகினாலும், எப்போதும் உடன் இருப்பேன்
ஏசுவே என்றழைத்தால், நான் பேசுவேன்
ஏன் என்ற கேள்விக்கு பதில் தருவேன்
ஏனெனில் நானே உன் பதில் என்றார், இயேசு.

- அற்புதராஜ்
#Tamil_Christian_poem
#தமிழ்_கிறிஸ்தவ_கவிதை