Wednesday, March 30, 2016

அகரம் அனுக்ரகம் அவர் கரம்



அன்பினாலெனை அரவணைத்து
ஆசையோடெனை ஆட்கொண்டு
இன்பமளித்து இன்னல் நீக்கி
ஈகையோடு ஈந்திரே
உள்ளம்கவர் உண்மையோடே
ஊட்டமளித்து வாட்டம் போக்கி
என்றும் என்னில் எதற்கும் குதற்கமற
ஏசையா ஏகின ஏற்றங்கள்
ஓதினால் ஓயாதின்பமே
அவ்வளவும் திகட்டா தமிழ் தமே!

Thursday, March 17, 2016

நீங்க என்ன ஜாதி?



 உங்களைப் பார்த்து யாராவது நீங்க என்ன ஜாதி? என்று கேட்டால் உங்கள் ரெஸ்பான்ஸ் என்னவாக இருக்கும்? உடனே முறைத்துப் பார்ப்பீர்கள்தானே! உங்க பகுதியில் எப்படியோ எனக்கு தெரியாது. ஜாதிச் சண்டைகளுகு பெயர்போன தென் தமிழகத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயமாக யாராவது உங்களைப் பார்த்து இக்க்கேள்வியை நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்டிருப்பார். நானும் ஒரு தென் தமிழக கிறிஸ்தவன் என்பதால்தான் இந்தக் கட்டுரை………. இதை எழுதுவது என் கடமை
வாசிப்பது உங்கள் பொறுமை. விசயத்தை தெரிந்து கொள்ள உடனே உள்ள வாங்க
நீங்கள் தென் தமிழகத்தில் உள்ள ஒரு காரியத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதுதான் எனது முழு அவா. ஆகவே தயவு செய்து பொறுமையுடன் இரசித்து ருசித்து வாசிக்கும்படியாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
எங்க ஊர்ப்பக்கங்களில் ஒருவரை முதலில் சந்திக்கும் போது பெரும்பாலும் எல்லாரும் அறிந்து கொள்ளவிரும்புகிற காரியம் அவர் என்ன ஜாதி என்பதாகத்தான் இருக்கும். ஒருவேளை அவர்கள் வாயை திறந்து நேரடியாக கேட்காவிடினும் உள்மனதில் அதுதான் ஓடிக்கொண்டு இருக்கும். ஆகவே முதலில் பெயரைக் கேட்பார்கள். கேட்டபின்பு நைசாக ஊர்பெயரைக் கேட்பார்கள். அதிலேயே ஓரளவுக்கு என்ன ஜாதி என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். மேலும் சந்தேகம் இருக்குமெனில் அந்த ஊரில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். இப்படியாக எங்க மக்கள் ஜாதியைக் கண்டுபிடிப்பதில் பயங்கரமான புத்திசாலிகள். இன்னும் சில கரை கண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரைப் பார்த்து அவரைன் பார்வை மற்றும் தோற்றத்தைவைத்தே அவர் என்ன ஜாதி என்பதை கணித்துவிடுவார்கள். இங்கேபோய் இதைச் சொல்வதற்கு என்ன அவசரம் வந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ...........இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு வட தமிழகத்தில் சாதியை மையமாக வைத்து பாரம்பரிய கிறிஸ்தவ சபை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியினால் வேதனைப்பட்டவர்களில் நானுமொருவன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல கிறிஸ்துவுக்குள் இருப்பதுதான் முக்கியம், ஒருவர் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் என்ன சபையிலிருந்தாலும் நாமெல்லாரும் ஒரே சரீரமே என்பதை நான் முழுமையாக நம்புபவன். இதற்கு சபைப் பிரிவுகள் தடையாக இருக்கமுடியாது. ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருக்கும் படசத்தில் பல காரியங்களை சபைப் பாரம்பரியங்கள் மற்றும் உலகப் பாரம்பரியங்களின் படி செய்ய முடியாதல்லவா? ஆம்.
எங்கள் ஊரில் உள்ள ஒரு பழக்கத்தை நான் முன்பு சொன்னேன். இப்போது ஆவிக்குரிய வட்டாரத்தில் காணும் மற்றொரு காரியத்தையும் கூறுகிறேன். முன்பு ஆவிக்குரிய சபைகளுக்கு செல்வதையே மற்ற கிறிஸ்தவர்கள் கூட வெறுத்தனர். ஒருவன் பெந்தேகோஸ்தே சபைக்கு சென்றால் அவனை மிகவும் கீழ்த்தரமானவனாக நினைப்பது ஒரு காலத்தில் இருந்தது. இன்றும் கூட சில இடங்களில் உள்ளது. ஆனால் இன்று ஆவிகுரிய சபைகளுக்கு செல்வது கிட்டதட்ட ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. எதுவும் சீர்கெடும்போது எல்லாமே தலைகீழாக மாறிவிடுமல்லவா. அதேபோலத்தான் இன்று ஆவிகுரிய சபைகளிலும் சாதி என்ற பேச்சு எழும்பி விட்டது. முன்பு பாரம்பரிய சபைகள் மட்டுமே சாதியின் அடிப்படையில் இருந்துவந்தன. இன்று ஆவிக்குரிய சபைக்கு செல்லும் ஒருவரை அவர் செல்லும் சபையைவைத்தே அவர் என்ன ஜாதி என்று கூறுமளவுக்கு நிலைமை மலிந்துவிட்டது. அதாவது பாஸ்டர் என்ன ஜாதி என்று பார்த்து செல்லுமளவுக்கு நிலைமை என்ன செய்ய? இதைக் குறிது எழுதுவதற்கே எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஆனால் உண்மை எழுதுவது நன்மைக்கே!
இதை எழுதுவதற்கு எனக்கு ஒன்றும் பெரிதாக தகுதியில்லை. ஏனெனில் நானும் ஒருகாலத்தில் குட்டையில் ஊறின மட்டையாக எங்க ஊர் மக்களில் ஒருவனாகவே இருந்துவந்தேன் என்பதை வெட்கத்துடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் வசனத்தின் வெளிச்சம் எனக்கு உண்டானபோதுதான் ஜாதியைக் குறித்து ஒரு சரியான உணர்வு வந்து சாதியுணர்வு நீங்கிற்று.
வேதம் ஜாதி குறித்து என்ன சொல்கிறது?
வேதாகமத்தில் பலவிதமான ஜாதிகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. உண்மைதான். ஆனால் நாம் ஒருவிசயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். வேதாகம காலத்தில் ஒரு நாட்டு மக்களைக் குறிக்கும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவர்களையே அவாறு குறிப்பிட்டனர். இன்று உள்ளதுபோலல்ல. ஆகவே யாராவது வேதாகமத்திலேயே ஆண்டவர் பல ஜாதிகளைக் குறீத்து எழுதிவைத்துள்ளார் அல்லவா? என்று யாராவது சொன்னால் உடனே நம்பிவிடாதீர்கள். இன்னும் சில ஜாதிப் பிரசங்கியார்கள் இப்படியாக சொல்வார்கள்," பாருங்க ஆபிரகாமே என்ன செய்தான்? தன் சொந்த இனத்தாரிடம் தன் மகனுக்கு பெண்கொள்ளும்படி எலயேசரை அனுப்பவில்லையா? ஆகவே ஜாக்கிரதையாயிருங்கள். அதுவும் திருமண காரியத்தில் ரொம்ப ஜாக்கிரதை என்பார்கள். உடனே ஏமாந்துவிடாதீர்கள். ஏனெனில் ஆபிரகாம் வாழ்ந்துவந்த பகுதி மக்கள் சபிக்கப்பட்டவர்கள் மாத்திரமல்ல கொடிய விக்கிரகவணக்க்த்தாராகவும் இருந்துவந்தனர். ஆகவே தான் ஆபிரகாம் தனக்கு நன்றாக தெரிந்த  தன் குடும்பத்தினரிடம் தன் ஊழியக்காரனை அனுப்பினான். இன்று ஊழியக்காரர்களே ஜாதி பார்ப்பது மட்டுமல்லாது ஜாதியைக் குறித்து முழக்கமான பிரசங்கங்கள் வேறு. கர்த்தாவே! எங்கள் மக்களை இரட்சியும்.
புதிய ஏற்பாடு ஜாதி குறித்து என்ன சொல்கிறது?
 இயேசு ஜாதி பார்த்தாரா? அவர் ஜாதி பார்த்திருந்தால் நமக்கு அதாவது வேதாகமத்தின்படி புறஜாதிகளுக்கு எப்படி இரட்சிப்பு கிடைத்திருக்கும். தேவனின் பார்வையில் எல்லா மனிதரும் ஒரே ஜாதியே அது மனித ஜாதி. தேவன் நேசிப்பது மனிதனையே, அவன் எந்த ஜாதி என்று அவர் பார்ப்பதில்லை.
 புதிதாக திருமணம் முடித்த ஒருவனிடம் தெற்கத்திப் பயல் ஒருவன் அண்ணே உங்க மனைவி என்ன ஜாதி என்று கேட்டான்? அதற்கு பதிலளித்த அந்த புதுமாப்பிள்ளை அடேய் அவள் பெண் ஜாதி, நான் ஆண் ஜாதி ஆகவே இப்போ அவள் என் பொஞ்சாதி ஆகவே உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ என்று பதிலளித்தானாம்.
அப்போஸ்தல கால சபையில் ஜாதியை (நாம் பார்க்கிற ஜாதி அல்ல, வேறு நாட்டு மக்கள்) மையமாக வைத்து பிரச்சனை வந்ததா? ஆம். வந்தது. வேதாகமத்தில் அதை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் 6ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனால் அதில் அப்போஸ்தலர்கள் தலையிடவில்லை, அதை விரும்பக் கூட செய்யவில்லை. அவர்களின் பதில் இன்று மட்டுமல்ல என்றுமே ஒவ்வொரு ஊழியனும் பின்பற்றவேண்டிய காரியமும் ஆகும் (அப்.6:2- 4).
மிகவும் இன வைராக்கியம் மிகுந்தவர்களும் மற்ற மக்களுடன் கலப்பதை தீட்டாக கருதின யூதமக்களுக்கு யூதரல்லாதவருடன் பேசுவது என்பதே மிகவும் கீழ்த்தரமானது ஆகும். அப்படிப்பட்ட யூதகுலத்தில் பிறந்து வளந்த பேதுருவுக்கு தேவன் காண்பித்த தரிசனம் என்ன்? இன்று அடிக்கடி தரிசனம் காண்பவர்கள் அதையே மேடைக்கு மேடை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாது  பேசுபவர்கள் இதை சற்று வாசித்து சிந்திக்கவேண்டும் (அப்.10). நாம் யாராக இருந்தாலும் யூதனானாலும் கிரேக்கனானாலும் பரிசுத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆகவே யாவரும் ஒன்றே. இன்னும் சொல்லப் போனால் யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை புது சிருஷ்டியே காரியம் என்று வேதம் கூறவில்லையா? இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள 1கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் வரங்களைக் குறித்து சொல்கிற தேவன் அதைத் தொடர்ந்து உடனே கூறுகிற காரியமும் இதுதான். சற்று நிதானமாக உங்கள் வேதாகமத்தை எடுத்து அந்த அதிகாரத்தை வாசித்து தியானியுங்கள். மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நாமெல்லாரும் ஒரே ஜாதி என்றால் என்ன ஜாதி?
நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம் என்பதினால் நமக்குள்ளே எவ்வித பிரிவினைகளும் இருக்கக் கூடாது. இருக்காது. நாமெல்லாரும் வசனத்தின்படி விசுவாசத்தினால் ஆபிரகாமின் சந்த்ததியினராகவும் இருக்கிறோம். நாம் இஸ்ரவேலர்கள். தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். உள்ளத்தில் யூதனானனவே யூதன் என்று ஒரு இடத்தில் அப்.பவுல் கூறினார். ஆம் நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். இஸ்ரவேல் என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று அர்த்தமாம். நாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நாம் எந்த நாடு எந்த மொழி எந்த பகுதி எந்த சபைப் பிரிவு என்றாலும் நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நாம் ஒரே சரீரம். நாம் பிரிந்திருக்க முடியாது.
ஜாதி யார் பார்ப்பார்?
ஒரு பிரசங்கியார் வேடிக்கையாக தன் பிரசங்கத்தில் பின்வருமாறு சொன்னார். இயேசு ஒரு இடத்தில் இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி வேறெவ்விதத்தினாலும் போகாது என்று சொன்னார் அல்லவா? ஆகவே இந்த ஜாதி என்பதெல்லாம் பிசாசுகளுக்குத்தான். இரட்சிக்கப்பட்ட நமக்கு அல்ல என்றார். இதற்கு மேல் இதைக் குறித்து நான் கூற விரும்புவதற்கொன்றுமில்லை.
திருமணத்தின் போதாவது ஜாதி பார்க்கலாமா என்று கேட்டால் நான் பொதுவாக என் நண்பர்களிடம் கூறுகிற காரியம் என்னவெனில் திருமணத்தில் தேவ சித்தம்தான் முக்கியம். ஜாதி அல்ல. ஆகவே தேவ சித்தத்திற்கு தடையாக எந்தக் காரியத்தையும் வைக்காதீர்கள். தேவன் கண்டிப்பாக வேறுஜாதியைத்தான் நீ மணமுடிக்கவேண்டும் என்று சொல்ல மாட்டார். ஆனால் அதுவே அவரது சித்தமாக இருகும் போது நம் விருப்பமும் ஆசையும் அதை நம் வாழ்வில் நிறைவேறாமல் செய்துவிடும். விளைவு திருமண தோல்விகள். ஆகவே ஜாதியை மட்டுமல்ல - படிப்பு, அழகு, வரதட்சணை(வாங்கினால் வெட்கம்) குடும்ப அந்தஸ்து என எதையும் முன்வைக்காமல் ஆண்டவரே உம் சித்தமே என் பாக்கியம் என்று சொல்ல மட்டும் செய்யாமல் அதின்படி நடக்கவும் செய்யுங்கள். தேவன் நிச்சயமாக உங்களை ஏமாற்ற மாட்டார். நீங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிச் செய்வார்.அதுவே அவரது விருப்பமும் கூட. மறந்துவிடாதீற்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள். மறக்காமல்........
சாதி சாதி என்று பலர் ஏத்திக் கூறுவர்
சாதியொன்றுமில்லை எல்லாம் பாதியில் வந்தது
சாதியொன்றுண்டு (உள்ளத்தின்படி) யூத இஸ்ரவேல் சாதி
எல்லாரும் வாழ்ந்து சுகிக்கவே
தேவனை மதிக்கவே
சாத்தானை மிதிக்கவே
உலகத்தை ஜெயிக்கவே
ஜெய் ஜெய் ஜெய்
கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி. நீங்க என்ன ஜாதி? (எல்லாம் பழக்க தோஷம்)

