Monday, December 12, 2016

ஒரு கிறிஸ்மஸ் செய்தி

”கிறிஸ்மஸ் என்றதுமே உங்கள் நினைவுக்கு வருவது என்ன?” இப்படி ஒரு கேள்வியை சமீபத்தில் எங்கள் சபையைச் சேர்ந்த ஒரு சகோதரரின் குடும்பத்தினரிடம் கேட்டேன். கிறிஸ்மஸ் என்றதுமே அவர்கள் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்ததை உடனே காண முடிந்தது. முதலில் அந்த சகோதரன், தன் சிறுவயது கிறிஸ்மஸ் நினைவுகள், கிறிஸ்மஸ் கீத பவனி, பாடகர் குழு சார்ந்த சிறப்பு பயிற்சிகள் என மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சகோதரரின் மனைவி, ஒரு இந்து குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்திருந்த படியால், கிறிஸ்மஸ் சார்ந்த பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் அதைத் தொடர்ந்த விடுமுறை நாட்கள் என மகிழ்ச்சியாக இருந்ததைச் சொன்னார். சகோதரனின் தாயார், கிறிஸ்மஸ் நாட்களில் ஒன்றாகக் கூடும் குடும்பச் சொந்தங்கள் மற்றும் உறவினர்களுக்கிடையே நேரம் செலவழிப்பதில் உள்ள மகிழ்ச்சி என பலவகை நினைவுகள் அலைமோத, அவற்றில் சிலதைச் சொன்னார். சரி. இப்போது உங்களிடம் கேட்கிறேன், ”கிறிஸ்மஸ் என்றதுமே உங்கள் நினைவுக்கு வருவது என்ன?” 

நீங்கள் இந்தக் கேள்விக்கு என்ன சொல்லலாம் என்று நினைக்கும் இவ்வேளையில், நான் சமீபத்தில் கேட்ட ஒரு கிறிஸ்மஸ் செய்தியில், எங்கள் கல்லூரிக்கு வந்திருந்த பாஸ்டர் மைக்கேல் தாமஸ் ராஜூ அவர்கள் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.  கிறிஸ்மஸ் என்றதுமே நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணில் மனிதனாக தோன்றிய இயேசுவின் பிறப்பை, ஏழை மாட்டுத் தொழுவத்தில் அவதரித்த சிறப்பு மகிழ்வை நினைவு கூர்கிறோம். அவர் சொல்கையில், “கிறிஸ்மஸ் என்பது தேவனுடைய உண்மையை வெளிப்படுத்துகிற ஒரு நாள். இயேசு பிறப்பதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்த, ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியதை, தேவனுடைய உண்மையை நினைவு கூற வேண்டும்” என்றார். பிள்ளையில்லாத ஆபிரகாம், சொந்த இடமில்லாமல் ஒரு வழிப்போக்கனைப் போல சுற்றித் திரிந்த ஆபிரகாம் என இல்லாமைக்குச் சொந்தக் காரனான ஆபிரகாம் மூலம் பூமியில் உள்ள அனைவரையும் ஆசீர்வதிக்கும் வார்த்தையை வாக்குத்தத்தம் பண்ணினவர், மன்னுருவாக வந்த வார்த்தையானவரை நாம் நினைவில் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் தேவன் வாக்கு மாறாதவர். ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன் தன் தந்தையின் வாழ்வில் தேவன் எவ்வாறு இடைபட்டார் என்பதையும், இன்னமும் தேவன் உண்மையுள்ளவராக அவர்கள் குடும்பத்தில் இருப்பதையும் அவர் சொல்ல மறக்கவில்லை.

நான் இதைப் பற்றி யோசிக்கையில், பகிர்ந்து கொள்கையில், “தேவன் எதற்காக ஒரு மனிதனாக வந்தார்”, ”தேவன் மனிதனாக வர வேண்டிய அவசியம் என்ன?” என்று முன் இருந்தவர்களிடம் கேட்டேன். தேவன் ஏன் மனிதனாக வரவேண்டும்? என்பதற்குப் பல பதில்கள் வந்தன:
1. தேவன் மனிதர்களை நேசிப்பதால்….
2. இந்த உலகத்தில் பாவம் பெருகிவிட்ட படியால…
3. மனிதனைக் காப்பாற்றுவதற்காக…

உங்கள் மனதில் தோன்றும் பதில் என்ன? உடனே ஏதேன் தோட்டம் நினைவுக்கு வருகிறதா! ஏதேன் தோட்டத்தில் மனிதன் தேவகட்டளையை மீறி பாவம் செய்து தேவனுக்கு தன்னை மறைத்துக் கொண்டபோது, அவனைத் தேடிவந்த தெய்வம், மனிதனை வஞ்சித்த சர்ப்பத்துக்கு எதிராக, “அவர் உன் தலையை நசுக்குவார்” எனச் சொல்லி ஆதாம் ஏவாளுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தாரே. கொடுத்ததும் அல்லாமல் அவர்களுக்காக தோலினாலான ஒரு உடையையும் கேட்காமலே கொடுத்தாரே! நிற்க.

இங்கே இரு காரியங்களை நாம் அறிந்து கொள்வது நல்லது. ஆதாம் ஏவாளுக்கு உடை கொடுப்பதற்காக ஒரு விலங்கு அடிக்கப்பட்டிருக்க வேண்டும். அது ஆட்டுக்குட்டியானவர்தாம். ஏனெனில் உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என வேதத்தில் வாசிக்கிறோமல்லவா! இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்படுவதுண்டு. இதில் முழு உடன்பாடு எனக்கு இல்லை எனினும், பாவம் செய்த மனிதனின் பாவத்தைச் சுமக்க அன்றே, “இதோ” என்று ஒருவர் ஆயத்தமானார் என்று நினைத்துக் கொள்கிறேன்.

இரண்டாவதாக, பாவம் செய்த பிறகுதான் ஆதாம் ஏவாள் பிள்ளை பெற்ற படியால், பாவம் செய்து பிள்ளை பிறந்தது என அனேகர் குழப்பிக் கொள்கின்றனர். திருமணம் என்பது தேவன் உண்டாக்கின ஒரு நியமம். மனிதன் பிறக்கும்போதே பாவத்தில் பிறக்கிறான் என்பது உண்மை. ஆனால், பாவத்தினால் பிறக்கிறான் என்பது தவறான புரிதல் ஆகும். பிறக்கும் குழந்தைகள் அவர்களை அறியாமலேயே, நாம் சொல்லிக் கொடுக்காமலேயே பல காரியங்களைச் செய்வதன் காரணம், பிறக்கும்போதே நாம் பாவ சுபாவம் உள்ளவர்களாக பிறப்பதுதான். இதை ஜென்ம சுபாவம் என வேதம் கூறுகிறது.  அனேகர் சங்கீதம் 51:5 ஐ தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நாம் அவ்வாறு இருக்கலாகாது.
சரி. மீண்டும் நம் செய்திக்கு வருவோம். தேவன் ஏன் மனிதனாகப் பிறந்தார். வேதத்தின் எனக்கு மிகவும் பிடித்த வேத பகுதிகளில் ஒன்றான எபிரேயர் 2: 14 சொல்வது போல, “பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்.” நமக்காக நம்மைப் போலானார்.  ஆபிரகாம் அனேக ஆண்டுகள் காத்திருந்தான். கண்டிப்பாக அவன் காத்திருந்த அந்த ஆண்டுகள் அவனுக்கு மிகவும் ஏக்கத்தைக் கொடுத்திருக்கும். ஆனால் அவனை அழைத்தவர் உண்மையுள்ளவர். அவனுடைய முதிர் வயதில் ஏறக்குறைய முப்பது வருடம் கழித்து அவனுடைய வாழ்வில் வாக்குத்தத்தத்தை நிறைவேறப்பண்ணினார். ஈசாக்கு பெயருக்கேற்றார்ப் போல அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியை உண்டாக்குகிற ஒரு மகனாக இருந்தான். ஆனால் ஆண்டவர் இயேசு பிறப்புக்காக, இந்த உலகம் காத்திருந்தது மீக நீண்டதொரு காலம். வேதத்தில் உள்ள கணக்கின் படி ஏறக்குறைய நான்காயிரம் வருடங்கள். இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றிய முன்னறிவிப்பே, அவர் பிறப்பதற்கு 650 வருடங்களுக்கு முன் உரைக்கப்பட்டிருந்தது. சொன்னபடி, காலங்கள் நிறைவேறினபோது தேவனுடைய ஒரே பேறானவர் மனிதனாகப் பிறந்தார்.

இயேசு மனிதனாகப் பிறந்தபோது, வானில் தோன்றிய தேவதூதர்கள் சொன்னது என்ன? ”இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி” என தேவ தூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார்கள் அல்லவா! இப்படி மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவித்த தேவதூதர்கள் சந்தோசமடையும் ஒரு தருணம் என்ன தெரியுமா? வேதம் சொல்கிறது போல, “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது” (லூக்கா 15:7,10). இப்பொழுது சொல்லுங்கள். கிறிஸ்து பிறந்த செய்தியைத் தான் கிறிஸ்மஸ் கீத பவனியாக வீடுகள் தோறும் சொல்கிறோம். ஆனால் மிகவும் வருந்தத்தக்க விதமாக இன்று அவை வெறும் பணம் சேகரிப்பு உத்தியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்து பிறந்தார் என்பது ஒரு வரலாற்று உண்மை. ஒருவேளை நாம் கொண்டாடும் டிசம்பர் 25 என்பது சரியான நாளாக இல்லாமலிருக்கலாம். அதற்காக அவர் பிறக்கவில்லை என்றாகிவிடாதல்லவா! மனிதர்களாகிய நமக்கு உண்மையான கிறிஸ்மஸ், கிறிஸ்து என்று நம் இருதயத்தில் பிறக்கிறாரோ, நாம் என்று தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கப்படுகிறோமோ அன்றே உண்மையான கிறிஸ்மஸ் ஆகும்.

சமீபத்தில் ஒரு வேதாகமக் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, christmas க்கும் X-mas க்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். இரண்டுமே கிறிஸ்து பிறப்பு பண்டிகையைக் குறிக்கிற வார்த்தைகள். ஆனால் X-mas ல் கிறிஸ்து இல்லை. கிறிஸ்து இல்லாத கிறிஸ்மஸ் உண்மையான கிறிஸ்மஸ் ஆக முடியாது. அதே போலத்தான் கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவன் X-ian ஆக இருப்பான். அவனால் இந்த சமுதாயத்துக்கு எந்தப் பயனும் இல்லை என்று மாணவர்களிடம் சொன்னேன்.
கிறிஸ்மஸ் என்றாலே வரும் மகிழ்ச்சி, கிறிஸ்துவுக்கு தாலாட்டுப் பாடுவதுடன் நின்று விடாமல், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், கிறிஸ்துவைப் பகிர்ந்து, அன்பை வார்த்து சமாதானம் செழிக்க தேவன் நம்மையும் பயன்படுத்துவாராக.

Monday, November 14, 2016

பிதாவே மன்னியும்!

.இன்று ஜெபித்துக் கொண்டிருந்த போது பிதாவே இவர்களுக்கு மன்னியும் என்ற ஆண்டவரின் வார்த்தைகள் ஆழ்மனதில் அகலாது திரும்ப திரும்ப தொனித்துக் கொண்டிருந்தது. ஆகவே ஆண்டவரின் வார்த்தையை தலைப்பாக்கி மீண்டுமொரு தியானம் எழுத முயற்சித்திருக்கிறேன்.
மன்னிப்பது தெய்வீகம் என்கிற மூதுரை நம்மிடை இருப்பினும் மன்னிப்பது என்பது மிகவும் கடினமானதாகவே நமக்கு இருக்கிறது. மன்னிப்பேன் ஆனால் அதை மறக்கமாட்டேன் என்பர் சிலர். இதுவும் ஒருவிதத்தில் மன்னியாமையே. இன்றைய அவசர உலகில் பல வியாதிகளுக்கு காரணமாக மன்னிக்கமுடியாத தன்மை இருக்கிறது என்பதை அறிந்த போது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
 நாம் ஆண்டவரிடம் எத்தனைமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறோம் என்பதை கணக்கிட்டால்........... அது முடியுமா என்பது சந்தேகம்தான். ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்கதயங்காத நாம் நம் சக மனிதர்களிடம் நாம் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்க மிகவும் தயங்குகிறோம். நம் சுயமரியாதையும் ஈகோவும் நம்மை பின்னுக்கு இழுக்கிறது. ஆண்டவரே அவரிடம் என்னால்
மன்னிப்பு கேட்கமுடியவில்லை ஆகவே அதற்கும் சேர்த்து உம்மிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நாம் ஜெபிக்கிறோம். நாம் யாராயிருந்தாலும் எவரிடமும் மன்னிப்பு கேட்க தயங்கக் கூடாது.
எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் உண்டு. அவரின் சகோதரி மகன் மிகவும் கறுப்பாக இருப்பான். சிறு குழந்தைதான். ஆனால் எனக்கென்னவோ அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் கோபமும் வெறுப்பும் வந்தது. பொதுவாக நான் அவ்வாறு இருப்பதில்லை. ஆனாலும் அந்த குழந்தையைப் பார்க்கும்போது என்னையுமறியாமல் நான் வெறுத்தேன். அதை ஆசையுடன் தூக்க கூட எனக்கு மனம் வரவில்லை. அதனால் அவனும் என்னைப் பார்த்தாலே ஒதுங்கி வெறுள ஆரம்பித்தான். ஒரு நாள் நான் செய்வது மிகப்பெரிய தவறு என்று ஜெபத்தில் உணர்ந்தேன். அதற்கு சாக்குப் போக்கு சொல்லாமல் முதலாவதாக தேவனிடம் மன்னிப்பு கேட்டேன். அடுத்தபடியாக நாம் மறுமுறை அந்த(3 வயது) குழந்தையை தனியே எடுத்துச் சென்று அதனிடம் மனிப்பு கேட்டேன். அதன்பின்பு அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் பேரன்பு சுரந்தது. அந்தக் குழந்தையும் என்னுடன் நன்றாக பழகினது. அதன்பின் அக்குழந்தை உரிமையுடன் என்னுடன் செய்த வால்தனங்கள் ஏராளம். அதை நான் மிகவும் இரசித்தேண்.
   நாம் தவறு செய்திருப்பின் அதைக் குறித்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதோ அல்லது மன்னிப்பதோ நமக்கு கடினமானதாக இருக்காது. நாம் தவறு செய்யாதபோது நமக்கு தீங்கிழைக்கப்படும்போது நாம் என்ன செய்யவேண்டும். இயேசுவை நோக்கிப் பார்க்கவேண்டும். அவர் என்ன செய்தாரோ அதையே நாமும் செய்யவேண்டும். முழுமனதுடன் மன்னித்து அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும். நாம் அவர்களைக் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக அவர்களுக்காக பரிந்து பேச வேண்டும். அவ்வறு நாம் செய்யும் போது நீதியாகிய பலனை நாம் தேவனிடமிருந்து பெறுவோம்.
இயேசு பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிறார். ஆனாலும் அவர் தண்டிக்கப் பட்டார். நிந்திக்கப்பட்டார். சிலுவையிலறையப்பட்டார். அவர் நீதிமான் என்பது சகலருக்கும் தெரிந்திருந்தது. பிலாத்துவும் அதை அறிக்கையிட்டான். ஆனாலும் அவரை பாதகர் கையிலே ஒப்புக் கொடுத்தான். இயேசுவோ அனைவரையும் மன்னித்தார். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்று அவர்களின் அறியாமையை எடுத்துக் கூறினார். இப்படிப்பட்ட விபரீதங்களை பொறுமையுடன் சகித்த அவரை நாம் நினைத்துக் கொள்வோம்.
 நாம் ஒருவரை மன்னிக்கமுடியாமல் இருக்கும்போது அவரைப் பற்றிய எரிச்சல் நம்மிடம் இருப்பதால் அது நம் ஆவிக்குரிய வாழ்க்கையையும் பாதிக்கிறது. நம் ஜெபம் தியானம் எல்லாம் வெறுமையாகிறது. தேவனுடைய பிரசன்னம் உணரக் கடினமானது ஆகிவிடுகிறது. ஆகவே நாம் மன்னிப்பின் மேன்மையை உணர்ந்தவர்களாய் ஆண்டவரே என்னை மன்னியும்! பிறரை மன்னிக்கவும் பிறரிடம் தயங்காது  மன்னிப்பு கேட்கவும் அருள்புரியும் என்று அவரிடம் கேட்போம். செயல்படுவோம்.
 
(2008 ல் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் எழுதியது)

Tuesday, September 20, 2016

A tribute to Dr. Paul Joshua

An excellent theologian entered into glory


As we all are surrounded with our own problems and so many things happening around us, many of you may not know Dr. Paul Joshua, an eminent Indian theologian and his death after more than an year long struggle with diabetic complications. At least now I want to inform to my friends and the world around me of his his greatness in theology and his passion to see his students to understand the issues in the Christian mission to the world.

I was not at all interested  to listen anything at the beginning of the  module on Contextual theology as i heard that he used to be very strict in grading, for e.g I heard just before the module that the highest mark he gave to the best student was 59.87%. It was difficult for me to understand that standard and my interest slowly faded away even before the module. But I was not able to sit in his class without listening anything. Everyday he brought something new to our thinking and made us to ponder over it. Within a week I became just opposite to my first day commitment and began to listen closely as his ideas got me thinking over the present day issues in the Christian mission work. His passion was always reaching people with the gospel of Jesus Christ, but he carefully explained how we can make an appeal to the gospel without compromising the truth, that is the crux of his contextual theology. All my classmates would agree that how he made an impact in our thinking pattern and helped every one with special care. Academically he was one of the top scholars in SAIACS, but he never distanced himself with anyone, even to the service staffs.

Last year 2015, I met a fatal accident and had brain injury. After accident, my recovery was miraculous and purely God's provision. Because of the brain injury, i had many complications, one of it was memory problem. Even now, I was not able to remember who were with me in the hospital and not able to remember anything associated with it, except one. As I was coming out from some sort of test room, Dr. Paul and Sumi Joshua came in the opposite direction. He seemed to be tired and exhausted, but with a loving smile he held my hands and said, "Arputharaj, don't worry. Nothing will happen. I also admitted here for some days and recovering now. God will cure you." At that time I was not even able to recognize what he was saying." But his words were recorded in my mind and It was a tonic for me whenever I was in need. Such an encouraging words. The God who healed me of all the possible dangers of brain injury has a special and superior plan for Dr. Paul Joshua's home call.

Even when he was suffering with various complications and pains, he witnessed how he loved the Lord. It is very easy to say, "God loves you," and "I love God." Only the people around us can say that whether we love God or not. Every time he uttered "Jesus," it was always unbearable for us to see his pain and suffering. It was the witness of his faith and his love for the Lord. Till the end he guarded his faith and sowed the seeds of faith in many...no, no.... all of his students' life and thoughts. I wonder may be if he lived a ten more years, Indian Christianity could be blessed with his thoughts and works and he could be very popular even beyond theological and academic circles. We don't know the answer to the questions surrounding his home call, "why?" But one thing we can be sure, "Precious in the eyes of the Lord is the death of His saints. (Psalm 116:15)" Now Dr. Paul Joshua is buried with the great hope we all have in Jesus Christ. But not his vision and his passion are buried, it all imbibed in his family and all the students and saints who encountered him in his and their life. Some time sooner or later the world will see the results that are already started to reflect in the mission field.
Dr Paul Joshua's full name is "Paul Joshua Bhakiyaraj." Here "Bhakiyaraj" a tamil name which means king of blessing. or a king in blessing. Truly he lived a life to bless others in Christ. R.I.P.

Saturday, September 17, 2016

We are Indians - No hate, but LOVE


What will you do if someone riding his bike not noticing his mobile dropped down from his pocket and you are just behind him watching all these from your bike?

This is what exactly happened to me as I was driving my bike, in front of me a costly mobile fell  down from the pocket of the forgoing biker. Suddenly I shouted loudly to get his attention, but He didn't notice, So I rushed to take the mobile and tried to chase him to hand over it. But after 2 kilo meters, I was not able to follow him due to traffic and kept the mobile with me so that I can find and to give the right owner of it.
I wished to hand over to the police station as it was fell down just in front of the local police station but some apprehensions prevailed me and decided to wait for some time. Since the phone  screen is locked, I was not able to get any more details. So I put the sim card in my mobile and waited for somebody to call me.
Then I received a call from a lady who identified herself as the wife of the person who missed the mobile and I gave my mobile number to her so that her husband can come and collect his mobile. That lady was happy that I am willing to give the mobile, because it is a new and expensive mobile. I said, "I know the pain of loss", So I can understand your worries and want to give back to ease your tensions." After an hour her Husband Mr. Charith K. M came along with his friend Mr. Somasekar and it was a surprise for them who are born and brought up here in Bangalore facing a person. They came to my house with reluctant and went back with a relaxed mind. Wait... before I finish I want to say their final words "DHANYAVADAGALU" a kannada phrase which means "Thank you"
 

Thank you India for giving us the opportunities to live as brothers and sisters in our differences.

Friday, September 16, 2016

அற்புதங்களின் ஆரம்பம் - சகோ. N. ஜீவானந்தம்

நான் இரட்சிக்கப்பட்ட பின்பு காலையிலும், மாலையிலும் வெகுநேரம் ஜெபத்தில் இருந்தேன். வேதம் வாசிக்கவும் எனக்கிருந்த தாகம் சொல்லி முடியாது. அப்படியே ஆத்துமாக்களிடம் பேசி ஆதாயம் பண்ணினேன். ஒரு நபர்  கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் எனக்குண்டான மகிழ்ச்சி அளவில்லாதது. கர்த்தருடைய ஊழியத்திற்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் தாராளமாக தந்துவிடவும் தேவன் உதவினார். மாலை நேரங்கள், இரவு நேரங்களில் என் நண்பர்களுடன் கூடி வெகுநேரம் ஜெபித்து வந்தேன்.

முதல் முறையாக, பல்லாவரம் என்ற இடத்திற்கருகில் உள்ள பம்மல் என்ற இடத்திற்கு என் நண்பர்களுடன் சுவிசேஷ ஊழியத்திற்குச் சென்றேன். செய்தி கொடுத்தவர் என்னை சாட்சி பகர அழைத்தார். ஏதோ அங்கேயும் உளறினேன். கை கால்கள் நடுங்க, கண்ணீர் வடிய சாட்சி கூறின நினைவு உண்டு. வியாதியுள்ளோர் வந்து ஜெபிக்கும்படி அறிவித்தனர். முன் பின் அனுபவம் இல்லை. ஒரு தாய் தன் பிள்ளைக்கு, சீதபேதி என்று கொண்டு வந்தார்கள். தலையில் கைவைத்து ஜெபிக்கத் தெரியாது. ஆகவே குழந்தையை வாங்கி வானத்திற்கு நேரே உயர்த்தி கண்ணீருடன் ஜெபித்தேன். கூட்டத்தின் நடுவில் பிசாசு பிடித்திருந்த ஒரு இளம் பெண் கதறி அலற துவங்கினாள். எல்லோரும் பேய்! பேய் என்று கூக்குரலிட்டனர். இதுவே முதல்முறை பிசாசு பிடித்தவருக்கு ஜெபித்த அனுபவம். எனக்கு என்ன செய்வதென்று விளங்காத நிலையில், அப்பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவிகள் பேசத்துவங்கின. மூன்று பேர் உள்ளே இருப்பதாகவும், அப்பெண்ணுக்கு அவைகள் இழைத்த தீங்குகள், தந்த நோய்கள் எப்போது வந்தன என்று சொல்லி முடித்தன.
ஏன் இப்போது அழுகிறாய்? என்று நான் வினவியபோது, இவள் இயேசுவை ஏற்றுக் கொண்டு விட்டாளே! எங்களால் இருக்க முடியவில்லையே! என்று அலறினாள்.

இப்போது எனக்குக் கொஞ்சம் தெளிவு பிறந்தது. இப்பெண் தன் இதயத்தில் இயேசுவை இரடச்கராக ஏற்றதால், இவளுக்குள்ளே இருந்த பேய்களால் இருக்க முடியவில்லை என்றறிந்து கொண்டேன். உடனே இயேசுவின் நாமத்தில் வெளியேறும்படி கட்டளையிட்டேன். மூன்றும் ஒவ்வொன்றாக வெளியேறின. அப்பெண் பரிபூரண சுகமடைந்தாள். அல்லேலூயா! அவருக்கே மகிமை.

இதன் பின் பலருடைய வியாதியை அதே இடத்தில் சுகமாக்கினார். இன்றுவரை தேவன் தமது கிருபையை என்னை விட்டு விலக்காமல் காத்து வருகிறார். அவருக்கே மகிமை. இப்படித்தான் என் வியாதி குணமாக்கும் ஊழியங்கள் துவங்கியது.

1960 ஆம் ஆண்டு, மாதந் தெரிய வில்லை. நானும் என் சித்திரக்காரர் நண்பர் ஒருவரும் சேர்ந்து, கோடம்பாக்கம் ரயிலடியில் அருகில் உள்ள வீட்டில் குடிபுகுந்தோம். அந்த நண்பர் நல்ல சாட்சியுடன் விளங்கிய காலம். எப்போதும் ஜெபம் தான். கண்ணீருடன் ஜெபித்து வந்தோம். அந்தவீடு அந்நாட்களில் யாரும் குடிபுகாத வீடாக இருந்தது. உள்ளே நுழைந்தாலே சுகவீனமடைவார்களாம். எல்லாம் இடிந்து கிடந்தது. எல்லாப் பூச்சிகளுக்கும் உறைவிடம். சுற்றிலும் சேறும் சகதியும், இரவிலும் பகலிலும் கொசுக்கூட்டம் ஆளுகை செய்தன. ஆனால் ஒன்று எந்த நோயும் எங்களை அணுகவில்லை. இங்கே எத்தனையோ இரவுகள் பட்டினி, ஆனால் கடன் தொல்லை இல்லை. ஆனால் என் வருமானம் போதவில்லை. தினமும் கர்த்தருக்கு சாட்சி பகர தவறவில்லை. அந்நாட்களில் ரூபாய் 50க்கு விலையுள்ள பழைய சைக்கிள் எனக்கு பேருதவியாக இருந்தது.

ஒரு நாள் சரியான தேதி நினைவில்லை. ஞாயிறு ஆராதனைக்கு என் நண்பர் பிரசங்கிக்கப் புறப்பட்டார். அவருக்குத் துணையாக நானும் சென்றேன். அது பழைய அயன்புரம் பாப்டிஸ்ட் சபை. மறைந்து போன என் ஆத்தும நண்பர் பாஸ்டர் D. ஆசீர்வாதம் போதகராக இருந்தார். நாங்கள் போனபோது அவர் கிளைச்சபைக்குப் போயிருந்தார். ஆராதனையை நடத்திய மூப்பர் என்னை பத்து நிமிடங்கள் சாட்சி கூறும்படி கேட்டுக் கொண்டார்.  அன்று தேவ ஆவியானவர் வல்லமையுடன் கிரியை செய்தார். இந்த சாட்சியே எனக்கும் அந்த போதகருக்கும் மிக்க சிநேகத்தை உண்டாக்கினது.

அடுத்த வாரம் என்னை பிரசங்கிக்கும்படி அழைத்தனர். எனகு என்ன பிரசங்கிப்பது என்று தெரியாது. என் நண்பரைக் கேட்டேன். கர்த்தர் தருவார், ஜெபி என்றார். மூன்று தினங்கள் அழுது உபவாசத்துடன் ஜெபித்தேன். கர்த்தாவே செய்தியை அனுப்பும் என்று கதறினேன். துண்டு பிரதி ஒன்றை படித்து விட்டு, இரண்டாம் வருகையைப் பற்றிப் பிரசங்கித்தேன். ஆம்! ஏதோ சத்தமிட்டேன். பரிசுத்தாவியானவர் இறங்கினார். இதுவே நானும் ஒரு பிரசங்கிதான் என்று மக்கள் தீர்மானித்தனர். முதல் நடந்த நற்செய்தி கூட்டங்களைக் குறித்து பின்பு எழுதுவேன். அல்லேலூயா!

(சகோ. ஜீவானந்தம் அவர்கள், “நினைவில் வந்தவை...” என்ற தலைப்பில் வெளியிட்ட புத்தகமானது, மகிழ்ச்சி மாத இதழில் கர்த்தர் அவருடைய 36 ஆண்டுகால ஊழியத்தில் நடத்தி வந்ததை விளக்கி அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். அப்புத்தகத்தில் இருந்து ஒரு அத்தியாயத்தை மட்டும் இங்கே பதிவிட்டிருக்கிறேன். )

Wednesday, September 14, 2016

பழசு ஆனாலும் புதுசு

துள்ளலான இசையில் மூச்சு விடாமல் மூன்றுவரிகளுக்கும் மேல் பாட...

நான் சிறுவனாக இருந்த காலத்தில் அன்று மிகவும் பிரபலமான சினிமா பாடல்களில் ஒன்று, திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் நீண்ட நேரம் மூச்சுவிடாமல் ஒரு சரணத்தைப் பாடிய பாடல் ஆகும். அதைக் கேட்டவர்கள் அனைவருமே தங்களால் முடியாதெனினும் முயன்று பார்த்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, பின்னாட்களில் சம்பந்தப் பட்ட பாடகரே அது மூச்சுவிடாமல் பாடியது போலத் தோன்றினாலும், உண்மை அதுவல்ல என்று சொல்ல கேட்டதாக ஞாபகம். இப்ப எதுக்கு இந்த ஞாபகக் கிளறல்கள் & உளறல்கள் என்று உங்களுக்கு நினைக்கத் தோன்றும்.

வீட்டில் அமர்ந்து பல விசயங்களைப் பற்றி எண்ணி மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கையில், திடீரென ஒரு கீர்த்தனைப் பாடலுக்கு நேராக என் மனம் சென்று என்னையுமறியாமல் பாட, என் மனம் பல நினைவுகளில் மூழ்கிவிட்டது. சரி. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த பாட்டு என்ன என்று சொல்லிவிடுகிறேன். “ஆதித் திருவார்த்தை திவ்விய  அற்புதப் பாலகனாகப் பிறந்தார்” என்ற பாடல்.

இந்தப் பாடலின் அனுபல்லவி மிக வித்தியாசமான முறையில் எழுதவும் இசைக்கவும் பட்டிருக்கும். பாடலைப் பாடிக்கொண்டே, கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் புத்தகத்தில் பாடலை யார் எழுதியது என்று பார்த்த போது, வே. சா எனக் கண்டு, வேதநாயகம் சாஸ்திரியார் எழுதியது என அறிந்து கொண்டேன். இந்தப் பாடலைத் தெரிந்தவர்கள் பாடலைப் பாடிப் பாருங்கள். பாடல் தெரியாதவர்களுக்கு கீழே உதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்பாடல் சங்கராபரணம் இராகத்தில் திஸ்ர ஏகதாளத்தில் இருப்பதாக கீர்த்தனை புத்தகம் சொல்கிறது. இப்பாடல் பற்றிய என் நினைவுகள் பல, இங்கே அவற்றில் சில.

                                                        பல்லவி

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

                                                      அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரிய கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகி,
மின்னுச்சீர் வாசகி , மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் , தாம் , தன்னர வன்னர
தீம் , தீம் , தீமையகற்றிட
சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். --- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி
                                                                                                                       - வே.சா.

அனுபல்லவியில் “உன்னதகஞ்சீர்” என்பதில் துவங்கி “ரஞ்சிதனார்” முடியுமட்டும் மூச்சுவிடாமல் பாடும் வண்ணம் மிக அழகாக இயல்பான இராகத்தில் இப்பாடல் அமைந்திருப்பதைக் கண்டீர்களா!
அது மாத்திரமல்ல, மேற்கத்திய இசையும் கர்நாடக இசையும் மிக நயமாக ஒன்றொடொன்று குலைந்து குழாவி செல்வதையும் காண முடியும்.
“ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ” என்று அர்த்தம் புரியாமல் அல்ல, அர்த்தமே இல்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், வாத்திய இசைக்கருவி எழுப்பும் சத்தத்தையே பாடல் வரியாக “தாம் தாம் தன்னர வன்னர தீம் தீம் தீமையகற்றிட” எனும் வரிகளில் வேதாகம Theme இருப்பதையும் காண முடிகிறதா. இது கொஞ்சம் ஓவர் என்று உங்களுக்குச் சொல்லத் தோன்றும். ஓவரான ஒன்றையும் சொல்லி விடுகிறேன்.

இந்தப் பாடலை நான் பாடகர்குழுவில் இருக்கும்போது சிறுவயதில் பாடுகையில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வார்த்தை வரும்போது என்னையுமறியாமல் சிரிப்பேன் அல்லது அந்த வார்த்தையைச் சொல்ல மாட்டேன். ஏனெனில் “காதல்” என்ற வார்த்தையே ஒரு மாதிரியான வார்த்தையாக கற்பிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது யோசித்துப் பார்த்தாலும் சிரிப்புதான் வருகிறது.
இப்பாடலைப் பாடும் போதெல்லாம் மூச்சடக்கிப் பாட முயற்சி செய்தும் எப்பொழுதுமே அதில் வெற்றிக்கனி எட்டாக்கனியாகவே இருந்தது. இப்பொழுது அதன் காரணம் என்ன என்று புரிகிறது. சீரான மூச்சுப் பயிற்சி மற்றும் முன் பயிற்சி அப்போது இல்லை.
இந்தப் பாடலில் மற்றுமொரு taboo வார்த்தையாக “ஆதாம் சாதி ஏவினர்” என்ற வார்த்தையை கருதினேன். ஒரு காலத்தில் சாதி என்ற வார்த்தையைச் சொல்வது கூட தவறானதாக இருந்திருக்கிறது என்பது ஒரு நகை முரண். பலர் அவ்வரிகளை “ஓதி” என மாற்றிப் பாடுவர். ஆனால் சாதி என்று வரும்போதுதான் அது பாடலுக்கு பொருள் சேர்க்கிறது. ஏனெனில் வேதாகமத்தில் சாதி என்பது நாம் இப்போது காணும் நாடார், தேவர் போன்ற சாதி அல்ல, அது ஒவ்வொரு நாட்டைக் குறிப்பதாக அல்லவா இருக்கிறது. ஆதாம் மூலமாக அனைவரும் வந்ததையே அந்த பாடல் வரி சொல்கிறது.

இப்பாடல் இணையத்தில் லேட்டஸ்ட் வெர்ஷன் சில கிடைத்தாலும் எனக்கு ஜிக்கி அவர்கள் பாடிய பழைய ஸ்டைல்தான் மிகவும் பிடித்திருக்கிறது. Old is Gold என்று நீங்களும் நினைத்தால் இங்கே வந்து பாடலைக் கேட்கலாம்.

Wednesday, September 7, 2016

ஸ்... ஸ்... ஸ்... சீரியஸ்

இந்தியாவை இயேசுவுக்கும்
இயேசுவை இந்தியாவுக்கும்
சொந்தமாக்குதல் ஒரு புறம்
இருக்கட்டும்

சொந்த குமாரன் என்றும் பாராத அவருக்காக
சொந்தங்கள் வாழ்வில் வசந்தம் வீச
பந்தம் வளர்த்து
தேவகுமாரன் இயேசு மூலமாக
நொந்தகுமார்கள் வாழ்வில்
நந்தனம் மலர
வந்தனத்துடன் இறைவார்த்தை பகிர்வோம்
சொந்தங்களுக்கு சொந்தமாக்குவோம்
சொந்தமான அவரை.

ஒரு அரசியல் பதிவு

 கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

முகநூல் உரையாடல்
வில்பர்ட் :அர‌சிய‌ல்வாதிக‌ள் இர‌ட்சிக்க‌ப்ப‌ட‌ வேண்டுமாம்...
ஆனால், இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அர‌சிய‌லில் நுழைய‌க் கூடாதாம்...
எங்கேயோ அடிப்ப‌டையிலே கோளாறு.... என‌க்குதான் வெள‌ங்க‌ல‌ போல‌...
*அர‌சிய‌லில் இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எந்த நிலையில் ப‌ங்குகொள்ள‌ வேண்டும்?

அற்புதம்:  சாக்கடையில் இருப்பவர்கள் கழுவப்படவேண்டும்.
அதற்காக எல்லோரும் சாக்கடையில் போய் விழவேண்டும் என்று சொல்ல முடியாதல்லவா!
சாக்கடையில் இருப்பவரை தூக்குவதற்காக நீ இறங்கத்தான் வேண்டும் என்று இறைவன் சொல்லும்வரையிலும், அல்லது எல்லோரும் இறங்கக்கூடிய ஒரு நிலை வந்த
பின், அதாவது சாக்கடையில் கலக்கும் கழிவுகள் நிறுத்தப்ப்பட்ட பின் அனைவரும் அந்த சாக்கடையில் (அந்த நீர் ஓடிக்கொண்டிருந்த இடத்தில்) இறங்கலாம் என நாம் தைரியமாகச் சொல்லலாம், அதுவரையிலும் நாம் எதையும் பொதுப்படுத்தப்பட்டதாக (generalized) கூற முடியாது.


வில்பர்ட் : உண்மை. பொதுப்ப‌டையாக‌க் கூற‌ முடியாது. இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எல்லாரும் போக‌லாம் என்று சொல்வ‌தில்லை. மாறாக‌ இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் போக‌லாம் என்று கொள்ள‌லாம் அல்லவா? ஐயோ , எல்லா அர‌சிய‌ல்வாதிக‌ளும் அயோக்கிய‌ர்க‌ள் என்று நொந்து கொள்ளும் நேர‌த்தில், க‌ட‌வுளுக்கு ப‌ய‌ந்த‌வ‌ன் ஒருவ‌ன் அங்கே செல்வ‌து ச‌ரிதானே...

அற்புதம்: தேவபயம் உள்ளவராக இருந்தால், தேவ வழிநடத்துதல் இல்லாமல் போகக்கூடாது அல்லவா..
 
வில்பர்ட் : I agree.

அற்புதம் : இப்பொழுது ஓரளவுக்கு உங்களுக்கு புரிதல் ஏற்ப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். அடுத்து உங்களின் கேள்விக்கு மறுபடியும் வருகிறேன்.
||*அர‌சிய‌லில் இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எந்த நிலையில் ப‌ங்குகொள்ள‌ வேண்டும்?||


தேவனால் வழிநடத்தப்பட்டால் அல்லது அரசியலில் இருக்கும்போது இரட்சிக்கப்பட்டால் என்ன செய்வது?

ஏசாயா 48:14 சொல்வது போல ”கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்”
ஆகவே சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் அவர்கள் தேவனைத் தேடுவதையும் தேவ சித்தம் செய்வதையும் மற்றவர்கள் முயன்றாலும் முடிவில் தோல்வியே காண்பர். அவர்களின் உண்மையினிமித்தம் தேவன் மகிமைப்படுவார், தேவனைப் பற்றி அனேகர் அறிந்துகொள்வார்கள். இங்கே மாம்ச வைராக்கியம் ஒன்றுக்கும் உதவாது, ஆவிக்குரிய வைராக்கியம் மிகவும் அவசியம்.
இயேசு சொன்னது போல, “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவான் 6:63).

Tuesday, September 6, 2016

My thoughts are not myths! 3


Salvation is optional for the people although God wants all people to be saved. They can choose either life or death.
Holiness is mandatory for all the saved people although we are living in a corrupted world. Here we cannot choose, we are called and chosen for the holiness. Because one who called us is holy and calling us to be holy.

My thoughts are not myths! 5


The world says “Life is too short, so enjoy”
But the Word (of God) says, “Life is too short, Repent”
The world leads us to so called and temporary joy. But the word guides us to “rejoice” in both here in the world and there in heaven eternally.

My thoughts are not Myths! 6


There are many people who want and desire to learn music instruments, but not all of them learn after they bought the Music instrument they desired.
Because they do not have the commitment to learn and to practice it.
Same thing applies to Christianity as well.
Many Christians wants to be a true Christian and want to follow Christ in their life. But many of them do not have the commitment to learn from Christ and to practice in their life.

Friday, August 26, 2016

My thoughts are not myths! 4


Pride is the first enemy to become Christ' bride.

History tells us how Satan lost his place by pride

His story tells us how Jesus is lifted up high by humility

Who said, "I will ascend above...I will be like the Most High..."

Who did this, "He humbled himself"

கருத்துக் கதை - 1

நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர். ஒரு முறை அவர் பேரூந்தில் பயணம் செய்யும்போது, டிக்கட் பரிசோதகர் ஒவ்வொருவரிடமாக பயணச் சீட்டை பரிசோதித்திக் கொண்டு வந்தார். இதைப் பார்த்த ஐன்ஸ்டைன் தன்னுடைய சட்டையில் உள்ள பாக்கெட்டில் கையை விட்டு டிக்கட்டைத் துழாவினார். அதன் பின்பு இடது பக்க பாக்கெட்டில் விட்டு துழாவியும் டிக்கட் இல்லை. ஐன்ஸ்டைன் அருகில் டிக்கட் பரிசோதகர் வந்தார், இவரோ ஒவ்வொரு பாக்கெட்டிலும் கையை விட்டு டிக்கட் கிடைக்காதா என்று துழாவிக் கொண்டிருந்தார். அருகில் வந்த பரிசோதகர் தன் முன் நிற்பது ஐன்ஸ்டைன் என அடையாளம் கண்டு, “ ஐயா, நீங்கள்தானே ஐன்ஸ்டைன்” என்றார். “ஆம்” என்ற பதில் உடனே வந்தது. “ஐயா மிகுந்த மரியாதைக்குரிய மற்றும் நபரான நீங்கள் கண்டிப்பாக டிக்கட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆகவே கவலைப் படவேண்டாம், உட்காருங்கள்” என்று சொல்லி அடுத்தவரிடம் டிக்கட் பரிசோதகர் சென்றார். சற்று நேரம் கழித்து அனவரையும் பரிசோதித்தபின் டிக்கட் பரிசோதகர் இறங்குகிற வேளையில் ஐன்ஸ்டைன் தன் இருக்கைக்கு அருகில் முழங்கால் படியிட்டு கையை தரையில் வைத்து தேடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் அருகில் சென்று, “ ஐயா, நீங்கள் ஐன்ஸ்டைனாக இருக்கிற படியால், நான் தான் உங்களிடம் டிக்கட் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லி விட்டேனே, பின்னே என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றுக் கேட்டாராம். “நான் ஐன்ஸ்டைன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பிரச்சனை என்ன வெனில், நான் போகவேண்டிய இடம் என்ன என்பதை மறந்துவிட்டேன், டிக்கட்டைப் பார்த்தால் தான் அது தெரியும், ஆகவே தான் நான் டிக்கட்டைக் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று விஞ்ஞானி பதில் சொன்னாராம்.
நம்மில் அனேகர் கூட இப்படியே இருக்கிறோம். நாம் போய் சேரப் போகிற இடம் என்ன என்பதை அறிந்திருக்கிறோமா? நாம் ஒருவேளை எவ்வளவு பெரிய அறிவாளிகளாகவோ அல்லது ஒன்றுமே தெரியாதவர்களாகவோ இருந்தாலும் கூட போகும் இடம் தெரியவில்லை என்றால் நடுவழியில் திகைத்து நிற்க வேண்டியதாயிருக்கும். பரிசுத்த வேதாகமம் ”மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்” என்று சொல்கிறது. நாம் நம் விருப்பப்படி வாழ்ந்துகொண்டே தேவனைப் பிரியப்படுத்த முடியாது. நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் தேவனுடைய பிள்ளைகளாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதையும் ரோமர் 8:13,14 வசனங்களில் வாசிக்கிறோம். வாழ்க்கை நம்மை இழுத்துச் செல்கிற இடங்களுக்கெல்லாம் செல்கிறோமா அல்லது கடவுளின் கட்டுப்பாட்டில் அவர் விரும்புகிறவைகளைச் செய்து அவர் நமக்கு நியமித்திருக்கிற பாதையில் இலக்கை நோக்கி பயணிக்கிறோமா என்பதை நாம் நிதானித்து அறிய வேண்டும். யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்!

Why good people always suffer than others?


If you are a human, certainly you would have come across this question so many times. Today in our class our teacher Dr. Arun told us some incidents of godly people's suffering and asked the same question while comforting me as i am going through some difficult moments in my life. Suddenly a thought flashed in my mind and immediately I responded, "Sir, good people are suffering and going through many difficulties because of their value. Precious things like Diamond and gold always go through so many purification process so that its real worth to be known to the world, who cares for the coal and unworthy things?" God cares!
This answer itself gave me many answers to my questions. As a Christian we are children of God and precious to Him.

The words of the LORD are pure words: as silver tried in a furnace of earth, purified seven times. Pslams 12:6
That the trial of your faith, being much more precious than of gold that perisheth, though it be tried with fire, might be found unto praise and honour and glory at the appearing of Jesus Christ. 1 Peter 1:7
15 Nov 2015

கடிகாரம் -A Lateral thinking poem

நான் நாளெல்லாம் உழைக்கிறேன்
நீங்கள் என்னை கண்டு கொள்வதில்லை
ஏனெனில் என்னை நீவிர் பார்ப்பது கொஞ்சநேரம் தான்
ஆனாலும் பலனை எதிர்பாராது உழைக்கிறேன்

என் சேவை உங்களுக்கு தேவை
அதை பெற்றுக் கொள்ளும் உங்கள் பார்வை
இந்த கவிதையில் உள்ள கோர்வை
தந்துவிடமுடியாது உம் பிரச்சனைக்கு தீர்வை

என்னை நீங்கள் தினந்தோறும் பார்க்கிறீர்கள்
ஆனால் என்னால் உங்களை பார்க்க முடிவதில்லை
சூழ்நிலைகள் என்னை மாற்ற முடியாது
என் எஜமானனின் உத்தம சேவகன் நான்
நான் சோர்ந்து போகும் போது
என் வேகம் குறைந்து விடுகிறது
உடனே என் எஜமான் என்னை கரிசனையாக
நன்கு ஆராய்ந்து வேண்டியதை செய்கிறார்
அவருக்காக ஓடுவது என் பாக்கியம்

என்னை உண்டாக்கியவர் பெயர் என்மேல்
என்னை பார்ப்பவர் எனக்கு செலுத்தப்பட்ட விலையை அறிவார்
நான் பயனற்றுப் போனால் குப்பையில்
பயன்படும்போதோ நான் உயரத்தில்

என் ஓட்டத்தில் காணப்படுவது பொறுமை
நான் இன்னமும் இலக்கை அடையவில்லை
ஆனாலும் ஓடுகிறேன் ஓட்டத்தை
ஓடுவேன் தொடர்ந்து நித்தமும்
என் உயிர் இருக்கும்வரை அல்லது
இந்த உலகின் முடிவுவரை
நான் யார் ?

A dose for sorrow

Keep your smile
Spread to miles
All are for a while
This is HIS pill
To our ILL
So that we can be well
In All, Thats All.

Wednesday, August 24, 2016

பாடல் பிறந்த கதை - 2 கண்மணி போல் காக்கும் தேவன்

இந்த தொடரின் முந்தைய பகுதியில் நான் முதன் முதலாக ஒரு பேருந்து பயணத்தின் போது எழுதிய பாடலைப் பற்றிச் சொல்லி இருந்தேன். அடுத்து எழுதும் போது என்ன எழுதலாம் என்று யோசித்த போது கடைசியாக நான் எழுதிய பாடலின் கதையைச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் கடைசியாக இயற்றிய பாடல் என்று நினைத்திருந்த பாடலுக்குப் பின் இன்னும் இரண்டு பாடல்களை எழுத தேவன் கிருபை செய்துவிட்டார். ஆகவே நான் எழுத நினைத்த பாடலைப் பற்றி எழுதிவிடுகிறேன்.

ஒரு நாள் என் ஒருவயது மகளை மடியில் கிடத்தி அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென அவள் தன் கண்களை கசக்க ஆரம்பித்தாள். ஏன் மகள் இப்படிச் செய்கிறாள் என நான் பார்க்க முயற்சித்தபோது, அவள் விடாமல் தொடர்ந்து கண்ணை விரல்களால் கசக்கிக் கொண்டே இருந்தாள். ஐயையோ குழந்தைக்கு ஏதும் ஆகிவிட்டதோ! அவள் கண்களுக்கு ஏதேனும் ஆகிவிடக் கூடாதே, இப்படி கண்களை கசக்குகிறாளே என்று பதைபதைத்து, அவள் கைகளை விலக்கி கண்களை உற்றுப் பார்க்கிறேன். கள்ள மில்லா அந்த கண்கள் எவ்வித பாதிப்புமின்றி இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி ஒரு பக்கம், நம் தேவனும் இது போலவே நம்மை கண்மணியைப் போல பாதுகாக்கிறாரல்லவா என்று நினைத்து மனதில் ஒரு கிளர்ச்சி! இப்படி நினைத்த உடனே, “கண்மணி போல காக்கும் தேவன்” என்ற பதம் மனதில் இன்னும் ஆழமாக அடிமனதில் இருந்து வருகிறது. அதையே ஆரம்பமாகக் கொண்டு ஒரு பாடலை கடகடவென எழுதியும் விட்டேன்.

தமிழின் பழைமையான இராகங்களில் ஒன்றாக ஹரிகாம்போஜி இராகம் கருதப்படுகிறது. அந்த இராகத்தில் இப்பாடல் வந்தது இயல்பான ஒன்று. எனக்கு மனதுக்கும் பிடித்தமானதாக பாடல் அமைந்தது கண்டு உடனே என் நண்பருக்கு போன் போட்டு இதைச் சொன்னதுடன், கணினியில் ஒலிப்பதிவு செய்து அவருக்கு அனுப்பி கருத்து கேட்டேன். அவரும் பாடலின் இராகம் மற்றும் தாளத்தை பாராட்டி பத்திரமாக வைக்கச் சொன்னார். உங்களிடம் சொல்லி விட்டேன். மீண்டும் மற்றுமொரு பாடல் பிறந்த கதையை பிறிதொரு சமயம் விளக்குகிறேன். இப்போதைக்கு “கண்மணி போல காக்கும் தேவன்” பாடலின் வரிகள் உங்களுக்காக.... பாடலின் வரிகளில் ஒரு பாணியை கடைபிடித்திருக்கிறேன். கண்டுபிடித்தவர்கள் சொல்லலாம்.


கண்மணி போல் காக்கும் தேவன்

கண்மணி போல் என்னை
காக்கும் தேவா
மதில்போல சூழ்ந்தென்னை
காத்துக் கொள்வீர்
என்னை அரவணைப்பீர்
நான் உந்தன் பிள்ளை




பிள்ளையை பெற்ற தாய்
மறந்திடுவாளோ
மறந்தாலும் நீர் என்னை
மறப்பதில்லை
எனை வரைந்திருக்கின்றீர்
உம் உள்ளங்கையில்

உள்ளங்கை மேகம் போல்
உம் ஆசீர்வாதம்
பெருமழை போல் பெய்து
பெருகச் செய்யும்
சர்வ வல்ல தேவன்
கிருபை உந்தன் அன்பு

அன்பை நீர் காண்பித்தீர்
அளவிலாமல்
அதற்காக சிலுவையில்
அடிக்கப்பட்டீர்
என் பாவம் எல்லாம்
முற்றும் கழுவினீரே

கழுவும் உம் இரத்தம்
என் பரிகாரமே
கறை நீக்கி உருமாற்றி
இரட்சிக்குமே
இனிநான் உந்தன் சொந்தம்
இனிமை தங்கும் பந்தம்

My thoughts are not myths! 2


First of all, the church couldn't be the church of Christ, in other words, body of Christ, if it is fully pre occupied with churchianity rather than Christianity.

Friday, August 19, 2016

My thoughts are not myths!

It is ordinary for a man to murmur and to hear so many negative things when s/he faces the difficulties of life. But it is the special/extraordinary time for a Christian to hear God speaking to him/her on those moments.
Because he lives and with us all the times, not just in good times.
 
எப்பொழுதோ எழுதியது, எழுதியதில் படித்ததும் பிடித்தது.

Monday, August 15, 2016

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (சுதந்திர தின கவிதை!)

நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம்
நாட்கள் பல ஆகியும் விடியவில்லை
விடியலைத் தேடி புறப்பட்டோர் பலர்
துடிப்புடன் ஆரம்பித்து முடிந்தது
நடிப்பில்

நடப்பு நிலவரங்கள்...பயங்கரம்!
பயம் அனைவரிடமும் நிரந்தரம்
வெளியேறியவர்கள் வெள்ளையர்கள்
வெளிப்பட்டவர்களோ கொள்ளையர்கள்
வெளியேறிக்கொண்டிருப்பதோ
வெள்ளையாக மானம், மனிதாபிமானம் என்றுபல
கறுப்பாக ஒன்றே ஒன்று... பணம்!

பண்பாடு நிறைந்த தேசம்
பணம் படுத்தும் பாடு
எல்லாமே வெளி வேஷம்
மாறவில்லை கோஷம்
மக்கள் மனதிலோ விஷம்
விதைத்துவிட்டனரே
மனம் பதைக்க வைத்துவிட்டனரே

விட்டலாச்சார்யா படங்களை விட மாயாஜாலம்
அனைத்தும் வெறும் வார்த்தைஜாலம்
மக்கள் மனதிலோ அழுகையின் ஓலம்
மறைந்த சூரியன் என்றாவது விடியும்?
மண்ணுக்குள் புதைந்தவை வெளிவரும்போது - இல்லை
விண்ணுக்கு சென்ற பின்பு - எப்படி இருந்தாலும்
பார்க்கத்தான் உயிர் இருக்காதே

எது சுதந்திரம் என்ற கேள்வி இயல்பு
அன்னியரிடம் இருந்து பெறுவதல்ல
என்பது நிதர்சனம் ஏனெனில்
அனைத்தும் வெறும் காட்சி மாற்றமே
அனைவருக்குள்ளும் விடுதலை
அவரவர் உள்ளத்தில் பெறவேண்டும்
ஆன்ம விடுதலை அது
ஆனந்தம் தரும் விடுதலை - மனதை
ஆனந்தக் கூத்தாட வைக்கும் - மனிதர்க்கு
உயிர் கொடுத்து உறவாட அழைக்கும்
உண்மையான இறைவன் தரும் அன்புப் பரிசு
வாரிசாக அழைக்கும் அன்பு அழைப்பு
இதிலேயே இருக்கு உண்மையான விடுதலை
மற்றதெல்லாம் வெறும் பிழைப்பு

Friday, August 12, 2016

அவர் என்னை கொன்று போட்டாலும்....

சாது கொச்சுக்குஞ்ஞு அவர்கள் பற்றி நான் கேள்விப்படும்போதெல்லாம் பல விசயங்கள் என் மனதில் தோன்றி எழும். தமிழகமெங்கும் அவரும் பொன்னம்மா சன்னியாசியும் நடந்தே சபைகள் தோறும் கிராமங்கள் தோறும் தேவ ஊழியம் எப்படி சாத்தியமாயிற்று! ஆனந்தமே பரமானந்தமே எனத் துவங்கும் பாடல் மற்றும் துக்கத்திண்டே பான பாத்ரம் என துவங்கும் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலைகள் மனதில் விரியும். இதில்  “ஆனந்தமே பரமானந்தமே” பாடல் எழுதப்பட்ட சூழலை முன்பொருமுறை தமிழ்கிறிஸ்தவ தளத்தில் பதிவிட்டேன். அப்பொழுது பாடல்களில் வரலாறு என்ற ஒரு திரியில் பல பாடல்களின் வரலாற்றை தொகுத்து எழுதிக் கொண்டிருந்தேன். அப்படி எழுதும்போது துக்கத்தின் பான பாத்ரம் பாடலை நான் அதன் வரலாறு தெரிந்தும் எழுதத் தயங்கினேன்.
என்னவெனில், அப்படிப் பட்ட ஒரு மனம் உள்ளவர்கள் இன்று கிறிஸ்தவத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், நான் அப்படி இருக்கிறேனா என்று ஒரு பக்கம் சிந்தனை, இன்னொருபக்கத்தில், அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்காவது மனம் வேறெதிலும் செல்லாது மனதை வியாபித்துக் கொள்வதையும் கவனித்திருக்கிறேன். சமீபத்தில் முகநூலில் நண்பர் ஒருவர் அந்தப் பாடலைப் பற்றிய தகவலை பகிர்ந்த போது, திரும்பவும் நான் அப்பாடல் வரிகளின் ஆழம் மற்றும் அது தூண்டிய சிந்தனைகளில் மூழ்கி அப்பாடலை திரும்பத் திரும்ப பாடி கரைந்து எனையுமறியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறேன்.
நிற்க, இக்கண்ணீர் என் சூழ்நிலையை நினைத்து அல்ல, மாறாக எப்படி என்னை பாழாக்கும் சூழ்நிலைகளிலும் பரிசுத்த தேவன் எனை அவர் பக்கம் அவ்ரைப் போல மாற்றுவதில் அவருக்காக வாழ என்னை தயார்படுத்துகிறார் என்பதை நினைத்து மனம் உருகி உளம் கசிந்து வரும் கண்ணீர்.
பல முறை நான் யோபு  “அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன்” என்று சொல்லி இருப்பதைப் பற்றி தியானித்தும் சிந்தித்தும் இருக்கிறேன். ஆனால் அனேக தேவ மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் மிக முக்கியமான உண்மை, அவர்களுகு இவ்வுலக பாடுகள் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஏன், இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு இந்த ஒரு உலகமே ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. ஆகவே தான் அவர்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அவர்களை அசைக்க வில்லை. ஏனெனில் அவர்கள் அவர்மீது அல்லவா கட்டி எழுப்பப்பட்டிருக்கிறார்கள்.

இதை எல்லாம் நினைத்து மனம் வேத வசனத்தை அசைபோடும்போது, அடிமனதிலிருந்து சொல்ல விரும்புகிற வசனம், “அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன்.” ஏனெனில் நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இயேசுவுக்காக. அவர் சொல்லி இருக்கிறார், “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.” பிறகென்ன கவலை! 

அலை பாயும் மனமே மலையாதே!

அலை மோதும் நினைவுகள் கரை கடப்பதில்லை
கரை மீது மோதினாலும் தரை தடுப்பதில்லை
தர தரவென்று இழுத்துச் செல்லும் சிந்தனை
செல்லுகிற பாதையில் செவிக்கினிய நல் வார்த்தை
நல்கிடும் நல்லவரே நாதனேசுவே

நாத கீத வேத மனைத்துமென்
பாதம் செல்லும் பாதைத் துணையே
வாதை எண்ணி வருத்தமில்லை
வருந்தி அழைக்கும் இரட்சகரே
இரங்கி என்னையும் ஆற்றுவாரே

ஆறாத காயங்களும் காயாத கசப்புகளும்
கசடற கழுவி கறை திரை நீக்கி
நீக்கமற அவர் நினைவில்
நீசன் என் தோஷமற அகற்ற
அகலம் உயரம் நீளம் ஆழம்
அளவிட முடியாதன்பு

முள்முடி சூடி எனக்காக வாடி
வதைபட்டவருக்கோ காடி
என கண்ணீர் வந்திடுதே
என் கவலைகள் மறந்திடுதே
மறவாதவர் என் உறவானவர்
உறைவிடமாக என்னுள் வந்தவர்

எனக்குள் நினைவுகள் இனி அலைபாய்வதில்லை.
அலைகள் மீது நடந்தவர் அதை அடக்கினவர்
அவரில் அடங்கி அவர் அன்பில் மூழ்கி
எனையே நான் மறந்தேனே
இனி நினைப்பதற்கு எதுவுமில்லையே
அவரைத் தவிர!

Monday, August 8, 2016

வேதப் புத்தகம்!!!

அறுபத்தி ஆறு புத்தகங்கள்
ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள்
இன்றும் இனிமை தித்தி(க்கும்)ப்புச் சுவை
ஈசனின் ஈகை, ஊட்டுவதோ நம்பிக்கை
உணர்த்தும், உடைக்கும், உருமாற்றும்
ஊசலாடும் மனங்களுக்கு அருமருந்து
என்றும் இள்மை, அளிப்பது வளமை
ஏக்கங்களை ஆக்கங்களாக்கும்
ஐயங்களை அகற்றி பயங்களை பறக்கடிக்கும்
ஒவ்வொருநாளும் ஓதற்கரிய இன்பம்
ஓலம், அலங்கோலம் அனைத்தையும் மாற்றும்
ஔஷதமே என் வேதப் புத்தகமே!!!

(எப்பொழுதோ தமிழ் கிறிஸ்தவ தளத்திற்காக எழுதியது, தூர எடுத்துப் போடுவதற்காக எடுத்துவைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தைப் புரட்டியதில் திரும்பக் கிடைத்தது :) )

Sunday, August 7, 2016

பாடல் பிறந்த கதை - 1

பொதுவாக பிரபலமான பாடல்கள் உருவான கதையை வாசிக்கும் போது, அதன் பின் பிண்ணனி உணர்ந்து பாட ஏதுவாகவும், தேவனின் இடைபடுதலை அறிந்துணர்ந்து அர்த்தம் உணர்ந்து பாடவும் உதவியாக இருக்கிறது. நான் இங்கே சொல்லப் போவது பிரபலமான பாடல்கள் அல்ல, ஏன், இன்னும் சொல்லப் போனால் கிட்டத்தட்ட அனைத்தும் இன்னமும் முறையாக ஒலிப்பதிவு கூட செய்யப்படவில்லை, அதற்கான காலமும் சூழலும் கனிந்து வரவில்லை. ஆயினும் நான் எழுதப் போகும் பாடல் பிறந்த கதைப் பாடல்கள் அனைத்துமே நான் எழுதி இயற்றியவை. இதில் நான் என்று சொல்ல எதுவுமே இல்லை. எல்லாம் தேவ கிருபை. அந்தக் கிருபை பற்றிய கதையை சொல்வதில் எனக்கென்ன தயக்கம்!

2001 ஆம் ஆண்டு வாக்கில், நான் மருத்துவ விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்த காலம், பேரூந்தில் அன்றைய நாளின் தியான வேதபகுதியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே பேரூந்தோடு கூட நானும் என் சிந்தனையும் பயணம் செய்து கொண்டு செல்கிறோம். பேரூந்து சேர்மா தேவி எனும் ஊரைத் தாண்டி அம்பாசமுத்திரம் நோக்கி செல்கையில், என் மனதில் அன்று வாசித்த வேதபகுதி அப்படியே ஒரு காட்சியாக தோன்றுகிறது. அன்று காலையில் மூன்று வான சாஸ்திரிகள் இயேசு பிறந்த இடத்திற்கு ஒரு நெடிய பயணதிற்குப் பின் வந்து சேர்ந்து பணிந்து, காணிக்கை படைத்ததைப் பற்றி வாசித்திருந்தேன். அதை நினைத்தவுடனே என் மனதில் வண்ணமயமான அக்காட்சி, ஒரு பாலகன் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொள்ளும் அந்த சாஸ்திரிகளின் பணிவு மற்றும் தெளிவு நினைக்கவே ஆச்சரியமானதாக இருந்தது. அவர்கள் ஏன் அப்படி அவரைப் பணிந்து கொள்ள வேண்டும்! வாகன போக்குவரத்து தொலைத் தொடர்பு வசதியற்ற அக்காலத்தில் ஒரு நீண்ட பயணம், அதின் சவால்கள், அதின் முடிவில் தங்களையே தாழ்த்தி, மற்றவர்கள் பார்வையில் ஒரு சாதாரண ஏழைப் பிள்ளை முன்பு சாஷ்டாங்கமான பணிதல் - இதிலிருந்து நான் என்ன அறிந்து கொள்கிறேன்? ஏன்? ஏன்! என்ற என் மனதின் கேள்விகள் ஒருபக்கம், இன்னொருபக்கம் உடனே மடை திறந்த வெள்ளமென சில வரிகள் என் மனதில். உடனே எதிலாவது அதை எழுத வேண்டுமே என்று பார்த்தால் என்னிடம் பேப்பர் எதுவும் இல்லை. நான் இவ்வரிகளை மறந்துவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில், சட்டைப் பையை துலாவினால், ஒரு சிறிய சீட்டு - அந்த பேரூந்து பயணச் சீட்டு. உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அதில் எழுதத் துவங்கினேன்...
தெண்டனிட்டுப் பணிந்திடுவோம்
தேற்றிடுவார் தொழுதிடுவோம்
அண்டி வந்த யாவரையும்
அன்புடனே அரவணைக்கும்
பரலோக தேவசுதன்
பரிசுத்த இயேசு பரன்

மிகச் சிறிதாக நான் வாசிக்கக் கூடிய அளவில் எழுதி முடித்த பின்பு எனக்கே ஆச்சரியமானதாக அந்த அனுபவம் இருந்தது. ஏனெனில் நான் முறைப்படி இசைகற்றவன் அல்ல, ஆலய பாடகர் குழுவில் நான் பல ஆண்டுகள் இருந்தது உண்மைதான் என்றாலும் தாளம் தப்பாமல் பாடுவதில் எப்பொழுதுமே சிரமப் பட்டிருக்கிறேன். ஒருவேளை இதை வாசிக்கும் என் ஆலய பாடகர்குழு நண்பர்கள் இதை நன்கறிவர். வேலை முடிந்ததுமே நேரடியாக நான் பெரிதும் மதிக்கும் என் குடும்ப நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களிடம் சென்று இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நண்பர் ஜான் மிகச் சிறந்த அறிவாளி மட்டுமல்ல, நன்கு இசை நுணுக்கங்களை அறிந்தவரும் கூட. நான் பாடல் வரிகளை எழுதும்போதே அதற்கான இராகமும் தானாகவே எனக்குள் உருவாகி இருந்த படியால், அவரிடம் பாடியும் காண்பிக்கிறேன். பாட்டைக் கேட்ட உடனே அவர் ரியாக்சன் என்ன என்று அறிவதில் மிகுந்த ஆசை. என்ன வென்று கேட்டேன். பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வரியும் துவங்குவதற்கு முன் விடும் ஒரு ப்ரேக் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்கையில் என் மனதில் மிகவும் பரவசம்.

 தொடர்ந்து அவர், ஒரே ஒரு பல்லவி மட்டுமே இருப்பது ஒரு முழுமையான பாடல் அல்ல, இன்னும் சில பல்லவிகள் எழுத முயற்சி செய் என்று சொன்னார். இப்படி ஒரு சவால் இருக்கிறதா, ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்ற வேண்டுதலுடன் ஒரு நோட்டு மற்றும் பேனாவை எடுத்துக் கொண்டு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறேன். என்னையுமறியாமல் தொடர்ந்து புதிய வரிகள் உருவாகி பாடிக் கொண்டிருக்கிறேன்...

2. எத்தனையோ துன்பங்கள்
ஏராளம் வேதனைகள்
அத்தனையும் அற்றுப் போகும்
அன்பர் இயேசு திருமுன்
நம் இயேசு சுமந்துவிட்டார்
எல்லாமே தீர்த்து விட்டார்

3. சிலுவை நம் தியானமானால்
செழிக்கும் நம் ஜீவியம்
சோர்வுகள் மறைந்துவிடும்
சோதனைகள் ஜெயிக்கலாமே
சிலுவை சுமந்திடுவோம்
இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்

ஒரே மூச்சில் பாடி எழுது முடித்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி. மறுபடியும் நண்பர் ஜான் அவர்களிடம் முழுமையாக பாடிக் காண்பித்து பாடலை பத்திரமாக மனதில் சேமித்து வைத்தேன், என்றாவது ஒரு நாள் அனைவரும் கேட்கச் செய்யலாம் என்ற விசுவாசத்துடன். 15 வருடங்கள் கழித்து இப்பொழுது இதைப் பற்றி எழுதவாவது செய்ய ஆரம்பித்திருக்கிறேன், சீக்கிரம் முறையான ஒலிப்பதிவாக பார்க்கும் விருப்பத்துடன். பார்க்கலாம்!
விரைவில் மற்றுமொரு பாடல் கதையுடன் சந்திப்போம்.