Wednesday, September 7, 2016

ஒரு அரசியல் பதிவு

 கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?

முகநூல் உரையாடல்
வில்பர்ட் :அர‌சிய‌ல்வாதிக‌ள் இர‌ட்சிக்க‌ப்ப‌ட‌ வேண்டுமாம்...
ஆனால், இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அர‌சிய‌லில் நுழைய‌க் கூடாதாம்...
எங்கேயோ அடிப்ப‌டையிலே கோளாறு.... என‌க்குதான் வெள‌ங்க‌ல‌ போல‌...
*அர‌சிய‌லில் இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எந்த நிலையில் ப‌ங்குகொள்ள‌ வேண்டும்?

அற்புதம்:  சாக்கடையில் இருப்பவர்கள் கழுவப்படவேண்டும்.
அதற்காக எல்லோரும் சாக்கடையில் போய் விழவேண்டும் என்று சொல்ல முடியாதல்லவா!
சாக்கடையில் இருப்பவரை தூக்குவதற்காக நீ இறங்கத்தான் வேண்டும் என்று இறைவன் சொல்லும்வரையிலும், அல்லது எல்லோரும் இறங்கக்கூடிய ஒரு நிலை வந்த
பின், அதாவது சாக்கடையில் கலக்கும் கழிவுகள் நிறுத்தப்ப்பட்ட பின் அனைவரும் அந்த சாக்கடையில் (அந்த நீர் ஓடிக்கொண்டிருந்த இடத்தில்) இறங்கலாம் என நாம் தைரியமாகச் சொல்லலாம், அதுவரையிலும் நாம் எதையும் பொதுப்படுத்தப்பட்டதாக (generalized) கூற முடியாது.


வில்பர்ட் : உண்மை. பொதுப்ப‌டையாக‌க் கூற‌ முடியாது. இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எல்லாரும் போக‌லாம் என்று சொல்வ‌தில்லை. மாறாக‌ இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் போக‌லாம் என்று கொள்ள‌லாம் அல்லவா? ஐயோ , எல்லா அர‌சிய‌ல்வாதிக‌ளும் அயோக்கிய‌ர்க‌ள் என்று நொந்து கொள்ளும் நேர‌த்தில், க‌ட‌வுளுக்கு ப‌ய‌ந்த‌வ‌ன் ஒருவ‌ன் அங்கே செல்வ‌து ச‌ரிதானே...

அற்புதம்: தேவபயம் உள்ளவராக இருந்தால், தேவ வழிநடத்துதல் இல்லாமல் போகக்கூடாது அல்லவா..
 
வில்பர்ட் : I agree.

அற்புதம் : இப்பொழுது ஓரளவுக்கு உங்களுக்கு புரிதல் ஏற்ப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். அடுத்து உங்களின் கேள்விக்கு மறுபடியும் வருகிறேன்.
||*அர‌சிய‌லில் இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் எந்த நிலையில் ப‌ங்குகொள்ள‌ வேண்டும்?||


தேவனால் வழிநடத்தப்பட்டால் அல்லது அரசியலில் இருக்கும்போது இரட்சிக்கப்பட்டால் என்ன செய்வது?

ஏசாயா 48:14 சொல்வது போல ”கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்”
ஆகவே சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் அவர்கள் தேவனைத் தேடுவதையும் தேவ சித்தம் செய்வதையும் மற்றவர்கள் முயன்றாலும் முடிவில் தோல்வியே காண்பர். அவர்களின் உண்மையினிமித்தம் தேவன் மகிமைப்படுவார், தேவனைப் பற்றி அனேகர் அறிந்துகொள்வார்கள். இங்கே மாம்ச வைராக்கியம் ஒன்றுக்கும் உதவாது, ஆவிக்குரிய வைராக்கியம் மிகவும் அவசியம்.
இயேசு சொன்னது போல, “ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவான் 6:63).

No comments: