Friday, December 31, 2021

நாளைய தினத்தைக் குறித்து நமக்கு என்ன தெரியும்?

வாசிக்க:  சகரியா 7-8; நீதிமொழிகள் 27; வெளிப்படுத்தின விசேஷம் 17

வேத வசனம்:  நீதிமொழிகள் 27: 1. நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

கவனித்தல்:   இன்றைய வாட்சப் தலைமுறையில், மக்கள் வேகமாக ஒன்றில் இருந்து மற்றொரு காரியத்திற்கு மாறி விடுகிறார்கள். தொழில்நுட்பங்கள் மற்றும் அது தொடர்பான தேவைகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. மக்கள் தங்கள் எதிர்காலத்தைக் குறித்து திட்டமிடும் முறை மிகப்பெரிய அளவில் மாறி இருக்கிறது. மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் அல்லது கடந்த கால சாதனைகளின் அடிப்படையில் பெருமை பாராட்டிக் கொள்வதை நாம் காண்கிறோம். எதிர்காலத்தைப் பற்றிய நம் மனிதப் புரிதல் ஒரு எல்லைக்குட்பட்டது என்றாலும், அதைப் பற்றி நமக்கு எவ்வித நிச்சயமும் கிடையாது என்றாலும் கூட, அனேகர் தாங்கள் எதிர்காலத்தில் எப்படி இருப்போம் அல்லது அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சொல்லி தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். பரிசுத்த வேதாகமம் எவ்வித பெருமையையும் எதிர்த்து நம்மை எச்சரிக்கிறது. இங்கே அதற்கான காரணம் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது—”ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.” லூக்கா 16ஆம் அதிகாரத்தில், அனேக ஆண்டுகள் நான் உயிர்வாழ்வேன் என்று நினைத்த ஐசுவரியவானாக இருந்த மூடனைப் பற்றி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு உவமையைக் கூறினார்.  அனேகர் இந்த உலகத்தில் நீண்ட காலம் உயிர்வாழ்வோம் என்று நம்பி கொண்டு, அதிகமதிகமாக செல்வங்களையும் உலகப் பொருள்களையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறமோ, நாம் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என இயேசு நமக்கு போதித்திருக்கிறார்.

நாளைய தினத்தைக் குறித்து, மத்தேயு 6:25-34 இல், இயேசு எதற்கும் கவலைப்படவேண்டாம் என உற்சாகப்படுத்துகிறார். வாழ்க்கையின் கவலைகள் நம்மை அழுத்தும்போது, இயேசுவின் வார்த்தைகளையும் தேவன் நம் மேல் வைத்திருக்கிற கரிசனையையும் நாம் நினைத்து வாழ வேண்டும். “என் காலங்கள் உம்முடைய கையில் இருக்கிறது” என்று சங்கீதக்காரனாகிய தாவீது பாடுகிறார்.  நம் எதிர்காலமானது தேவனின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுதலுக்கு எதிராக வேதம் போதிக்கிறது என்று சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். மாறாக, வேதாகமானது நாம் தாழ்மையாக இருந்து, நம் வாழ்வில் தேவனைச் சார்ந்து நாம் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த நம்மை உற்சாகப்படுத்துகிறது. ”ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” (யாக்கோபு 4:13-16) என யாக்கோபு மிகவும் எச்சரிக்கையுடன் பேசுகிறார்.. கிறிஸ்துவில், தேவன் நம் கடந்த கால தோல்விகளை மேற்கொள்ளவும், நமக்காக மிக அழகிய எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணி இருக்கிறார். பெருமையினால் நாம் அவைகளை சுதந்தரித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். நாம் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருக்கும்போது, எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு தேவன் தம் கிருபையை தந்து நம்மைப் பெலப்படுத்துகிறார். தேவனை நம்பி, நாம் எதையும் எதிர்கொள்ளமுடியும்.  தேவனை நம்பி, நான் எதையும் எதிர்கொள்ள முடியும். எதிர்காலத்தைக் குறித்த நம் பார்வையை பிசாசு மங்கலாக்க முயற்சி செய்யும்போது, தேவன் ஆட்சி செய்கிறார் என்பதையும் எதிர்காலத்திற்கான திறவுகோல்களை இயேசு கைகளில் வைத்து இருக்கிறார் என்பதையும் பார்க்கும்படி நம் கண்களை தேவன் பிரகாசப்படுத்துகிறார். நம் எதிர்காலத்தைப் பற்றி அனைத்தும்  நமக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஏனெனில் அது வாழ்க்கையின் சுவராசியமான தன்மையை இழந்து போகச் செய்து சலிப்படையச் செய்து விடும். நம் தேவனுடைய கரங்களில்  நாமும் நம் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது நாம் நாளைய தினத்தைக் குறித்து நிச்சயமாக அறிந்திருக்கிற ஒரு காரியம் ஆகும்.

பயன்பாடு: எதையாகிலும் குறித்து பெருமை பாராட்டும்படி என் சிந்தனைகள் என்னைத் தூண்டும்போது, நான் தாழ்மையாக இருக்கும்படி தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் நான் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.  தேவன் மீது என் கவலைகள் அனைத்தையும் நான் வைக்கும்போது, அவர் என்னைக் கருத்தாய் விசாரித்தறிகிறார். நான் என் எதிர்காலத்தைக் குறித்து பேசும்போது, நான் அதைப் பற்றி அறிந்திருக்கிறவைகளை மட்டுமே பேசுவேன். இயேசு அனைத்தையும் அறிந்திருக்கிறார். தேவனுடைய சித்தத்தின்படி  நான் காரியங்களைச் செய்து வாழ்வேன்.

 ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,   என் எதிர்காலத்திற்காக நீர் தந்திருக்கிற அற்புதமான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் வார்த்தைகளை விசுவாசித்து, அதன்படி வாழ என்னைப் பலப்படுத்தியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவன் பார்க்கிறபடி நான் எல்லாவற்றையும் பார்ப்பதற்கும் தேவ கிருபையில்  தாழ்மையுடன் வாழ்வதற்கும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 360

What do we know about tomorrow?

READ: Zechariah 7-8; Proverbs 27; Revelation 17

SCRIPTURE: Proverbs 27: 1 Do not boast about tomorrow, for you do not know what a day may bring.

OBSERVATION: In the present WhatsApp generation, people swiftly move from one thing to another. Technologies and their corresponding demand are changing from time to time. The way people plan for their future also has been changed a lot. We see people boast about themselves based on their plans for the future or past achievements. Though the human understanding about the future is limited, and we have no assurance about it, many people boast about their future by saying how they would be or what their lives would become. The Bible warns us against any form of human pride. Here, the reason for it is given clearly—"for you do not know what a day may bring.” In Luke 16, we read a parable of our Lord Jesus in which we learn about a rich fool who thought he would live for many years. We see a lot of people accumulate more and more wealth and worldly possessions as if they are going to live here forever.  On the other hand, Jesus teaches us to store our treasures in heaven.

Concerning tomorrow, In Matthew 6:25-34, Jesus encourages us not to worry about anything. When life worries burden us, we need to remember Jesus’ words and God’s concerns for us. David sings, “My times are in your hands” (Ps.31:15). God knows our present, past, and future. Our future is in God’s hands! Some misunderstand that the bible is speaking against planning for the future. Instead, the bible encourages us to be humble and express our dependence on God in our lives. James uses a cautious expression, “you ought to say, “If it is the Lord’s will, we will live and do this or that” (James 4:13-16). In Christ, God helps us overcome our past failures and promises a beautiful future fo us. We cannot inherit them by pride, for God opposes the proud. As we walk humbly before God, he gives us his grace and equips us to face the future. Trusting God, we can face anything. When the devil tries to dim our vision about the future, God brightens our eyes to see that he is sovereign and holds the keys for our future. We may not or need not know everything about the future. For it will make our life bored. We know one thing for sure that our future and we are safe in the hands of God.

APPLICATION: When my thoughts prompt me to boast about something, I should never forget God and his words to be humble. When I cast all my anxieties on God, he takes care of me. When I speak about my future, I will speak only what I know about it. Jesus knows everything. I will live and do things as God wills.  

 PRAYER: Father God, thank you for your wonderful promise for my future. Jesus, strengthen me to believe your words and live accordingly. Holy Spirit, help me to see everything from God’s perspective and live humbly in God’s grace. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 360

(Tamil version of this devotion is posted here)


 

Thursday, December 30, 2021

பரிசுத்த வேதாகமம் கூறும் ஒரு வாழ்க்கைப் பாடம்

வாசிக்க:  சகரியா 5-6; நீதிமொழிகள் 26; வெளிப்படுத்தின விசேஷம் 16

வேத வசனம்:  நீதிமொழிகள் 26: 27. படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.

கவனித்தல்:  போட்டி நிறைந்த நம் நவீன சமுதாயத்தில், சிலர் தங்களுடைய நோக்கம் அல்லது இலக்குகளை அடைந்து தீர எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். சில நேரங்களில், மற்றவர்களை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள் அல்லது மற்றவர்களை வீழ்த்தி மேலே வருகிறவர்கள் வெற்றிகரமானவர்கள் என்று கருதப்படுவது நம்மை வேதனைப்படுத்துகிறது. இந்த உலகம் நல்லவர்களுக்கானது அல்ல என்று பலரும் சொல்வதை நாம் கேட்கிறோம். இங்கே, விலங்குகளைப் பிடிப்பதற்காக வேடர்கள் தோண்டி வைக்கும் குழியில் அவர்களே விழுந்து மாட்டிக் கொள்வதை ஒரு உருவகமாக ஆசிரியர் பயன்படுத்துகிறார். சாலமோன் தன் தந்தை தாவீதின் ஜெபத்தில் உள்ள வார்த்தைகளை நினைவுகூர்ந்து இதை எழுதி இருக்கலாம் (சங்.7:16,17).

நாம் மற்றவர்களுக்கு செய்வதுதான் நமக்கும் செய்யப்படுகிறது என்பது ஒரு பொதுவான கோட்பாடு ஆகும்.  ”மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (கலா.6:7). மற்றவர்களுக்கு தீமை செய்ய நினைத்து தாங்களே அவைகளில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றிய உண்மையில் நடந்த வாழ்க்கைச் சம்பவங்கள் ஏராளமானவைகளைப் பற்றி  நாம் கூற முடியும். தீமையான திட்டங்களைத் தீட்டி அதில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றி வேதாகமத்திலும் நாம் வாசிக்கிறோம். தங்களுடைய தீய திட்டங்களில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றி வேதாகமமும் நமக்குக் கூறுகிறது.  மொர்தெகாய்க்கு ஆமான் தயார் செய்து வைத்திருந்த அதே தூக்கு மரத்தில் அவன்  மரித்ததும், சிங்கங்களால் கொல்லப்பட்ட தானியேலின் எதிரிகள் பற்றிய கதையும் நமக்கு மிகவும் பரிச்சயமானவை ஆகும்.  மற்றவர்களுக்கு தீமை செய்ய நினைக்கிற மனிதர்கள் அவர்களே தங்களுடைய தீய திட்டங்களில் சிக்கி அழிவது போல, மற்றவர்களை ஆசீர்வதிக்கிற ஒருவர் ஆசீர்வதிக்கப்படுவார். ”ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்” என்று நம் ஆண்டவர் இயேசு நமக்கு போதித்திருக்கிறார் (மத்.7:12).  மற்றவர்களை அன்பு செய்வதில், மன்னிப்பதில் மற்றும் கொடுத்தலில், நம் பிதாவாகிய தேவனைப் போல நாம் தாராளமானவர்களாகவும், பாரபட்சமற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என இயேசு நமக்குக் கூறுகிறார் (லூக்கா 6:36). நம் வாழ்க்கையில் சாதிக்க அல்லது முன்னேற நாம் உலகப்பிரகாரமான திட்டங்கள் எதையும் பின்பற்றக் கூடாது. நாம் கிறிஸ்துவின் முன்மாதிரியைக் கண்டு, அவரைப் பின்பற்ற வேண்டும்.  உலகப்பிரகாரமான திட்டங்கள் கவலைகளையும் பிரச்சனைகளையுமே தருகின்றன, நிலையான வெற்றியைத் தருவதில்லை. இயேசுவோ, இந்த உலகம் தருகிற பிரகாரம் நமக்குத் தருவதில்லை (யோவான் 14:27). கிறிஸ்து நித்திய மகிழ்ச்சியையும் தம் சமாதானத்தையும் நமக்குத் தருகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுகிறிஸ்துவை எவ்விதத்திலும் பின்பற்றி, எப்பொழுதும் அவரில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் தேவனுடைய அன்பின் பிரமாணத்தை நினைவு கூர்ந்து, அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாக  நம் உலகத்தை மாற்றுவோம்.

பயன்பாடு:  வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உலகப் பிரகாரமான கோட்பாடுகள் தேவனுடைய சட்டங்களுக்கு நேர் எதிரானவை. உலகப் பிரகாரமான திட்டங்கள் தற்காலிகமான வெற்றிகளைத் தரக் கூடும். ஆனால் அவைகளில் நிலைத்திருப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால் இயேசுவோ நித்திய வாழ்வையும் வெற்றியையும் தருகிறார். நான் எப்பொழுதும் இயேசுவைப் பின்பற்றி அவரில்   நிலைத்திருப்பேன். கிறிஸ்துவின் வார்த்தைகளையும் போதனைகளையும் பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைவுபடுத்தி, அவைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு பலத்தைத் தருகிறார். வாழ்க்கையைப் பற்றிய தேவனின் பாடமே எனக்குச் சிறந்தது ஆகும்.

 ஜெபம்நல்ல தேவனே, என் மீது பெருகுகிற உம் எல்லா அன்பு மற்றும் இரக்கங்களுக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம்மைப் போல இருக்கவும், எப்பொழுதும் எல்லா இடங்களிலும் உம்மைப் பின்பற்றவும் எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தீமையை நன்மையினால் வெல்ல எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 359

A life lesson from the Bible

READ: Zechariah 5-7; Proverbs 26; Revelation 16

SCRIPTURE: Proverbs 26: 27 Whoever digs a pit will fall into it; if someone rolls a stone, it will roll back on them.

OBSERVATION: In our competition-filled modern society, some people are ready to do anything to achieve their purposes or targets. Sometimes it hurts us when we see those who excel in deceiving others or those who come to the top by causing others to fall off are considered successful people. We hear many people saying that this world is not meant for good people. Here, the author uses a hunter’s pit as a metaphor to say how the hunter himself is trapped in the pit they dig to catch the animals. Solomon might have remembered the words of his father David’s prayer when he writes these words (Psalm 7:16,17).

It is a common principle that what goes around comes around. Apostle Paul says, “A man reaps what he sows” (Gal.6:7). We can say many real-life stories about how people who tried to harm others are trapped in their own evil plans. The bible also tells us the fate of evil-schemers who were trapped in their own evil plans. Haman’s death on the same gallows he prepared for Mordecai and the killing of Daniel's enemies by lions are familiar stories for us. Like a person who intends evil for others is trapped in his evil plans, a person who blesses others will be blessed. Our Lord Jesus teaches, “So in everything, do to others what you would have them do to you, for this sums up the Law and the Prophets” (Mt.7:12). In loving, forgiving others, and giving, Jesus tells us we need to be generous and impartial to be like God the Father (Luke 6:36). We should not follow any worldly plans to improve or achieve in our life. We need to see the example of Christ and should follow him. Worldly plans do not give permanent success but worries and problems. Jesus does not give us “as the world gives” (John 14:27).  Christ gives us eternal joy and His peace. We Christians are called to follow Jesus Christ in every way and remain in him always. Let us remember God’s law of love and make our world a better place for everyone to live.

APPLICATION: Worldly principles for success in life contrast to God’s principles for life. Worldly plans may give temporary success, but remaining in it is very difficult. But Jesus Christ gives me eternal life and victory. I will always follow Christ and remain in him. Holy Spirit reminds me of Christ’s words and teachings and gives me the strength to obey them. God’s lesson for life is the best for me.

 PRAYER: Good God, thank you for all your love and mercies that abound on me. Jesus, help me be like you and follow you always and in all places. Holy Spirit, help me overcome evil with good. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day – 359

(Tamil version of this devotion is posted here)

Wednesday, December 29, 2021

நான் உன்னுடனே இருக்கிறேன்

வாசிக்க:  சகரியா 3-4; நீதிமொழிகள் 25; வெளிப்படுத்தின விசேஷம் 15

வேத வசனம்:  சகரியா 4: 6 செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
7. பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

கவனித்தல்:   புத்தாண்டு ஆராதனைகளில் நாம் அந்த ஆண்டுக்கான தேவனுடைய வாக்குத்தத்தத்தை கேட்க விரும்புகிறோம். நாம் பிரசங்கங்களில் கேட்கிற மற்றும் வாக்குத்தத்த அட்டைகளில் பார்க்கிற பெரும்பாலான வாக்குத்தத்த வசனங்கள்  பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். அவை தேவனுடைய ஜனங்கள் அல்லது தனிநபர்கள் தேவனிடம் திரும்ப அல்லது நம்புவதற்கு அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக முதலாவதாக சொல்லப்பட்டவைகள் ஆகும். ஒரு வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை வாசித்தறிவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவன் பேசிய வார்த்தைகளின் மூலமாக இன்று நம்முடன் பேச விரும்புவது என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு எப்போதுமே பயனுள்ளதும் அவசியமானதும் ஆகும். இங்கே, தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த செருபாபேல் சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்து தேவ ஆலயத்தை மறுபடியும் எடுத்துக் கட்ட ஆரம்பித்தார். ஆனால், யூதர்களின் எதிரிகள் அந்த வேலையை தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளையும் செய்தனர். மக்கள் தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் பதிலாக தங்கள் வீடுகளைக் கட்ட ஆரம்பித்த படியால் இந்த எதிரிகள் சில வெற்றிகளை அடைந்தனர். ஆனால் தேவன் தம் ஜனங்களையும் அவர்களின் தலைவர்களையும் தன் தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியா மூலமாக ஆலயத்தை மறுபடியும் கட்டி முடிக்கும்படி உற்சாகப்படுத்தினார். 16 வருடங்களுக்கு முன்பாக மூலைக்கல்லை போட்ட செருபாபேல் தலைக்கல்லையும் கொண்டு வந்து வேலையை செய்து முடிப்பார் என தேவன் வாக்குப்பண்ணினார்.

