Friday, April 19, 2019

பெரிய வெள்ளிக்கிழமை சொல்லும் செய்தி!



நீயுனக்கு சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி
நீயுனக்கு சொந்தமல்லவே

 அனுபல்லவி

நீயுனக்குச் சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்: - நீ

சரணங்கள்

1.சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே திரு ரத்தம் ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே - நீ

2. இந்த நன்றியை மறந்து போனாயோ? இயேசுவை விட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்ததமுனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ? - நீ

3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின் மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினி கடல் தள்ளுவானேன்?

4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே, உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
உயர் பதவியில் என்றும் நிலைப்பாய் - நீ

பாடலை எழுதியவர் - தேவசகாயம் உபாத்தியார், சாட்சியாபுரம்

இராகம் - கமாஸ்
தாளம் - ரூபக தாளம்

No comments: