Thursday, November 30, 2017

இயேசு எல்லாவற்றிலும் புதுமையானவர்

மனிதனைத் தேடி மனிதனாக வந்தவர்
குருவைத் தேடும் மானிடரிடையே
சீடரைத் தேடித் தெரிந்தெடுத்து
“சீடராக்குங்கள்” என்றார்

சட்டம் பேசி, கட்டம் கட்டிய தலைவர்கள் நடுவிலும்
தேவன்பின் மகத்துவம் பகிர்ந்து
தேவைகள் சந்தித்து, தேவனுக்காக வாழ
தேன்மதுர வாழ்வியல் நெறிகள் உதிர்த்தார்.

ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்தார்
எதிரிகளை மன்னித்தார்
துரோகிகளுக்கும் வாய்ப்பு கொடுத்தார்
துவண்டவர்களையோ தூக்கி நிறுத்தினார்

வீழ்ச்ச்சியால் விரிசலான உறவில்
தன்னைத் தாழ்த்தி, கிரயம் தந்து
“நானே வழி” என இணைத்து
மனிதனைத் தேடி வந்த இறைவன் அவர்

நாம் தேடுவதற்கு முன்னமே
நம்மை தெரிந்தெடுத்துவிட்டார்
எதையும் கொடுப்பதற்கு முன்னமே
தம்மையே தந்து, அன்பைக் காட்டியவர்
தனித்துவமான புதுமையானவர்
இயேசு 
- Arputharaj
9538328573