Monday, July 9, 2007

கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? என்ற கேள்வி பகுத்தறிவுள்ள எவருக்கும் எழக்கூடியதே. இப்படிப்பட்ட கேள்விகள்தான் அனேகரை கடவுளைப் பற்றிய அறிவுக்குள் வழி நடத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.
கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? நான் ஏன் இந்த உலகில் இருக்கிறேன்? என்பன போன்ற கேள்விகளுக்கு தகுந்த பதிலைத் தருவதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் கடமைப் பட்டுள்ளான். அப்போஸ்தலனாகிய பேதுருவின் முதலாம் நிருபம் 3 ம் அதிகாரத்தில் "உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்."என்று கூறுகிறார். ஆனால் நம்மில் எத்தனைபேர் சரியான பதில் (பொறுமையாக) கூறத் தெரிந்தவர்களாக இருக்கிறோம். நான் வாசித்த வரையில் ஜோஷ் மேக்டோவெல் என்பவர் எழுதிய புத்தகங்கள் அனைத்துமே இத்தகைய அறிவை நமக்குத் தர வல்லது. அவருடைய புத்தகங்களை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பாக்கியமே! காம்பஸ் குருசேட் என்ற உலகளாவிய ஊழிய நிறுவனம் அவரது புத்தகங்களை மிக குறைந்த விலையில் அச்சிட்டுள்ளனர்.
ஒன்று நிச்சயம். நீங்கள் என்னதான் சரியான பதிலைக் கூறினாலும் அந்த பதில் அவரை ஆண்டவரை ஏற்றுக் கொள்ளச் செய்யும் என்று கூறி விட முடியாது. நம்முடைய சாட்சியான வாழ்க்கை மட்டுமே கடவுள் இருக்கிறார் என்பதற்கான உயிருள்ள பதிலாக இருக்க முடியும். இயேசு எந்த இடத்திலும் (இந்த உலக ஞானிகளுக்கு) ஒரு அருமையான பதிலைச் சொல்ல முயற்சிக்கவில்லை. ஏனெனில் உலகத்தின் ஞானத்தை பைத்தியமாக்கும் தேவஞானத்தை இயேசு அறிந்திருந்தார். அதையே தம் சீஷர்களுக்கும் போதித்துச் சென்றார். அது என்னவெனில் "நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள்" என்பதே. ஆகவே நீங்கள் என்ன பதில் கூறினாலும் மனம் திருந்தாத ஒருவர் மாற்றப் பட்ட வாழ்க்கையைப் பார்க்கும் போது கேள்வியே கேட்காமல் கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்வார். ஆகவே நண் பர்களே உங்கள் வாழ்க்கை மாற்றப் பட்டு இருக்கிறதா? அது தான் மிகவும் முக்கியம். அதுதான் சரியான பதிலும் கூட. ஆமென்.

உங்களுக்கு கடிதங்கள் (கேள்வி பதிலகள்)

  வாலிபர்களுக்கு நடைமுறையில் கிறிஸ்தவத்தை கைக்கொள்ளுவதில் வரும் பிரச்சனைகள் ஏராளம். அதை உணர்ந்து சகோதரன் ஸ்டான்லி அவர்கள் எழுதிய இந்த புத்தகம் மிக பயனுள்ளதாகையால் இதை உங்களுக்கு வழங்குகிறோம்.

கடிதம் - 1

சோதனை அலைகள்

அன்புள்ளா அண்ணா
வாழ்த்துக்கள்.சமீபத்தில் நீங்கள் நடத்திய மாணவர் மலர்ச்சி முகாமில் பங்கு பெற்றவர்களில் நானும் ஒருவன். நான் கல்லூரியில் முதலாண்டு படிக்கிறேன். என்னைப்போன்ற மாணவருக்கு மலர்ச்சி முகாம் மிக பயனுள்ளதாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. நீங்களும் மற்ற அண்ணன்மார் ஆற்றிய சொற்பொழிவுகளும் அன்னை பேரிதும் கவர்ந்துவிட்டன. என்னையே மறந்து நன் நீங்கள் முகாமில் அறிமுகம் செய்த இயேசு நாதருக்கு என்னை அர்ப்பணித்து விட்டேன். ஏதோ மேலோகமே இறங்கி வந்து என் இதயத்தை நிரப்பி விட்டது போலிருந்தது.

ஆனால்,

கல்லூரிக்கு திரும்பி வந்ததும் ஒரே பிரச்சனை. இனி நல்வாழ்வு நடத்த வேண்டுமென்ற தீர்மானத்துடன் திரும்பிய எனக்கு ஒரே குழப்பம். விடுதியிலுள்ள சோதனைகள் எல்லாம் என்னையே நோக்கிப் பாய்கின்றன போலும்.முகாமில் இருந்த உற்சாகம் இப்போது இல்லை.முகாமில் நடந்ததெல்லாம் வெறும் வெத்து வேட்டு,அதை எல்லாம் நம்பாதே என்று யாரோ என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பது போலிருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.எனவேதான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். உடன் பதில் எழுதுவீர்களா? ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டுமென்று விளக்கமாக எழுதுங்கள்.

இப்படிக்கு உங்கள் தம்பி
மோகன்.


தம்பி மோகனுக்கு,
உனது மடலுக்கு நன்றி. முகாமில் ஒரே குதூகலம்,திரும்பிய பின்னரோ ஒரே குழப்பம் என்று எழுதியிருந்தாய்.இயேசுனாதருக்கு உன்னை நீ அர்ப்பணித்துள்ள்ச்ச்ய் அல்லவா? அப்படியானால் அவர் சொல்வதை கேள்:-
''உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக"
"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்."

உனக்கு ஏன் முன்னை விட இப்போது சோதனைகள் அதிகம் தெரியுமா? இயேசுவின் பாத படிக்கு வந்து சேருமுன் நீ சாத்தானுக்கு அடிமையை இருந்தாய். இப்போது நீ இயேசுவின் பிள்ளை ஆனதும் அவனுக்கு உன் மேல் கோபம் வராமல் இருக்குமா? உன்னை எப்படியாவது விழத்தள்ளி மறுபடி உன்னை அவன் பக்கம் இழுத்துவிட அவன் தன்னால் ஆனது அத்தனையும் செய்வான். ஆனால் " உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்"என்று வேதம் கூறுகிறது.
கிறிஸ்தவ வாழ்வு ஒரு போராட்டம்தான்.ஆனால் வெற்றி நமதே. இறைவன் தமது வேதத்தில் கூறியுள்ளதை பார்:

"நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் "
"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்."
" நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்."

யாரோ உன் மன நிலையை குழப்பி எதையோ சொல்லிகொண்டிருப்பது போலிருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தாய். அதுதான் சாத்தானின் சத்தம். அவன் ஒரு வஞ்சகன், அவன் பொய்யன். "அப்பாலே போ சாத்தானே நான் இயேசுவின் வார்த்தைகளையே நம்புவேன் "என்று சொல்லி விடு. நீ எதிர்த்து விட்டால் அவன் ஓடி விடுவான்.கொஞ்சம் இடங்கொடுத்து விட்டாலோ கூடாரம் போட்டு விடுவான். எச்சரிக்கையாயிரு.
காலையும் மலையும் தவறாது வேதம் வாசித்து ஜெபம் பண்ணு. உனக்காக நாங்கள் ஜெபம் பண்ணுகிறொம்.
அன்பின் வாழ்த்துகளுடன்
உன் அண்ணன்

யோவான் 14:1;16:33; 1யோவான்4:4; அப்.14:22; 2தீமோ.3:12; சங்.34:19.

ஏழு எளிது

 ஆவியில் எளிமை

சிந்தனையில் தூய்மை

செயலில் வாய்மை

மொத்தத்தில் உண்மை

இதுவே நம் தேவை

சேர்க்குமே மறுமை

பரிசோதிக்கலாமா நம்மை?

என்ன! ! ! ! ஜாதியை ஒழிக்க வேண்டுமா?

   கிறிஸ்தவத்தில் ஜாதி என்றதுமே எனக்கு சாது சுந்தர்சிங் சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது. அது: " நான் இங்கு யானைக்கால் வியாதியினால் பாதிக்கப் பட்ட ஒருவரை பார்த்தேன். அவ்வியாதியினால் அவர் கால்கள் வீங்கி பெரிதாக இருந்தபடியினால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை.
    இந்தியாவை ஒரு மனிதனுக்கு ஒப்பிடலாம். தலை- ஜம்மு காஷ்மீர், வலதுகை-குஜராத், இடது கை-மேற்குவங்காளம், கால்கள்- தென் இந்தியா. ஒரு மனிதன் நன்றாக நடப்பதற்கு கால்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியம். இல்லையேல் அந்த யானைக் கால் வியாதிக்காரனுடைய நிலைதான். இங்கு தென் இந்தியாவில் தான் கிறிஸ்தவம் நன்றாக வேரூன்றியுள்ளது. ஆனால் அவர்களிடையே ஜாதி, இனவெறி ஆகியவை காணப்படுகிறது. இந்த ஜாதி, இனவெறி அவர்கள் சீராக நடப்பதற்கு தடையாக உள்ளது. அது கிறிஸ்தவம் பரவுவதற்கும் பெரிதும் தடையாக உள்ளது. இந்திய கிறிஸ்தவர்களின் கால்களைப் போன்ற தென் இந்திய கிறிஸ்தவர்களின் இக்குறையினால் இந்தியாவில் கிறிஸ்தவம் மற்ற மாநிலத்தவரை தாங்குவதற்குப் பதிலாக தள்ளாடிக்கொண்டு இருக்கிறது." இது அவர் 1916ல் கேரளா வந்திருந்தபோது சொன்ன சம்பவமாகும். இன்று வரை அதே நிலைமை நீடித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு அல்லவா?
   ஐயா வேதாகமத்தில் ஜாதிகள் இல்லையா என்று யாரோ முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது. வேதாகமத்தில் ஜாதிகள் என்று குறிப்பிடப் பட்டிருப்பவை எல்லாமே அந்த தேசங்களைத் தான் குறிப்பிடுகின்றன. சந்தேகமெனில் உங்களிடம் ஆங்கில வேதாகமம் இருந்தால் அதில் பார்க்கவும். அப்படியெனில் ஆபிரகாம் ஏன் தன் இனத்தாரிடம் சென்று ஈசாக்கிற்கு பெண் பார்க்கும் படி கேட்டுக் கொண்டான். அதன் காரணமென்னவெனில் ஆபிரகாம் வாழ்ந்த கானான் தேசத்தார் கொடிய விக்கிரக வணக்கத்தாராயிருந்தனர் என்பதே.
இந்த தலைப்பு (ஜாதியை ஒழிப்பது)குறித்து ஒரு நல்ல கட்டுரை எழுதவேண்டுமென்று என் நண்பர் பாஸ்டர் இரப்பேல் (இவர் கிறிஸ்தவளாக மாறிய முஸ்லீம் பெண்ணை மணம் புரிந்தவர்) அவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் ஒரு நல்ல கருத்தை முன் வைத்தார்.அது கலப்புத் திருமணம் ஜாதி அரக்கனுக்கு கல்லறை கட்டக் கூடிய வலிய ஆயுதம் என்பதே. அதோடல்லாமல் வேதாகமத்திலிருந்து அவர் கலப்புத்திருமணங்களுக்கான ஆதாரங்கள் பலவற்றைக் கூறினார்.அவை:

1.மோசே -- மீதியானாகிய எத்திரோவின் மகளை மணந்தவர்.
2.சல்மோன் -- எரிகோ பட்டண வேசி ராகாபை மணந்தவர்.
3.போவாஸ் -- மோவாபியப் பெண்ணான ரூத்தை மனத்தவர்.
ஏன் இன்னும் சொல்லப் போனால் இயேசுகூட புற ஜாதியான நம்மைத்தான் தமக்கு மணவாட்டியாக தெரிந்து கொண்டார்.

     பின்னர் ஏன் வேதாகமம் கலப்புத் திருமணங்களை எதிர்க்கிறது என்ற கேள்வி எழுவது நியாயமே. அதேனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் புறஜாதியாரை திருமணம் செய்து அவர்களின் அஞ்ஞான விக்கிரக ஆராதனைக்குள் அவர்கள் சென்று விடக்கூடாது என்பதற்காகவே. (உ.ம்) எண்ணாகமம்25.
ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் வரும் போது அவன் புது சிருஷ்டியாகிறான். ஆகவே அவர்களிடம் ஜாதி வேறுபாடு இருத்தல் கூடாது. கிறிஸ்தவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத மற்றவர்களை திருமணம் செய்வதில்தான் மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். (அதற்காக சபைகளையும் ஆலயங்களையும் காதல் கூடாரங்களாக்கி விடக் கூடாது. ஆனால் நடப்பது என்ன?)
அப்படியென்றால் கலப்புத்திருமணங்கள் தான் இறுதி தீர்வா எனில் இல்லவே இல்லை. கலப்புத்திருமணங்கள் ஒரு துவக்கமே.முடிவு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மற்றும் அவரின் ஆட்சியில் தான் கிட்டும்(ஏசாயா 11ல் கூறியபடி).

   நடைபெறுகிற கலப்புத்திருமணங்களிலும் ஒரு பிரச்சனை பாருங்கள். அது என்ன தெரியுமா? கலப்புத் திருமண தம்பதிகள் ஏதாவது ஒரு ஜாதியை தெரிந்துகொள்ளும் கட்டாயத்தில் அல்லது அதிக பயனடையக்கூடிய ஜாதியை தெரிந்து கொள்கின்றனர். இது மாறுமோ?
தற்போது அனேகம்பேர் அரசாங்கம் சாதி கேட்கும்போது தான் தங்கள் சாதியை அறிந்துகொள்கின்றனர் என்று சமீபத்தில் ஒரு சகோதரர் சொன்ன செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. ஆகவே அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி ஜாதியை ஒழிப்பது எட்டாக்கனிதான்.
ஒரு நற்செய்தி. தற்போது மோகன் சி லாசரஸ் போன்ற தேவ மனிதர்கள் இதுகுறித்து கண்டித்து பேச ஆரம்பித்துள்ளனர். இதுவும் ஒரு நல்ல ஆரம்பமே.

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்"
"ஒன்றே குலம்"
"சாதி இரண்டொழிய வேறில்லை" என்று உலக மக்களே பாடி வைத்து சென்றுள்ளனர்.ஆனால் நம் கிறிஸ்தவர்களிடமோ ஜாதி உணர்வு என்பது புரையோடி போயிருக்கிறது. இதில் நம் சிறிய முயற்சி என்ன மாற்றத்தை உண்டுபண்ணிவிடமுடியும் என்று நினைக்காமல் "சிறுதுளி பெருவெள்ளம்" என்று உணர்ந்து செயல்படுவோம் வாரீர்.

"மனிதரால் கூடாதவைகள் தேவனால் கூடும்"

ஆதியில் இல்லாது
பாதியில் வந்து-மனு
ஜாதிக்கு பீதியை
அளித்த ஜாதியை
அழிக்க வாரீர்

அற்புதம் @ அற்புதராஜ்

தலைவர்கள் வீழ்ச்சி-ஏன்?

பெரிய ஆவிக்குரிய தலைவர்கள், பரிசுத்தவான்கள் என்று கருதப்பட்டவர்கள் கூட திடீரென விழுந்து போவது ஏன்?

மிகப் பெரிய தேவ மனிதர்கள் பலரின் திடீர் விழுகை உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. "இப்படிபட்ட ஒரு பெரிய தேவ மனிதன் எப்படி விழக்கூடும்?" என்பதே நம்மை குழப்பமடையச் செய்யும் கேள்வியாயிருக்கிறது.இதற்கான பதில் தனித்தன்மை வாய்ந்தது.


ஒரு மனிதனின் ஆவிக்குரிய பெலன் அவனுடைய மனதின் பெலனைப் பொறுத்ததாகவும், அவனுடைய மனப் பெலத்துடன் நேரடியாக சம்பந்தமுள்ளதாகவும் இருக்கிறது. ஒரு நபர் ஊக்கமான ஜெப வீரராகவும் வல்லமையான அற்புதங்களைச் செய்கிறவராகவும் அக்கினிமயமான எழுப்புதலை கொண்டு வருகிறவராகவும், ஆத்துமாவை ஊடுருவிச் செல்லுகிற ஆவிக்குரிய செய்திகளை அளிப்பவராகவும், ஆவிக்குரிய பிரகாரமாக பல தாலந்துகளை உடையவராகவும் இருக்கக் கூடும். ஆனால் அவர் தன்னுடைய மனதை அடக்கி ஆள்க் கற்றிராத பட்சத்தில், சந்தர்ப்பம் எழும்போது அவர் விழுந்து போக ஏதுவுண்டு. ஆகவே உண்மையில் மனதுதான் முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். ''தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்"( நீதி.25:28) என்று வேத வாக்கியம் கூறுகிறது. இயல்பாக நம்மிலுள்ள திறன்கள் அனைத்தும் நம் மனதையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. நாம் எவ்விதம் இருக்கிறோம் என்பதையும் நம்முடைய மனநிலையே தீர்மானிக்கிறது. இவ்வாறிருக்கிற படியினால் நம்முடைய மனதைக் கைப்பற்றிக் கொள்ள சாத்தான் ஊக்கத்துடனும் விடாப்பிடியாகவும் பிரயாசப்படுகிறான் என்பதில் ஆச்சரியப் படுவதற்கொன்றுமில்லையே! தனக்கொப்புவிக்கப் பட்டிருக்கிற மந்டைக்கு உண்மையான மேய்ப்பனாகத் திகழ்ந்த அப்.பவுல், "சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப் படுமோவென்று பயந்திருக்கிறேன்" (2கொரி.11:3)என்று கூறுகிறார். ஒரு தேவ மனிதன் விழுந்து போவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே அவருடைய மனதில் விழுகை சம்பவித்திருக்க வேண்டும் - உலகிலுள்ள ஒருவருமே அதை அறியாதிருக்கக் கூடும். பிரகாசிக்கிற பரிசுத்தவான்கள் ஆகாயமண்டலத்திலுள்ள நட்சத்திரங்களைப் பொல இருக்கிறார்கள் என்று தேவ வசனம் கூறுகிறது (தானி.12:3). நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ளன என்று நாம் அறிவோம். அவற்றின் ஒளி பூமியை வந்தெட்டுவதற்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஒளி ஆண்டுகள் ஆகும்(ஒளியின் திசை வேகம் 300000 கி.