Friday, August 26, 2016

கடிகாரம் -A Lateral thinking poem

நான் நாளெல்லாம் உழைக்கிறேன்
நீங்கள் என்னை கண்டு கொள்வதில்லை
ஏனெனில் என்னை நீவிர் பார்ப்பது கொஞ்சநேரம் தான்
ஆனாலும் பலனை எதிர்பாராது உழைக்கிறேன்

என் சேவை உங்களுக்கு தேவை
அதை பெற்றுக் கொள்ளும் உங்கள் பார்வை
இந்த கவிதையில் உள்ள கோர்வை
தந்துவிடமுடியாது உம் பிரச்சனைக்கு தீர்வை

என்னை நீங்கள் தினந்தோறும் பார்க்கிறீர்கள்
ஆனால் என்னால் உங்களை பார்க்க முடிவதில்லை
சூழ்நிலைகள் என்னை மாற்ற முடியாது
என் எஜமானனின் உத்தம சேவகன் நான்
நான் சோர்ந்து போகும் போது
என் வேகம் குறைந்து விடுகிறது
உடனே என் எஜமான் என்னை கரிசனையாக
நன்கு ஆராய்ந்து வேண்டியதை செய்கிறார்
அவருக்காக ஓடுவது என் பாக்கியம்

என்னை உண்டாக்கியவர் பெயர் என்மேல்
என்னை பார்ப்பவர் எனக்கு செலுத்தப்பட்ட விலையை அறிவார்
நான் பயனற்றுப் போனால் குப்பையில்
பயன்படும்போதோ நான் உயரத்தில்

என் ஓட்டத்தில் காணப்படுவது பொறுமை
நான் இன்னமும் இலக்கை அடையவில்லை
ஆனாலும் ஓடுகிறேன் ஓட்டத்தை
ஓடுவேன் தொடர்ந்து நித்தமும்
என் உயிர் இருக்கும்வரை அல்லது
இந்த உலகின் முடிவுவரை
நான் யார் ?

No comments: