Monday, August 8, 2016

வேதப் புத்தகம்!!!

அறுபத்தி ஆறு புத்தகங்கள்
ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள்
இன்றும் இனிமை தித்தி(க்கும்)ப்புச் சுவை
ஈசனின் ஈகை, ஊட்டுவதோ நம்பிக்கை
உணர்த்தும், உடைக்கும், உருமாற்றும்
ஊசலாடும் மனங்களுக்கு அருமருந்து
என்றும் இள்மை, அளிப்பது வளமை
ஏக்கங்களை ஆக்கங்களாக்கும்
ஐயங்களை அகற்றி பயங்களை பறக்கடிக்கும்
ஒவ்வொருநாளும் ஓதற்கரிய இன்பம்
ஓலம், அலங்கோலம் அனைத்தையும் மாற்றும்
ஔஷதமே என் வேதப் புத்தகமே!!!

(எப்பொழுதோ தமிழ் கிறிஸ்தவ தளத்திற்காக எழுதியது, தூர எடுத்துப் போடுவதற்காக எடுத்துவைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தைப் புரட்டியதில் திரும்பக் கிடைத்தது :) )

No comments: