Friday, April 19, 2019

பெரிய வெள்ளிக்கிழமை சொல்லும் செய்தி!



நீயுனக்கு சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்கு சொந்தமல்லவே

 அனுபல்லவி

நீயுனக்குச் சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்: - நீ

சரணங்கள்

1.சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே திரு ரத்தம் ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே - நீ

2. இந்த நன்றியை மறந்து போனாயோ? இயேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்ததமுனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ? - நீ

3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினி கடல் தள்ளுவானேன்?

4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே, உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
உயர் பதவியில் என்றும் நிலைப்பாய் - நீ

பாடலை எழுதியவர் - தேவசகாயம் உபாத்தியார், சாட்சியாபுரம்

இராகம் - கமாஸ்
தாளம் - ரூபக தாளம்

Tuesday, April 16, 2019

நாட்டு நடப்புக்கு சம்பந்தமில்லாத ஒரு கதை



ஒரு ஊரில் ஒரு அசூரன் இருந்தானாம். அவனை எப்படியாவது நம்ம ஊருக்குக் கொண்டு வந்துரணும்னு ஒரு அதிகாரி திட்டம் போட்டு குறைந்த செலவிலும் மிகுந்த பாதுகாப்பாகவும் கொண்டு வர ஏற்பாடு பண்ணினார். ஆனால் அந்த அதிகாரியின் போதாத நேரம், அந்த அசூரனைக் கொண்டு வருவதற்கு முன், அவர் இருந்த இடத்தில் வந்த வேறொரு அதிகாரி வந்துட்டார். அந்த புதிய அதிகாரிக்கு அசூரனைப் பற்றியும் தெரியாது, அதை பாதுகாப்பாக கொண்டு வருவது பற்றியும் தெரியாது. மொத்தத்தில் பாதுகாப்புனா என்னன்னு தெரியாதுன்னு வச்சுக்கங்களேன்.

எவரையும் நம்பாத இந்த புது அதிகாரி தானே நேரடியாக அந்த அசூரனின் எஜமானர்களிடம் சென்று, ஒரு புது உடன்படிக்கைப் பண்ணினார். அதில் தன் நண்பர் சுனிலையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டால்தான் உடன்படிக்கை, இல்லையேல் அந்த அசூரனை எங்க ஊருக்கு எடுத்துட்டு போக மாட்டேன்னு அடம்பிடிச்சார். உடனே பயந்து போன அந்த எஜமான், இவருக்கு குல்பி ஐஸ் வாங்கிக் கொடுத்து ஐஸ் வைத்து, ஓ தாராளமா உங்க சுனிலை எங்க கூட சேர்த்துக்கலாம். சுனிலுக்கு நீங்க குடுக்காட்டியும் நாங்க கமிஷன் என்ன, லாபத்திலேயே பங்கு கொடுக்கத் தயார். ஒகே வான்னு கேட்டார் எஜமான். அட, இதை விட வேறேன்ன வேணும்னு நம்ம புது அதிகாரி துள்ளினார்.

“ஆனா ஒரு கண்டிஷன்”, நீங்க முன்பு கேட்ட மாதிரி, கேட்ட விலைக்குக் கொடுக்க மாட்டோம். நாங்க சொல்ற விலைக்கு, எங்களுக்கு எப்ப தோணுதோ அப்பதான் அசூரனை அனுப்புவோம்.” இதற்கு சம்மதிச்சா உடனே ஒரு கமிஷனை உங்க சுனிலுக்குக் கொடுக்குறோம்னு அந்த முதலாளி சொன்னார். இவரும் மார்பை நிமிர்த்து வெற்றிக் களிப்பில் ஊர் திரும்பினார். ஆனால் ஆண்டுகள் கடந்தும், அந்த அசூரன் தான் இன்னமும் ஊர் வந்து சேரவில்லை.

ரொம்ப நாளா அசூரன் வந்து சேரலையே, மக்கள் கேள்வி கேட்பாங்களேன்னு யோசித்த அந்த அதிகாரி, இனிமேல் நானே அந்த அசூரனின் வேலையைப் பார்க்கலாம்னு இருக்கேன். நான் அதிகாரியாக இருந்தாலும், உங்கள் எல்லாருக்கும் பாதுகாவலனாக, உங்களைக் காக்கும் காவலனாக இருப்பேன். நீங்கள் என்னைக் காக்கும் காவலனாக இருப்பீர்களா என்று மக்களிடம் கேட்டு, மக்கள் அனைவரையும் காவல் காக்கும் வேலைக்கு அழைப்பு கொடுத்தார். மக்களில் ஒரு சிலர் அட இந்த அதிகாரி இப்படி அர்ப்பணிப்போடு இருக்கிறாரே, காக்கிச் சட்டைக் காவலனை விட, காக்கி டவுசர் காவலனாகிய இவர்தான் உண்மையான காவலாளி என அவர் சொன்னதற்கு தலையை ஆட்டி, அவருக்கு அவர்கள் ஓ போட்டனர்.

Monday, April 15, 2019

நடுநிலை வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?


2019 பாராளுமன்ற தேர்தல் பிரிவினைவாதத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் இடையே நடக்கும் யுத்தமாக பார்க்கப்படுகிறது. ஒரு அணி இந்தியா என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே முழு உரிமையுடன் வாழ வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்து ஓட்டு கேட்கிறது. மறு அணி, இந்தியாவின் மேன்மை மற்றும் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமைதான், ஆகவே அனைவரும் ஒற்றுமையுடன் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்ற வாதத்துடன் பிரிவினை வாதத்திற்கு எதிராக அன்பை முன்வைத்து ஓட்டு கேட்கிறது. இது போக சில அல்லுசில்லுகள் உள்ளூர் அளவில் தங்கள் இருப்பைக் காண்பிப்பதற்காக காமெடி பண்ணிக் கொண்டிருக்கின்றன. இச்சமயத்தில் நடுநிலை வாக்காளர்கள் தங்கள் வாக்கை சிதறடிக்காமல், நாட்டின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் கொண்டு பிரிவினை வாதத்திற்கு எதிராக தங்கள் வாக்கை செலுத்த வேண்டியது அவசியம். நாடு என்னும் பெரிய பிம்பத்தை மனதில் கொண்டு, மதம், இனம், மொழி மற்றும் சாதி இவைகளைத் தாண்டி உங்கள் கை விரல் “மை” நாளைய இந்தியாவின் எதிர்காலம் நீதி எனும் சூரியனின் வெளிச்சத்தில், நீங்கள் கை காட்டுபவர்கள் குரல் கொடுக்க உங்கள் வாக்கை மறக்காமல் பதிவிடுங்கள். கட்சி ஓட்டுகளல்ல, உங்கள் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகிறது.
இப்படிக்கு
ஒரு நடுநிலை தேசாபிமானி

An appeal to apolitical voters


- 2019 India Parliamentary Election
2019 Loksaba election is percieved as a battle between two idealogies: Schism (or divisive politics) and National harmony. One party seeks votes with a slogan that only the people of a particular religion can live with fullrights as an Indian. The other party believes in unity in diversity, and voices for peaceful coexistence of all people. So they reject any form of schisms and make an appeal to vote with love. Apart from this, some local fringe parties try to prove their existence by doing some "damash". At this crucial juncture, apolitical voters need to be careful not to waste their votes, with future and development of the nation in mind, they should vote against divisive politics. Keeping the bigger picture of India in mind, transcending religion, race, language and caste boundaries, may your "Hand" press the symbols that can make India shine like a "Sun" in future. Your votes will determine the destiny of the country.
Yours
a patriotic Indian.