Sunday, October 6, 2019

சோர்ந்து போகாதே...


தடைகள் பெருகி தடுமாறும் போது,
ஆதரவின்றி அனாதை போல உணரும்போது,
செய்யாத குற்றம் உன் மேல் சுமரும்போது,
பகைவர்கள் எள்ளி நகையாடும்போது
உதவ வேண்டியவர் உதறிக் கைவிடும்போது
நீ சோர்ந்து போகாதே


யார் இல்லை எனினும் நான் உண்டு
உனக்காக உயிரையே தந்த நான்
உன் வேதனைகளை அறியாதிருப்பேனோ
மீட்பின் வழி திறந்த நான்
சோதனைகளில் உன்னுடனே இருப்பேன்
கவலை மறந்து தோள்களில் சாய்ந்து
அனைத்தையும் என்னிடம் விட்டுவிடு
நான் தரும் சந்தோச சமாதானம்
அதற்கு எதுவுமில்லை சமானம்!
இலவசம்! விலையொன்றுமில்லை
அன்புக்கேது விலை!

இயேசு: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:28)

No comments: