Saturday, July 31, 2021

கர்த்தரின் சத்தம்

வாசிக்க: எஸ்தர் 1-3; சங்கீதம் 29; அப்போஸ்தலர் 21:26-40

வேத வசனம்சங்கீதம் 29: 3. கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4.
கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.

கவனித்தல்: இடி முழக்கத்துடன் கூடிய மழையில் இருக்கும் சக்தியாகக் கருதப்பட்ட பாகால் மிகவும் வல்லமையுள்ள கடவுள் என கானானியர்கள் நம்பினர். அதற்கு எதிராக, இந்த பூமியில் தேவனுடைய வல்லமையும் மகிமையும் காணக்கூடியது மற்றும் கேட்கக் கூடியது என்பதை சங்கீதம் 29 விவரித்து, தேவனை ஆராதிக்கும்படி ஜனங்களை அழைக்கிறது. ”கர்த்தருடைய சத்தம்” என்பது சங்.29 இல் ஏழு முறை வருகிறதை நாம் பார்க்கிறோம். தேவன் மோசேயுடன் பேசிய போது, ஜனங்கள் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் கண்டு, மிகவும் பயந்தார்கள் ( யாத்.19:16-19). இது போல, கர்த்தரின் வார்த்தையானது இடியுடன் தொடர்புடையதாக வேதத்தில் அடிக்கடி காட்டப்படுகிறது (1 சாமு. 7:10; யோபு 37:4-5; சங். 18:13; ஏசாயா. 30:30-31; யோவான் 12:29). கர்த்தரின் சத்தம் சகல வல்லமை உள்ளதும், சிருஷ்டிக்கும் சக்தி உடையதாகும் (ஆதி.1; சங்.33:6-9). “பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயின” என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது (2 பேதுரு 3:5). கர்த்தருடைய சத்தம் தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகிறதாக இருந்தாலும் கூட, அதன் முதன்மையான நோக்கம் என்னவெனில், மனிதர்களாகிய நம்முடன் தொடர்பு கொண்டு பேசுவதும், சிருஷ்டிகரை தொழுது கொள்ள அழைப்பு விடுப்பதும் ஆகும். தேவன் இன்றும் பேசுகிறாரா? கடந்த காலங்களில் அவர் தம் தீர்க்கதரிசிகள் மூலமாக பலவிதங்களில் பேசினார். ஆனால் இப்பொழுதோ, அவர் இயேசு கிறிஸ்து மூலமாக பேசுகிறார் (எபி.1:1,2). நாம் இயேசுவுக்கு, இயேசுவின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்க வேண்டும் (மத். 17:5; மாற்கு 9:7; லூக்கா 9:35; எபி.12:25). இயேசு தேவனுடைய வார்த்தை ஆவார் (யோவான் 1:1; வெளி.19:16). நாம் தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தை வாசிக்கும்போது, அவருடன் உறவாடும்போது, இயேசு நம்முடன் பேசுகிறார். சொல்லப் போனால், நாம் அவருடன் பேச வேண்டும் என்று விரும்புவதைக் காட்டிலும், நம்முடன் பேச அவர் அதிக ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். “காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று இயேசு அடிக்கடி சொன்னார். ”இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்” (சங்கீதம் 95:8) என்று பரிசுத்த வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்டு, அதின்படி நடக்க நம்மை ஒப்புக் கொடுப்போமாக.

பயன்பாடு: தேவன் என்னுடன் பேச வரும்போது, “நீ எங்கே இருக்கிறாய்” என அவர் கேட்கிறார் (ஆதி.3:9). நான் தேவனிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது/கூடாது. நான் பாவத்திற்கு மரித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறேன் (ரோமர் 6:11). அனைத்து சிருஷ்டிகளும், காற்றும் கடலும் கூட இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிறது. நான் இயேசுவின் அன்பின் வார்த்தைகளை வாசித்து அதற்குச் செவிகொடுக்க வேண்டும். அவர் கர்த்தர்.

ஜெபம்: கர்த்தாவே,  நீர் ஜீவனுள்ள தேவன். என் தேவனே, உம் அன்பிற்காக நன்றி. உம் வார்த்தைகள் ஜீவனும் வல்லமையும் உள்ளதாக இருக்கிறது. இயேசுவே, உம் வார்த்தைகள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கின்றன. பரிசுத்த ஆவியானவரே நான் தேவனுடைய வார்த்தையை நினைவு கூரவும், அதன்படி வாழவும் அனுதினமும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 211

The Voice of the LORD

READ: Esther 1-3; Psalms 29; Acts 21:26-40

SCRIPTURE: Psalms 29: 3 The voice of the Lord is over the waters; the God of glory thunders, the Lord thunders over the mighty waters.
4 The voice of the Lord is powerful; the voice of the Lord is majestic.

OBSERVATION: Canaanites believed Baal was the powerful god who was considered the power present in the thunderstorm. In contrast,  Psalm 29 illustrates the power and glory of the Lord are visible and audible on this earth and invites the people to worship God. “The voice of the LORD” occurs seven times in Ps.29. When God spoke to Moses, people saw thunder and lightning and were afraid (Exo.19:16-19). Likewise, the Lord’s voice is often identified with thunder (1 Sam. 7:10; Job 37:4-5; Psalm 18:13; Isa. 30:30-31; Jn12:29). The voice of the Lord is all-powerful and has creative power (Gen.1, Ps.33:6-9). The Bible says, “By God’s word the heavens came into being and the earth was formed out of water and by water” (2 Peter 3:5). Although the voice of the LORD reveals the power and glory of God, its primary intention is to communicate and speak with humans and to invite them to worship the creator. Does God speak today? In the past, God spoke through his prophets and in various ways. But now, he speaks through Jesus Christ. (Heb.1:1,2) We must listen to Jesus’ words (Mt. 17:5; Mk 9:7; Luke 9:35; Heb.12:25). Jesus is the word of God (Jn.1:1; Rev.19:16). When we read the word of God, the Bible, and commune with him, Jesus speaks to us. In fact, he is willing to talk with us more than we desire to speak with him. Jesus often said, “Whoever has ears, let them hear.” The Bible warns, “Today, if only you would hear his voice,  “Do not harden your hearts” (Ps.95:8). Let us hear God’s words and put them into practice.

APPLICATION: When God comes to speak with me, he asks, “Where are you?” (Gen.3:9). I should not/cannot hide anything from God. I am “dead to sin but alive to God in Christ Jesus” (Rom.6:11). Every creation and even the winds and the waves obey the words of Jesus. I must read, listen to the loving words of Jesus. He is the LORD.

