Tuesday, November 5, 2019

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் விட்டுச் செல்ல விரும்பும் சொத்து?

சமீபத்தில் ஒரு வயதான தம்பதியர் பேசக் கேட்டேன். முதலில் அந்த பெரியவர் முன்வந்து, தனது எளிமையான ஆரம்ப நாட்களை நினைவுகூர்ந்து பேசத்துவங்கினார். அவர் 13 வயதாயிருக்கும்போது தனது பிசினஸை ஆரம்பித்திருக்கிறார். முதலாவது அவர் செய்த தொழில் - கார் கழுவுதல். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் நேர்மையாக இருந்து, படிப் படியாக மிகவும் நல்ல ஒரு நிலைமைக்கு தேவன் அவரை உயர்த்தி இருக்கிறார். இதை அவர் சொல்கையில், இன்று என்னிடம் இருக்கும் பணத்தை வைக்க இடமில்லை என்று சொல்லுமளவுக்கு உள்ளதாகச் சொன்னார். அதன் பின் அவர் சொன்னதுதான் ஹைலைட்!

என்னிடம் உள்ள செல்வம் எதையும் நான் என் பிள்ளை(களு)க்கு விட்டுச் செல்லப் போவதில்லை என்றார். சற்று அதிர்ச்சியாகவும், அதெப்படி என்று கேள்வியாகவும் இருந்தது. அவர் தொடர்ந்து சொல்லுகையில், நான் என் பிள்ளைகளுக்கு என் செல்வத்தை அல்ல, என்னுடைய நல்ல நடத்தை அல்லது குணாதிசயத்தையே விட்டுச் செல்ல விரும்புகிறேன். மற்றபடி, செல்வம் அனைத்தையும் வாழும்போதே நற்காரியங்களுக்காக செலவிட்டுக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து அதைச் செய்து முடிப்பேன் என்றும் நிதானமாக சொல்லி முடித்தார். அந்த பெரியவர் பேச ஆரம்பித்த சற்று நேரத்தில், அவர்கள் மனைவியும் மேடை ஏறி, இருவரும் மாறி மாறி பேசினார்கள், தொடர்ச்சித் தன்மையில் எந்த தொய்வும் இல்லை. அவர் பேசியதும், அவர்கள் இருவரும் நடந்து கொண்ட பண்பும் மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

ஒன்றை சொல்ல மறந்து விட்டேன். தன் பிள்ளைகளுக்கு செல்வத்தையல்ல, குணத்தையே விட்டுச் செல்ல விரும்புகிறேன் என்று அவர் சொன்ன போது, அவர்களின் மகளும் மருமகனும் அதே இடத்தில் தான் இருந்தனர் என்பது சிறப்பு.



இந்த பதிவின் தலைப்புதான் என் மனதில் இருக்கும் தற்பரிசோதனைக் கேள்வி - உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் விட்டுச் செல்ல விரும்பும் சொத்து?

Friday, October 25, 2019

"பொருளாதார செழிப்பு உபதேசம்” பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Prosperity Gospel - Some reflections ( If you want to read the original in English scroll down)

”பொருளாதார செழிப்பு உபதேசம்” என்ற பதத்தைப் பற்றிய என் புரிதல் என்னவெனில், நீங்கள் இயேசுவைப் பின்பற்றினால், அவர் உங்களை செழிப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்படிச் செய்வார் என்ற போதனையை இது குறிக்கிறது என்பதாகும். ஜனங்கள் இயேசுவைப் பின்பற்றவேண்டும் என்ற தீர்மானத்தை எடுப்பதன் மூலமாக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இனி வரும் நாட்களில் ஆரோக்கியமான மற்றும் செழிப்பான சுகவாழ்வு வாழலாம் என்று சொல்லி மக்களைக் கவர்வதற்காக இப்போதனையானது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
பல்வேறு காரணங்களின் நிமித்தமாக இது ஒரு ஆபத்தான போதனை என நான் நம்புகிறேன். முதலாவதாக மற்றும் (எனது கருத்தின்படி) முக்கியமானதாக உள்ள காரணம் என்னவெனில், இயேசு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களின் முன்மாதிரி மற்றும் போதனைகளுக்கு முரணானதாக இது இருக்கிறது. ”ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என இயேசு தன் சீடர்களுக்குப் போதித்தார் (மத்தேயு 16:24). இது அவரண்டை வந்து செழிப்படைவதற்கான ஒரு அழைப்பு அல்ல, மாறாக அவர் பின் சென்று பாடுபடுவதற்கான அழைப்பு ஆகும். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற தீர்மானம் எடுப்பதினால் வரும் பாடுகளைப் பற்றி விளக்கும் வேதபகுதிகளை புதிய ஏற்பாடு முழுவதிலும் நாம் காணலாம். நான் ஒரு முறை பிரசங்கம் செய்யும்போது, ஒரு புத்தகத்தைத் தவிர புதிய ஏற்பாட்டில் ஒவ்வொரு புத்தகத்திலும் பாடுகள் பற்றி சொல்லப்பட்டிருப்பதைக் காண்பித்து நான் பேசினேன். இந்த உலக காரியங்களை உதறி தள்ளிவிட்டு அவைகளைப் பார்க்கிலும் மகா பெரிதான பொக்கிஷத்தைக் கண்டடைவதுதான் இயேசுவைப் பின்பற்றுதல் என்பதன் பொருள் என அவர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் (லூக்கா 9:58, மத்தேயு 19:21, மத்தேயு 13:44-46). தங்கள் வாழ்க்கையில் மிக மகிழ்வுடன் பாடுகளை அனுபவித்து இரத்த சாட்சிகளாக மரித்த அப்போஸ்தலர்கள் மூலமாக இது நன்றாக விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது. இது பற்றி, அப்போஸ்தலனாகிய பவுல் தன் பாடுகள் நிறைந்த வாழ்க்கை முறையை கள்ள போதகர்களின் உல்லாசமான வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசும் போது பேசுகிறார் (1 கொரிந்தியர் 4:8-13, 2 கொரிந்தியர் 4, 11). பொருளாதார செழிப்பு உபதேசமானது மிகவு ஆபத்தானது, ஏனெனில் வேதம் கூறும் நற்செய்து அதுவல்ல.

