Friday, August 26, 2016

My thoughts are not myths! 4


Pride is the first enemy to become Christ' bride.

History tells us how Satan lost his place by pride

His story tells us how Jesus is lifted up high by humility

Who said, "I will ascend above...I will be like the Most High..."

Who did this, "He humbled himself"

கருத்துக் கதை - 1

நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்கள் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவர். ஒரு முறை அவர் பேரூந்தில் பயணம் செய்யும்போது, டிக்கட் பரிசோதகர் ஒவ்வொருவரிடமாக பயணச் சீட்டை பரிசோதித்திக் கொண்டு வந்தார். இதைப் பார்த்த ஐன்ஸ்டைன் தன்னுடைய சட்டையில் உள்ள பாக்கெட்டில் கையை விட்டு டிக்கட்டைத் துழாவினார். அதன் பின்பு இடது பக்க பாக்கெட்டில் விட்டு துழாவியும் டிக்கட் இல்லை. ஐன்ஸ்டைன் அருகில் டிக்கட் பரிசோதகர் வந்தார், இவரோ ஒவ்வொரு பாக்கெட்டிலும் கையை விட்டு டிக்கட் கிடைக்காதா என்று துழாவிக் கொண்டிருந்தார். அருகில் வந்த பரிசோதகர் தன் முன் நிற்பது ஐன்ஸ்டைன் என அடையாளம் கண்டு, “ ஐயா, நீங்கள்தானே ஐன்ஸ்டைன்” என்றார். “ஆம்” என்ற பதில் உடனே வந்தது. “ஐயா மிகுந்த மரியாதைக்குரிய மற்றும் நபரான நீங்கள் கண்டிப்பாக டிக்கட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஆகவே கவலைப் படவேண்டாம், உட்காருங்கள்” என்று சொல்லி அடுத்தவரிடம் டிக்கட் பரிசோதகர் சென்றார். சற்று நேரம் கழித்து அனவரையும் பரிசோதித்தபின் டிக்கட் பரிசோதகர் இறங்குகிற வேளையில் ஐன்ஸ்டைன் தன் இருக்கைக்கு அருகில் முழங்கால் படியிட்டு கையை தரையில் வைத்து தேடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே அவர் அருகில் சென்று, “ ஐயா, நீங்கள் ஐன்ஸ்டைனாக இருக்கிற படியால், நான் தான் உங்களிடம் டிக்கட் இல்லையென்றாலும் பரவாயில்லை என்று சொல்லி விட்டேனே, பின்னே என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்” என்றுக் கேட்டாராம். “நான் ஐன்ஸ்டைன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பிரச்சனை என்ன வெனில், நான் போகவேண்டிய இடம் என்ன என்பதை மறந்துவிட்டேன், டிக்கட்டைப் பார்த்தால் தான் அது தெரியும், ஆகவே தான் நான் டிக்கட்டைக் தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று விஞ்ஞானி பதில் சொன்னாராம்.
நம்மில் அனேகர் கூட இப்படியே இருக்கிறோம். நாம் போய் சேரப் போகிற இடம் என்ன என்பதை அறிந்திருக்கிறோமா? நாம் ஒருவேளை எவ்வளவு பெரிய அறிவாளிகளாகவோ அல்லது ஒன்றுமே தெரியாதவர்களாகவோ இருந்தாலும் கூட போகும் இடம் தெரியவில்லை என்றால் நடுவழியில் திகைத்து நிற்க வேண்டியதாயிருக்கும். பரிசுத்த வேதாகமம் ”மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்” என்று சொல்கிறது. நாம் நம் விருப்பப்படி வாழ்ந்துகொண்டே தேவனைப் பிரியப்படுத்த முடியாது. நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் நாம் தேவனுடைய பிள்ளைகளாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பதையும் ரோமர் 8:13,14 வசனங்களில் வாசிக்கிறோம். வாழ்க்கை நம்மை இழுத்துச் செல்கிற இடங்களுக்கெல்லாம் செல்கிறோமா அல்லது கடவுளின் கட்டுப்பாட்டில் அவர் விரும்புகிறவைகளைச் செய்து அவர் நமக்கு நியமித்திருக்கிற பாதையில் இலக்கை நோக்கி பயணிக்கிறோமா என்பதை நாம் நிதானித்து அறிய வேண்டும். யாராவது உங்களிடம் வந்து நீங்கள் எங்கே போகிறீர்கள்? என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்!

Why good people always suffer than others?


If you are a human, certainly you would have come across this question so many times. Today in our class our teacher Dr. Arun told us some incidents of godly people's suffering and asked the same question while comforting me as i am going through some difficult moments in my life. Suddenly a thought flashed in my mind and immediately I responded, "Sir, good people are suffering and going through many difficulties because of their value. Precious things like Diamond and gold always go through so many purification process so that its real worth to be known to the world, who cares for the coal and unworthy things?" God cares!
This answer itself gave me many answers to my questions. As a Christian we are children of God and precious to Him.

The words of the LORD are pure words: as silver tried in a furnace of earth, purified seven times. Pslams 12:6
That the trial of your faith, being much more precious than of gold that perisheth, though it be tried with fire, might be found unto praise and honour and glory at the appearing of Jesus Christ. 1 Peter 1:7
15 Nov 2015

கடிகாரம் -A Lateral thinking poem

நான் நாளெல்லாம் உழைக்கிறேன்
நீங்கள் என்னை கண்டு கொள்வதில்லை
ஏனெனில் என்னை நீவிர் பார்ப்பது கொஞ்சநேரம் தான்
ஆனாலும் பலனை எதிர்பாராது உழைக்கிறேன்

என் சேவை உங்களுக்கு தேவை
அதை பெற்றுக் கொள்ளும் உங்கள் பார்வை
இந்த கவிதையில் உள்ள கோர்வை
தந்துவிடமுடியாது உம் பிரச்சனைக்கு தீர்வை

என்னை நீங்கள் தினந்தோறும் பார்க்கிறீர்கள்
ஆனால் என்னால் உங்களை பார்க்க முடிவதில்லை
சூழ்நிலைகள் என்னை மாற்ற முடியாது
என் எஜமானனின் உத்தம சேவகன் நான்
நான் சோர்ந்து போகும் போது
என் வேகம் குறைந்து விடுகிறது
உடனே என் எஜமான் என்னை கரிசனையாக
நன்கு ஆராய்ந்து வேண்டியதை செய்கிறார்
அவருக்காக ஓடுவது என் பாக்கியம்

என்னை உண்டாக்கியவர் பெயர் என்மேல்
என்னை பார்ப்பவர் எனக்கு செலுத்தப்பட்ட விலையை அறிவார்
நான் பயனற்றுப் போனால் குப்பையில்
பயன்படும்போதோ நான் உயரத்தில்

என் ஓட்டத்தில் காணப்படுவது பொறுமை
நான் இன்னமும் இலக்கை அடையவில்லை
ஆனாலும் ஓடுகிறேன் ஓட்டத்தை
ஓடுவேன் தொடர்ந்து நித்தமும்
என் உயிர் இருக்கும்வரை அல்லது
இந்த உலகின் முடிவுவரை
நான் யார் ?

A dose for sorrow

Keep your smile
Spread to miles
All are for a while
This is HIS pill
To our ILL
So that we can be well
In All, Thats All.

Wednesday, August 24, 2016

பாடல் பிறந்த கதை - 2 கண்மணி போல் காக்கும் தேவன்

இந்த தொடரின் முந்தைய பகுதியில் நான் முதன் முதலாக ஒரு பேருந்து பயணத்தின் போது எழுதிய பாடலைப் பற்றிச் சொல்லி இருந்தேன். அடுத்து எழுதும் போது என்ன எழுதலாம் என்று யோசித்த போது கடைசியாக நான் எழுதிய பாடலின் கதையைச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் கடைசியாக இயற்றிய பாடல் என்று நினைத்திருந்த பாடலுக்குப் பின் இன்னும் இரண்டு பாடல்களை எழுத தேவன் கிருபை செய்துவிட்டார். ஆகவே நான் எழுத நினைத்த பாடலைப் பற்றி எழுதிவிடுகிறேன்.

ஒரு நாள் என் ஒருவயது மகளை மடியில் கிடத்தி அவளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென அவள் தன் கண்களை கசக்க ஆரம்பித்தாள். ஏன் மகள் இப்படிச் செய்கிறாள் என நான் பார்க்க முயற்சித்தபோது, அவள் விடாமல் தொடர்ந்து கண்ணை விரல்களால் கசக்கிக் கொண்டே இருந்தாள். ஐயையோ குழந்தைக்கு ஏதும் ஆகிவிட்டதோ! அவள் கண்களுக்கு ஏதேனும் ஆகிவிடக் கூடாதே, இப்படி கண்களை கசக்குகிறாளே என்று பதைபதைத்து, அவள் கைகளை விலக்கி கண்களை உற்றுப் பார்க்கிறேன். கள்ள மில்லா அந்த கண்கள் எவ்வித பாதிப்புமின்றி இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி ஒரு பக்கம், நம் தேவனும் இது போலவே நம்மை கண்மணியைப் போல பாதுகாக்கிறாரல்லவா என்று நினைத்து மனதில் ஒரு கிளர்ச்சி! இப்படி நினைத்த உடனே, “கண்மணி போல காக்கும் தேவன்” என்ற பதம் மனதில் இன்னும் ஆழமாக அடிமனதில் இருந்து வருகிறது. அதையே ஆரம்பமாகக் கொண்டு ஒரு பாடலை கடகடவென எழுதியும் விட்டேன்.

தமிழின் பழைமையான இராகங்களில் ஒன்றாக ஹரிகாம்போஜி இராகம் கருதப்படுகிறது. அந்த இராகத்தில் இப்பாடல் வந்தது இயல்பான ஒன்று. எனக்கு மனதுக்கும் பிடித்தமானதாக பாடல் அமைந்தது கண்டு உடனே என் நண்பருக்கு போன் போட்டு இதைச் சொன்னதுடன், கணினியில் ஒலிப்பதிவு செய்து அவருக்கு அனுப்பி கருத்து கேட்டேன். அவரும் பாடலின் இராகம் மற்றும் தாளத்தை பாராட்டி பத்திரமாக வைக்கச் சொன்னார். உங்களிடம் சொல்லி விட்டேன். மீண்டும் மற்றுமொரு பாடல் பிறந்த கதையை பிறிதொரு சமயம் விளக்குகிறேன். இப்போதைக்கு “கண்மணி போல காக்கும் தேவன்” பாடலின் வரிகள் உங்களுக்காக.... பாடலின் வரிகளில் ஒரு பாணியை கடைபிடித்திருக்கிறேன். கண்டுபிடித்தவர்கள் சொல்லலாம்.


கண்மணி போல் காக்கும் தேவன்

கண்மணி போல் என்னை
காக்கும் தேவா
மதில்போல சூழ்ந்தென்னை
காத்துக் கொள்வீர்
என்னை அரவணைப்பீர்
நான் உந்தன் பிள்ளை




பிள்ளையை பெற்ற தாய்
மறந்திடுவாளோ
மறந்தாலும் நீர் என்னை
மறப்பதில்லை
எனை வரைந்திருக்கின்றீர்
உம் உள்ளங்கையில்

உள்ளங்கை மேகம் போல்
உம் ஆசீர்வாதம்
பெருமழை போல் பெய்து
பெருகச் செய்யும்
சர்வ வல்ல தேவன்
கிருபை உந்தன் அன்பு

அன்பை நீர் காண்பித்தீர்
அளவிலாமல்
அதற்காக சிலுவையில்
அடிக்கப்பட்டீர்
என் பாவம் எல்லாம்
முற்றும் கழுவினீரே

கழுவும் உம் இரத்தம்
என் பரிகாரமே
கறை நீக்கி உருமாற்றி
இரட்சிக்குமே
இனிநான் உந்தன் சொந்தம்
இனிமை தங்கும் பந்தம்

My thoughts are not myths! 2


First of all, the church couldn't be the church of Christ, in other words, body of Christ, if it is fully pre occupied with churchianity rather than Christianity.

Friday, August 19, 2016

My thoughts are not myths!

It is ordinary for a man to murmur and to hear so many negative things when s/he faces the difficulties of life. But it is the special/extraordinary time for a Christian to hear God speaking to him/her on those moments.
Because he lives and with us all the times, not just in good times.
 
எப்பொழுதோ எழுதியது, எழுதியதில் படித்ததும் பிடித்தது.

Monday, August 15, 2016

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (சுதந்திர தின கவிதை!)

நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம்
நாட்கள் பல ஆகியும் விடியவில்லை
விடியலைத் தேடி புறப்பட்டோர் பலர்
துடிப்புடன் ஆரம்பித்து முடிந்தது
நடிப்பில்

நடப்பு நிலவரங்கள்...பயங்கரம்!
பயம் அனைவரிடமும் நிரந்தரம்
வெளியேறியவர்கள் வெள்ளையர்கள்
வெளிப்பட்டவர்களோ கொள்ளையர்கள்
வெளியேறிக்கொண்டிருப்பதோ
வெள்ளையாக மானம், மனிதாபிமானம் என்றுபல
கறுப்பாக ஒன்றே ஒன்று... பணம்!

பண்பாடு நிறைந்த தேசம்
பணம் படுத்தும் பாடு
எல்லாமே வெளி வேஷம்
மாறவில்லை கோஷம்
மக்கள் மனதிலோ விஷம்
விதைத்துவிட்டனரே
மனம் பதைக்க வைத்துவிட்டனரே

விட்டலாச்சார்யா படங்களை விட மாயாஜாலம்
அனைத்தும் வெறும் வார்த்தைஜாலம்
மக்கள் மனதிலோ அழுகையின் ஓலம்
மறைந்த சூரியன் என்றாவது விடியும்?
மண்ணுக்குள் புதைந்தவை வெளிவரும்போது - இல்லை
விண்ணுக்கு சென்ற பின்பு - எப்படி இருந்தாலும்
பார்க்கத்தான் உயிர் இருக்காதே

எது சுதந்திரம் என்ற கேள்வி இயல்பு
அன்னியரிடம் இருந்து பெறுவதல்ல
என்பது நிதர்சனம் ஏனெனில்
அனைத்தும் வெறும் காட்சி மாற்றமே
அனைவருக்குள்ளும் விடுதலை
அவரவர் உள்ளத்தில் பெறவேண்டும்
ஆன்ம விடுதலை அது
ஆனந்தம் தரும் விடுதலை - மனதை
ஆனந்தக் கூத்தாட வைக்கும் - மனிதர்க்கு
உயிர் கொடுத்து உறவாட அழைக்கும்
உண்மையான இறைவன் தரும் அன்புப் பரிசு
வாரிசாக அழைக்கும் அன்பு அழைப்பு
இதிலேயே இருக்கு உண்மையான விடுதலை
மற்றதெல்லாம் வெறும் பிழைப்பு

Friday, August 12, 2016

அவர் என்னை கொன்று போட்டாலும்....