நான் யூத ஜாதி. அப்ப நீங்க?
இந்தக் கட்டுரை எழுத மிகவும் உந்துதலாக இருந்த ஜஸ்டின் பிரபாகரன் அவர்கலின் ஒரு பாடல் வரிகளுடன் கீழே கொடுகப்பட்டுள்ளது. கேட்டு மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன். (பாடல் இணையத்தில் கிடைக்க வில்லை எனில் சொல்லுங்கள், லின்க் கொடுக்கிறேன்)
அதிரவைக்கும் பாடலின் பிண்ணனியில் வாசியுங்கள்.
ஜாதியிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
Caste caste நாங்க -ஹோலி Caste
|Caste
caste நீங்க என்ன Caste
Caste
Caste நாங்க Pentecost
யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை
உயர்வென்றும் இல்லை தாழ்வென்றும் இல்லை
கிறிஸ்துவின் சமூகத்திலே

ஆணென்றும் இல்லை பெண்ணென்றும் இல்லை

கற்றவனும் இல்லை கல்லாதவனும் இல்லை

அனைவரும் சரிசமமே
Dowry வாங்கும் கிறிஸ்தவனுக்கு நீதி இல்லையே
ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு நியாயம் இல்லையே

தாலி கயிறு  கட்டுகிற வேலையில்லையே

நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே

ஜாதி
Dowry ஒழித்து கட்டி நிவிர்த்தி செய்வோமே
பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே - ஜாதியிலே ஜாதி
புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு
கல்யாணம் என்பது கனமுள்ளதாகும்
சந்தையாக மாற்றவேண்டாம்

நியாயத்துக்கும் அநீதிக்கும்

வெளிச்சத்த்துக்கும் இருளுக்கும்

கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும்

சம்பந்தமில்ல தெரிஞ்சுகோங்க
 
நேரம் காலம் பார்த்து இராகுகாலம் கேட்டு
நல்ல நாளும் வைத்து சகுனமெல்லாம்  பார்த்து

கல்யாணத்தை நடத்துறாங்க

கர்த்தருடன் இருக்கையிலே காலம் நேரம் ஒன்றுமில்லை

நாளும் நேரம் பார்ப்பதுமே கர்த்தருக்கே கோபமாமே

தெரிஞ்சுக்காம செய்யுறாங்க
(இக்கட்டுரை 2008 ல் தமிழ் கிறிஸ்தவ தளத்திற்காக எழுதியது)

Wednesday, March 16, 2016

என்ன!!! ஜாதியை ஒழிக்க வேண்டுமா?

கிறிஸ்தவத்தில் ஜாதி என்றதுமே எனக்கு சாது சுந்தர்சிங் சொன்ன ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது. அது: " நான் இங்கு யானைக்கால் வியாதியினால் பாதிக்கப் பட்ட ஒருவரை பார்த்தேன். அவ்வியாதியினால் அவர் கால்கள் வீங்கி பெரிதாக இருந்தபடியினால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இந்தியாவை ஒரு மனிதனுக்கு ஒப்பிடலாம். தலை- ஜம்மு காஷ்மீர், வலதுகை-குஜராத், இடது கை-மேற்குவங்காளம், கால்கள்- தென் இந்தியா. ஒரு மனிதன் நன்றாக நடப்பதற்கு கால்கள் நல்ல நிலையில் இருப்பது அவசியம். இல்லையேல் அந்த யானைக் கால் வியாதிக்காரனுடைய நிலைதான். இங்கு தென் இந்தியாவில் தான் கிறிஸ்தவம் நன்றாக வேரூன்றியுள்ளது. ஆனால் அவர்களிடையே ஜாதி, இனவெறி ஆகியவை காணப்படுகிறது. இந்த ஜாதி, இனவெறி அவர்கள் சீராக நடப்பதற்கு தடையாக உள்ளது. அது கிறிஸ்தவம் பரவுவதற்கும் பெரிதும் தடையாக உள்ளது. இந்திய கிறிஸ்தவர்களின் கால்களைப் போன்ற தென் இந்திய கிறிஸ்தவர்களின் இக்குறையினால் இந்தியாவில் கிறிஸ்தவம் மற்ற மாநிலத்தவரை தாங்குவதற்குப் பதிலாக தள்ளாடிக்கொண்டு இருக்கிறது*." இது அவர் 1916ல் கேரளா வந்திருந்தபோது சொன்ன சம்பவமாகும். இன்று வரை அதே நிலைமை நீடித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடு அல்லவா?

ஐயா வேதாகமத்தில் ஜாதிகள் இல்லையா என்று யாரோ முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது. வேதாகமத்தில் ஜாதிகள் என்று குறிப்பிடப் பட்டிருப்பவை எல்லாமே அந்த தேசங்களைத் தான் குறிப்பிடுகின்றன. சந்தேகமெனில் உங்களிடம் ஆங்கில வேதாகமம் இருந்தால் அதில் பார்க்கவும். அப்படியெனில் ஆபிரகாம் ஏன் தன் இனத்தாரிடம் சென்று ஈசாக்கிற்கு பெண் பார்க்கும் படி கேட்டுக் கொண்டான். அதன் காரணமென்னவெனில் ஆபிரகாம் வாழ்ந்த கானான் தேசத்தார் கொடிய விக்கிரக வணக்கத்தாராயிருந்தனர் என்பதே.

இந்த தலைப்பு (ஜாதியை ஒழிப்பது)குறித்து ஒரு நல்ல கட்டுரை எழுதவேண்டுமென்று என் நண்பர் பாஸ்டர் இரப்பேல் (இவர் கிறிஸ்தவளாக மாறிய முஸ்லீம் பெண்ணை மணம் புரிந்தவர்) அவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர் ஒரு நல்ல கருத்தை முன் வைத்தார்.அது கலப்புத் திருமணம் ஜாதி அரக்கனுக்கு கல்லறை கட்டக் கூடிய வலிய ஆயுதம் என்பதே. அதோடல்லாமல் வேதாகமத்திலிருந்து அவர் கலப்புத்திருமணங்களுக்கான ஆதாரங்கள் பலவற்றைக் கூறினார்.அவை:

1.மோசே -- மீதியானாகிய எத்திரோவின் மகளை மணந்தவர்.

2.சல்மோன் -- எரிகோ பட்டண வேசி ராகாபை மணந்தவர்.

3.போவாஸ் -- மோவாபியப் பெண்ணான ரூத்தை மனத்தவர்.

ஏன் இன்னும் சொல்லப் போனால் இயேசுகூட புற ஜாதியான நம்மைத்தான் தமக்கு மணவாட்டியாக தெரிந்து கொண்டார்.

பின்னர் ஏன் வேதாகமம் கலப்புத் திருமணங்களை எதிர்க்கிறது என்ற கேள்வி எழுவது நியாயமே. அதேனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் புறஜாதியாரை திருமணம் செய்து அவர்களின் அஞ்ஞான விக்கிரக ஆராதனைக்குள் அவர்கள் சென்று விடக்கூடாது என்பதற்காகவே. (உ.ம்) எண்ணாகமம்25.

ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் வரும் போது அவன் புது சிருஷ்டியாகிறான். ஆகவே அவர்களிடம் ஜாதி வேறுபாடு இருத்தல் கூடாது. கிறிஸ்தவர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத மற்றவர்களை திருமணம் செய்வதில்தான் மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். (அதற்காக சபைகளையும் ஆலயங்களையும் காதல் கூடாரங்களாக்கி விடக் கூடாது. ஆனால் நடப்பது என்ன?)

அப்படியென்றால் கலப்புத்திருமணங்கள் தான் இறுதி தீர்வா எனில் இல்லவே இல்லை. கலப்புத்திருமணங்கள் ஒரு துவக்கமே.முடிவு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மற்றும் அவரின் ஆட்சியில் தான் கிட்டும்(ஏசாயா 11ல் கூறியபடி).

நடைபெறுகிற கலப்புத்திருமணங்களிலும் ஒரு பிரச்சனை பாருங்கள். அது என்ன தெரியுமா? கலப்புத் திருமண தம்பதிகள் ஏதாவது ஒரு ஜாதியை தெரிந்துகொள்ளும் கட்டாயத்தில் அல்லது அதிக பயனடையக்கூடிய ஜாதியை தெரிந்து கொள்கின்றனர். இது மாறுமோ?

தற்போது அனேகம்பேர் அரசாங்கம் சாதி கேட்கும்போது தான் தங்கள் சாதியை அறிந்துகொள்கின்றனர் என்று சமீபத்தில் ஒரு சகோதரர் சொன்ன செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. ஆகவே அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி ஜாதியை ஒழிப்பது எட்டாக்கனிதான்

ஒரு நற்செய்தி. தற்போது மோகன் சி லாசரஸ் போன்ற தேவ மனிதர்கள் இதுகுறித்து கண்டித்து பேச ஆரம்பித்துள்ளனர். இதுவும் ஒரு நல்ல ஆரம்பமே.