இயேசுவே மிகவும் உயர்ந்த பரிசு ஆவார். அவரே வாழ்வின் உணவு (ஜீவ அப்பம்). யோவான் 6 ம் அதிகாரத்தில், மற்றுமொரு அற்புத உணவுக்காக ஜனங்கள் இயேசுவிடம் வந்த போது, அவர்களுக்கு அவர் அதைக் கொடுக்கவில்லை. மாறாக, அவர்கள் தன்னை மட்டுமே தேடி வந்தார்களா அல்லது உணவுக்காக வந்தார்களா என அவர்களிடம் கேட்டார். அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கும் ஒரு கற்பனை பூதமாக இருக்க அவர் சம்மதிக்கவில்லை. அந்நேரத்தில் அனேகர் இயேசுவை விட்டு விலகிச் செல்ல அவர் அனுமதித்தார், ஏனெனில் உலகப் பிரகாரமாகத் தங்களுக்கு  கொடுத்தால்தான் இயேசு தங்களுக்குத் தேவை என அவர்கள் நினைத்தனர் (பொருளாதார செழிப்பு உபதேசம்). இயேசுவைப் பின்பற்றுவதினால் தங்களுக்கு வீடு இல்லை எனினும், ஒன்றுமில்லாதிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது இயேசுவை உயர்ந்த பொக்கிஷமாக கருதிய சீடர்கள் மட்டுமே அவரோடிருந்தனர், மற்றவர்கள் விலகிச் சென்றுவிட்டனர்.    கிறிஸ்தவர்களாகிய நமக்கு, இயேசுவே நம் விருப்பங்கள் மற்றும் குறிக்கோள்களின் மையமாக இருக்கிறார். இயேசுவின் மதிப்பு மற்றும் அவர் யார் என்பதிலிருந்து நம் பார்வையை விலக்கி, மாறாக இயேசு உங்களுக்கு என்ன செய்யக் கூடும் என்பதில் முழுக் கவனத்தையும் செலுத்த வைப்பதன் மூலமாக செழிப்பு உபதேசமானது வேத சத்தியத்தை திரித்துக் கூறுகிறது. இதன் விளைவாக அனேகர் இயேசுவிடம் வருகிறார்கள் (அல்லது வருவதாக நினைத்துக் கொள்கிறார்கள்). அவர்கள் இயேசுவின் மீது அன்பு வைத்தோ, பாவத்தை வெறுத்தோ, அல்லது அவருக்காக மரிக்கவும் ஆயத்தம் என்றோ வருவதில்லை. மாறாக, அவர்களின் இருதய விருப்பத்தின் படி சரீர சுகம், பொருள் மற்றும் செழிப்பை அவர்களுக்கு இயேசு தருவார் என நம்புவதினால் அவர்கள் வருகிறார்கள். உண்மைக் கிறிஸ்தவம் இது அல்ல, “இயேசுவிடம் வருவதற்கு” இதுவே அவர்களது நோக்கமாக இருக்குமெனில், அவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்கள் அல்ல.
இப்போதனையானது ஆபத்தானது என்பதற்கான மற்றுமொரு காரணம் என்னவெனில், கேட்பவர்களை குழப்பத்திலும் சோர்விலும் ஆழ்த்தக் கூடிய தவறான நம்பிக்கையை இது கொடுக்கிறது என்பதாகும். பொருளாதார செழிப்பு பிரசங்கிகளின் பிரசங்கங்களைக் கேட்பவர்கள் தங்களுடைய ஊழியங்களுக்கு அதிகம் கொடுத்தால் அதிக செழிப்பு உண்டாகும் என வாக்குப் பண்ணுகின்றனர். பரிசுத்த வேதாகமத்தில் அப்படி ஒரு வாக்குத்தத்தம் கிடையவே கிடையாது. தேவன் வாக்குப் பண்ணாத ஒன்றை, அவர் தரவேண்டும் என நாம் எதிர்பார்க்கமுடியாது. அநேக ஏழை நாடுகளில், இப்போதனையின் விளைவாக கேட்பவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களையும் கொடுத்து இழந்து, பிரசங்கிப்பவர்களைத் தவிர வேறு எவரும் செழிப்படையாத ஒரு நிலை காணப்படுகிறது. ஜனங்கள் தங்கள் விசுவாசத்தை சேதமடைய விடாதபடிக்கு இப்படிப்பட்ட போதனைக்கு எதிராக எச்சரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அனைவரும் இந்த உலக செல்வத்தை நாட வேண்டும் என புதிய ஏற்பாடு போதிக்க வில்லை. இந்த உலக உடைமைகளைக் குறித்து நாம் கவலைப்படக் கூடாது என்றே அது போதிக்கிறது. நாம் போதுமென்ற மனதுடன் அடிப்படை தேவைகளுடன் வாழ்வதற்கு, நமக்கு மிகவும் விலையேறப்பெற்ற ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது (1 தீமோத்தேயு 6:8). ” எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று ஜெபிக்கும்படி இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். நமக்கு அவசியமானவைகளைப் பெற நமக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதேயன்றி, இவ்வுலக ஐசுவரியங்களைப் பெறுவதற்காக அல்ல. நம் தேவைக்கும் அதிகமாக நமக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், நாம் அச்செல்வத்தை தேவ இராஜ்ஜியத்திற்காக பயன்படுத்த வேண்டி நம்மிடம் அவை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே அதன் பொருள் (2 கொரிந்தியர் 8:1-15, லூக்கா 16:1-15). பொருளாதாரச் செழிப்பைப் பற்றி (அல்லது பணக்காரர்கள் ஆவது பற்றி) பேசுவதில் அதிக நேரம் செலவழிக்கும் போதகர்களைப் பற்றி எச்சரிக்கையாயிருங்கள் (1 தீமோத்தேயு 6:10).

தேவன் மிகவும் மேலான கனத்திற்கு உரியவர். மிகைப்படுத்தல் நிறைந்த இக்காலத்தில், அவருடைய மதிப்பைக் குறிப்பிட போதிய வார்த்தைகள் நம்மிடம் கிடையாது. உலக ஐசுவரியங்கள் மீது கவனத்தை வைக்கத் தூண்டும் எந்த போதனையும் அவருடைய மகிமையைப் பற்றிய மிகவும் குறுகிய பிம்பத்தையே தருகிறது.

நான் இதைப் பற்றி எழுத மிகவும் அதிகமான காரியங்கள் உண்டு என்றாலும், நீங்கள் பொருளாதார செழிப்பு உபதேசத்தின் சாராம்சம் என்ன என்று உங்களுக்குச் சற்று விளங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

( இக்கட்டுரையானது பிரான்சிஸ் சான் (FRANCIS CHAN) என்ற தேவ மனிதரின் பின்வரும் இணையதள பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டு, தமிழ் கிறிஸ்தவர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.)


WHAT DO YOU BELIEVE REGARDING THE “PROSPERITY GOSPEL”?
My understanding of that term is that it refers to teachings which imply that if you follow Jesus, He will make you healthy and wealthy. It is often used to attract people to make a decision to follow Jesus so that they can spend the rest of their lives in health and prosperity.

I believe this is a dangerous teaching for several reasons. First and foremost (in my opinion) is that it contradicts the teachings and example of Christ and the apostles. Jesus taught His disciples “If anyone would come after me, let him deny himself and take up his cross and follow me” (Matt 16:24). It was not a call to come and prosper but rather the opposite- a call to come and suffer. The New Testament is full of passages explaining the suffering that comes with a decision to follow Christ. I once gave a sermon where I went through every book of the New Testament and showed how suffering was in every book but one. Jesus was clear that following Him meant forsaking things of this earth to find a treasure far greater (Luke 9:58, Matthew 19:21, Matthew 13:44-46). This was exemplified by the martyred apostles who spent their lives joyfully suffering. Paul speaks about this when he compares his lifestyle of suffering in comparison to false teachers living in luxury (1 Corinthians 4:8-13, 2 Corinthians 4, 11). It is dangerous because it is not the gospel.

Jesus is the greatest prize. He is the bread of life. In John 6, as people were coming to Him looking for another miraculous meal, He refused to give it to them. Instead, He asked them if they wanted Him alone. He refused to be their genie, granting every wish they might have. Jesus let great numbers of people walk away in that moment because they wanted Jesus only if He would provide for them materially (prosperity gospel). He was then left with the disciples who treasured Him regardless of if they were homeless and poor because of it. For the Christian, Jesus is the focus of our affections and aspirations. The prosperity gospel distorts this by putting the focus on what Jesus can do for you rather than the beauty and value of who He is. This results in many people coming to Jesus (or so they think), not because they have fallen in love with Him, hate their sin, and would die for Him, but because they believe He will give them the desires of their heart in health, wealth, and prosperity. This is not Christianity, and if this is the motivation of people “coming to Jesus”, they are not truly Christian.

Another reason this teaching is dangerous is that it gives false hope to listeners that can result in confusion and discouragement. Prosperity preachers often promise greater wealth if their listeners will give more to their ministries. This is never promised in Scriptures. We can never hold God to something that He has not promised. In many impoverished nations, this has resulted in listeners giving their resources without anyone becoming rich besides the preacher. This can lead them into questioning the faithfulness of God. People need to be warned against this kind of teaching so that their faith is not damaged.

The New Testament does not teach that everyone should expect riches on earth. Instead, it teaches that we shouldn’t really care about earthly possessions. We have been given something far greater, so we can be content with basic necessities (1 Timothy 6:8). Jesus taught his disciples to pray “give us this day our daily bread”. We are promised provision, but not riches on earth (Matthew 6:31-33). If we are given more, it just means that we’ve been entrusted to use those resources for His Kingdom (2 Corinthians 8:1-15, Luke 16:1-15). Beware of teachers who spend a lot of time talking about becoming wealthy (1 Timothy 6:10).
God is supremely valuable. In an age of exaggeration, there are no words left to describe His worth. Any teaching that places focus on earthly riches gives a diminished picture of His glory.
There is much more I could write, but I think you get the gist.

Sunday, October 6, 2019

சோர்ந்து போகாதே...


தடைகள் பெருகி தடுமாறும் போது,
ஆதரவின்றி அனாதை போல உணரும்போது,
செய்யாத குற்றம் உன் மேல் சுமரும்போது,
பகைவர்கள் எள்ளி நகையாடும்போது
உதவ வேண்டியவர் உதறிக் கைவிடும்போது
நீ சோர்ந்து போகாதே


யார் இல்லை எனினும் நான் உண்டு
உனக்காக உயிரையே தந்த நான்
உன் வேதனைகளை அறியாதிருப்பேனோ
மீட்பின் வழி திறந்த நான்
சோதனைகளில் உன்னுடனே இருப்பேன்
கவலை மறந்து தோள்களில் சாய்ந்து
அனைத்தையும் என்னிடம் விட்டுவிடு
நான் தரும் சந்தோச சமாதானம்
அதற்கு எதுவுமில்லை சமானம்!
இலவசம்! விலையொன்றுமில்லை
அன்புக்கேது விலை!

இயேசு: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28)

Wednesday, May 29, 2019

Music or Missions?


straightonA Challenge to all Worship Leaders, Christian Artists

and Musicians for Jesus.


by Keith Green

For as long as he could remember, the late Keith Green's greatest dream was to be a musical success. After he gave his life to Jesus, however, he felt the need to surrender those aspirations. Ironically, when sometime later he sensed God was directing him to pick these abilities back up, his music soared straight to the top of the contemporary Christian charts. The following message was birthed out of his personal struggle to strike a balance between music and missions, humility and fame.

Today, so many people ask me if I can tell them how they can start or enter into a music ministry. At concerts I get countless questions about this, and I also get lots of letters and even some long-distance phone calls from many people who feel they are only "called" into the music "ministry" One day I began to ask myself why so few have ever asked me how to become a missionary, or even a local street preacher, or how to disciple a new believer. It seems everyone would prefer the "bright lights" of what they think a music ministry would be, rather than the mud and obscurity of the mission field, or the streets of the ghetto, or even the true spiritual sweetness of just being a nobody whom the Lord uses mightily in small "everyday" ways.
Are You Willing?
My answer to their question is almost always the same. "Are you willing to never play music again? Are you willing to be a nothing? Are you willing to go anywhere and do anything for Christ? Are you willing to stay right where you are and let the Lord do great things through you, though no one may seem to notice at all?" They all seem to answer each of these questions with a quick "yes!" But I really doubt if they know what their answer entails.
Star Struck
My dearest family in Jesus...why are we so star struck? Why do we idolize Christian singers and speakers? We go from glorifying musicians in the world, to glorifying Christian musicians. It's all idolatry! Can't you see that? It's true that there are many men and women of God who are greatly anointed to call down the Spirit of God on His people and the unsaved. But Satan is getting a great victory as we seem to worship these ministers on tapes and records, and clamor to get their autographs in churches and concert halls from coast to coast.

Can't you see that you are hurting these ministers? They try desperately to tell you that they don't deserve to be praised, and because of this you squeal with delight and praise them all the more. You're smothering them, making it almost impossible for them to see that it's really Jesus. They keep telling themselves that, but you keep telling them it's really them, crushing their humility and grieving the Spirit that is trying to keep their eyes on Jesus.

Ultimately, what we idolize we ourselves desire to become, sometimes with our whole heart. So a lot of people who want to become just like their favorite Gospel singer or minister, seek after it with the same fervor that the Lord demands we seek after Him! And again, we insult the Spirit of Grace and try to make a place for ourselves, rather than a place for Jesus.
A Thankless Job
How come no one idolizes or praises the missionaries who give up everything and live in poverty, endangering their lives and families with every danger that the "American dream" has almost completely eliminated? How come no one lifts up and exalts the ghetto and prison ministers who can never take up an offering, because if they did they would either laugh or cry at what they'd receive?

How come?

Because (1) we're taught from very early on that comfort is our goal and security… and (2) that we should always seek for a lot of people to like us. Who lives less comfortably and has had less friends and supporters than the selfless missionaries who have suffered untimely, premature deaths trying to conquer souls and nations for the whole glory of God? Do you really believe we're living in the very last times? Then why do you spend more money on Gospel records and concerts than you give to organizations that feed the poor, or to missionaries out in the field?

There are ministries all over the world where "penniless" people are being saved and transformed. They are broken people who have promise and qualities, but just need someone to bring them God's light during the times when their lives seem so completely hopeless.

I repent of ever having recorded one single song, and ever having performed one concert, if my music, and more importantly, my life has not provoked you into Godly jealousy (Romans 11:11) or to sell out more completely to Jesus!

Quit trying to make "gods" out of music ministers, and quit desiring to become like them. The Lord commands you, "Deny yourself take up your cross daily, and follow me" (Luke 9:23). My piano is not my cross, it is my tool. I'd never play it again if God would show me a more effective tool in my life for proclaiming His Gospel.[God gives us each our own unique tools. But we may never use them if we become more interested in someone else's. Seek God, ask Him for His plan for ministry (true, God glorifying ministry) in your life.]
Conclusion
To finish, let me say that the only music minister to whom the Lord will say, "Well done, thy good and faithful servant," is the one whose life proves what their lyrics are saying, and to whom music is the least important part of their life. Glorifying the only worthy One has to be a minister's most important goal!

Let's all repent of the idolatry in our hearts and our desires for a comfortable, rewarding life when, really, the Bible tells us we are just passing through as strangers and pilgrims in this world (Hebrews 11:13), for our reward is in heaven. Let's not forget that our due service to the Lord is "... not only to believe in Him, but also to suffer for His sake"(Phil. 1:29).

Amen. Let us die graciously together and endure to the end like brave soldiers who give their lives, without hesitation, for our noble and glorious King of Light.

Source: https://lastdaysministries.com/Groups/1000086193/Last_Days_Ministries/Articles/By_Keith_Green/Music_or_Missions/Music_or_Missions.aspx

Friday, April 19, 2019

பெரிய வெள்ளிக்கிழமை சொல்லும் செய்தி!



நீயுனக்கு சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்கு சொந்தமல்லவே

 அனுபல்லவி

நீயுனக்குச் சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்: - நீ

சரணங்கள்

1.சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே திரு ரத்தம் ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே - நீ

2. இந்த நன்றியை மறந்து போனாயோ? இயேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்ததமுனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ? - நீ

3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினி கடல் தள்ளுவானேன்?

4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே, உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
உயர் பதவியில் என்றும் நிலைப்பாய் - நீ

பாடலை எழுதியவர் - தேவசகாயம் உபாத்தியார், சாட்சியாபுரம்

இராகம் - கமாஸ்
தாளம் - ரூபக தாளம்

Tuesday, April 16, 2019

நாட்டு நடப்புக்கு சம்பந்தமில்லாத ஒரு கதை



ஒரு ஊரில் ஒரு அசூரன் இருந்தானாம். அவனை எப்படியாவது நம்ம ஊருக்குக் கொண்டு வந்துரணும்னு ஒரு அதிகாரி திட்டம் போட்டு குறைந்த செலவிலும் மிகுந்த பாதுகாப்பாகவும் கொண்டு வர ஏற்பாடு பண்ணினார். ஆனால் அந்த அதிகாரியின் போதாத நேரம், அந்த அசூரனைக் கொண்டு வருவதற்கு முன், அவர் இருந்த இடத்தில் வந்த வேறொரு அதிகாரி வந்துட்டார். அந்த புதிய அதிகாரிக்கு அசூரனைப் பற்றியும் தெரியாது, அதை பாதுகாப்பாக கொண்டு வருவது பற்றியும் தெரியாது. மொத்தத்தில் பாதுகாப்புனா என்னன்னு தெரியாதுன்னு வச்சுக்கங்களேன்.

எவரையும் நம்பாத இந்த புது அதிகாரி தானே நேரடியாக அந்த அசூரனின் எஜமானர்களிடம் சென்று, ஒரு புது உடன்படிக்கைப் பண்ணினார். அதில் தன் நண்பர் சுனிலையும் ஒரு பார்ட்னராக சேர்த்துக் கொண்டால்தான் உடன்படிக்கை, இல்லையேல் அந்த அசூரனை எங்க ஊருக்கு எடுத்துட்டு போக மாட்டேன்னு அடம்பிடிச்சார். உடனே பயந்து போன அந்த எஜமான், இவருக்கு குல்பி ஐஸ் வாங்கிக் கொடுத்து ஐஸ் வைத்து, ஓ தாராளமா உங்க சுனிலை எங்க கூட சேர்த்துக்கலாம். சுனிலுக்கு நீங்க குடுக்காட்டியும் நாங்க கமிஷன் என்ன, லாபத்திலேயே பங்கு கொடுக்கத் தயார். ஒகே வான்னு கேட்டார் எஜமான். அட, இதை விட வேறேன்ன வேணும்னு நம்ம புது அதிகாரி துள்ளினார்.

“ஆனா ஒரு கண்டிஷன்”, நீங்க முன்பு கேட்ட மாதிரி, கேட்ட விலைக்குக் கொடுக்க மாட்டோம். நாங்க சொல்ற விலைக்கு, எங்களுக்கு எப்ப தோணுதோ அப்பதான் அசூரனை அனுப்புவோம்.” இதற்கு சம்மதிச்சா உடனே ஒரு கமிஷனை உங்க சுனிலுக்குக் கொடுக்குறோம்னு அந்த முதலாளி சொன்னார். இவரும் மார்பை நிமிர்த்து வெற்றிக் களிப்பில் ஊர் திரும்பினார். ஆனால் ஆண்டுகள் கடந்தும், அந்த அசூரன் தான் இன்னமும் ஊர் வந்து சேரவில்லை.

ரொம்ப நாளா அசூரன் வந்து சேரலையே, மக்கள் கேள்வி கேட்பாங்களேன்னு யோசித்த அந்த அதிகாரி, இனிமேல் நானே அந்த அசூரனின் வேலையைப் பார்க்கலாம்னு இருக்கேன். நான் அதிகாரியாக இருந்தாலும், உங்கள் எல்லாருக்கும் பாதுகாவலனாக, உங்களைக் காக்கும் காவலனாக இருப்பேன். நீங்கள் என்னைக் காக்கும் காவலனாக இருப்பீர்களா என்று மக்களிடம் கேட்டு, மக்கள் அனைவரையும் காவல் காக்கும் வேலைக்கு அழைப்பு கொடுத்தார். மக்களில் ஒரு சிலர் அட இந்த அதிகாரி இப்படி அர்ப்பணிப்போடு இருக்கிறாரே, காக்கிச் சட்டைக் காவலனை விட, காக்கி டவுசர் காவலனாகிய இவர்தான் உண்மையான காவலாளி என அவர் சொன்னதற்கு தலையை ஆட்டி, அவருக்கு அவர்கள் ஓ போட்டனர்.

Monday, April 15, 2019

நடுநிலை வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?


2019 பாராளுமன்ற தேர்தல் பிரிவினைவாதத்திற்கும், தேச ஒற்றுமைக்கும் இடையே நடக்கும் யுத்தமாக பார்க்கப்படுகிறது. ஒரு அணி இந்தியா என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே முழு உரிமையுடன் வாழ வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்து ஓட்டு கேட்கிறது. மறு அணி, இந்தியாவின் மேன்மை மற்றும் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமைதான், ஆகவே அனைவரும் ஒற்றுமையுடன் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும் என்ற வாதத்துடன் பிரிவினை வாதத்திற்கு எதிராக அன்பை முன்வைத்து ஓட்டு கேட்கிறது. இது போக சில அல்லுசில்லுகள் உள்ளூர் அளவில் தங்கள் இருப்பைக் காண்பிப்பதற்காக காமெடி பண்ணிக் கொண்டிருக்கின்றன. இச்சமயத்தில் நடுநிலை வாக்காளர்கள் தங்கள் வாக்கை சிதறடிக்காமல், நாட்டின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் கொண்டு பிரிவினை வாதத்திற்கு எதிராக தங்கள் வாக்கை செலுத்த வேண்டியது அவசியம். நாடு என்னும் பெரிய பிம்பத்தை மனதில் கொண்டு, மதம், இனம், மொழி மற்றும் சாதி இவைகளைத் தாண்டி உங்கள் கை விரல் “மை” நாளைய இந்தியாவின் எதிர்காலம் நீதி எனும் சூரியனின் வெளிச்சத்தில், நீங்கள் கை காட்டுபவர்கள் குரல் கொடுக்க உங்கள் வாக்கை மறக்காமல் பதிவிடுங்கள். கட்சி ஓட்டுகளல்ல, உங்கள் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகிறது.
இப்படிக்கு
ஒரு நடுநிலை தேசாபிமானி

An appeal to apolitical voters


- 2019 India Parliamentary Election
2019 Loksaba election is percieved as a battle between two idealogies: Schism (or divisive politics) and National harmony. One party seeks votes with a slogan that only the people of a particular religion can live with fullrights as an Indian. The other party believes in unity in diversity, and voices for peaceful coexistence of all people. So they reject any form of schisms and make an appeal to vote with love. Apart from this, some local fringe parties try to prove their existence by doing some "damash". At this crucial juncture, apolitical voters need to be careful not to waste their votes, with future and development of the nation in mind, they should vote against divisive politics. Keeping the bigger picture of India in mind, transcending religion, race, language and caste boundaries, may your "Hand" press the symbols that can make India shine like a "Sun" in future. Your votes will determine the destiny of the country.
Yours
a patriotic Indian.

Sunday, March 10, 2019

3. லெந்து காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

லெந்து காலம் என்றால் என்ன என்றும், அது வேதாகமத்தின் அடிப்படையில் சரியா என்றும் முந்தைய இரு பதிவுகளில் பார்த்தோம். லெந்து காலத்தில் புலனடக்கம் அல்லது இச்சையடக்கம் என்பது சார்ந்து கிறிஸ்தவர்கள் பலர் சில விசயங்களை லெந்து காலத்தில் கடைபிடிக்கின்றனர். அதில் அசைவ உணவுகள், அலங்காரம் ஆகியவைகளை தவிர்த்தல் முக்கியம் என நம்புகின்றனர்.  இதினால் ஏதும் பலன் உண்டா என்றும், வேதாகமத்தின் படி இது சரியானதா என்றும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.


ஆண்டவராகிய இயேசுவின் சீடர்கள் யூத வழக்கத்தின் படி கைகளைக் கழுவாமல் உணவருந்தின போது, வேதபாரகரும் பரிசேயர்களும் அவரிடம் கேள்வி கேட்டனர். அதற்கு இயேசு, “வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” என பதில் சொன்னார் (மத்தேயு 15:11). அலங்காரம் மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நல்லதுதான். ஆயினும் இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இவைகளைச் செய்வதினால் மட்டும் எவரும் தேவனை பிரியப்படுத்திவிட முடியாது. இரண்டாவதாக, சபைக்காகவும் மற்றவர்களுக்காகவும் அர்த்தமின்றி கடமைக்காக செய்யும்போது இவைகள் வெறும் சடங்காச்சாரமாகிவிடுகின்றன.


இருதயத்தில் இருந்து எழும் விருப்பத்தின் காரணமாக, ஜெபம் மற்றும் உபவாசத்திற்கு தடையாக இருக்காத படி இவைகளைத் தவிர்த்தல் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். ஆயினும் இது வேதக் கட்டளை அல்ல.  லெந்து காலத்தை ஆசரிக்கும் ஒரு கிறிஸ்தவர், அசைவ உணவுகளைச் சாப்பிடுவதால் அவர் செய்வது தவறு என்று எவரும் சொல்ல முடியாது. இது மற்ற விசயங்களுக்கும் இது பொருந்தும். அசைவ உணவுகளை, அலங்காரத்தை தவிர்த்தல் என புலனடக்கம் சார்ந்த விசயங்களில் அக்கறை செலுத்துபவர்கள், வழக்கமாக அவைகளுக்குச் செலுத்தும் விலையை, பணத்தை சேகரித்து ஏழைகளுக்குச் செலவிடலாம். உணவற்ற ஏழைக்கு அந்த அசைவ உணவையும், ஆடையற்ற தரித்திரருக்கு நல்ல உடையையும் வாங்கிக் கொடுத்து அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கலாம்.

 உணவுக் கட்டுப்பாடு மற்றும் மனக் கட்டுப்பாடு ஆகியவை எக்காலத்திலும் சரீரத்திற்கும், மனதிற்கும் ஆரோக்கியமானவை. இவைகளில், உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் ஒரு சீரான நல்ல முடிவைக் காண விரும்புகிறவர்கள், லெந்து காலத்தை முன்னிட்டு, கர்த்தருக்காக தியாகமாக எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற மனதோடு இவைகளை முழு விருப்பத்தோடு முயற்சித்துப் பாருங்கள். மிகுந்த பலனைக் காண்பீர்கள். ஆயினும் இது கட்டாயம் அல்ல.

ஆண்டவராகிய இயேசு சொன்னது போல, புறம்பான காரியங்களுக்கு நம் முழுக் கவனத்தையும் செலுத்திவிட்டு, இருதயத்தில் இருந்து வரும் தீய எண்ணங்களுக்கு நாம் இடங்கொடுக்கிறவர்களாக இருக்கக் கூடாது  (மத்தேயு 15:19). புறத் தூய்மையைக் காட்டிலும் அகத் தூய்மை மிக முக்கியமானதாகும். அதற்கு நாம் வேத வசனம், ஜெபம் மற்றும் தியானம் மூலமாக இயேசுவுடனான உறவில் நல்ல ஐக்கியத்தோடு இருப்பது மிகவும் அவசியம். அதுவே நம் நோக்கமாக இருக்க வேண்டும், லெந்து காலத்தில் மட்டுமல்ல, வருடத்தின் எல்லா நாட்களிலும். இவைகளில் நடைபயில விரும்புகிறவர்கள் இந்நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- தொடர்ந்து ச(சி)ந்திப்போம்
அற்புதராஜ்

Saturday, March 9, 2019

2. லெந்து காலம் வேதாகம அடிப்படையில் சரியா? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

எனது முந்தைய பதிவில்  “லெந்து காலம்” பற்றிய ஒரு சிறிய குறிப்பை உங்களுடன் பகிர்ந்திருந்தேன்.  பொதுவாகவே, கிறிஸ்தவ சபைகளிலும், கிறிஸ்தவர்களிடையேயும், “பரிசுத்த வேதாகமத்தில் லெந்து காலம் பற்றி இருக்கிறதா?” என்றும்,  “ஆதிக் கிறிஸ்தவ சபையில் கிறிஸ்தவர்கள் லெந்து காலம் என்ற ஒன்றை ஆசரித்தனரா?” என்றும் கேட்பதுண்டு. இது மிகவும் நல்ல கேள்வி ஆகும். எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் முறையானதாக இருக்காது. ஆகவே, இக்கட்டுரையில் லெந்து காலத்துக்கும், வேதாகமத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று ஆராய விரும்புகிறேன்.

இத்தொடரின் முதல் கட்டுரையில், லெந்து காலம் என்பது ஈஸ்டருக்கு முந்தின நாற்பது நாட்களைக் குறிக்கிறது என்றும், பரிசுத்த வேதாகமத்தில் “நாற்பது நாட்கள்” என்பது பல முக்கியமான வேதாகம நபர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்ததையும் கோடிட்டு காண்பித்திருந்தேன். ஆனாலும் அதை வைத்து லெந்து காலத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா என எனக்கு நானே நான் கேள்வி கேட்டுக் கொள்கிறேன். வேதாகமத்தில் லெந்து காலம் என்ற ஒன்றை எடுத்துக் காண்பியுங்கள் பார்க்கலாம் என்று அனேகர் சொல்லக் கேட்டிருக்கிறேன். முதலில் நாம் சில அடிப்படையான விசயங்களை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். மூல பரிசுத்த வேதாகமம் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டது. வேதத்தின் அடிப்படையில்,தேவனுடைய ஆள்தத்துவம், அன்பு மற்றும் அதன் வெளிப்பாடு ஆகியவைகளே கிறிஸ்தவ உபதேசத்தின் அஸ்திபாரம் ஆகும்.  லெந்து காலம் என்பது ஆதிச் சபையில் இருந்து, ரோமக் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டாண்டு சபைகளுக்குள் வந்த நல்ல ஒரு பாரம்பரியமாகும். ஆயினும் எதையும் பொருளுணராமல் கடமைக்குச் செய்யும்போது அதன் பொருளும் அர்த்தமற்றதாகி விடும், அது மட்டுமல்லாது அதைச் செய்பவர்களும் அப்படிப்பட்ட பாரம்பரியத்திற்கு எதிரானவர்களின் எளிய இலக்காக மாறிவிடுவார்கள். லெந்து காலத்தைப் பொறுத்த வரையிலும் அது தான் நடந்தது, நடக்கிறது. பெந்தெகோஸ்தே சபைகள் பெருகின வேளையில், ரோமக் கத்தோலிக்க சபை மற்றும் பாரம்பரிய சபைகளின் பண்டிகைகள் பெந்தெகோஸ்தே சபையினரால் விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு பல கேள்விகள் முன் வைக்கப் பட்டன. அவைகளில் ஒன்றுதான் லெந்து காலம் பற்றியதும் ஆகும்.  

என்னைப் பொறுத்தவரையில், லெந்து காலம் என்ற ஒன்றை வேதாகமத்தில் இருந்து காண்பியுங்கள் என்று கேட்பதும், திரித்துவம் என்ற வார்த்தையை வேதாகமத்தில் இருந்து காண்பியுங்கள் என்பதும் ஒன்றுதான். வேதாகமத்தைப் பற்றியும், வேதாகம தேவனைப் பற்றியும் சரியான புரிதலில்லாமல் இருந்தால்தான் இப்படிப் பட்ட கேள்விகள் வரும். நான் இதைக் குறையாக சொல்ல வில்லை, ஒரு சுய பரிசோதனைக்காகவே சொல்கிறேன். லெந்து காலத்துக்கு ஆதரவாகப் பேசுகிறவர்களில் பெரும்பாலானோர், லெந்து காலம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்களாகவும், லெந்து காலம் பற்றிய கேள்விகளுக்கு முறையான பதில் சொல்லத் தயங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். அதிக பட்சமாக, ரோமர் 14:5,6 வசனங்களைக் காண்பித்து, “நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்” என்று வாதிடுகிறார்கள். லெந்து காலம் என்பது ஒரு விசேஷமான ஒன்று என்பதுடன் திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். ஏன் விசேஷம், என்ன செய்ய வேண்டும் என்பதில் எல்லாம் அதிக அக்கறை கிடையாது. இப்படியாக, லெந்து காலத்தை ஏற்றுக் கொள்கிறவர்களையும், நிராகரிக்கிறவர்களையும் நான் ஒரே அளவுகோலுடன் காண முயற்சிக்கிறேன்.

 லெந்து காலம் என்பது இடையில் திணிக்கப்பட்ட ஒரு நடைமுறை அல்ல. இயேசுவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் ஓய்வு நாளுக்கு (ஈஸ்டருக்கு) முந்தைய நாற்பது நாட்களை பக்தியுடன் ஆசரிப்பது என்பது ஆதிச் சபைகளில் இருந்து வந்த பழக்கம், நிசேயா கவுன்சிலில் முறைப்படுத்தப் பட்டு, பின்னர் வந்த காலங்களில் இச்சையடக்கம் சம்பந்தப் பட்டவைகளும் சேர்ந்து நாம் இன்று காண்பது போல இருக்கிறது. நாற்பது நாட்கள் மட்டும் கட்டுப்பாடாக இருந்து விட்டு மற்ற நாட்கள் எல்லாம் இஷ்டம் போல வாழ்வதைத் தான் வேதாகமம் போதிக்கிறதா என்பது போன்ற கேள்விகளுக்கு முறையான பதிலை முன் வைக்க வேண்டும். அதே நேரத்தில் இப்படி கேள்வி கேட்பவர்கள் வருடத்தின் எல்லா நாட்களும் வேதாகமத்தின் படி வாழ்கிறார்களா என்றும் கேள்வி கேட்க விரும்புகிறேன். எல்லாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது என் நோக்கமன்று. மாறாக கேள்வி கேட்பவர்களும் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கேட்கிறேன்.

ஆம் உண்மைதான், வெறும் நாற்பது நாட்கள் மட்டும் கறி சாப்பிடாமல், பூ வைக்காமல், நல்ல உடை உடுத்தாமல், துக்க வீட்டில் இருப்பது போல சோகமாக இருந்துவிடுவதினால் தேவனை பிரியப்படுத்தி விட முடியும் என்றால் அதை விட முட்டாள்தனமான ஒன்று வேறேதுவும் இருக்க முடியாது. சபை ஒழுங்கில் இருப்பதற்காக லெந்து காலத்தை ஆசரிக்காமல், நமக்காக வந்து மரித்துயிர்த்த இயேசுவைப் பற்றிய சிந்தனைக்கு அதிக இடம் கொடுத்து, மனதையும் செயலையும் இயேசு காண்பித்த மாதிரிக்கு நேராக ஒருமுகப்படுத்துவது நலம். இதை வாசிக்கும் நண்பர்களே,  நம்மில் எவருமே 100 சதவீதம் பரிசுத்தவான்கள் அல்ல, அதற்காக, நாம்  பரிசுத்த அழைப்பினால் நம்மை அழைத்த பரிசுத்த தேவனை நோக்கிப் பார்ப்பதை விட்டு விடுவதில்லை. நம் பலவீனத்தின் மத்தியிலும் அவரை நோக்கிப் பார்த்து, நம்மை சுத்திகரித்துக் கொள்கிறோம். உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வின் அன்றாட அனுபவமாக இதைச் சொல்வார்கள்.
லெந்து காலத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒருவரையொருவர் கடித்து பட்சிப்பதற்குப் பதிலாக, வேதாகம அடிப்படையில், பயனுள்ள எதாவது ஒன்றைச் செய்யலாம் என்றால் பின் வரும் யோசனையை முயற்சித்துப் பாருங்கள்.
1. உங்களை அடிக்கடி சோதனைக்குட்படுத்தும் எதாவது ஒரு காரியத்தைப் பற்றி தீர்மானமாக முடிவெடுத்து, இந்த நாற்பது நாட்களில் அதை செயல்படுத்த கர்த்தருக்குள் முடிவெடுத்து செயல்படுங்கள். வருடத்தின் எல்லா நாட்களும் நாம் கர்த்தருக்குள், கர்த்தருக்கேற்றபடி வாழ்வது தான் இலக்கு. அதை ஜெபத்துடன் இந்நாட்களில் துவங்கலாம். சிறிய இலக்குகள் பெரிய சாதனைகளுக்குள் நம்மை வழிநடத்தும். நானும் இந்த வருடம் அப்படி ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறேன். (குறிப்பாக வாலிபப் பிள்ளைகள், உங்களை தொந்தரவு படுத்தும் பாவச் சோதனைகளுக்கு எதிராக ஒரு உறுதியான முடிவெடுங்கள்).
2. ”நானல்ல, கிறிஸ்துவே” என்பது தான் ஒவ்வொரு கிறிஸ்தவரின் இருதய விருப்பம். ஆனால் எல்லாருக்கும் நடைமுறையில் அது சாத்தியப்படுவதில்லை. ஆகவே, இயேசுவுடன் கூட இருப்பதுதான் இதற்கு உதவும். அனுதினமும் வேதம் வாசித்து, குறைந்தது ஒரு மணிநேரமாவது ஜெபத்தில் தரித்திருங்கள். ஜெபத்தில், நீங்கள் எதையாவது பேசிக்கொண்டே இருக்காமல், நீங்கள் வாசித்த வேத பகுதியில் இருந்து தேவனுடைய தன்மை மற்றும் அவர் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை தனிமையில் தேவனுடன் கேளுங்கள். எதுவும் கடினமல்ல.
3. குறைந்தது ஒருவரிடமாவது இயேசுவைப் பற்றி பேசுங்கள். கிறிஸ்தவரல்லாதோர் என்றல்ல, உங்கள் வீட்டில் உள்ள சின்ன பிள்ளைகளிடம் கூட இதை நீங்கள் செய்யலாம் ( நாம் தான் இதில் expert ஆச்சுதே!).

மேலே நான் கூறிய மூன்று காரியங்களும் வாசிக்க, கேட்க மிக எளிதானதாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் செயல்படுத்துவது என்பது சவாலானதாகும். லெந்து காலத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் எவரையும் இந்த சவாலுக்கு அழைக்கிறேன். கர்த்தரை முன் வைத்து, அவருக்காக வாழ விரும்பும் எவருக்கும் இந்த மூன்று காரியங்களும் இடறலாக இருக்காது என்று விசுவாசிக்கிறேன். லெந்து காலத்தில், வேதாகம அடிப்படையில் வாழ்கிறேனா, வாழ முயற்சிக்கிறேனா என்று அதை ஆதரிப்பவர்களும், அப்படி வாழ முயற்சிப்பது தவறாகுமா என்று எதிர்ப்பவர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

- தொடர்ந்து ச(சி)ந்திப்போம்
அற்புதராஜ்
+91 9538328573

Wednesday, March 6, 2019

1. லெந்து காலம் என்றால் என்ன? - உயிர்த்தெழுதல் சிந்தனைகள்

லெந்து காலம் என்பது கிறிஸ்தவர்களால் பாரம்பரியமாக அனுசரிக்கப்படும் ஒன்றாகும். லெந்து, Lent என்ற வார்த்தையானது கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளில் உயிர்த்தெழுதல் நாளுக்கு முந்தைய நாற்பது நாட்களைக் (Forty days before Easter) குறிக்கிற ஒன்றாக இருக்கின்றது. லெந்து காலம் என்பது சாம்பற் புதன் கிழமை அன்று துவங்கி உயிர்த்தெழுதலை நினைவுகூறும் ஈஸ்டர் பண்டிகை வரையிலான நாட்களை உள்ளடக்கியது ஆகும்.  நாற்பது நாட்கள் என்று பொதுவாக கிறிஸ்தவர்கள் கூறினாலும், உண்மையில் 46 நாட்களை உள்ளடக்கியதே லெந்து காலம் ஆகும். லெந்து காலத்தில் வரும் ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதே நாற்பது என்ற எண் பரவலாகப் பயன்படுத்தப்படுவதன் காரணம் ஆகும்.

நாற்பது என்ற எண் வேதாகமத்தில் அடிக்கடி குறிப்பிடப் பட்டிருக்கிற ஒரு எண் ஆகும். மோசே, நோவா, எலியா, யோனா மற்றும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவர்களின் வாழ்க்கையில் நாற்பது நாட்கள் என்பது ஒரு சிறப்பான இடத்தை வகிக்கிறது. லெந்து காலம் என்பது கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே கிறிஸ்தவ சபைகளில் இருந்து வருகிற ஒன்றாகும். லெந்து காலம் என்பது நாளடைவில் தவக் காலமாக மாறிவிட்டது. உபவாசம், மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக தற்போது ஆசரிக்கப்படுகிறது.
உயிர்த்தெழுந்த இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் அவர் பட்ட பாடுகளை நினைவுகூறுவதுடன், இயேசு வந்த நோக்கம் நம் வாழ்விலும், நம் மூலமாகவும் நிறைவேற நம்மை நாமே பரிசோதித்துக் கொள்வதற்காக இந்நாட்களை பயன்படுத்திக் கொள்வது அர்த்த முள்ளதாக இருக்கும்.

- அற்புதராஜ்
9538328573

Tuesday, February 26, 2019

இயேசு ஏன் வந்தார்?


கிறிஸ்து வருகைப் பதிகம்

நல்லவர்க்கும் தீயவர்க்கும் நடுவர் வந்தார்
நாட்டவர்க்கும் காட்டவர்க்கும் நட்பாய் வந்தார்
பல்லவர்க்கும் பாவிகட்கும் பரிவாய் வந்தார்
பத்தருக்கும் சுத்தருக்கும் பரிந்து வந்தார்
புல்லருக்கும் பொடியருக்கும் பொறுக்க வந்தார்
புரவலர்க்கும் இரவலர்க்கும் பொதுவார் வந்தார்
எல்லவர்க்கும் ஏழையர்க்கும் இரங்க வந்தார்
இம்மானு வேலரசே! வந்தார் தாமே.

- வேதநாயகம் சாஸ்திரியாரின் செபமாலை எனும் நூலில் இருந்து