PRAYER: LORD, you are the living God. My God, thank you for your love. Your words are active and alive. Jesus, your words are full of the Spirit and life. Holy Spirit, help me to remember them every day and live accordingly. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 211

Friday, July 30, 2021

விடுதலைக்கான ஒரு ஜெபம்

வாசிக்க: நெகேமியா 11-13; சங்கீதம் 28; அப்போஸ்தலர் 21:1-25

வேத வசனம்சங்கீதம் 28: 9. தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

கவனித்தல்: தாவீது தன் வாழ்வில் எதிர்கொண்ட மரண ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு மற்றும் விடுதலை வேண்டும் என்று அவன் ஊக்கமாகச் செய்த ஜெபத்துடன் சங்கீதம் 28 ஆரம்பிக்கிறது. தாவீது தேவனுடைய உதவியை நாடி, தன்னைப் பாதுகாக்குமாறு தேவனுடைய இரக்கத்திற்காக மன்றாடுகிறார் (வ.1,2). ஆயினும், 6-7ம் வசனங்களில், தேவன் ”என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்” என்று சொல்லி தன் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். உதவிக்காக அவர் செய்த ஜெபமானது துதிப் பாடலாக மாறியது. தேவன் ஏன் தன் ஜெபங்களுக்கு பதில் தருகிறார் என்பதை அவர் சொல்லும்போது, “என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்” என்று சொல்கிறார். தேவனை நம்புகிற இருதயமானது மகிழ்ச்சி அடைந்து, துதிப் பாடல்களினால நிரப்பப்படுகிறது. தன் ஜெபங்களுக்கான பதிலைப் பெற்ற பின்பு, தாவீது இப்பொழுது தன் ஜனங்களுக்காக ஜெபிக்கிறார் (வ.9). தம் ஜனங்களை இரட்சித்து ஆசீர்வதிக்கும்படி தேவனே அவர்களுடைய மேய்ப்பராக இருக்கும்படி அவர் வேண்டிக் கொள்கிறார். தேவன் தம் ஜனங்கள் துன்பத்தில் இருக்கும் வேளைகளில் எல்லாம் அவ்ர்களை இரட்சிக்கிறார். தேவ ஜனங்களுக்கு தேவனே இரட்சகராகவும் மேய்ப்பனாகவும் இருக்கிறார் (சங்.23:1; 40:11; 78:52; ஏசாயா 40:11; 63:9). தேவன் தம் ஜனங்களைப் பாதுகாத்து, வழி நடத்தி, அவர்களின் தேவைகளை எல்லாம் சந்திக்கிறார். ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளை வழி நடத்திக் கொண்டு போவது போல தேவன் தம் ஜனங்களை நடத்திச் செல்கிறார் (சங்.23; 78:52; 80:1; ஏசாயா 40:11; 63:9). தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவருடைய ஜனங்கள் மேல் இருக்கிறது; அவர் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய வாழ்வை ஆசீர்வதிக்கிறார். மரணத்திற்கேதுவான வியாதிகள் அல்லது ஆபத்துகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும்போது, நாம் தேவனை நம்ப முடியும். அவர் நம் பெலனும் கேடகமுமாயிருக்கிறார். நல்ல மேய்ப்பராகிய இயேசு எல்லா மரண ஆபத்துக்களில் இருந்தும் நம்மைப் பாதுகாத்து ஆசீர்வதிக்கிறார் (யோவான் 10:10,11).      

 பயன்பாடு:  “கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது” என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (சங்.144:15). நான் தேவனை நம்பும் போது, அவர் என்னை இரட்சித்து ஆசீர்வதிக்கிறார்.கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்” (சங்.28:7). தேவன் என்னோடு இருக்கிறபடியால், நான் “பொல்லாப்புக்குப் பயப்படேன்” (சங்.23:4). அவர் என்னை ”வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும்” தப்புவிக்கிறார்; அவர் என் ஜெபங்களுக்குப் பதில் தந்து, எல்லா ஆசீர்வாதங்கள் மற்றும் நித்திய ஜீவனை அருளிச் செய்து என்னை ஆசீர்வதிக்கிறார் (சங்.91:3,15, 16). நான் தேவனை எக்காலத்திலும் நம்புவேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் இரட்சிப்புக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் நன்றி. இயேசுவே, நான் உம் மந்தையில் உள்ள ஒரு ஆட்டுக் குட்டி; நான் உம்மை கவனமாக, ஜாக்கிரதையாக பின்பற்ற விரும்புகிறேன். என்னை உம் கரங்களில் ஏந்திக் கொண்டு, இன்றும் என்றும் என்னை எல்லா ஆபத்துகளில் இருந்து பாதுகாத்தருளும். ஆமென்.   

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 210

A prayer for deliverance

READ: Nehemia 11-13; Psalms 28; Acts 21:1-25

SCRIPTURE: Psalms 28: 9 Save your people and bless your inheritance; be their shepherd and carry them forever.

OBSERVATION: Psalm 28 starts with David’s desperate prayer for deliverance from deadly dangers that he faced in his life. David asks for God’s help and pleads for his mercy to save his life (v.1,2). However, in verses  6-7, David expresses his joy and confidence in God since God answered his “cry for mercy.” His cry for help turned to be the cry of praise.  When he explains why God responded to his prayers, he says, “my heart trusts in him, and he helps me.” A heart that trusts God rejoices and is filled with songs of praise. After receiving answers for his prayers, David now prays for his people (v.9). He asks God to be the shepherd of his people to save and bless them. God saves his people whenever they are in distress. God is the savior and shepherd of his people (Ps.23; Is.40:11; 63:9). God protects and guides his people and meets all their needs.  God leads his people like a shepherd leads his flock (Ps.23; 78:52; 80:1). God’s blessings are upon his people; He blesses their lives every day. When deadly diseases or dangers surround us, we can trust God. He is our strength and shield. Jesus, our Good Shepherd, provides deliverance from all the deadly dangers and blesses us (Jn.10:10,11).

APPLICATION: The Bible says, “Blessed is the people whose God is the Lord” (Ps.144:15). When I trust God, he saves and blesses me. “The Lord is my strength and my shield” (Ps.28:7). Since God is with me, “I will fear no evil” (Ps.23:4). He saves me “from the fowler’s snare and from the deadly pestilence”; He answers my prayer and blesses me with every blessing and eternal life  (Ps.91:3,15, 16). I will trust God always.

PRAYER: Father God, thank you for your salvation and blessings. Jesus, I am a sheep in your flock; I want to follow you diligently. Carry me in your hands and protect me from all dangers, today and forever. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 210

Thursday, July 29, 2021

தேவனிடம் நீங்கள் கேட்க விரும்பும் ஒன்று

வாசிக்க: நெகேமியா 9, 10; சங்கீதம் 27; அப்போஸ்தலர் 20

வேத வசனம்சங்கீதம் 27: 4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

கவனித்தல்: நம் வாழ்க்கைத் தேவைகள் மாறும் தன்மை உடையவை, அவை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இன்று மிகவும் அருமையானதாக நாம் கருதுகிற ஒன்று, நாளையே தொல்லை தரக் கூடியதாக மாறக் கூடும். நம் வாழ்க்கையில் எப்படியாவது பெறவேண்டும் என ஏங்கித் தவித்த காரியங்கள், அவைகளை அடைந்ததும் விரும்பத்தகாத/வெறுக்கிற ஒன்றாக ஆகலாம். எனவே, ஆண்டவரிடம் நாம் கேட்க விரும்பும் ஒரு காரியம் பற்றிய கேள்விக்கு துல்லியமான ஒரு பதிலைக் நாம் சொல்ல முடியாமல் போகலாம். நம் சூழ்நிலைகளைப் பொறுத்து நம் பதில்களும் மாறும். சங்கீதம் 27ல், தாவீதோ கர்த்தரிடம் தான் கேட்க விரும்பும் ஒரு காரியத்தைக் குறித்து நம்பிக்கையுடன் சொல்கிறார். இந்த சங்கீதத்தை தாவீது எப்பொழுது எழுதினார் என்று நமக்குத் தெரியாது. வசனங்கள் 2, 3, 10, 12 ஆகியவை தாவீது தன் வாழ்வில் அனுபவித்த சில சவால்களைக் குறிக்கிறதாக இருக்கிறது.  தாவீது அரண்மனையில் இருந்தாலும் சரி, வனாந்திரத்தில் இருந்தாலும் சரி, எங்கிருந்தாலும், தாவீது கர்த்தரிடம் இதே காரியத்தைத் தான் கேட்டிருப்பார் என நாம் உறுதியாக நம்பலாம். தாவீது தேவனைத் தவிர வேறு எதையும் தேடவில்லை என்பதற்கு அவருடைய வாழ்க்கை சாட்சி பகருகிறது (1 சாமு 13:14).

தாவீது தன் வாழ் நாளெல்லாம் தேவனுடைய ஆலயத்தில் (கூடாரத்தில்) வாழ வேண்டும் என விரும்பினார். அவர் தேவனை தேடுவதில் கருத்தாக கவனமாக  இருந்தார். தன் எதிரிகள் அல்லது எதிர்த்து நிற்கும் சூழ்நிலைகளை அல்ல, தாவீது தேவனுடைய மகிமையைப் பார்க்க விரும்பினார். கர்த்தரே தன் வெளிச்சம் என்பதையும், ஆண்டவருடைய வெளிச்சம் அவருடைய வாழ்வில் உள்ள இருளனைத்தையும் அகற்றும் என்பதை தாவீது அறிந்திருந்தார்.  கர்த்தருடைய பிரசன்னம் அல்லது தேவனுடைய பிரசன்னத்தில் இருப்பது என்பது தன் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பாக பத்திரமாக இருக்க உதவும் ஒரு இடம் என்பதை தாவீது அறிந்திருந்தார். கர்த்தருடைய வீட்டில் வாசம் செய்தல் (அ) தங்கி இருத்தல் என்பது உண்மையிலேயே ஒரு பெரிய ஆசீர்வாதம் ஆகும் (சங். 23:6; 26:8; 91:1). தாவீதுக்கு பல்வேறு பொறுப்புகளும் அலுவல்களும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆயினும், அவருடைய முதல் விருப்பம் அல்லது இருதயத்தின் ஏக்கம் கர்த்தருடன் இருக்க வேண்டும் அவரைத் தேடவேண்டும் என்பதாக இருந்தது.  இயேசு மார்த்தாளிடம் சொன்ன வார்த்தைகளை நாம் நினைவில் கொள்வோமாக: “நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள்” (லூக்கா 10:41,42). நம் கவலைகள் எந்த மாற்றத்தையோ அல்லது பலன்களையோ ஒரு போதும் கொண்டு வரப் போவதில்லை. ஆனால் தேவன் எல்லாவற்றையும் மாற்ற முடியும். நாம் தேவனைத் தேடும்போது, நம் பிரச்சனைகளையும், எதிரிகளையும் எதிர்கொள்வதற்கான மன உறுதியை அவர் நமக்குத் தருகிறார். நாம் இன்னமும் உலகப் பிரகாரமான காரியங்களைக் கேட்டுக் கொண்டு, நம் ஜெபங்களில் வீண் வார்த்தைகளை அலப்பிக் கொண்டு இருக்கிறோமா? (மத்.6:5-8). நாம் தேவனை, தேவனை மட்டுமே நம் வாழ்வில் தேடுவோமாக.

பயன்பாடு: சவாலான சூழ்நிலைகளை என் வாழ்வில் எதிர்கொள்ளும்போது அல்லது எல்லா வளங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழும்போது, என் தலையாய தேவை தேவனே என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். கர்த்தரில் நான் பெற்று மகிழும் மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் பாதுகாப்பை உலகப் பிரகாரமான எந்த காரியங்களும் எனக்குத் தர முடியாது. தேவன் என் பயங்களை அகற்றி, தம் வெளிச்சத்தினால் என் வாழ்வை நிரப்புகிறார். தேவனே என் முதல் தேவை; நான் அவரை முறையாக தவறாது தேட வேண்டும். நான் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியைதும் தேட வேண்டும். என் கண்கள் என்னுடைய எதிரிகள் மீது அல்ல, கர்த்தர் மீதும் அவருடைய பரிசுத்த மகிமையின் மீதும் இருக்க  வேண்டும்.

ஜெபம்: கர்த்தராகிய தேவனே, என் வாழ்வில் நீர் தந்திருக்கிற உம் வெளிச்சத்திற்காக உமக்கு நன்றி. நீர் என் எதிரிகளிடம் இருந்து என்னை விடுவிக்கிறீர். தேவனே, என் கண்கள் எப்போதும் உம்மையே பார்க்கவும், உம்மைத் தேடவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 209

One thing you want to ask the Lord

READ: Nehemia 9,10; Psalms 27; Acts 20

SCRIPTURE: Psalms 27: One thing I ask from the Lord, this only do I seek: that I may dwell in the house of the Lord all the days of my life, to gaze on the beauty of the Lord and to seek him in his temple.

OBSERVATION: Our life needs are dynamic and keep on changing every day. Something that we deem as precious today may become a nuisance tomorrow. Many things we craved to have in our life may become undesirable once we received or achieved them. So we may not be able to give a precise answer concerning the one thing we want to ask the Lord. Our responses vary depending on our life circumstances. But David, in Psalm 27, confidently expresses the one thing he wants to ask the Lord. We do not know when David wrote Psalm 27. Verses 2, 3, 10, and 12 alludes to some of the challenges David went through in his life. Regardless of the places, whether in the palace or the wilderness, we can be sure that David would ask the same thing from the Lord. His life testifies that he sought nothing else other than God (1 Sam. 13:14).

David wanted to live in the house of the Lord throughout his life. He was regular to seek God. David desired “to gaze on the beauty of the Lord,” not his enemies or opposing situations. David knew that the Lord is his light; the Lord’s light will remove all the darknesses in his life. He found that the presence of the Lord or being in his presence and protection is a safer place from his enemies. Dwelling in the house of the Lord is indeed a great blessing (Ps.23:6; 26:8; 91:1). Assuredly, David would have various responsibilities and works in his life. However, his top priority or heart’s longing was to be with the Lord and seek him. Let us remember the words of Jesus to Martha: “you are worried and upset about many things, but few things are needed—or indeed only one. Mary has chosen what is better, and it will not be taken away from her” (Luke 10: 41, 42). Our worries bring no benefits or changes. But God can change anything. When we seek God, he gives us the confidence to face our problems and enemies. Do we still ask for worldly things and babble many things in our prayer? (Mt.6:5-8). Let us seek God, God alone in our life.

APPLICATION: When I face challenging situations in my life or living in abundance, I should remember that my ultimate need is God. No worldly things can give the joy, peace, security that I enjoy in the Lord; God dispels my fears and fills my life with his light. God is my first need; I should seek the Lord regularly. I must seek first God’s kingdom and his righteousness. My eyes should be on the Lord and the splendor of his holiness, not on my enemies.

PRAYER: Lord God, thank you for the light you have given in my life. You deliver me from my enemies. My God, help me keep my eyes focused on you and seek you always. Amen.  

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 209

Wednesday, July 28, 2021

நீங்கள் பரிசுத்தஆவியை பெற்றீர்களா!

வாசிக்க: நெகேமியா 7, 8; சங்கீதம் 26; அப்போஸ்தலர் 19

வேத வசனம்அப்போஸ்தலர் 19: 1. அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
2.
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
3.
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.

கவனித்தல்: அப்போஸ்தலர் 19:2-3 வசனங்களில், நாம் இரண்டு ஆச்சரியமான மற்றும் முக்கியமான கேள்விகளைக் காண்கிறோம்: “நீங்கள் பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா,”  ” நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?”  இந்தக் கேள்விகள் சில சீஷரிடம் கேட்கப்பட்டபடியால் இது ஆச்சரியமானது ஆகும்.  ஞானஸ்நானம் பெறுவதும் பரிசுத்த ஆவியைப் பெறுவதும் கிறிஸ்தவ வாழ்வில் மிக முக்கியமானவை என்பதால் இது குறிப்பிடத்தகுந்த கேள்வி ஆகும். இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்கும்படி நம்மிடம் யாராவது கேட்டால், நம் பதில்கள் பெரும்பாலும் நம் கலந்து கொள்ளும் சபையின் நம்பிக்கைகள் அல்லது நம் சபைப் பிரிவின் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறதாகவே இருக்கும். ஆயினும், இந்த வசனங்கள் சொல்லப்பட்ட சூழ்நிலையைக் கவனித்துப் பார்த்தால், பவுல் ஏன் இந்த கேள்வியைக் கேட்டார் என்ற நோக்கத்தைப் புரிந்து கொள்ள நமக்குதவும். நாம் வாசிக்கிற வசனத்தின்படி, அவர்கள் யோவானின் ஞானஸ்நானத்தைப் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் பரிசுத்த ஆவியைப் பற்றி எதுவும் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பற்றி எதுவும் தெரியாது ஆனால் இயேசுவைப் பற்றி கொஞ்சம் தெரியும் என்பது போல தோன்றுகிறது. அப்பொல்லோவைப் போல, அவர்கள் யோவானின் ஞானஸ்நானம் பற்றி மட்டுமே அறிந்திருந்தார்கள் (அப்.18:24-26). பரிசுத்த ஆவியானவர் ஒர் ஆளுமை என்பதைப் பற்றி அவர்களுக்குத் தெரிய வில்லை.

பின்னர், ஞானஸ்நானம் பற்றி பவுல் அவர்களிடம் கேட்டார். இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் என்பது பற்றி வாசிக்கும்போது அனேக கிறிஸ்தவர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் அல்லது குழப்பமடைகிறார்கள். அப்போஸ்தலர்கள் கொடுத்த ஞானஸ்நானம் இயேசுவின் போதனைக்கு எதிரானதா என்று நாம் ஆச்சரியப்படக் கூடும் (மத்.28:19). திரித்துவ உபதேசத்தை மறுக்கிறவர்கள், தங்கள் கருத்தை வலியுறுத்த, அப்போஸ்தலர்களே இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆயினும், இப்படிப் பட்ட கூற்றுகளை நம்புவதில் தர்க்க ரீதியாக பிரச்சனைகள் (logical problems) இருக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில், ”இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்” என்பது, ஞானஸ்நானம் கொடுக்க வேண்டிய முறைமையைப் பற்றி குறிப்பிடவில்லை. மாறாக, ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டவர்கள் விசுவாசத்தை பகிரங்கமாக அறிக்கை செய்வதை அது குறிக்கிறது. அந்நாட்களில், யூதர்கள் பலவித ஞானஸ்நானங்களைக் குறித்து அறிந்திருந்தார்கள்: யோவானின் ஞானஸ்நானம், யூத மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள புறஜாதியார் எடுக்கும் ஞானஸ்நானம், மற்றும் மரித்தோருக்காக எடுக்கும் ஞானஸ்நானம் (1 கொரி.15) போன்றவை அவற்றில் சில ஆகும். ஆகவே, ஒருவருக்கு இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட போது,  அது மற்ற ஞானஸ்நானங்களில் இருந்து அவருடைய ஞானஸ்நானத்தை வேறுபடுத்துக் காட்டுகிறதாகவும், இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள அவருடைய விசுவாசத்தை வெளிப்படுத்துகிறதாகவும் இருந்தது. ஞானஸ்நானத்தின் மூலமாக, அவர்கள் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்கள். குறிப்பிடத்தக்க விதமாக, ஞானஸ்நானத்திற்குப் பின்பு அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்றார்கள். நம் ஞானஸ்நானமானது இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்கிற நம் அர்ப்பணிப்பையும் நம் விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. நாம் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவும், அவர் மீதுள்ள விசுவாசத்தின் படி வாழவும் நமக்கு பலத்தைத் தருகிறார். பரிசுத்த ஆவியானவரைக் குறித்து இயேசு நமக்கு வாக்குப் பண்ணி இருக்கிறார் (யோவான் 14:16,17; 15:26; 16:13). அனுதினமும் கிறிஸ்துவுடன் நடந்து தேவ பக்தியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நமக்குப் பரிசுத்த ஆவியானவர் தேவை. கேள்வி என்னவெனில், நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறோமா? நம் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் கிரியைகளையும் மட்டுப்படுத்தாதிருப்போமாக.