"சாதிகள் இல்லையடி பாப்பா

குலத் தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்"

"ஒன்றே குலம்"

"சாதி இரண்டொழிய வேறில்லை" என்று உலக மக்களே பாடி வைத்து சென்றுள்ளனர்.ஆனால் நம் கிறிஸ்தவர்களிடமோ ஜாதி உணர்வு என்பது புரையோடி போயிருக்கிறது. இதில் நம் சிறிய முயற்சி என்ன மாற்றத்தை உண்டுபண்ணிவிடமுடியும் என்று நினைக்காமல் "சிறுதுளி பெருவெள்ளம்" என்று உணர்ந்து செயல்படுவோம் வாரீர்.

"மனிதரால் கூடாதவைகள் தேவனால் கூடும்"

ஆதியில் இல்லாது

பாதியில் வந்து-மனு

ஜாதிக்கு பீதியை

அளித்த ஜாதியை

அழிக்க வாரீர்

அற்புதம் @ அற்புதராஜ்


* சாது சுந்தர்சிங் பிரசங்கங்கள்

2007 ல் tamilchristians.com ல் எழுதியது

Saturday, March 12, 2016

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

ஒரு ஊர்ல் ஒரு ராஜா இருந்தான் அவனுக்கு ஒரு மந்திரி இருந்தான் அப்படின்னு வழ வழன்னு பேசாம நேரடியா கதைக்கு வரேன்.


பாவம் செய்வதே சுபாவம் என்று சொல்லுகிற மக்கள் நிறைந்த ஒரு பட்டணம் தான் சொர்க்கபுரி(பெயரில் மட்டும் தான்). அந்த பட்டணத்தில் வாழ்கிறவர்களை பத்தி யாரும் சொல்ல வேண்டாம். ஏனெனில் தினமும் வருகிற செய்தித்தாள்களில் அவர்களின் அன்றாட அநியாயங்களை பக்கத்துக்கு பக்கம் பார்க்கலாம். அவ்வூர் வாசிகள் அவ்வளவு பொல்லாதவர்கள். ஒரு நாள் அந்த நகரின் தபால் அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. என்ன இதுல என்ன விசயம் இருக்கு என்று நீங்க கேள்வி கேக்கிறது கேக்குது. அந்த தபாலை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் அந்த அலுவலகத்துல உள்ள எல்லருமே தலைய பிச்சிக்கிட்டாங்க. அந்த தபாலில் பெறுநர் "மகா கொடிய பாவி" என்று குறிப்பிடப் பட்டு இருந்தது. கடைசியில் அதை யாரிடம் ஒப்படைப்பது என்ற பொறுப்பை அஞ்சல் காரரான(போஸ்ட்மேன்) அற்புதமிடம் ஒப்படைத்தார்கள்.
இப்போ அதை யாரிடம் ஒப்படைப்பது என்று அற்புதம் தலைய பிச்சுகிட்டு யோசித்துக் கொண்டு இருந்தார். பின்பு ஒரு முடிவுக்கு வந்தவராக தன் இருப்பிடத்தை விட்டு எழுந்தார். சரி நமக்கு தெரிந்த மகா பாவிகளை பார்த்து அவர்களிடம் இதை ஒப்படைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவரிடம் துளிர் விட்டதே அதற்குக் காரணம்.

முதலாவது அவர் நேராக சாராயக் கடை நடத்திக் கொண்டுவருபவரும் ஊரில் அமைதி என்பது மருந்துக்கு கூட வந்து விடக் கூடாது என்று நினைத்து அதற்கு என்ன என்ன செய்யணுமோ அத்தனையும் செய்து வருகிற மகாதேவன் (பெயரைப் பாருங்க) என்பவரிடம் போனார். அவரிடம் தான் வந்த நோக்கத்தைக் கூறி தன்னிடமிருந்த பார்சலையும் அற்புதம் அவரிடம் காண்பித்தார். அதிலிருந்த "மகா பாவிக்கு" என்ற மேல் விலாசத்தை பார்த்ததும் மகாதேவன் கோபதேவனாக மாறிவிட்டார். அவர் பேசின பேச்சுகளை கேட்க சகிக்காமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவரிடமிருந்து தலைதெறிக்க அற்புதம் ஓடி வந்தார். முதல் முயற்சியே பயங்கரமான பயத்தை அவரிடம் உண்டு பண்ணிவிட்டது. இனி இதை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசித்த போது தான் அந்த ஊரின் அடுத்த கேடி நம்பர்- 1 கோடிஸ்வரன் நினைவுக்கு வந்தார்.

அவருடைய உண்மையான பெயர் அந்த ஊரில் யாருக்கும் தெரியாது. அவரை எல்லாருமே கேடி என்றுதான் கூப்பிட்டு வந்தாங்க. அவர் காட்டுல பெய்த மழை அவரை கோடிஸ்வரனாக கடந்த தேர்தல் மாற்றிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் பல கட்சிக் கொடிகள். இந்த கோடிஸ்வரன் மகாக் கேடியாக இருந்தாலும் யாரையும் காரணமில்லாம கொல்றதில்லை. எனவே சற்று தெம்புடன் அற்புதம் அவரை பார்க்கச் சென்றார். அவரிடம் விசயத்தைக் கூறி அந்த பார்சலை அவரிடம் காண்பித்தார். அந்த பார்சலில் யாருக்கு வந்திருக்கிறது என்று வாசிக்கும் படி அற்புதத்திடமே அவர் கேட்டார் (அவருக்கு வாசிக்கத் தெரியாது என்பதுதான் உண்மை) "மகா பாவிக்கு" என்று அற்புதம் சொன்ன உடனே கேடிஸ்வரன்... சாரி கோடிஸ்வரனுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. பின்பு சிரித்த முகத்துடன் இப்படி ஒரு தபாலை யாரு அனுப்பினா என்று கேட்டுவிட்டு சற்று தயங்கியவராக "அற்புதம் நீ நினைக்கிற மாதிரியான ஆளாக நான் இருந்தாலும், நான் இதை இப்ப உன்னிடமிருந்து வாங்கினால் எதிர் கட்சிக் காரங்க என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவாங்க. லஞ்சமா ஏதாவது பெட்டி வாங்கினாலாவது பரவா இல்ல. இந்த 'மகா பாவி" பட்டத்த எல்லாம் வாங்க முடியாது, நீ போய் விடு" என்று சொல்லி விட்டார். வெளியே வந்த அற்புதம் இவர் பரவா இல்லை, அந்த மகாதேவன்தான் படு மோசம் என்று நினைத்துக் கொண்டார்.

மீண்டும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு யாரிடம் கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு பெயர்களும் அவர் நினைவுக்கு வரும் போது அவருக்குத் தன் கல்லறை தான் முன்னால இருக்கிற மாதிரி தோன்றியது.என்ன செய்வதென்றே அவருக்கு தெரிய வில்லை. திடீரென்று அவருக்கு ஒரு உணர்வு வந்தது. உண்மையில் மகா பாவிகள் எல்லாம் அதை ஒத்துகொள்ள முன் வர வில்லை. நாமும் கூட ஒரு பாவிதானே. எத்தனை தடவை மற்றவங்களுக்கு தெரியாம தவறுகள் செய்து உள்ளோம் என்று அவர் நினைத்தார். நானே அந்த "மகா பாவி" என்று பாவித்துக் கொண்டு பார்சலை நாமே பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தார். அது போலவே அவர் தன்னுடைய கையெழுத்தை போட்டு பார்சலை தன் வசமாக எடுத்துக் கொண்டார்.

பார்சலை தன் பெயரிட்டு எடுத்துக் கொண்டவுடனே அதினுள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்வதில் அவருக்கு அதிக ஆவல் ஏற்பட்டது. உடனே பார்சல் உறையைக் கிழித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தார். உள்ளே ஒரு "விலையுயர்ந்த பரிசுப் பொருள்" இருந்தது. அத்துடன் ஒரு கடிதமும் இணைக்கப் பட்டிருந்தது. அந்த கடிதத்தில், "நீங்கள் உங்களை 'மகா பாவி' என்று ஒத்துக் கொண்டதால் இந்த பரிசு உங்களுக்கே என்று எழுதப் பட்டு இருந்தது. அதைப் பார்த்தவுடன் ஆச்சரியமும் சந்தோசத்துடனும் அவர் தன் பரிசை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிப் போய் தான் பெற்ற பரிசை தன் வீட்டார், உற்றார் மற்றும் உறவினர்கள் எல்லாருக்கும் அதை தான் பெற்றுக் கொண்ட விதத்தைக் கூறினார். எல்லாரும் ஆச்சரியப் பட்டு தங்களுக்கு அப்படி ஒரு "பரிசு" கிடைக்க வில்லையே என்று நினைத்தனர்.


நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
சங்கீதம் 79:9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.
சங்கீதம் 25:18 என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
சங்கீதம் 51:9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.

அன்போ சகல பாவங்களையும் மூடும்.
I யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்

Wednesday, March 2, 2016

இது ச(ஷ)ரியா!!!??? - மன்னிப்பு



தூக்கம் வராமல் படித்து தூக்கத்தை தொலைக்க வைத்த கதை

நேற்றிரவு தூக்கம் வராமல் பிரபல முஸ்லீம் அறிஞர் எழுதிய “தவ்ஹீத் புத்தகம்” ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு முஸ்லீம் அறிஞரிடம் விபச்சார பாவம் செய்த ஒரு பெண் மனம் திரும்பி தன்னை சுத்திகரித்துக் கொள்வதற்காக வருகிறாள். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவளா என்றும், ஏதேனும் கட்டாயத்தின் பேரில், சூழ்நிலை அழுத்தம் காரணமாக வந்திருக்கிறாளா அல்லது அவளாக மனமுவந்து வந்திருக்கிறாளா என்று ஆராய விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. அவள் மனமுவந்து சுத்திகரிப்புக்காக அவளாகத்தான் வந்திருக்கிறாள் என்று உறுதிப் படுத்தப்பட்ட பின்பு, அவளுக்குக் கிடைத்தது என்ன தெரியுமா?... அவள் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. வாசித்த எனக்கு இதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

பாவம் செய்த ஒரு பெண் மனமுவந்து தன்னை சுத்திகரிக்க விரும்பினதற்குக் கிடைத்த பரிசு இப்படிப்பட்ட ஒரு கொடுரமான தண்டனையா என புலம்பிய என் மனதில் தோன்றிய காட்சி, இயேசுவுக்கு முன் விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த பெண் மற்றும் அவளைச் சுற்றிலும் ஏராள (பரிசுத்த???) மானவர்கள் இயேசு என்ன சொல்கிறார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அந்த காட்சி தெளிவாக தெரிந்தது (யோவான் 8). அங்கே அவளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்டனை கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்பது, ஆனால் கிடைத்ததோ மன்னிப்பு.

இந்த இரு சம்பவங்களும் என் மனதில் கிளறிய உணர்ச்சிகளை கருத்துக்களை வார்த்தைகளில் வடிப்பது மிகக் கடினம். நானும் எத்தனையோ முறை என் ஆண்டவருக்கு முன் மனமுவந்து மனங்கசந்து நின்றிருக்கிறேனே, ஒரு முறைகூட அவர் என்னிடம் கோபப்படாமல், அதே அன்புடன் அரவணைத்து மன்னித்து மறுபடியும் என்னை அவர் பக்கம் வைத்து பாதுகாத்து பரிசுத்தப் படுத்தி இருக்கிறாரே என்று நினைத்து அழுகையை அடக்கி, ஆண்டவருக்கு நன்றி சொல்வதை மிகவும் பெருமையாக நினைத்த தருணமாக இருந்தது. அதுமாத்திரமல்ல, கிறிஸ்தவத்தில் மன்னிப்பு என்பது எவ்வளவு மகத்துவமானதாக இருக்கிறது என்பதையும், நிபந்தனையற்ற அன்பு (unconditional love) மட்டுமே அங்கே ஆட்சி செய்வதையும், மன்னிப்பின் மேன்மையை உணரவும் முடிந்தது.

நான் பெற்றதை நினைக்கையில், நான் கொடுத்ததையும், அதாவது நான் எந்தளவுக்கு மற்றவர்களை மன்னித்து இருக்கிறேன் என்பதை நினைக்கத் தொடங்கினேன். மிகவும் வெட்கமாக இருந்தது. நான் பெற்றதற்கும் நான் கொடுத்ததற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு சிலரை மன்னிக்க முடியாமல், மறக்க முடியாமல் நான் எவ்வளவு போராடி இளைத்து, களைத்து மனம் கனத்துப் போயிருக்கிறேன். நான் ஏன் அவர்களிடம் கிறிஸ்துவை காட்ட வேண்டும் என்று நினைத்தும், முடியவில்லை. யோசிக்கத் துவங்கினேன்.
நான் கிறிஸ்துவிடம் மன்னிப்பு கேட்கையில் அவரிடம் நான் எப்படி முழுமையாக என்னை ஒப்புக் கொடுக்கிறேன் என்பதையும், மற்றவர்களை மன்னிக்க முடியாமல் போராடுகையில் எப்படி என் சுயத்திற்கு இடம் கொடுக்கிறேன் என்பதையும் தெளிவாக காணமுடிந்தது. மேலும் தேவன் என்னை மன்னிக்கும்போது, அதை முழுமையாக மறந்தும் விடுகிறார் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் பிறர் எனக்குச் செய்தவைகள் மறக்க முடியவில்லையே எனச் சொல்வதா அல்லது மறக்க மனம் இல்லை எனச் சொல்வதா தெரியவில்லையே!

இன்னமும் முழுமையாக நான் என்னை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே தீர்வு என்பது மட்டும் கண்ணுக்குப் புலனாக ஆரம்பித்தது. நான் எந்தளவுக்கு என்னை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று யோசிக்க நினைத்த மாத்திரத்தில், “நான் எந்தளவுக்கு செய்தேனோ, அந்தளவுக்கு” என என் ஆண்டவர் சொல்வது மனதில் உரைத்தது, மனதை உடைத்தது.
நான் பெற வேண்டிய தண்டனையை, அவர் தாமே சுமந்து மன்னிப்பின் வழியைத் திறந்தாரே! இது சரியா அல்லது மனமுவந்து வந்தவரின் உயிரை கல்லெறிந்து கொல்ல தண்டனை கொடுக்கப்பட்டதே அது ஷரியா??? என ஆயிரம் கேள்விகள், கிடைத்ததோ ஒரே பதில். அழிக்க முடியா நறுமணம் பூக்க வைத்த பூ அது, தேவ அன்பினால் விளைந்த மன்னிப்பு!!!