Tuesday, May 11, 2010

ஆதியாகமம் - வெளிப்படுத்தல் ஒரு ஒப்பீடு

1. ஆதியாகமம்          : வானமும் பூமியிம் படைக்கப்பட்டன. (1:1)
    வெளிப்படுத்தல்  : முந்தின வனமும் பூமியும் ஒழிந்து போயின (21:1)

2. ஆதியாகமம்          : பாழும் வெறுமையுமான பூமி (1:2)
   
வெளிப்படுத்தல்  :  புதிய பூமி (21:1)

3. ஆதியாகமம்          : இருள் மூடியிருந்தது ( 1:2)
   
வெளிப்படுத்தல்  :  இரவே இல்லை(22:5)

4. ஆதியாகமம்          : சூரிய சந்திராதிகள் படைக்கப்பட்டன. (1:14,15) 
   
வெளிப்படுத்தல்  : சூரியன் சந்திரன் தேவையில்லை (21:23)

5. ஆதியாகமம்          : சாத்தான் சுயாதீன மக்களை தண்டிக்கிறான் (3:1-7) 
   
வெளிப்படுத்தல்  :  சாத்தான் எரி நரகத்தில் எறியப்படுகிறான் (20:10)

6. ஆதியாகமம்          : மனிதன் சாத்தானுக்கு அடிமை ஆகிறான். ரோமர் 6:16; ஆதி.3:6) 
      வெளிப்படுத்தல் :  மனிதன் அரசாளுகிறான் (20:4)

7. ஆதியாகமம்           : மனிதன் வெட்கத்தாலும் பயத்தாலும் ஒளிந்து கொள்கிறான்.(3:8,9)
   
வெளிப்படுத்தல்   :  மனிதன் ஆனந்தத்தால் ஆரவாரிக்கிறான் (19:4, 5:10)

8. ஆதியாகமம்           : மனிதன் தேவ சமூகத்தை இழக்கின்றான் ( 3:23)
   
வெளிப்படுத்தல்   :  மனிதன் தேவனோடு கூடவே தங்குகிறான் (21:3)

9. ஆதியாகமம்           : தேவன் மனிதனை துரத்துகிறார் (3:24) 
   
வெளிப்படுத்தல்   :தேவன் மனிதனை அழைக்கிறார் (22:17)

10. ஆதியாகமம்         : மரணம் மக்களை ஆண்டு கொள்கிறது (2:17)
     
வெளிப்படுத்தல் :  மரணமே இல்லை (21:4)

11. ஆதியாகமம்         : சாபம் உலகத்தை பிடிக்கிறது (3:17)
    
வெளிப்படுத்தல்  :  சாபமே இல்லை (22:3) 

12.ஆதியாகமம்          : ஜீவ கனி புசிக்கமுடியாதவாறு விலக்கப்படுகிறது (3:24)
    
வெளிப்படுத்தல்  :  ஜீவ கனி புசிக்க கொடுக்கப்படுகிறது. (22:2)