Wednesday, June 30, 2021

அன்பின் ஒழுங்கு

வாசிக்க: 1 நாளாகமம் 25, 26; நீதிமொழிகள் 29; அப்போஸ்தலர் 2:1-13

வேத வசனம்: நீதிமொழிகள் 29: 15. பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
17. உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

கவனித்தல்: சமீப காலங்களில், நம் சமுதாய மற்றும் குடும்ப வாழ்வில் பல மாற்றங்களை நாம் காண்கிறோம். பலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுப்பதற்காக கடினமாக உழைக்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக தங்கள் வேலையில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அதுபோல, குழந்தைகளும் தங்கள் பெற்றோருடன் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், மற்றும் மொபைல் போன் என  பொழுதுபோக்கு சாதனங்களுடன் செலவிடுகிறார்கள். ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்வது ஒரு தனி நபரின் பொறுப்பு என நவீன உலகம் கூறுகிறது. ஆயினும், நாம் உலகில் காணும் ஒழுக்கம் சார்ந்த பல பிரச்சனைகள் மற்றும் சீர்கேடுகளுக்கு அது எவ்வித தீர்வதையும் தருவதில்லை. மறுபுறம், தேவ ஞானத்துடன் நம் பிள்ளைகளை வளர்ப்பது எப்படி என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது. “ பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்” என நீதிமொழிகள் 29:15 கூறுகிறது. அப்படியெனில், நம் கோபத்தை வெளிப்படுத்த, நம் குழந்தைகளை கடுமையாக தண்டிக்கலாம் அல்லது திட்டலாம் என்றோ வேதாகமம் நம்மை அனுமதிக்கிறது என்று அர்த்தம் அல்ல. மாறாக, ஞானத்தை அளிக்கும்படி நம் குழந்தைகளை முறையாக சிட்சிப்பது பற்றி வேதம் போதிக்கிறது. அன்பான பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிட்சித்து, உலகத்தின் ஆபத்துகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்கள் என வேதம் கூறுகிறது (நீதிமொழிகள் 13:24; 19:18; 22:15; 23:13, 14). குழந்தை வளர்ப்புடன் தொடர்புடைய பெற்றோருக்கான இந்த ஒழுங்கு அன்பின் அடிப்படையில் ஆனது என்பது நினைவில் இருக்கட்டும் (நீதிமொழிகள் 3:11,12; எபிரெயர்.12:5-11). முறையாக சிட்சிக்கப்பட்ட ஒரு பிள்ளையானது தன் பெற்றோருக்கு கனத்தையும், அமைதியையும், மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று நீதிமொழிகள் 22:6 கூறுகிறது. தற்காலத்தில் பெற்றோரிடம் காணப்படுகிற முக்கியமான பிரச்சனை என்னவெனில், பலர் தங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளத் தயாராக இல்லை; ஆனால் தங்கள் பிள்ளைகள் மட்டும் எல்லாவற்றிலும் மிகவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எந்த சாக்குப்போக்குகளையும் சொல்லாமல், நாம் யாராக இருந்தாலும், வேதாகம ஒழுங்கையும் போதனைகளையும் பின்பற்றி, நம் இளைய/ எதிர்கால தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் இருக்க வேண்டும். அது நம் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அனேகருக்கு ஞானத்தையும், சமாதானத்தையும், மற்றும் மகிழ்ச்சியையும் அளிக்கும். 

பயன்பாடு: என் வாழ்க்கையை தேவன் ஒழுங்குபடுத்தும்படி/சிட்சிக்கும்படி நான் அவரை அனுமதிக்க வேண்டும். அவருடைய கோலும் தடியும் என்னை சரிப்படுத்தி/திருத்தி, என்னை தேற்றுகிறது. நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் தேவனுடைய வார்த்தையானது எனக்கு வழி (ஒளி) காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவில், பிதாவாகிய என் தேவன் அவருடைய சமாதானத்தையும், மகிழ்ச்சியையும், மற்றும் ஞானத்தையும் கண்டு கொள்ளவும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு உதவுகிறார். 

ஜெபம்: பிதாவாகிய தேவனே, என்னை சிட்சிக்கும் உம் அன்பிற்காக நன்றி. பரிசுத்தத்திலும், அன்பிலும், மற்றும் நீதியிலும் நான் உம்மைப் போல மாற/வாழ வேண்டும் என நீர் விரும்புகிறீர். அன்பின் ஆண்டவரே, உம் ஞானமுள்ள வார்த்தைகளை தவறாமல் கேட்டு, கீழ்ப்படிய எனக்கு உதவியருளும். ஆமென். 

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 180

A Loving discipline

READ: 1 Chronicles 25, 26; Proverbs 29; Acts. 2:1-13

SCRIPTURE: Proverbs 29: 15 A rod and a reprimand impart wisdom, but a child left undisciplined disgraces its mother.
17 Discipline your children, and they will give you peace; they will bring you the delights you desire.

OBSERVATION: In recent times, we see many changes in our social and family life. Many people work hard to give a better life for their children. So they spend more time at work than with their children. Similarly, children spend more time with entertainment tools such as televisions, computers, and mobiles than their parents. The modern world says that it is an individual's responsibility to learn disciplines. However, it does not offer a solution to the present moral degradation and crisis we see in the world. On the other hand, the Bible teaches us how to rear our children with godly wisdom.  Proverbs 29:15 says, "A rod and a reprimand impart wisdom." It doesn't mean that the Bible allows us to abuse or severely punish our children to vent out our anger. Rather, it speaks about appropriately disciplining our children to impart wisdom. The Bible says that loving parents discipline their kids and save them from the world's dangers (Pro.13:24; 19:18; 22:15; 23:13, 14). Remember: this parental discipline of child-rearing is based on love (Pro.3:11,12; Heb.12:5-11). A disciplined child brings honor, peace, and joy to his/her parents. Proverbs 22:6 says, "Start children off on the way they should go, and even when they are old they will not turn from it." One of the key problems in present-day parenting is that many parents are not ready to discipline their lives, but they expect their children to be perfect in everything. Without saying any excuses, whomever we may be, we should be an example to our younger or next generation by following biblical disciplines and teachings.  It would bestow wisdom, peace, and joy to many, not just to our family members.

APPLICATION: I should allow God to discipline my life. His rod and staff correct me and comfort me. God’s word guides me even when I walk through the valley of the shadow of death. In Jesus Christ, my God the Father helps me find his peace, joy, and wisdom and share with others. 

PRAYER: Father God, thank you for your love that disciplines me. You want me to be/become like you in holiness, love, and righteousness. Loving Lord, help me to listen and obey your words of wisdom without fail. Amen.

 - Arputharaj Samuel

+91 9538328573

Day - 180


Monday, June 28, 2021

தேவனுடைய மன்னிப்பைப் பெறுவதற்கான வழி

வாசிக்க: 1 நாளாகமம் 23, 24; நீதிமொழிகள் 28; அப்போஸ்தலர் 1

வேத வசனம்: நீதிமொழிகள் 28: 13. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

கவனித்தல்:  “நான் பாவிதான், பரிசுத்தமானவன் அல்ல” என்று அனேக தங்களைப் பற்றி ஒப்புக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தங்கள் பாவங்களை அறிக்கை செய்ய முன்வருவது கிடையாது. முதல் மனிதனாகிய ஆதாமில் இருந்து, மனிதர்கள் தங்களுடைய பாவங்களை தேவனிடம் இருந்தும் (மற்ற மனிதரிடம் இருந்தும்) மறைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய தவறான செயல் அல்லது பாவங்களைப் பற்றி எதிர்த்துக் கேள்விகேட்காவிடில், பொதுவாக அவர்கள் அவற்றைப் பற்றி பேசுவதில்லை. ஜனங்கள் தங்கள் பாவங்களை மறைக்கப் பயன்படுத்தும் வழிகள்—பொய்கள், மற்றவர்களை குறை சொல்தல், தார்மீக பொறுப்பு எடுக்காமல் விலகிச் செல்தல், தங்களுடைய தவறுகளை நியாயப்படுத்துதல், அனுதாபத்தை உண்டாக்குதல், கண்ணீர் வடித்தல், சாக்குப் போக்குகளைச் சொல்லுதல், இரகசியமாக வைத்திருத்தல்— இன்னதென்று நாம் அறிந்தும் பார்த்தும் இருக்கிறோம்.  இப்படிப்பட்டவர்கள் வாழ்வடைய மாட்டார்கள் என வேதாகமம் மிகவும் உறுதியாக எச்சரிக்கிறது. சங்கீதம் 32ல், தன் பாவங்களை மறைத்ததினால் உண்டான வேதனை மற்றும் வலி பற்றி தாவீது கூறுகிறார் (சங்.32:3,4). தன் மீறுதல்களை தாவீது அறிக்கை செய்யும் வரைக்கும், அவரால் தேவனுடைய மன்னிப்பைப் பெற முடியவில்லை. சங்கீதம் 32:1,2 வசனங்களில்,  தேவனுடைய மன்னிப்பு மற்றும் மகிழ்ச்சியினை பெறுதலின் ஆசீர்வாதம் பற்றி தாவீது பாடுகிறார்.  நாம் மற்ற மனிதர்களிடம் இருந்து சில காரியங்களை மறைக்கக் கூடும். ஆனால் தேவனிடம் இருந்து எதையும் நாம் மறைக்க முடியாது. அவர் அனைத்தையும் அறிந்திருக்கிறார்; அவர் பார்வைக்கு மறைவானது எதுவும் இல்லை. 

நீதிமொழிகள் 28:13ன் பிற்பகுதியை நாம் கவனமாகப் பார்ப்போம். இங்கே, தன் பாவங்களை “அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று வாசிக்கிறோம். பாவங்கள்/மீறுதல்கள்/அக்கிரமங்கள் ஆகியவற்றில் இருந்து மன்னிப்பைப் பெற, ஒருவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு அவைகளை விட்டுவிடவேண்டும். “பாவம் செய்வது மனித இயல்பு, ஆகவே நான் பாவம் செய்கிறேன்” என்றோ, அல்லது “தேவனுடைய கட்டளைகளும் எதிர்பார்ப்புகளும் பின்பற்ற முடியாதபடி மிகவும் கடினமானவை” என்றோ, அல்லது, “இக்காலத்தில் இதைச் செய்வது பாவமல்ல” என்றோ சிலர் கூறுகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் பாவங்களை விட்டுவிட விரும்புவதில்லை; மாறாக, அவர்கள் சாக்குபோக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு என தெரிந்திருந்தும், உலகப்பிரகாரமான பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் தங்கள் பாவங்களை விட்டு வெளியே வர விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். ஒரு மனிதன் பாவம் செய்யும்போது, அவன் தேவனுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறான் (சங்.51:3, 4). நாம் நம் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடும்போது, தேவனுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்ளும்போது, இயேசு நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறார் (1 யோவான் 2:1). ஆயினும், நம் பாவ அறிக்கையானது நேர்மையானதாகவும், மாய்மாலம் இல்லாததாகவும் இருக்க வேண்டும். பாவங்களை அறிக்கை செய்தல் என்பது தங்களுடைய மதிப்பை குலைத்து விடும் என அனேகர் பயப்பட்டு, பாவ அறிக்கை செய்ய தயக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், தேவனிடத்தில் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற்ற அனேகரைப் பற்றி வேதாகமம் பல சம்பவங்களை நமக்குச் சொல்கிறது. “தேவனால் மன்னிக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய பாவம் என எதுவும் இல்லை” (No sin is too big for God to forgive). நம் கடந்த கால பாவங்களை அறிக்கை செய்யாமல், அது நம் உள்ளான மனிதனையும் சமாதானத்தையும் பாதித்து, நம்மை அது வேதனைப்படுத்த அனுமதிப்பதற்குப் பதிலாக, நாம் மனத்தாழ்மையுடன் தேவனிடம் பாவ அறிக்கை செய்து, அவருடைய இரக்கங்களைக் கண்டடையலாம். நம் பாவங்களை அறிக்கை செய்து அவற்றை விட்டுவிடும்போது, இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது சகல பாவங்களிலும் இருந்தும் எல்லா அநியாயங்களில் இருந்தும் நம்மை சுத்திகரிக்கிறது. அதன் பின், நாம் தேவனுடைய மன்னிப்பையும் அன்பையும் ருசிக்க ஆரம்பிக்கிறோம். 

பயன்பாடு: என் தேவனிடம் இருந்து நான் எதையும் மறைக்க முடியாது. அவருக்கு மறைவானது எதுவுமில்லை. என் பாவங்களை அறிக்கை செய்தல் என்பது என் பலவீனத்திற்கான அடையாளம் அல்ல. மாறாக, என் பலவீனங்களை மேற்கொள்ள/வெற்றி பெறுவதற்கு தேவனுடைய வல்லமையைப் பெறுவதற்கான வழி ஆகும். நான் தேவன் முன்பாக வரத் தயங்க மாட்டேன். இயேசுவின் பாவநிவாரண பலியின் காரணமாக, தேவனுடைய மன்னிப்பைப் பெற, நான் அவர் முன்பாக தைரியமாக வரமுடியும். “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்...தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (சங்.32:1,5).

ஜெபம்: பிதாவாகிய தேவனே, என் பாவங்களை மன்னிக்க நீர் உண்டு பண்ணி வைத்திருக்கிற கிருபைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, தேவனுடன்  ஒப்புரவாக்குதலை உண்டாக்கும் உம் பலிக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நீரே என் மறைவிடம் ஆக இருக்கிறீர். என் தேவனே, “வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 179

The way to receive God’s forgiveness

READ: 1 Chronicles 23, 24; Proverbs 28; Acts. 1

SCRIPTURE: Proverbs 28: 13 Whoever conceals their sins does not prosper, but the one who confesses and renounces them finds mercy.

OBSERVATION: Many people would readily agree that they are not saints but sinners. However, they all do not confess their sins. From the first man Adam, humans try to hide/cover/conceal their sins from God (and others). Unless they are confronted about their wrongdoings or sins, people usually do not confess it. We have seen and know the ways—lies, blaming others, avoiding any moral responsibility, justifying their mistakes, creating sympathy, tears, saying excuses, and maintaining secrecy— that people use to cover their sins. The Bible sternly warns such people that they will not prosper. In Psalm 32, David expresses his pain and agony of hiding his sins (Ps.32:3,4). Until David acknowledged and confessed his transgressions, he was not able to experience God’s forgiveness. In Ps.32:1-2, David sings about the blessedness of God’s forgiveness and joy. We may conceal something from other men but cannot hide anything from the Lord. He knows and sees everything.

Let us carefully look at the second part of Pro.28:13. Here it says that “the one who confesses and renounces them finds mercy.” For the forgiveness of sins/transgressions/iniquities, one needs to confess and renounce his/her sins. Some people say, “to err is human, so I did,” or “God’s laws and expectations are too high to practice,” or “it is ok to do this and that nowadays.” So they don’t want to renounce their sins; instead, they say excuses. Although they know it is wrong, they do not want to come out of it for various worldly reasons. When a person sins, he sins against God (Ps.51:3, 4). When we confess and renounce our sins, we identify ourselves with God; When we acknowledge our sins, Jesus advocates for us with the Father (1 Jn.2:1). Our confession must be genuine and without any hypocrisy.  Many fear that confession of their sins would spoil their image, so they are reluctant to do it. However, the Bible tells many stories in which people found God’s mercy and forgiveness when they confessed their sins to God. “No sin is too big for God to forgive.” Instead of allowing our past sins to torment and tear our inner-man and peaceful life, we can humbly confess them before God and find his mercies. When we confess and renounce our sins, the blood of Jesus purifies us from every sin and all unrighteousness; we begin to taste God’s forgiveness and love.

APPLICATION: I cannot conceal anything from my God. Nothing is hidden from him. Confessing my sins is not a sign of weakness. Instead, it is the way to get God’s strength to overcome my weaknesses. I will not hesitate to come before God. With Jesus atoning sacrifice, I can boldly come before God to receive his forgiveness. “Blessed is the one whose transgressions are forgiven, whose sins are covered...you forgave the guilt of my sin” (Ps.32:1,5).


PRAYER: Father God, thank you for your provision to forgive my sins. Jesus, thank you for your atoning sacrifice.  Lord, you are my hiding place. My God, “See if there is any offensive way in me, and lead me in the way everlasting.” Amen.

 - Arputharaj Samuel

+91 9538328573

Day - 179

Sunday, June 27, 2021

Do you love Jesus?

READ: 1 Chronicles 21, 22; Proverbs 27; John 21: 15-25

SCRIPTURE: John 21: 17 The third time he (Jesus) said to him, “Simon son of John, do you love me?” Peter was hurt because Jesus asked him the third time, “Do you love me?” He said, “Lord, you know all things; you know that I love you.” Jesus said, “Feed my sheep.

OBSERVATION: The Gospel of John presents many exciting and insightful conversations between Jesus and others. Here, we see one of Jesus' final conversations, in which he helped Simon Peter understand a vital message to serve Jesus. When Jesus repeatedly asked, "Do you love me?" it would have raised many questions in Simon Peter's mind. It is evident that Peter "was hurt." Bible teachers give divergent explanations to why Jesus asked the same question "Do you love me?" three times: Since Peter denied Jesus three times, Jesus made him affirm his love and faith in Jesus, to reinstate him as his disciple; Like Jesus called Simon Peter to follow him after miraculous fishing (Luke 5), here, after a similar fishing miracle, Jesus restores Peter's calling and reinstates him as his disciple.

 In Greek, in this conversation, two different terms, agapaó (which refers to the unconditional and higher-level love between God and men) and philo (which means friendly love), are used to denote the word love. First two times, Jesus uses agapaó; in all three times, Peter invariably uses philo, which Jesus adapts in his final question. So some suggest that Jesus expected a higher level of love, but Peter did not understand it. Some say that there was no reason to use different words, as these two words are used interchangeably in the Gospel. However, the reinstatement of Peter in the presence of the other ten disciples and Peter's confession regarding whether he truly loved Jesus are the key points in this conversation.

"Do you love me more than these?" was Jesus' first question to Simon. This question may refer to multiple meanings: Do you love me more than you love these (other disciples)?; Do you love more than others love me?; Do you love me more than you love the things of the world? Peter is known for his devotion and love to the Lord Jesus; he openly expressed it many times. However, this time Peter had to submit himself to Jesus humbly. See the difference in his words when he realized that Jesus knows everything.


Jesus asks us the same question, "Do you love me more than these?" We may have misplaced our priorities and preferences on other persons or things of the world. It doesn't mean that we do not love Jesus. The question is whether we love Jesus more than we love other persons or things. Jesus knows that we love him.

APPLICATION: Jesus gives me another chance to love and follow him; he is the God of the second chances. He loves to restore the loving relationship with humanity. I should love Jesus more than any other person and things of the world. Jesus wants me to love and follow him. I cannot please him with my words and worldly possessions. He knows my heart and commitment to serve him faithfully. 

PRAYER: Jesus, thank you for your love and care for me. At times, I denied you (secretly or openly) and went back to my old life. However, you, in your great love, gave me opportunities to come back to you. Thank you for your forgiveness. Lord my God, throughout my life, help me to love you just as you love me. Amen.

 - Arputharaj Samuel

+91 9538328573

Day - 178

நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா?

வாசிக்க: 1 நாளாகமம் 21, 22; நீதிமொழிகள் 27; யோவான் 21: 15-25

வேத வசனம்: யோவான் 21: 17. மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.


கவனித்தல்: யோவான் நற்செய்தி நூலில் இயேசுவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே நிகழ்ந்த சுவராசியமான மற்றும் ஆழமான பல  உரையாடல்களைக் காணலாம்.  இங்கே, இயேசுவின் கடைசி உரையாடல்களில் ஒன்றை நாம் காண்கிறோம்; அதில் இயேசுவைச் சேவிப்பதற்குத் தேவையான முக்கியமான செய்தியை புரிந்து கொள்ள இயேசு சீமோன் பேதுருவுக்கு உதவினார். “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்று சீமோன் பேதுருவிடம் இயேசு  திரும்பத் திரும்ப கேட்ட போது, சீமோன் பேதுருவின் மனதில் அது பலவிதக் கேள்விகளை எழுப்பியிருக்கும். பேதுரு “துக்கப்பட்டார்” என்பது வெளிப்படையாக தெரிகிறது. “நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்ற ஒரே கேள்வியை இயேசு ஏன் மூன்று முறை கேட்டார் என்பதற்கு வேத அறிஞர்கள் பல விளக்கங்களைக் கொடுக்கிறார்கள்: சீமோன் இயேசுவை மூன்றுமுறை மறுதலித்திருந்த படியால், அவனை மறுபடியும் சீடனாக நிலை நிறுத்தும்படி இயேசுவின் மீது அவன் கொண்டிருந்த அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தும்படி அப்படி செய்தார்; ஒரு அற்புத மீன் பிடிப்புக்குப் பின் சீமோன் பேதுருவை தன்னைப் பின்பற்றும்படி அழைத்தது போல (லூக்கா 5),  இங்கே, அது போன்ற ஒரு மீன்பிடித்தல் சம்பவத்திற்குப் பின், பேதுருவின் அழைப்பை மறுபடியும் உறுதிப்படுத்தி தன் சீடராக திரும்பவும் நிலை நிறுத்துகிறார்.  

கிரேக்க மொழியில், இந்த உரையாடலில், agapaó (அகாபே, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நிபந்தனையற்ற உயரிய நிலை அன்பைக் குறிக்கும் சொல்) மற்றும் philo (சகோதர அல்லது நட்பு ரீதியான அன்பைக் குறிக்கும் சொல்), என்ற இரண்டு வார்த்தைகள்பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசு முதல் இரண்டு முறையும் அகாபே என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்; பேதுரு மூன்று முறையும் சகோதர சிநேகத்தைக் குறிக்கும் வார்த்தையையே பயன்படுத்துகிறார். அதை மூன்றாவது கேள்வியில் இயேசுவும் பயன்படுத்துகிறார்.  இயேசு ஒரு உயர்ந்த நிலை அன்பை எதிர்பார்த்தார்; ஆனால் பேதுரு அதைப் புரிந்து கொள்ள வில்லை என்று சிலர் கூறுகின்றனர். இந்த இரண்டு வார்த்தைகளும் ஒரே பொருளில் யோவான் நற்செய்தி நூலில் பல இடங்களில் பயன்படுத்தப்படிருப்பதால், இந்த உரையாடலில் இந்த இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதற்கு  குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை என சிலர் கூறுகின்றனர். ஆயினும், மற்ற பத்து சீடர்களின் முன்பாக பேதுருவை மறுபடியும் சீடராக நிலை நிறுத்துவதும் மற்றும் இயேசுவை பேதுரு உண்மையிலேயே நேசிக்கிறாரா என்பதைப் பற்றிய அவருடைய அறிக்கையும் இந்த உரையாடலில் மிக முக்கியமானது ஆகும்.

 “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” என்பது தான் இயேசு சீமோனிடம் கேட்ட முதலாவது கேள்வி ஆகும். இந்தக் கேள்வி பல அர்த்தங்களைத் தரக் கூடும்: நீ  இவர்களை (மற்ற சீடர்களை) நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசிக்கிறாயா? ; இவர்களை விட அதிகமாக நீ என்னை நேசிக்கிறாயா?; இந்த உலகத்தின் காரியங்களை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக நீ என்னை நேசிக்கிறாயா? இயேசுவின் மீதான அன்பு மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில் நன்கறியப்பட்டவராக பேதுரு இருந்தார்; அவர் வெளிப்படையாக அனேகந்தரம் அதை சொல்லி இருக்கிறார்.  ஆயினும், இங்கே பேதுரு தாழ்மையுடன் தன்னை இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. இயேசு அனைத்தையும் அறிந்திருக்கிறார் என்பதை அவன் உணர்ந்து சொன்ன வார்த்தைகளில் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள்.

இயேசு நம்மிடமும் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்:  “இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா” நாம் நம் விருப்பங்கள் மற்றும் முன்னுரிமைகளுக்கு, உலகத்தின் வேறு காரியங்கள் மற்றும் மனிதர்களுக்குக் கொடுத்து, இயேசுவுக்கு உரிய இடம் கொடுக்காமல் இருக்கலாம். இதன் பொருள் நாம் இயேசுவை நேசிக்க வில்லை என்பது அல்ல. நம் முன் இருக்கும் கேள்வி என்ன வெனில், நாம் மற்ற மனிதர்கள் மற்றும் காரியங்களைக் காட்டிலும் அதிகமாக இயேசுவை நேசிக்கிறோமா என்பது தான். நாம் இயேசுவை நேசிக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். .

பயன்பாடு: நான் இயேசுவை நேசிக்க, பின்பற்ற அவர் எனக்கு மற்றுமொரு வாய்ப்பை தருகிறார்; நான் மறுபடியும் மனம் திரும்பி அவரிடம் வர வாய்ப்பு தரும் தேவனாக இருக்கிறார். மனிதனுடனான அன்பின் உறவை புதுப்பிக்க அவர் விரும்புகிறார். இந்த உலகத்தின் எந்த மனிதனை அல்லது பொருளை நேசிப்பதைக் காட்டிலும் நான் இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும். நான் அவரை அன்பு செய்து, பின்பற்ற வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்.  என் வார்த்தைகளினாலோ அல்லது உலக உடைமைகளினாலோ இயேசுவைப் பிரியப்படுத்த முடியாது. அவர் என் இருதயத்தையும், உண்மையுடன் அவரைச் சேவிக்க வேண்டும் என்ற என் அர்ப்பணிப்பையும் அறிந்திருக்கிறார். 

ஜெபம்: இயேசுவே, நீர் என் மீது காட்டும் அன்பு மற்றும் கரிசனைக்காக உமக்கு நன்றி. சில சமயங்களில், நான் (வெளிப்படையாகவோ அல்லது யாரும் அறியாத படியோ) உம்மை மறுதலித்து, என் பழைய பாவ வாழ்க்கைக்குச் சென்றிருக்கிறேன். ஆயினும், நீர் உம் மாபெரும் அன்பினால், நான் உம்மிடம் திரும்பி வர எனக்கு வாய்ப்புகளைத் தந்தீர். உம் மன்னிப்பிற்காக நன்றி. என் தேவனாகிய கர்த்தாவே, என் வாழ்நாள் முழுதும், நீர் என்னை நேசிப்பது போலவே நானும் உம்மை நேசிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.  

 - அற்புதராஜ் சாமுவேல் +91 9538328573

Day - 178

வீண் பேச்சுகளைத் தவிர்க்கவும்

வாசிக்க: 1 நாளாகமம் 19, 20; நீதிமொழிகள் 26; யோவான் 21: 1-14

வேத வசனம்: நீதிமொழிகள் 26: 20. விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
21. கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
22. கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.

கவனித்தல்: இன்றைய உலகில் கோள் சொல்லுதல்/ பிறரைப் பற்றிப் புறம் பேசுதல் (gossip) எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு நடை முறை போல தோன்றுகிறது. கோள்சொல்லுதல் என்பது ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தகவலைப் பேசுதல் அல்லது எழுதுதல் ஆகும். செய்தித்தாள்களில், பத்திரிகைகளில், சமூக வலைதளங்களில், மற்றும் மனிதர்கள் வேலை பார்க்கிற அனைத்து இடங்களிலும் ஜனங்கள் ஒருவரை ஒருவர் கோள்சொல்வதை நாம் காண்கிறோம்.  சில உளவியல் நிபுணர்கள் கோள்சொல்லுதல் சில சாதகமான விளைவுகளை உண்டாக்குவதாக சொல்கிறார்கள். அலுவலகங்களில் சில அதிகாரிகள் தங்களுடைய சுய நல லாபத்திற்காக கோள்சொல்லுவதை ஊக்கப்படுத்துகின்றனர். ஆயினும், வேதாகமமானது கோள்சொல்லுவதற்கு எதிராக தெளிவாக நம்மை எச்சரிக்கிறது. இங்கே, நீதிமொழிகள் 19ம் அதிகாரத்தில் கோள்சொல்லுதல் பற்றி வேதம் சொல்வதை நாம் வாசிக்கிறோம்.   நீதிமொழிகள் 19ம் அதிகாரத்தின் முக்கியமான கருப்பொருள் மூடருடைய மதியீனம் பற்றியது ஆகும். ஆகவே, இந்த அதிகாரத்தில் கோள்சொல்லுதல் பற்றி வாசிப்பது மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது. கோள் சொல்லுதல் சண்டைகள், வெறுப்பு, மற்றும் பிரச்சனைகளை உண்டாக்குகிறதாகவும், அனேக உறவுகளை சிதைக்கிறதாகவும் இருக்கிறது. கோள்சொல்லுதல் பெரும்பாலும் கோள் சொல்லப்பட்டவருடைய மதிப்பு மற்றும் மரியாதையைக் கெடுத்துப் போடுகிறதாக இருக்கிறது.  அவர்களை நேர்மறை கண்ணோட்டத்துடன் பார்ப்பது ஜனங்களுக்குக் கடினமானதாக இருக்கிறது. “கோள்காரனுடைய வார்த்தைகள்...உள்ளத்திற்குள் தைக்கும்” என்று வாசிக்கிறோம். ஆண்டுகள் பல கடந்த பின்னரும் கூட, கோள்சொல்லுதலினால் பாதிக்கப்பட்ட அனேகர் அது உண்டாக்கிய அதிர்ச்சி, வலி, வேதனை, மற்றும் பயத்தில் இருந்து வெளிவர முடியாமல் கஷ்டப்படுகின்றனர். தற்கொலை எண்ணங்கள், தன்னைப் பற்றிய குறைவான மதிப்பீடு, தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களைப் பற்றிய எதிர்மறை சிந்தனை ஆகியவற்றுடன் போராடியது பற்றி அவர்களில் சிலர் பொதுவெளியில் தாங்கள் பட்ட கஷ்டத்தைப் பகிர்ந்திருக்கின்றனர். சில நேரங்களில், விளையாட்டாக, முன் யோசனையின்றி பிறரைப் பற்றிச் சொல்லப்பட்ட வார்த்தைகள், காட்டுத்தீ போல கட்டுப்பாடற்று பரவி விடுகின்றன. ஆகவே, ஒருவர், அதிலும் குறிப்பாக மற்றவர்களைப் பற்றிப் பேசும்போது, தன் வார்த்தைகளைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.  எப்பொழுதும் புறங்கூறித் திரிகிற ஒருவர் தேவனுடன் வாழ முடியாது (சங்.15:1-3). 

ஒருவரைப் பற்றி புறங்கூற அல்லது கோள்சொல்ல வேண்டும் என்ற சோதனையுடன் நாம் போராடும்போது, குறிப்பாக ஒரு புதிய மற்றும் எவரும் அறியாத தகவல் நம்மிடம் இருக்கிறது என நாம் நினைக்கும்போது, இயேசு சொன்ன வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்: “உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்” (மத்தேயு.5:37). மற்றவர்களைப் பற்றி நாம் ஏதேனும் சொல்லுவதற்கு முன்பு, அது நமக்கு ஏதேனும் நன்மை உண்டாகுமா என்றும் மற்றவருடைய மதிப்பு மரியாதையை கட்டி எழுப்ப உதவுமா என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் பதில் “இல்லை” என்பதாக இருந்தாம் நாம் அப்படிப்பட்ட  வீணான வெட்டிப் பேச்சுகளைத் தவிர்த்தல் அனைவருக்கும் நலம். “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (எபேசியர் 4:29). கொலோசேயருக்கு எழுதிய நிருபத்தில், “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” என்ற நடைமுறைக்கேற்ற ஒரு அறிவுரையை பவுல் பகிர்ந்து கொள்கிறார் (கொலோசேயர் 4:6).  

பயன்பாடு: என் வார்த்தைகள் மற்றவருடைய மதிப்பை கட்டி எழுப்பவும் கூடும் அல்லது அவர்களுடைய நற்பெயரை சிதைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கவும் கூடும். இயேசுவைப் பின்பற்றும் நான் மற்றவர்களுக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிற, அவர்களைக் கட்டி எழுப்புகிற வார்த்தைகளைப் பேச வேண்டும். பிரச்சனைகளை உண்டாக்குவதற்குப் பதிலாக, என் வார்த்தைகள் கிருபையுள்ளவைகளாக இருக்க வேண்டும். என் நாவானது மற்றவர்களை தவறாக வழிநடத்தவும் என்னைக் கறைபடுத்தவும் நான் அனுமதிக்க மாட்டேன். மாறாக, நான் தேவனைத் துதிப்பேன்; தேவனுடைய அன்பையும் கிருபையையும் மற்றவர்கள் ருசித்துப் பார்க்க நான் உதவி செய்வேன். 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் நாவைக் கட்டுப்படுத்தவும், உம் மகிமைக்காக அதைப் பயன்படுத்தவும் எனக்கு உதவியருளும். ஆண்டவரே, மற்றவர்களுக்கு உதவுகிற, பக்தி விருத்தி உண்டாக்குகிற, மற்றும் அவர்களைக் கட்டி எழுப்புகிற வார்த்தைகளை மட்டுமே பேச எனக்கு உம் ஞானத்தைத் தாரும். இயேசுவே, உம் புகழை அறிவிக்கும்படி என் உதடுகளைத் திறந்தருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 177

Avoid idle talks

READ: 1 Chronicles 19, 20; Proverbs 26; John 21: 1-14

SCRIPTURE: Proverbs 26: 20 Without wood a fire goes out; without a gossip a quarrel dies down.
21 As charcoal to embers and as wood to fire, so is a quarrelsome person for kindling strife.
22 The words of a gossip are like choice morsels; they go down to the inmost parts.

OBSERVATION: Gossipping appears to be an accepted practice in today’s world. Gossip is something that a person speaks or writes about unverified personal or private details of others. In Newspapers, magazines, social media, and almost all places where humans work, we see people gossip about others. Some Psychologists say that gossip brings positive effects. In workplaces, some officers encourage gossip for their selfish benefit. However, the Bible clearly warns us against gossip. Here, in Proverbs 19, we get a glimpse of what the Bible says about it. As the main theme of Proverbs 19 is about the folly of the fools, it is appropriate to read about gossip in this chapter. Gossip ignites fights, hate, disputes and ruins many relationships. Gossips often destroy the reputation of the person whose details are shared. People find it difficult to see them positively. “The words of a gossip” can hurt a person’s “inmost parts.” Even after years, many who are affected by gossip struggle to come out of the trauma, pain, and fear. Some of them have expressed how they struggled with suicidal thoughts, low self-esteem, inferiority complex, and negative perception about others. Sometimes, unintentional gossip becomes uncontrollable and spreads like wildfire. Therefore, one should be careful in his/her words, especially when s/he speaks about others. A person who constantly gossips cannot live with God (Ps.15:1-3). 

When we struggle with a temptation to gossip about somebody, especially when we think that we have a piece of new and unknown information, we should remember the words of Jesus, “All you need to say is simply ‘Yes’ or ‘No’; anything beyond this comes from the evil one” (Mt.5:37). Before we tell something about others, we should think about whether it would do anything good for us and it will help build the reputation of the other person. If our answer would be no, it is better to avoid such idle talks about others. Apostle Paul says, “Do not let any unwholesome talk come out of your mouths, but only what is helpful for building others up according to their needs, that it may benefit those who listen” (Ephesians 4:29). In his epistle to Colossians, Paul gives practical advice that “Let your conversation be always full of grace, seasoned with salt, so that you may know how to answer everyone” (Colossians 4:6).  

APPLICATION: With my words, I can either build the reputation of others or ruin their goodwill and career. As a follower of Jesus, I should speak words that edify and build others. Instead of kindling strife, my words should always be full of grace. I will not allow my tongue to mislead others and defile me. Instead, I will praise God; I will help others to taste God's love and grace. 

PRAYER: Father God, help me to tame my tongue and use it for your glory. Lord, give me your wisdom to speak only the words that help, correct and edify others. Jesus, open my lips to declare your praise. Amen.

 - Arputharaj Samuel

+91 9538328573

Day - 177

Saturday, June 26, 2021

தேவ இரகசியங்களைக் கண்டடைதல்

வாசிக்க:  1 நாளாகமம் 17, 18; நீதிமொழிகள் 25; யோவான் 20: 19-31

வேத வசனம்: நீதிமொழிகள் 25: 2. காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.

கவனித்தல்: தேவன் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவர், அறியப்பட முடியாதவர் என நினைத்துகொண்டு, அவர் மனிதனுடன் தொடர்புடைய விஷயங்களைக் குறித்து கவலைப்படுவதில்லை என்று அனேகர் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, அவர்கள் தேவனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். இங்கே, “காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை” என சாலொமோன் எழுதுகிறார். தேவன் மனிதர்களிடம் இருந்து காரியங்களை மறைக்கிறாரா?  “ஆம்” மற்றும் “இல்லை” என்று நாம் சொல்லக் கூடும். தேவனுடைய மகத்துவமும், புத்தியும் எவராலும் “ஆராய்ந்து முடியாதது” என்று வேதம் சொல்கிறது  (சங்.145:3; ஏசாயா.40:28). ஆயினும், மனிதர்களுக்கு அறியப்படாத தெய்வமாக இருப்பதை தேவன் விரும்புவதில்லை. உலக தோற்ற முதல், தேவன் தம்மை பலவிதங்களில் வெளிப்படுத்தி வருகிரார்; நாம் எந்த சாக்குப் போக்கையும் சொல்ல இடமில்லை (சங்.19:1, ரோமார்.1:20). தேவன் சில விசயங்களை நம்மிடம் இருந்து மறைக்கிறார் என்பது உண்மைதான். குறிப்பாக, நம் எதிர்காலத்தைக் குறித்த காரியங்களை அவர் மறைக்கிறார் (உபா.29:29). ஆயினும், நமது நன்மைக்காகவே அக்காரியங்களை நம்மிடம் இருந்து மறைக்கிறார். “வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை” என்று இயேசு சொன்னார் (லூக்கா 8:17).  சத்தியத்தின் தன்மை என்னவெனில், அது வெளிச்சத்துக்கு வருகிறதாகவும், தேடுகிற அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. 

ஒரு ராஜா உண்மையைத் தேடிக் கண்டுபிடித்து, நீதியை நிலைநிறுத்தும்போது, அது அவனுக்கு மேன்மையாக இருக்கிறது (1 இராஜா. 3:16-28). கிறிஸ்தவர்களாகிய நாம், “ தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும்,” மற்றும் தேவனுக்கு முன்பாக “ராஜாக்களும் ஆசாரியர்களும்” ஆக இருக்கிறோம் என வேதம் சொல்கிறது. (1 பேதுரு 2: 9; வெளி.1:6). எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் தேவனுடைய பிள்ளைகள் ஆக இருக்கிறோம்.“கேளுங்கள்,” “தேடுங்கள்” மற்றும் “தட்டுங்கள்” என இயேசு நமக்குக் கற்பித்திருக்கிறார் (மத்.7:7,8; லூக்கா.11:9,10). நாம் தேவனை முழு இருதயத்தோடும் தேடும்போது, அவரைக் கண்டடைய முடியும்.  (எரேமியா 29:13). நாம் ஒன்றை தேடிக் கண்டடையும்போது, அக்காரியத்தின் மதிப்பை அறிந்து கொள்ளும்படியாகவே தேவன் அதை நம்மிடம் இருந்து மறைக்கிறார். 

பயன்பாடு: என் தேவன் தம் சிருஷ்டி மற்றும் தம் வார்த்தை மூலமாக தன்னை வெளிப்படுத்துகிறார். ஜாக்கிரதையாக இயேசுவைப் பின்பற்றும் நான், தேவன் எனக்கென வைத்திருக்கிறவைகளைக் கண்டு கொள்ள அவரைத் தேட வேண்டும். என் முழு இருதயத்தோடு நான் தேவனைத் தேடும்போது, அவரைக் கண்டடைய எனக்கு உதவுகிறார். தேவனுடைய பிள்ளையாகிய நான், தேவனுடைய மறைவான பொக்கிஷங்களைக் கண்டடையும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக உம்மை வெளிப்படுத்துகிறதற்காக நன்றி. அன்பின் ஆண்டவரே, என் வாழ்க்கைக்கான உம் சித்தத்தை அறிந்து, அதன் படி வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 176

Finding the secrets of God

READ: 1 Chronicles 17, 18; Proverbs 25; John 20: 19-31

SCRIPTURE: Proverbs 25: 2 It is the glory of God to conceal a matter; to search out a matter is the glory of kings.

OBSERVATION: Many people think that God is transcendent and unknowable; they complain that he is least bothered about human affairs. So they refuse to believe in God. Here, Solomon writes, “It is the glory of God to conceal a matter.” Does God conceal things from humans? We may say “yes” and “no.” The Bible says that “no one can fathom,” God’s greatness and understanding (Ps.145:3; Is.40:28). However, God does not like to remain as an unknown divine to human beings. “Since the creation of the world,” God reveals himself in various ways; we cannot say any excuse (Ps.19:1; Rom.1:20). Of course, God conceals certain things from us, especially matters related to our future (Deut.29:29). However, it is for our good that he hides those things. Jesus said, “For there is nothing hidden that will not be disclosed, and nothing concealed that will not be known or brought out into the open” (Luke.8:17). The nature of truth is that it comes to light; it is available to all who search it.

When a king searches out the truth and administers justice, it is glory for him (1 Kings 3:16-28). The Bible says that we Christians are “a chosen people, a royal priesthood, a holy nation, God’s special possession,” and “a kingdom and priests” (1 Pet.2: 9; Rev.1:6). Above all, we are God’s children. Jesus has taught us to ask, seek, and knock (Mt.7:7,8; Lk.11:9,10). When we seek God with all our heart, we can find him (Jer.29:13). God conceals a matter so that we may know its value when we find it.

APPLICATION: My God reveals himself through his creation and his word. As a diligent follower of Jesus, I need to search out what God has stored for me. When I seek God with all my heart, he helps me to find him. As a child of God, I experience great joy when I find the hidden treasures of God. 

PRAYER: Father God, thank you for revealing yourself through your only Son, Jesus Christ. Loving Lord, help me to find your will for my life and to live accordingly. Amen.

 - Arputharaj Samuel

+91 9538328573

Day - 176

Friday, June 25, 2021

எக்காலத்திற்கும் ஏற்ற ஒரு ஜெபம்

வாசிக்க: 1 நாளாகமம் 15, 16; நீதிமொழிகள் 24; யோவான் 20: 1-18

வேத வசனம்: 1 நாளாகமம் 16: 35. எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள்.
36. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.

கவனித்தல்: 1 நாளாகமம் 16:8-36 வசனங்களில் நாம் காணும் தாவீதின் பாடலானது,சங்கீதம் 96:1-13; 105:1-15; மற்றும் 106:1, 47,48 என மூன்று  சங்கீதங்களின் வசனங்களுக்கு ஒத்திருக்கிறது  கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்து, ஜெபிக்க, துதிக்க, மற்றும் ஆராதிக்க லேவியரை ஏற்படுத்திய போது இப்பாடலை தாவீது பாட கொடுத்ததாக வாசிக்கிறோம். ஆனால், சங்கீதம் 96, 105, மற்றும் 106 ஆகிய மூன்று சங்கீதங்களும், சிறைப்பட்டுப் போன இஸ்ரவேலர்கள் நாடு திரும்பிய பின்பு, எழுதப்பட்டவை ஆகும். 1 நாளா.16:35, 36ல் உள்ள வசனங்கள் சங்கீதம் 106:47, 48 க்கு ஒத்ததாக இருக்கிறது. 1 நாளா 16:35ல் உள்ள ஜெபமானது லேவியருக்குக் கொடுக்கப்பட்ட மூன்று கடமைகளுடன் மிகவும் தொடர்புடையதாக இருப்பது சுவராசியமானது ஆகும். விடுதலைக்கான ஜெபம் செய்து, தேவனைத் துதித்து, நன்றிசெலுத்தும்படி , 1நாளா.16:35 நம்மை அழைக்கிறது. “அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்” என்று 1 நாளா.16:36 ல் நாம் வாசிக்கிறோம். மறுபுறம் சங்கீதம் 106ல், சங்கீதக்காரன் தன் ஜெபத்தை முடித்த பின்பு, “ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா என்பார்களாக” என்று ஜனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார். வித்தியாசத்தைக் கவனித்துப் பாருங்கள்! 

இந்த ஜெபத்தில், “உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு” என்ற ஒரு தனித்துவமான ஜெப சொற்றொடரை நாம் காண்கிறோம். முழு வேதாகமத்திலும் மூல மொழியில் இந்த சொற்றொடரானது இந்த இரண்டு வேதபகுதிகளில் மட்டுமே வருகிறது.  இந்தப் பாடல் மூன்று காரியங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது: நாம் எந்தக் காலத்தில் வாழ்ந்தாலும், தேவனே நம் இரட்சகராக இருக்கிறார்; அவர் நம்மை ஒன்றுசேர்க்கிறார் மற்றும்  விடுவிக்கிறார்; நாம் அவருடைய பரிசுத்த நாமத்தை போற்றி துதித்து, அவரைத் துதிப்பதில் மேன்மை பாராட்ட வேண்டும். இந்த ஜெபமானது நம் தற்கால சூழ்நிலைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. இந்த ஜெபத்தில் “ஜாதிகள்” என்ற வார்த்தையானது தேவ ஜனங்களின் எதிரிகளைக் குறிக்கிறது. நம் அனுதின வாழ்க்கையைப் பாதிக்கிற கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகளுடன் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். தேவனேயன்றி, யார் நம்மை இரட்சித்து, ஒன்று சேர்த்து, விடுவிக்கக் கூடும்?  அனேக உத்தம/உண்மை கிறிஸ்தவர்கள் நம் காலத்தில் நிலவும் பல மோசமான பிரச்சனைகளில் இருந்து தேவன் விடுதலை கொடுக்க வேண்டும் என ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் செய்ய/சொல்ல வேண்டியதெல்லாம் என்னவெனில், “ஆமென்,” “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.”  

பயன்பாடு: என் தேவன் எல்லா மனிதருடைய சரீர மற்றும் ஆவிக்குரிய சுகத்தை விரும்பும் இரட்சகர் ஆவார். நான் அவரை நோக்கி ஜெபிக்கும்போது, அவர் பதிலளித்து எனக்கு விடுதலை தருகிறார். கர்த்தருடைய நாமம் என்னைப் பாதுகாக்கும் வலிமையான அரண் ஆகும். நான் என் தேவனைத் துதித்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன்; அவர் என் ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார். அவரைத் துதிப்பதில் நான் மேன்மை பாராட்டுகிறேன். என் தேவன் மகிமையின் ராஜா ஆவார். இஸ்ரவேலரின் தேவனே சகல மனிதருக்கும் தேவனாக இருக்கிறார். எனவே, நான் சொல்வது: “ஆமென்,” “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.” 

ஜெபம்: பிதாவாகிய தேவனே, என் இரட்சகராக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நான் எப்பொழுதும் வந்து தஞ்சமடையக் கூடிய கன்மலை நீரே. என் வாழ்க்கையில் உம் இரட்சிப்பையும், அன்பையும் அனுபவிக்கவும் ருசிக்கவும் கொடுத்த உம் கிருபைக்காக உமக்கு நன்றி. “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக.” ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 175

An appropriate prayer for all times

READ: 1 Chronicles 15, 16; Proverbs 24; John 20: 1-18

SCRIPTURE: 1 Chronicles 16: 35 Cry out, “Save us, God our Savior; gather us and deliver us from the nations, that we may give thanks to your holy name, and glory in your praise.”
36 Praise be to the Lord, the God of Israel, from everlasting to everlasting. Then all the people said “Amen” and “Praise the Lord.”

OBSERVATION: David’s song that we see in 1 Chronicle 16: 8-36 resembles the verses of three different Psalms—Ps.96:1-13; 105:1-15; and 106:1, 47,48. David commissioned this song when he brought the ark of the Lord to Jerusalem and appointed the Levites to offer prayers and praise and worship the Lord. However, the three psalms (Ps.96, 105, 106) were written in a later period, after the Israelites returned from their exile. 1 Chr.16: 35,36 is similar to Psalm 106: 47,48. Interestingly, the prayer in 1 Chr.16:35 is closely connected with the three important duties of the Levites. 1 Chr.16:35 invites us to cry out to make this prayer for deliverance, thanksgiving, and praising God. In 1 Chr.16:36, we read that “Then all the people said “Amen” and ‘Praise the Lord.’” On the other hand, in Psalm 106, the psalmist invites the people to say “‘Amen!’ Praise the Lord” after he made the prayer. Notice the difference! 

In this prayer, we see a unique prayer phrase, “glory in your praise,” which appears only in these two passages of the Bible. This song reminds us of three things: no matter what time we may live, God is our savior; he gathers and delivers us; we should offer thanks to his holy name and glory in praising him. This prayer is very much relevant to our present situation. The word “nations” in this prayer refers to the enemies of God’s people. We struggle with many invisible enemies that affect our daily life. Apart from God, who else could save, gather, and deliver us? Many sincere Christians are earnestly praying for God’s deliverance from the ravaging issues of our times. All we need to say is, “Amen” and “Praise the Lord.” 

APPLICATION: My God is the Savior who is interested in the physical and spiritual well-being of every person. When I pray to him, he answers and delivers me. The name of the Lord is a strong tower that protects me. I praise and thank my God; he hears my prayers. I glory in praising him. My God is the king of glory. The God of Israel is the God of all people. So, I say, “Amen” and “Praise the Lord.”

PRAYER: Father God, thank you for being my savior. Lord, you are my rock of refuge, to which I can always come. Thank you for your grace to experience and taste your salvation and love in my life. "Praise be to the Lord, the God of Israel, from everlasting to everlasting." Amen.

 - Arputharaj Samuel +91 9538328573

Day - 175

Thursday, June 24, 2021

இயேசுவை விசுவாசிக்க பலகோடி காரணங்கள்

வாசிக்க: 1 நாளாகமம் 13, 14; நீதிமொழிகள் 23; யோவான் 19: 25-42

வேத வசனம்: யோவான் 19: 35 அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.

கவனித்தல்: யோவான் 19:35ல், யோவான் நற்செய்தி நூலை எழுதிய தன்னைப்பற்றிய ஒரு மறைமுகமான குறிப்பைத் தருகிறார். நற்செய்தி நூலாசிரியர்களின் நோக்கம் எல்லாம் இயேசுவின் மேல் இருந்தது, தங்களைப் பற்றி எழுதுவதில் அல்ல. இங்கே யோவான் நற்செய்தி நூலாசிரியர் இயேசு கிறிஸ்துவைப் பார்த்த நேரடியாகக் கண்ட சாட்சி என்பதை  நாம் அறிந்து கொள்கிறோம்; அவர் தன் வாழ்வில் கண்டதைக் குறித்து சாட்சி கூறுகிறார். இயேசுவைப் பற்றி சாட்சியமளித்தல் அல்லது சாட்சி கூறுதல் என்பதற்கு யோவான் தனிப்பட்ட கவனம் கொடுக்கிறார். மற்ற எந்த நூலாசிரியரையும் விட அதிகமாக, சாட்சி கூறுதல் அல்லது சாட்சியமளித்தல் என்ற பொருள் தரும் martureó என்ற வினைச்சொல்லை 33 முறை பயன்படுத்துகிறார். இங்கே, இயேசுவின் சிலுவை மரணம் அம்ற்றும் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களில் ஒன்றின் நிறைவேறுதல் குறித்து சாட்சி அளிக்கிறார் (பார்க்க, வசனங்கள் 34 & 36). யோவான் சிலுவையின் அருகே நின்று, இயேசுவின் சிலுவை மரணத்தை தன் கண்களால் பார்த்தார். இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட மற்றவர்களின் மரணத்தில் இருந்து இயேசுவின் மரணம் வித்தியாசமானதாக இருந்ததை அவர் கண்டார்.  இயேசு தாமாக முன்வந்து சிலுவை மரணத்தின் வேதனையைச் சகித்து, தன் உயிரை விட்டார். வழக்கத்திற்கு மாறாக இயேசு சீக்கிரமே மரித்துப் போனதை போர்ச் சேவகர்கள் கண்டபோது,  “போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்.” இயேசுவின் உடலில் இருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்ட பயங்கரமான காட்சியையும், அது மேசியாவைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசன நிறைவேறுதலாக இருந்ததையும் பற்றி யோவான் சாட்சி கூறுகிறார்.  (சக.12:10). 

வரப்போகிற மேசியாவைப் பற்றி 300க்கும் அதிகமான தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் உண்டு. அவை எல்லாம் இயேசு பிறப்பதற்கு குறைந்தது 500 வருடங்களுக்கு முன்  எழுதப்பட்டவை. மேசியாவைப் பற்றிய அனைத்து தீர்க்கதரிசனங்களும் ஒரு மனிதனின் வாழ்வில் நிறைவேறுவது என்பது நடைபெறச் சாத்தியமில்லாதது. இயேசுவின் தெய்வீகத்தையும், வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதையும் நிரூபிக்க, பீட்டர் ஸ்டோனர் என்பவர் இயேசுவின் வாழ்வில் நிறைவேறிய மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களில் எட்டு தீர்க்கதரிசனங்களை ( “தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள்” என்பதும் அதில் ஒன்று) தெரிவு செய்தார். நிகழ்தகவு பற்றிய விதிகளின் படி (principles of probability), “இந்த நாள்வரை உயிர் வாழ்ந்த, வாழ்கிற ஏதாவது ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த எட்டு தீர்க்கதரிசனங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்பு 100000000000000000 ல் ஒன்று மட்டுமே என்று ஸ்டோனர் கூறுகிறார் (Science Speaks). ஆயினும், இந்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் இயேசுகிறிஸ்துவில் பரிபூரணமாக நிறைவேறின. யோவான் தன் கண்களால் கண்டதைப் பற்றி சாட்சியமளிக்கிறார்; அவருடைய சாட்சி எந்த நீதிமன்றத்திலும் செல்லுபடியாகக் கூடிய வல்லமையான சாட்சி ஆகும். இயேசுவைப் பற்றி தான் சாட்சி கூறுவதற்கான காரணத்தை யோவான் எழுதுகிறார். தன்னுடைய எழுத்துக்களை வாசிக்கும் வாசகர்கள் மேசியாவாகிய இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று யோவான் விரும்புகிறார். (பார்க்க. யோவான்.1:7; 20:31). தன் சாட்சி உண்மை என்றும் இயேசுவே சத்தியம் என்றும் யோவான் அறிந்து உறுதிப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்துவின் மீது உள்ள நம் விசுவாசமானது குருட்டு விசுவாசம் அல்ல, நமக்காக இந்த பூமிக்கு வந்து நம் பாவங்களில் இருந்து நம்மை இரட்சிக்க தம் உயிரைக் கொடுத்த இயேசுவைப் பற்றிய வரலாற்று உண்மை மீது கட்டப்பட்டது ஆகும்.  


பயன்பாடு: இயேசுவை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க ஜனங்கள் பல்வேறு சாக்குபோக்குகளை சொல்லக் கூடும். ஆனால், இயேசுவை நம்புவதற்கு எனக்கு எண்ண முடியாத காரணங்கள் உண்டு.  இயேசுவின் மீதான என் விசுவாசத்தைப் பற்றிய நம்பிக்கையை யோவானின் சாட்சியானது அதிகரிக்கிறது. இயேசு எனக்காக சிலுவையில் மரித்து, என் பாவங்களுக்கான விலைக்கிரயத்தை செலுத்தினார் என்று நான் விசுவாசிக்கிறேன். இயேசுவைப் பற்றிய தனிப்பட்ட சாட்சியம் என்னிடமும் உண்டு. இயேசுவே சத்தியம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எந்த சந்தேகமும் இல்லாமல் நான் அவரை எக்காலத்திலும் நம்ப முடியும். 

ஜெபம்:  இயேசுவே, என்னை இரட்சித்த உம் அன்பிற்காக உமக்கு நன்றி. அனைத்து கட்டுகள் மற்றும் அடிமைத்தனங்களில் இருந்து என்னை விடுவித்த உம் சத்தியத்தைப் பற்றிய என் சாட்சியை பகிர்ந்து கொள்ள எனக்கு உதவியருளும். என் இரட்சகரே, உம் ஆச்சரியமான கிருபையை பற்றியும், என்றும் பசுமையாக விளங்கும் மாறாத உம் சத்தியத்திற்கும் சாட்சி பகர உம் ஞானத்தையும் வல்லமையையும் எனக்கு தந்தருளும். ஆமென். 

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 174