செருபாபேல் தாவீதின் அரச வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு அதிகாரமோ இராணுவமோ இல்லை; அவர் அந்நிய தேச மன்னர்களால் அனுப்பப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட தேசாதிபதிகாக இருந்தான். ஆளுகை செய்கிறதற்கான அவனுடைய வலிமை  மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவும், மறுபடியும் ஆலயத்தை எடுத்துக் கட்டி முடிக்க  போதிய அளவு உதவுகிறதாகவும் இல்லை. ”பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று தேவன் செருபாபேலுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். தேவனுடைய ஆவியின் வல்லமையினால், செருபாபேல் தேவனுடைய வேலையை செய்து முடிக்க முடியும். வேலைக்குத் தடையாக இருந்த அனைத்து எதிர்ப்புகளும், அவை உயரமான ஒரு மலையைப் போல பெரிதாக இருந்தாலும், தேவனால் அபிசேகம் செய்யப்பட்டவர்களுக்கு முன்பாக ஒன்றுமில்லாமல் போகும். தேவனுடைய தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியாவின் ஊக்கமான வார்த்தைகளினால் எருசலேம் தேவாலய மறுகட்டமைப்புப் பணி துரிதமாக செய்து முடிக்கப்பட்டது. தேவன் நம் வேலையை ஆசீர்வதிக்கும்போது, நாம் தேவனுடைய பலத்தைப் பெறும்போது, நடைபெற சாத்தியமில்லாதவை என்று கருதப்படுகிற அல்லது தாமதமாகிக் கொண்டிருக்கும் வேலைகள் நடைபெறக் கூடியவைகளாக மாறுகின்றன. நாம் தேவனுடைய சித்தத்தில் வாழ்ந்து அவர் செய்ய வேண்டும் என விரும்புகிறவைகளைச் செய்யும்போது, நாம் எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை. டான் மோயன் எனும் ஆராதனை வீரர் பாடுகிறது போல, “வழியே இல்லை என்று தோன்றுகிற இடங்களிலும் தேவன் பாதையை உண்டாக்குவார்.”  ஒரு மலை போன்ற பெரிய தடை முன்பாக நாம் நிற்கும்போது, தேவனை நம்பி, நாம் விசுவாச வார்த்தைகளைப் பேச முடியும்.  நம் முன் இருக்கும் மலைகளை எதிர்கொள்வதற்கான பலத்தை தேவன் நமக்குத் தருகிறார். செருபாபேலுக்கு உதவின அதே தேவன் நாம் அவருடைய சித்தத்தையும் வேலையையும் செய்யும்போது நமக்கும் உதவ முடியும். தேவனை விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். ஏனெனில், “நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று அவர் வாக்குப் பண்ணி இருக்கிறார்.

பயன்பாடு:   தங்களுடைய பலம், அறிவு, சமுதாய நிலைமை, மற்றும் கடின உழைப்பு ஆகியவை எந்த சவாலான வேலையையும் செய்து முடிக்க உதவும் என சிலர் நம்புகின்றனர். அவை எல்லாம் சற்று பலனளிக்கிறவையாக இருக்கின்றன. ஆயினும், “கர்த்தர் கட்டாவிடில்” நம் அனைத்து முயற்சிகளும் வீணாகி விடலாம். செருபாபேலைப் பலப்படுத்தின அதே தேவன் இன்று அவருடைய வேலையைச் செய்து முடிக்க எனக்கு உதவி செய்ய முடியும்.  நான் தேவனுடைய ஆவியின் வல்லமையை விசுவாசித்து, என் வாழ்வில் அவருக்கு சாட்சியாக இருக்க முடியும். தேவன் என்னுடன் இருக்கிறார்.

 ஜெபம்தந்தையாகிய தெய்வமே, உன்னதத்தில் இருந்து நீர் அருளுகிற பலத்துக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, முடிவு வரை உமக்கு உண்மையாக இருந்து உம் வேலையை செய்து முடிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 358