பயன்பாடு: தேவனுடைய சத்தியத்தின்படி வாழ நான் அனுதினமும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். அவர் இயேசுவின் போதனைகளை எனக்கு நினைவுபடுத்தி, தேவனுக்குச் சாட்சியாக வாழ என்னை பெலப்படுத்துக்கிறார். இயேசு கிறிஸ்து மூலமாக, பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியானவரை என் வாழ்வில் சம்பூரணமாக பொழிந்தருளி இருக்கிறார்.  தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ, நான் பரிசுத்த ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, பரிசுத்த ஆவியின் வரத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய வாக்குத்தத்தத்திற்காக நன்றி. பரிசுத்த ஆவியில் நிறைந்து, அனுதினமும் உம் மகிமைக்காக வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

 - அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

Day - 208

Did you receive the Holy Spirit!

READ: Nehemia 7,8; Psalms 26; Acts 19

SCRIPTURE: Acts 19: 1 While Apollos was at Corinth, Paul took the road through the interior and arrived at Ephesus. There he found some disciples
2 and asked them, “Did you receive the Holy Spirit when you believed?” They answered, “No, we have not even heard that there is a Holy Spirit.”
3 So Paul asked, “Then what baptism did you receive?” “John’s baptism,” they replied.

OBSERVATION: In Acts 19:2-3, we see two surprising and significant questions: “Did you receive the Holy Spirit,” “what baptism did you receive?” It is surprising because these questions were asked to “some disciples.” It is significant because receiving the Holy Spirit and Baptism are essential in Christian life. If somebody asks us to answer these two questions, our answers will reflect the beliefs of the church we attend or our Church’s denomination. However, looking at the scriptural context may help us to understand the purpose of why Paul asked these questions. As the quoted verses suggest, they knew John’s baptism and had no idea about the Holy Spirit. It seems they did not know about the Gospel of Jesus but had some idea about Jesus. They were disciples who knew only the baptism of John like Apollos (Acts 18:24-26). They were not aware of the personhood of the Holy Spirit.

Then, Paul asked them about Baptism. Many Christians misunderstand or become confused when they read about the baptism in Jesus’ name. We may wonder whether the apostles’ practice of baptism was against the teaching of Jesus (Mt.28:19).  Non-trinitarians claim that even the apostles gave baptism in Jesus’ name to prove their point. However, we must know that there are logical problems in believing such claims. In the book of Acts, “baptized in Jesus’ name” does not refer to a formula of baptism. Instead, it indicates the open confession of faith of the persons who were baptized. In those days, Jews were familiar with different baptisms: John’s baptism, gentiles’ baptism to accept Judaism, and baptism for the dead (1 Cor.15) are some of them. Therefore, when a person was baptized in Jesus’ name, it differentiated him/her from other baptisms and expressed their faith in Jesus Christ. Through baptism, they confirmed their commitment to follow Jesus Christ and his teachings. Significantly, they received the Holy Spirit after their baptism. Our baptism is an expression of our faith and commitment to follow Jesus Christ. When we receive the Holy Spirit, he gives us the strength to follow Jesus and practice our faith in him. Jesus promised us about the Holy Spirit (John 14:16,17; 15:26; 16:13). We need Holy Spirit in our daily walk with Christ to lead a godly life. The question is, have we received the Holy Spirit? Let us not limit the power and works of the Holy Spirit in our life.

APPLICATION: Every day, I need to be filled with Holy Spirit to walk in the truth of God. He reminds me of Jesus’ teachings and empowers me to live as a witness of God. God the Father has poured out the Holy Spirit generously on me through Jesus Christ. To live a life that pleases God,  I must walk by the Spirit.

PRAYER: Father God, thank you for the gift of the Holy Spirit. Jesus, thank you for the promise of the Holy Spirit. Help me always to be filled with the Holy Spirit and live for your glory. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 208

Tuesday, July 27, 2021

தேவனே, என் கைகளைத் திடப்படுத்தியருளும்

வாசிக்க: நெகேமியா 5, 6; சங்கீதம் 25; அப்போஸ்தலர் 18

வேத வசனம்நெகேமியா 6: 8. அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.
9. அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்,

கவனித்தல்: நெகேமியாவின் புத்தகமானது புத்தக ஆசிரியரே நேரடியாக தன்னிலை ஒருமையில் எழுதுவதாக அமைந்திருக்கிறபடியினால் “நெகேமியாவின் நினைவுக் குறிப்புகள்” என்று சிலரால் அழைக்கப்படுகிறது.  நெகேமியாவினுடைய தலைமைத்துவக் கொள்கைகள், சுருக்கமான ஜெபங்கள், தன் வேலையைத் தொடர்ந்து விடா முயற்சியுடன் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் செய்தல், மற்றும் தேவனுடைய பெலனை நம்பியிருத்தல் போன்ற பல காரணங்களுக்காக நெகேமியா இன்றும் நினைவுகூரப்படுகிறார்.  எருசலேமின் இடிபட்டுப் பாழான அலங்கத்தை நெகேமியா எடுத்து திரும்பக் கட்டத் துவங்கியபோது, எதிரிகள் யூதர்களை நிந்தித்து, அவமரியாதை செய்து, மனமடிவை உண்டாக்கி, தைரியம் இழந்து பயப்படச் செய்வதன் மூலமாக கட்டிட வேலையை தடுத்து நிறுத்த முயற்சித்தார்கள் (நெகே.2:19; 4:2-7). சன்பல்லாத்தும் அவனைச் சேர்ந்த மனிதர்களும் நெகேமியாவுக்கு எதிரான அவர்களுடைய அச்சுறுத்தல்கள் மற்றும் தீய திட்டங்களைத் தொடர்ந்து செய்து வந்தாலும் கூட, அலங்கத்தை மறுபடியும் கட்டும் பணியில் இருந்து தன் கவனத்தைத் திருப்பாமல் நெகேமியா தன் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தான். நெகேமியா 6ம் அதிகாரத்தில், நெகேமியாவுக்கு எதிராக சன்பல்லாத்தும் அவனைச் சேர்ந்தவர்களும் செய்த தந்திரமான ஏற்பாடுகள் சிலவற்றைக் குறித்து வாசிக்கிறோம். அவர்கள் நெகேமியாவைக் கொல்லவும், ராஜாவின் கோபத்தை அவனுக்கு எதிராக திருப்பவும், அவனுடைய தலைமைத்துவத்தை இழிவு படுத்தவும் விரும்பினர். சன்பல்லாத்தின் ஆட்களையும், அவனுடைய பொல்லாத திட்டங்களையும் எதிர்கொண்ட ஒவ்வொரு முறையும், ”நான் அந்த (அலங்கத்தைக் கட்டும்) வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் (தடைபடுமே)” என்று பதில் சொன்னான் (வ.3). முழுதும் பொய்கள் நிறைந்த “முத்திரைபோடாத ஒரு கடிதத்தை” சன்பல்லாத் அனுப்பிய போது, தன் எதிரியின் வஞ்சகமான பொய்களுக்கு பதில் சொல்லி அதை தவறு என்று நிரூபிக்க தன் நேரத்தை வீணடிக்க வில்லை. தவறான தகவலைப் பரப்பி வேலையாட்களிடையே பயத்தையும் அவர்களை சோர்ந்து போகப் பண்ணுவதுமே அந்த கடிதத்தின் நோக்கம் என்பதை உணர்ந்து கொண்டார். ஆண்டவரே, எதிரியின் கொடுந் தாக்குதலை தடுத்து நிறுத்தும் என்று நெகேமியா ஜெபிக்கவில்லை. ஆனால், தன் எதிரிகளின் சவால்களை எதிர்கொள்ள இன்னும் அதிக பலத்தைத் தாரும் என்று அவன் ஜெபித்தான். தன் பொறுப்பில் இருந்து விலகி ஓடுவதற்குப் பதிலாக, தன் வேலையை செய்து முடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை நெகேமியாவின் ஜெபம் வெளிப்படுத்தியது.  நெகேமியா தேவனையும் அவருடைய பலத்தையும் நம்பினார்; தன் வேலையைத் தொடர்ந்து செய்வதில் உறுதியாக இருந்தார்.

நாம் செய்ய விரும்புகிற நல்ல வேலையைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அவமரியாதைகள், அச்சுறுத்தல்கள், இழிசொல், பழிச்சொல் மற்றும் தீய திட்டங்கள் போன்றவைகளை நாம் எதிர்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வோம்? நம் பொறுப்பில் இருந்து விலகி ஓடுதல் நம் பிரச்சனைகளை தீர்த்து விடுமா? நெகேமியாவின் காலத்தில், அவன் எருசலேமின் பாழான சுவர்களை எடுத்து திரும்பவும் கட்ட வேண்டியதாக இருந்தது.  நம் காலத்தில், இப்பொழுது இருக்கக் கூடிய சூழ்நிலையானது நெகேமியாவின் காலத்தை விட கொடியதாக இருக்கிறபடியினால் நம் பொறுப்பு  மிகவும் அதிகம் ஆகும். இப்பொழுது ஒருவேளை நாம் பாழான சுவர்களைக் காணாமல் இருக்கலாம். ஆனால், அனுதினமும் உடைந்த இதயங்கள் மற்றும் உறவுகளை உடைய மனிதர்களை நாம் எதிர்கொள்கிறோம். அனேகருக்கு தங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை எதுவும் இல்லாமல், எல்லா இடங்களிலும் கஷ்டப்படுகின்றனர். இந்தக் காலத்தில் நாம் செய்ய வேண்டும் என தேவன் வைத்திருக்கிற வேலையைச் செய்வதற்கு நம் கைகளை அவர் திடப்படுத்தியருள வேண்டும் என நாம் ஜெபிக்கலாம்.

பயன்பாடு: தேவையற்ற காரியங்களுக்குப் பதில் சொல்லி நான் என் நேரத்தை  வீணாக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, என் வேலையில் நாம் மிகவும் கவனமாக இருந்து, என் வாழ்க்கையில் உள்ள சவால்களை மேற்கொள்ள தேவனுடைய பலத்தை நான் தேட வேண்டும். என் கவனமெல்லாம் தேவன் மீதே இருக்க வேண்டும், என் எதிரிகளின் மீது அல்ல. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (சங்.56:4; 118:6).

ஜெபம்:  என் தேவனே, என் ஜெபங்களுக்குப் பதில் கொடுத்து, என் வேலைகளை செய்யவும் செய்து முடிக்கவும் எனக்கு பலம் தருகிறதற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, எக்காலத்திலும் உம் மீது நம்பிக்கை வைத்து, உம்மைத் தேட எனக்கு உதவியருளும். ஆமென்

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 207

Strengthen my hands, Oh Lord!

READ: Nehemiah 5,6; Psalms 25; Acts 18

SCRIPTURE: Nehemiah 6: 8 I sent him this reply: “Nothing like what you are saying is happening; you are just making it up out of your head.”
9 They were all trying to frighten us, thinking, “Their hands will get too weak for the work, and it will not be completed.” But I prayed, “Now strengthen my hands.”

OBSERVATION: The book of Nehemia is sometimes called “Memoirs of Nehemia,” owing to the first-person language of the text. Even today, Nehemiah is remembered for his leadership principles, short prayers, diligence in doing and completing his work, and trust in God’s strength. When Nehemiah started to rebuild the broken walls of Jerusalem, the enemies ridiculed the Jews by insulting them and tried to stop the work by discouraging them (Neh.2:19; 4:2-7). Despite Sanballat and his men continued their threats and evil schemes against Nehemiah, he continued the rebuilding work without turning his attention away from it. In Nehemiah 6, we read some of the tactics Sanballat and his men employed against Nehemiah. They wanted to kill Nehemiah, turn the king’s wrath against him, and discredit his leadership. Every time Nehemiah faced Sanballat’s messengers and his evil schemes, he replied, “Why should the work stop while I leave it and go down to you?” (v.3). When Sanballat sent “an unsealed letter” full of lies, Nehemiah did not waste his time to disprove the malicious lies of his enemy. He discerned that the letter was sent to cause fear and demoralize the workers by spreading wrong information. Nehemiah did not ask the Lord to stop the virulent attack of the enemy. But he prayed for more strength to face the challenges of his enemies. Nehemiah’s prayer expressed his heart’s desire to complete his work instead of running away from his responsibility. Nehemiah trusted God and his strength; he was steadfast in continuing his work.

What will we do if we face similar threats, insults, slanders, evil schemes to stop the good work we want to do? Do running away from our responsibility will solve the crises? In Nehemiah’s time, he had to rebuild the walls of Jerusalem. In our time, our responsibility is even more since the present situation is more severe than in the time of Nehemiah. Now we may not see broken walls, but we come across people with broken hearts and relationships every day. Many people have no hope for their future and are struggling everywhere. We can ask the Lord to strengthen our hands to carry out the work he has for us during this time.

APPLICATION: I should not waste my time responding to unwanted things. Instead, I need to be diligent in my work and seek God’s strength to overcome the challenges in my life. My attention and eyes should be on God, not on my enemies. “The Lord is with me; I will not be afraid. What can mere mortals do to me?” (Ps.56:4; 118:6).

PRAYER: My God, thank you for answering my prayers and giving me the strength to do and complete my works. Lord, help me to trust and seek you always. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 207

Monday, July 26, 2021

நற்செய்தியை அறிவிக்க ஒரு சிறந்த ஆரம்ப உரை

வாசிக்க: நெகேமியா 3, 4; சங்கீதம் 24; அப்போஸ்தலர் 17

வேத வசனம் அப்போஸ்தலர் 17: 22. அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று (மூடநம்பிக்கையுள்ளவர்களென்று) காண்கிறேன்.
23. எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.

கவனித்தல்: அப்போஸ்தலர் 17ம் அதிகாரத்தில் பவுலின் வல்லமையான பிரசங்கங்களில் ஒன்றை நாம் காண்கிறோம். நற்செய்தியைக் கேட்டிராதவர்களுக்கு கலாச்சார ரீதியாக சாட்சிபகருவதற்கு மிகச் சிறந்த  உதாரணமாக பவுல் அத்தேனருக்குச் சொன்ன செய்தி கருதப்படுகிறது. பவுலின் செய்தியைக் கேட்டவர்கள் புதிய கருத்துக்களைக் கேட்பதில் ஆர்வம் மிகுந்த, அறிவார்ந்த, மற்றும் கற்றறிந்தவர்களாக இருந்தார்கள். விக்கிரகங்களால் நிறைந்த அத்தேனே பட்டணத்தைப் பார்த்ததில் பவுல் மகிழ்ச்சி அடைய வில்லை. ஆயினும், அத்தேனே பட்டணத்தைச் சேர்ந்த ஞானிகள் மார்ஸ் மேடையில் பேசும்படி பவுலை அழைத்த போது, பவுல் அவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். அவருடைய நற்செய்தி அறிவிப்பில் முக்கிய பங்கு வகித்த மிகவும் கவனமான வார்த்தைகள் அடங்கிய அறிமுக உரையுடன் தன் பேச்சைத் துவங்கினார். ”தன் ஆவியில் மிகவும் வைராக்கியமடைந்த” பவுல் அந்தப் பட்டணத்தில் தான் பார்த்த விக்கிரகங்களுக்கு எதிரான ஒரு கடுமையான விமர்சனத்தை முன் வைத்து தன் உரையைத் துவங்கி இருக்க முடியும். மாறாக, பவுல் தான் பார்த்ததை மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த உதவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி, “அறியப்படாத தேவனுக்கு” என அவர்கள் வைத்திருந்த பலிபீடத்தைக் குறித்து பவுல் என்ன சொல்வார் என்பதை அறியும் ஆர்வத்தை அவர் உண்டாக்கினார். தன் அறிமுக உரையுடன், தேவனைப் பற்றிய அவர்கள் அறியாமையை நயமாக எடுத்துச் சொன்னதும் அன்றி, அத்தேனே பட்டணத்தில் உள்ளார்கள் தேவனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவருடைய குறிக்கோளை நோக்கி அவர்கள் கவனத்தைத் திருப்பினார் (வ.23). சிருஷ்டிகராகிய தேவனை பவுல் அவர்களுக்கு அறிமுகம் செய்து, விக்கிரக வணக்கத்தின் அபத்தத் தன்மையை அம்பலப்படுத்தினார் (வ.24-29). முடிவில், தன் வாதத்தை நிரூபிக்க இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொல்லி, அவர்கள் மனம் திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

மார்ஸ் மேடையில் பவுல் செய்த பிரசங்கமானது பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் நிறைந்த சமுதாயத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும். பவுலின் செய்தி கலாச்சார ரீதியாக ஏற்றதாகவும், வேதாமம ரீதியாக சமரசமற்றதாகவும் இருந்தது. அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றில் இருந்து தன் நற்செய்தி அறிவிப்பைத் துவங்கினார். அதன் பின், மெதுவாக அவர்கள் கவனத்தை இயேசுவின் மீது திருப்பினார். இயேசுவைப் பற்றி அறியாதவர்களுக்கு அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என நம்மில் பலர் விரும்புகிறோம். கிறிஸ்தவர்கள் வழக்கமாகச் செய்யும் தவறுகளில் ஒன்று என்னவெனில், ஜனங்களில் கலாச்சார நடைமுறைகள் அல்லது மதங்களுக்கு எதிரான விமர்சனங்களுடன் தங்கள் நற்செய்திப் பணியைத் துவங்குவதுதான். அப்படி எனில், நம்மிடம் இருந்து நற்செய்தியைக் கேட்பவர்களைப் பிரியப்படுத்துவதற்காக சில வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் அல்லது சத்தியத்தை சமரசம் செய்ய வேண்டும் என்று பொருள் அல்ல. பவுல் தன் செய்தியில் சத்தியத்தை சமரசம் செய்ய வில்லை.  அவர் அதைக் கேட்பவர்களுக்குப் புரியும் விதத்தில் பேசினார். நற்செய்தியைக் கேட்பவர்களுக்கு அது கவனத்தை ஈர்க்கிறதாக இருக்கும்படிக்கு நாம் கலாச்சார ரீதியாக ஏற்ற முறையில் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். நாம் அதைச் செய்கிறோமா?

பயன்பாடு: நற்செய்தியைப் பிரசங்கித்தல் என்பது என் கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான ஒரு பொறுப்பு ஆகும். நான் எல்லா நேரங்களிலும் நற்செய்தி அறிவிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். ”கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர்.1:16). இயேசுவைப் பற்றிய நற்செய்தியை நான் பேச வேண்டியபிரகாரமாக தெளிவாகச் சொல்ல/பிரசங்கிக்க வேண்டும் (கொலோ.4:3,4).

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம்மை அறிந்து கொள்ளவும், இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளவும் உதவிய உம் அன்பிற்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, இயேசுகிறிஸ்துவின் மகத்துவத்தைப் பற்றி மற்றவர்களுக்குத் தெளிவாக சொல்ல எனக்கு ஞானத்தை தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 206

An excellent starting point to share the Gospel

READ: Nehemia 3,4; Psalms 24; Acts 17

SCRIPTURE: Acts 17: 22 Paul then stood up in the meeting of the Areopagus and said: “People of Athens! I see that in every way you are very religious.
23 For as I walked around and looked carefully at your objects of worship, I even found an altar with this inscription: to an unknown god. So you are ignorant of the very thing you worship—and this is what I am going to proclaim to you.

OBSERVATION:  We read Paul’s one of the powerful sermons in Acts 17. Paul’s message to the Athenians is considered as “an outstanding example of intercultural witness” to people who never heard about the Gospel. Paul’s audience were intellectuals and educated people who were interested in listening to new ideas. Paul was not happy to see Athens, which was full of idols. However, when the Athenian philosophers invited him to speak at Areopagus, Paul accepted their invitation. He started his speech with a carefully worded exordium that set the stage for his gospel presentation. Here, the “distressed” Paul could have started his speech with sharp criticism against the idols that he saw in the city. Instead, Paul used what he saw as a tool to relate to the people and created an interest in knowing what Paul would tell about the altar for “an unknown god.” With this introduction, he highlighted their ignorance of God and drew their attention to his goal of making God known to the people of Athens (v.23). Paul introduced the creator God to them and exposed the absurdity of idol worship (v.24-29). In the end, he presented Christ’s resurrection to prove his case and urged them to repent.

Paul’s message at the Areopagus meeting is a classic example of proclaiming the Gospel in a pluralistic society. It was a culturally relevant and scripturally uncompromised message. He started his speech from something they already know in their context. From then, he slowly turned their attention to Jesus. Many of us want to share the love of Jesus with others who do not know about him. One of the common mistakes Christians make is they often start their gospel work with criticisms against the cultural practices or religions of the people. It does not mean that we should avoid certain words or compromise the truth to please people who hear the Gospel from us. Paul did not compromise the truth in his message. We need to present the Gospel in a culturally relevant way to make the Gospel appealing to the listeners. Are we doing this?

APPLICATION: Preaching the Gospel is a vital responsibility of my Christian life. I should be ready to preach the Gospel at all times. “I am not ashamed of the gospel, because it is the power of God that brings salvation to everyone who believes” (Romans.1:16). I should proclaim the Gospel of Jesus clearly, as I should (Col.4:4).

PRAYER: Father God, thank you for your love that helped me know you and accept Jesus as my personal savior. Holy Spirit, give me the wisdom to proclaim the greatness of Jesus Christ clearly to others. Amen.

- Arputharaj Samuel
+91 9538328573

Day - 206

Saturday, July 24, 2021

நான் பொல்லாப்புக்குப் பயப்படேன்

வாசிக்க: நெகேமியா 1, 2; சங்கீதம் 23; அப்போஸ்தலர் 16

வேத வசனம் சங்கீதம் 23: 4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

கவனித்தல்: அனேக கிறிஸ்தவர்களுக்கு மிகவும் விருப்பமான சங்கீதங்களில் ஒன்றாக சங்கீதம் 23 பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. “கர்த்தர் என் மேய்ப்பர்” என்று சொல்லவும், அவருடைய வழிநடத்துதலின் கீழ் நடக்கும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பெறவும் நாம் அனைவருமே விரும்புகிறோம். ஆயினும், சங்கீதம் 23ன் மைய வசனமாகிய 4ஆம் வசனம் மற்ற வசனங்களைப் போல் கவனிக்கப்படுவதில்லை. சங்கீதம் 23:1-3 மற்றும் 4-6 வசனங்கள் நாம் பார்க்கக் கூடிய (visible blessings) கர்த்தரின் ஆசீர்வாதங்களைப் பற்றிச் சொல்கையில், நாம் இருளைத் தவிர வேறெதையும் காண முடியாத மரண இருளின் பள்ளத்தாக்கில் நடப்பதைப் பற்றி 4ஆம் வசனம் சொல்கிறது. தேவனுடைய ஆசீர்வாதம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும் என நாம் அனைவருமே விரும்புகிறோம். நம் குழந்தைப் பருவத்தில் இருந்தே, நம் உள்ளார்ந்த பயம் காரணமாக இருளில் நடப்பதை நாம் வெறுக்கிறோம். பிரச்சனைகள் மற்றும் கஷ்டங்களே இல்லாத ஒரு வாழ்க்கை நமக்கு இருக்கும் என்று நம் மேய்ப்பரும், ஆண்டவருமாகிய இயேசு நமக்கு வாக்குப் பண்ண வில்லை (யோவான் 10:11; 16:33). சில சமயங்களில், நாம் எதையுமே சரிவரப் பார்க்க முடியாத கடினமான இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கின் வழியாக நம் வாழ்வில் நாம் செல்ல நேரிடலாம். எல்லோராலும் கைவிடப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டதாக நாம் உணரலாம். நம் வாழ்வின் இப்படிப் பட்ட கடினமான நேரத்தில் தேவன் எங்கே போனார் என்பன போன்ற கேள்விகளை நாம் கேட்கக் கூடும். ”தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்” என்று சங்கீதக்காரன் இங்கு சொல்கிறார். நம் கஷ்டங்களில், தேவனை நாம் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், அவர் எப்பொழுதும் நம்முடனே கூட இருக்கிறார். ஆகவே, நாம் இருளைக் குறித்து பயப்படத் தேவை இல்லை. நாம் ஒருவேளை ஆண்டவரைப் பார்க்கக் கூடாமலிருக்கலாம். ஆனால் நாம் அவருடைய தொடுதலையும் வழிநடத்துதலையும் நம் வாழ்வில் மிக இருண்ட காலங்களிலும் உணர்ந்து கொள்ள முடியும். தேவனுடைய பாதுகாப்பு மற்றும் வழிநடத்துதலைக் குறித்து நாம் நிச்சயமான நம்பிக்கையுடன் இருக்கலாம்—அவருடைய கோலும் தடியும் எதிரிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாத்து, நம் போராட்டங்களில் நம்மை வழிநடத்தி ஆறுதலைத் தந்து நம்மை தேற்றுகிறது. நம் வாழ்வில் நாம் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவை இல்லை. நாம் கவலைப் படுவதனால் சாதிக்கக் கூடியது என்ன? (மத்.6:27-32). நம் கஷ்ட காலங்களில் கவலைப் படுகிறதற்குப் பதிலாக, நாம் கர்த்தரை நம்ப முடியும். இயேசு நம்மை எல்லா தீங்குக்கும் விலக்கி பாதுகாப்பார்; அவர் நம் ஆத்துமாவை பாதுகாப்பார் ( சங்.121:7).

பயன்பாடு: நான் தேவனுடைய பிரசன்னத்தை என் வாழ்வில் உணர்ந்தாலும் அல்லது உணராவிட்டாலும், அவர் எப்பொழுதும் என்னுடனே கூட இருக்கிறார். நான் மற்றவர்களுடைய உதவியைப் பார்க்க முடியாத கடினமான தருணங்கள் என் வாழ்வில் வரலாம். ஆனால் தேவனோ அவருடைய கோல் மற்றும் தடியினால் என்னை பாதுகாத்து வழி நடத்துகிறார். ஆகவே, நான் பொல்லாப்புக்குப் பயப்படேன். என் வாழ்க்கையின் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள்  என் வாழ்வில் நான் கடந்து செல்லும் பல இடங்களில் ஒன்றேயன்றி, என் நிரந்தர இடம் அது அல்ல. இயேசுவுடனான என் ஆன்மீகப் பயணத்தில், நான் தேவனுடைய அபரிதமான அன்பையும் வழிநடத்துதலையும் ருசிக்கிற இடங்களாக அவை இருக்கின்றன. மரண இருளின் பள்ளத்தாக்கில் அல்ல,” நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.”

ஜெபம்: தேவனே, என் மேய்ப்பராக நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி. கடினமான வேளைகளில் நீர் எனக்குத் தருகிற பாதுகாப்பு மற்றும் வழிநடத்துதலுக்காக உம்மைத் துதிக்கிறேன். ”நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே” நடக்கும்போது, நீர் என் வாழ்வில் இருப்பதுதான் மிகச் சிறந்த ஆசீர்வாதம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இயேசுவே, எப்பொழுதும் உம் சத்தத்தைக் கேட்டு அதற்குச் செவி கொடுக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 205