மீ/வினாடி). ஒரு நட்சத்திரம் பூமியிலிருந்து 4 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்குமாயின், நான்கு வருடங்களுக்கு முன் அந்த நட்சத்திரம் கொடுத்த ஒளியானது இப்பொழுதுதான் பூமிக்கு வந்து சேரும். பிரகாசிக்கிற பரிசுத்தவான்களும் அவைகளைப் போன்றவர்களே. இன்று வல்லமையாக பிரகாசித்துக் கொண்டிருக்கிற ஒரு பெரிய பரிசுத்தவான் நான்கு வருடங்களுக்கு முன்பே கிருபையினின்று விழுந்து போயிருக்கக் கூடும். ஒரு நட்சத்திரம் 4 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பது போல, அவர் ஆவிக்குரிய பிரகாரமாக ஆகாய மண்டலங்களில் அவ்வளவு உயரமான இடத்தில் இருந்தபடியால், அவருடைய ஒளியை நாம் இன்று காண்கிறோம்.ஆனால் நாளைய தினம் திடீரென்று அந்த ஒளி மறைந்து விடுகிறது. ஒரு நட்சத்திரம் நான்கு ஒளியாண்டுகளுக்கு முன் ஒளியிழந்து, கறுத்து போயிறுக்கக் கூடும். ஆனால் இன்று (அதாவது நான்கு ஆண்டுகள் கழித்து) இப்பூமியில் வசிக்கும் ஒருவரும் அதை அறியாமலிருக்கலாம். இன்றுவரை அதின் ஒளி பூமியை வந்தெட்டிக் கொண்டுதான் இருந்திருக்கும்! ஒரு தேவ மனுதன் விழும் போது ஜனங்கள்" அந்த பெரிய ஆவிக்குரிய தலைவருக்கு திடீரென்று என்ன சம்பவித்தது?" என்று அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைகிறார்கள். நிச்சயமாக அது ஒரு திடீர் வீழ்ச்சி அல்ல. ஒரு தேவ மனிதன் விழுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, அவருடைய மனதில் விழுகை சம்பவித்திருக்கும். இது சரித்திரப் பூர்வமாகவும் இன்று நடைமுறையிலும் மெய்யானதாகவே இருக்கிறது. ஆவிக்குரிய தலைவர்கள் என்று அறியப்பட்டிருந்து, பின்பு கிருபையினின்று விழுந்துபோன பலரும் வெகு காலத்துக்கு முன்னரே தங்கள் வாழ்க்கையில் ஒரு இரகசியமான விழுகை சம்பவித்திருந்தது என்பதைத் தங்களுக்கு வெளியரங்கமான விழுகை சம்பவித்த பின்னர் தெரிவித்திருக்கின்றனர். வல்லமையாக பயன்படுத்தப் படும் தேவ மனிதர்கள் சிலருக்கு ஏற்படும் அபாயம் என்னவெனில், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுசிறு தவறுகளுண்டாகும் போது அவறுக்காக சரியாக மனஸ்தாபப் பட்டு மனந்திரும்பி அவற்றை அறிக்கை செய்து விட்டு விடாமல், அவற்றை மறைக்க முனைந்து தாங்கள் மேன்மை பொருந்திய தேவ மனிதர் என்றும், ஆதலால் மனஸ்தாபத்துடன் அறிக்கை செய்வதும் மனந்திரும்புவதும் தங்கள் கௌரவத்திற்கு தாழ்வானது என்று நினைப்பதேயாகும். அதைத் தொடர்ந்து, தவறான நோக்கத்தோடு ஒருவரைத் தொடுதல், அருவருக்கத்தக்க படங்களை ஒரு நிமிடம் பார்த்தல் போன்ற இன்னுமதிகமான சிறிய இரகசிய பாவங்கள் அவர்களுடைய வாழ்க்கயைப் பற்றி பிடித்துக் கொள்கின்றன. இவை ஆரம்பத்தில் ஒரு நபரின் ஊழியத்தை உடனடியாக பாதிக்காமலிருக்கலாம். ஆனால் இவை பிற்பாடு அவனவனுடைய வாழ்க்கையையும் ஊழியத்தையும் அழித்து விடும். ஒரு நபர் மீது நீங்கள் கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாம்; அது அவரை கொன்று போடுவதில்லை. நீங்கல் அவர் மீது கொஞ்சம் வைக்கோலை வீசலாம்; அதுவுங்கூட அவரைக் கொல்லாது. அவர் மீது கொஞ்சம் மணலை நீங்கள் எறியக் கூடும்; அதுவுங்கூட அவரை கொல்லாமலிருக்கக் கூடும். ஆனால் மணலையும், வைக்கோலையும், தண்ணீரையும் ஒன்றாக உபயோகித்து ஒரு செங்கல் செய்து,அதை ஒரு நபரின் மீது எறிந்தால், அது அவரை கொன்று போடக் கூடும். நம்முடைய மிகச் சிறிய, சொற்பமான இரகசிய பாவங்களும் அப்படியே இருக்கின்றன. நாம் கவனமாயிருப்போமாக! களங்கமற்றது போல் தொனிக்கும் சாத்தானின் சத்தத்தை நாம் சந்தேகப் படாமல் கேட்க ஆரம்பிக்கும்போது, அவன் நம்முடைய வாழ்க்கையில் புக, அடியெடுத்து வைக்க நாம் இடமளிக்கிறோம். அவன் முதலாவது நம்மை வஞ்சித்து, பின்பு நம்முடைய மனதைக் கெடுத்து, தீட்டுப் படுத்தி, முடிவாக அதைக் குருடாக்குகிறான்(2கொரி.4:4). அதற்குப் பின் நாம் எந்தவொரு பாவத்தையும் செய்ய தைரியமுள்ளவர்களாகிறோம். இதுவே கபடமற்ற ஏவாளுக்கு அவன் வைத்த கண்ணியாகும். விலக்கப் பட்ட விருட்சத்தின் கனி உண்மையிலேயே புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமானதும், அவளுடைய புத்தியை தெளிவிக்கிறதுமான ஒன்று என்று சிந்திக்கும் வகையில் அவள் முதலாவது வஞ்சிக்கப்பட்டாள்(ஆதி.3:6). பின்பு, தங்களை நேசித்து, தங்களோடு ஒவ்வொரு நாளும் நடந்து சம்பாஷித்து வந்த தேவன் தங்களுக்கு நல்லதும் விரும்பப் படத்தக்கதுமான ஏதோ ஒன்றை வேண்டுமென்றே கொடாமல் விலக்கிவைத்துக் கொண்டதாக எளிதாக நம்பும் படி அவள் வழி நடத்தப் பட்டாள். தன் தேவன் மே அவள் கொண்டிருந்த மாயமற்ற அன்பு போய்விட்டது- அவளுடைய மனது கெடுக்கப் பட்டு விட்டது. அதற்குப் பின், கனியைப் புசிக்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அப்படிப்பட்ட நேரடியான கீழ்ப்படியாமையினால் உண்டாகக் கூடிய பின்விளைவுகளைக் குறித்து அவள் பயப்படவில்லை. அந்த அளவுக்கு அவளுடைய மனது குருடாக்கப் பட்டிருந்தது. நாம் இப்பட்ப்பட்ட மன நிலையை அடையும் போது, எவ்வளவதிகமான ஆலோசனைகளும், ஊக்குவிப்புகளும், புத்திமதிகளும், சிட்சைகளும் அளிக்கப்பட்டாலும் அவற்றுள் யாதொன்றினாலும் நம்முடைய உணர்ச்சியற்ற, மரத்துப் போன நிலையினின்று நம்மை தூக்கியெடுக்க முடியாது; நம்முடைய அன்புள்ள கர்த்தரால் நமக்கென்று ஆயத்தமாக்கப் பட்டுள்ள மகிமையானவைகளோ அல்லது முரட்டாட்டம்பண்ணுகிறவர்களுக்காக வைக்கப் பட்டுள்ள வரப் போகும் நியாயத்தீர்ப்பையோ நம்மால் காணக் கூடாமற் போகக்கூடும்.


 
இந்தக் கட்டுரை விழுந்து போனவர்களுக்கு மட்டுமல்ல, இதை வாசிக்கிறவர்களுக்கும் கூட ஒரு எச்சரிக்கையாக இருக்கக் கூடும்.
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
I தெசலோனிக்கேயர் 4:3