சாது கொச்சுக்குஞ்ஞு அவர்கள் பற்றி நான் கேள்விப்படும்போதெல்லாம் பல விசயங்கள் என் மனதில் தோன்றி எழும். தமிழகமெங்கும் அவரும் பொன்னம்மா சன்னியாசியும் நடந்தே சபைகள் தோறும் கிராமங்கள் தோறும் தேவ ஊழியம் எப்படி சாத்தியமாயிற்று! ஆனந்தமே பரமானந்தமே எனத் துவங்கும் பாடல் மற்றும் துக்கத்திண்டே பான பாத்ரம் என துவங்கும் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலைகள் மனதில் விரியும். இதில்  “ஆனந்தமே பரமானந்தமே” பாடல் எழுதப்பட்ட சூழலை முன்பொருமுறை தமிழ்கிறிஸ்தவ தளத்தில் பதிவிட்டேன். அப்பொழுது பாடல்களில் வரலாறு என்ற ஒரு திரியில் பல பாடல்களின் வரலாற்றை தொகுத்து எழுதிக் கொண்டிருந்தேன். அப்படி எழுதும்போது துக்கத்தின் பான பாத்ரம் பாடலை நான் அதன் வரலாறு தெரிந்தும் எழுதத் தயங்கினேன்.
என்னவெனில், அப்படிப் பட்ட ஒரு மனம் உள்ளவர்கள் இன்று கிறிஸ்தவத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், நான் அப்படி இருக்கிறேனா என்று ஒரு பக்கம் சிந்தனை, இன்னொருபக்கத்தில், அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்காவது மனம் வேறெதிலும் செல்லாது மனதை வியாபித்துக் கொள்வதையும் கவனித்திருக்கிறேன். சமீபத்தில் முகநூலில் நண்பர் ஒருவர் அந்தப் பாடலைப் பற்றிய தகவலை பகிர்ந்த போது, திரும்பவும் நான் அப்பாடல் வரிகளின் ஆழம் மற்றும் அது தூண்டிய சிந்தனைகளில் மூழ்கி அப்பாடலை திரும்பத் திரும்ப பாடி கரைந்து எனையுமறியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறேன்.
நிற்க, இக்கண்ணீர் என் சூழ்நிலையை நினைத்து அல்ல, மாறாக எப்படி என்னை பாழாக்கும் சூழ்நிலைகளிலும் பரிசுத்த தேவன் எனை அவர் பக்கம் அவ்ரைப் போல மாற்றுவதில் அவருக்காக வாழ என்னை தயார்படுத்துகிறார் என்பதை நினைத்து மனம் உருகி உளம் கசிந்து வரும் கண்ணீர்.
பல முறை நான் யோபு  “அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன்” என்று சொல்லி இருப்பதைப் பற்றி தியானித்தும் சிந்தித்தும் இருக்கிறேன். ஆனால் அனேக தேவ மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் மிக முக்கியமான உண்மை, அவர்களுகு இவ்வுலக பாடுகள் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஏன், இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு இந்த ஒரு உலகமே ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. ஆகவே தான் அவர்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அவர்களை அசைக்க வில்லை. ஏனெனில் அவர்கள் அவர்மீது அல்லவா கட்டி எழுப்பப்பட்டிருக்கிறார்கள்.

இதை எல்லாம் நினைத்து மனம் வேத வசனத்தை அசைபோடும்போது, அடிமனதிலிருந்து சொல்ல விரும்புகிற வசனம், “அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன்.” ஏனெனில் நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இயேசுவுக்காக. அவர் சொல்லி இருக்கிறார், “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.” பிறகென்ன கவலை! 

அலை பாயும் மனமே மலையாதே!

அலை மோதும் நினைவுகள் கரை கடப்பதில்லை
கரை மீது மோதினாலும் தரை தடுப்பதில்லை
தர தரவென்று இழுத்துச் செல்லும் சிந்தனை
செல்லுகிற பாதையில் செவிக்கினிய நல் வார்த்தை
நல்கிடும் நல்லவரே நாதனேசுவே

நாத கீத வேத மனைத்துமென்
பாதம் செல்லும் பாதைத் துணையே
வாதை எண்ணி வருத்தமில்லை
வருந்தி அழைக்கும் இரட்சகரே
இரங்கி என்னையும் ஆற்றுவாரே

ஆறாத காயங்களும் காயாத கசப்புகளும்
கசடற கழுவி கறை திரை நீக்கி
நீக்கமற அவர் நினைவில்
நீசன் என் தோஷமற அகற்ற
அகலம் உயரம் நீளம் ஆழம்
அளவிட முடியாதன்பு

முள்முடி சூடி எனக்காக வாடி
வதைபட்டவருக்கோ காடி
என கண்ணீர் வந்திடுதே
என் கவலைகள் மறந்திடுதே
மறவாதவர் என் உறவானவர்
உறைவிடமாக என்னுள் வந்தவர்

எனக்குள் நினைவுகள் இனி அலைபாய்வதில்லை.
அலைகள் மீது நடந்தவர் அதை அடக்கினவர்
அவரில் அடங்கி அவர் அன்பில் மூழ்கி
எனையே நான் மறந்தேனே
இனி நினைப்பதற்கு எதுவுமில்லையே
அவரைத் தவிர!

Monday, August 8, 2016

வேதப் புத்தகம்!!!

அறுபத்தி ஆறு புத்தகங்கள்
ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள்
இன்றும் இனிமை தித்தி(க்கும்)ப்புச் சுவை
ஈசனின் ஈகை, ஊட்டுவதோ நம்பிக்கை
உணர்த்தும், உடைக்கும், உருமாற்றும்
ஊசலாடும் மனங்களுக்கு அருமருந்து
என்றும் இள்மை, அளிப்பது வளமை
ஏக்கங்களை ஆக்கங்களாக்கும்
ஐயங்களை அகற்றி பயங்களை பறக்கடிக்கும்
ஒவ்வொருநாளும் ஓதற்கரிய இன்பம்
ஓலம், அலங்கோலம் அனைத்தையும் மாற்றும்
ஔஷதமே என் வேதப் புத்தகமே!!!

(எப்பொழுதோ தமிழ் கிறிஸ்தவ தளத்திற்காக எழுதியது, தூர எடுத்துப் போடுவதற்காக எடுத்துவைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தைப் புரட்டியதில் திரும்பக் கிடைத்தது :) )

Sunday, August 7, 2016

பாடல் பிறந்த கதை - 1

பொதுவாக பிரபலமான பாடல்கள் உருவான கதையை வாசிக்கும் போது, அதன் பின் பிண்ணனி உணர்ந்து பாட ஏதுவாகவும், தேவனின் இடைபடுதலை அறிந்துணர்ந்து அர்த்தம் உணர்ந்து பாடவும் உதவியாக இருக்கிறது. நான் இங்கே சொல்லப் போவது பிரபலமான பாடல்கள் அல்ல, ஏன், இன்னும் சொல்லப் போனால் கிட்டத்தட்ட அனைத்தும் இன்னமும் முறையாக ஒலிப்பதிவு கூட செய்யப்படவில்லை, அதற்கான காலமும் சூழலும் கனிந்து வரவில்லை. ஆயினும் நான் எழுதப் போகும் பாடல் பிறந்த கதைப் பாடல்கள் அனைத்துமே நான் எழுதி இயற்றியவை. இதில் நான் என்று சொல்ல எதுவுமே இல்லை. எல்லாம் தேவ கிருபை. அந்தக் கிருபை பற்றிய கதையை சொல்வதில் எனக்கென்ன தயக்கம்!

2001 ஆம் ஆண்டு வாக்கில், நான் மருத்துவ விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்த காலம், பேரூந்தில் அன்றைய நாளின் தியான வேதபகுதியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே பேரூந்தோடு கூட நானும் என் சிந்தனையும் பயணம் செய்து கொண்டு செல்கிறோம். பேரூந்து சேர்மா தேவி எனும் ஊரைத் தாண்டி அம்பாசமுத்திரம் நோக்கி செல்கையில், என் மனதில் அன்று வாசித்த வேதபகுதி அப்படியே ஒரு காட்சியாக தோன்றுகிறது. அன்று காலையில் மூன்று வான சாஸ்திரிகள் இயேசு பிறந்த இடத்திற்கு ஒரு நெடிய பயணதிற்குப் பின் வந்து சேர்ந்து பணிந்து, காணிக்கை படைத்ததைப் பற்றி வாசித்திருந்தேன். அதை நினைத்தவுடனே என் மனதில் வண்ணமயமான அக்காட்சி, ஒரு பாலகன் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொள்ளும் அந்த சாஸ்திரிகளின் பணிவு மற்றும் தெளிவு நினைக்கவே ஆச்சரியமானதாக இருந்தது. அவர்கள் ஏன் அப்படி அவரைப் பணிந்து கொள்ள வேண்டும்! வாகன போக்குவரத்து தொலைத் தொடர்பு வசதியற்ற அக்காலத்தில் ஒரு நீண்ட பயணம், அதின் சவால்கள், அதின் முடிவில் தங்களையே தாழ்த்தி, மற்றவர்கள் பார்வையில் ஒரு சாதாரண ஏழைப் பிள்ளை முன்பு சாஷ்டாங்கமான பணிதல் - இதிலிருந்து நான் என்ன அறிந்து கொள்கிறேன்? ஏன்? ஏன்! என்ற என் மனதின் கேள்விகள் ஒருபக்கம், இன்னொருபக்கம் உடனே மடை திறந்த வெள்ளமென சில வரிகள் என் மனதில். உடனே எதிலாவது அதை எழுத வேண்டுமே என்று பார்த்தால் என்னிடம் பேப்பர் எதுவும் இல்லை. நான் இவ்வரிகளை மறந்துவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில், சட்டைப் பையை துலாவினால், ஒரு சிறிய சீட்டு - அந்த பேரூந்து பயணச் சீட்டு. உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அதில் எழுதத் துவங்கினேன்...
தெண்டனிட்டுப் பணிந்திடுவோம்
தேற்றிடுவார் தொழுதிடுவோம்
அண்டி வந்த யாவரையும்
அன்புடனே அரவணைக்கும்
பரலோக தேவசுதன்
பரிசுத்த இயேசு பரன்

மிகச் சிறிதாக நான் வாசிக்கக் கூடிய அளவில் எழுதி முடித்த பின்பு எனக்கே ஆச்சரியமானதாக அந்த அனுபவம் இருந்தது. ஏனெனில் நான் முறைப்படி இசைகற்றவன் அல்ல, ஆலய பாடகர் குழுவில் நான் பல ஆண்டுகள் இருந்தது உண்மைதான் என்றாலும் தாளம் தப்பாமல் பாடுவதில் எப்பொழுதுமே சிரமப் பட்டிருக்கிறேன். ஒருவேளை இதை வாசிக்கும் என் ஆலய பாடகர்குழு நண்பர்கள் இதை நன்கறிவர். வேலை முடிந்ததுமே நேரடியாக நான் பெரிதும் மதிக்கும் என் குடும்ப நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களிடம் சென்று இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நண்பர் ஜான் மிகச் சிறந்த அறிவாளி மட்டுமல்ல, நன்கு இசை நுணுக்கங்களை அறிந்தவரும் கூட. நான் பாடல் வரிகளை எழுதும்போதே அதற்கான இராகமும் தானாகவே எனக்குள் உருவாகி இருந்த படியால், அவரிடம் பாடியும் காண்பிக்கிறேன். பாட்டைக் கேட்ட உடனே அவர் ரியாக்சன் என்ன என்று அறிவதில் மிகுந்த ஆசை. என்ன வென்று கேட்டேன். பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வரியும் துவங்குவதற்கு முன் விடும் ஒரு ப்ரேக் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்கையில் என் மனதில் மிகவும் பரவசம்.

 தொடர்ந்து அவர், ஒரே ஒரு பல்லவி மட்டுமே இருப்பது ஒரு முழுமையான பாடல் அல்ல, இன்னும் சில பல்லவிகள் எழுத முயற்சி செய் என்று சொன்னார். இப்படி ஒரு சவால் இருக்கிறதா, ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்ற வேண்டுதலுடன் ஒரு நோட்டு மற்றும் பேனாவை எடுத்துக் கொண்டு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறேன். என்னையுமறியாமல் தொடர்ந்து புதிய வரிகள் உருவாகி பாடிக் கொண்டிருக்கிறேன்...

2. எத்தனையோ துன்பங்கள்
ஏராளம் வேதனைகள்
அத்தனையும் அற்றுப் போகும்
அன்பர் இயேசு திருமுன்
நம் இயேசு சுமந்துவிட்டார்
எல்லாமே தீர்த்து விட்டார்

3. சிலுவை நம் தியானமானால்
செழிக்கும் நம் ஜீவியம்
சோர்வுகள் மறைந்துவிடும்
சோதனைகள் ஜெயிக்கலாமே
சிலுவை சுமந்திடுவோம்
இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்

ஒரே மூச்சில் பாடி எழுது முடித்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி. மறுபடியும் நண்பர் ஜான் அவர்களிடம் முழுமையாக பாடிக் காண்பித்து பாடலை பத்திரமாக மனதில் சேமித்து வைத்தேன், என்றாவது ஒரு நாள் அனைவரும் கேட்கச் செய்யலாம் என்ற விசுவாசத்துடன். 15 வருடங்கள் கழித்து இப்பொழுது இதைப் பற்றி எழுதவாவது செய்ய ஆரம்பித்திருக்கிறேன், சீக்கிரம் முறையான ஒலிப்பதிவாக பார்க்கும் விருப்பத்துடன். பார்க்கலாம்!
விரைவில் மற்றுமொரு பாடல் கதையுடன் சந்திப்போம்.