Sunday, June 27, 2010

இயேசுவைப் பின்பற்றவா

இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்? - எந்தன்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்?



சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா -நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா



எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்றி வா



ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
.

பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மை பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இரங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன்


தம்பி அண்ணா அழைக்கிறேன் வா, உடன்பிறப்பே ஓடி வா, இரத்தத்தின் இரத்தமே இறங்கி வா என்று அழைக்கும் குரல்களுக்கும், தலைவர்களுக்கும் உலகில் பஞ்சமில்லை. பின்பற்றி எதிர்பார்த்து ஏமாந்து ஒன்றும் மிஞ்சாமல் நொந்து மனம் வெதும்பும் மனிதர்களே உலகில் ஏராளம். ஏமாற்றும் தலைவர்களும் மாற்றம் தராத கொள்கைகளும் உண்டு. எல்லாரும் கொள்கைகளைக் காட்டி, இலட்சியங்களை முன்னிறுத்தி பெரும் மனக்கோட்டை எழுப்பி, எப்படியாவது அடைந்திடலாம் வா என்றழைக்கின்றனர்.

இயேசுவோ ”என்னைப் பின்பற்றி வா” என்றழைக்கிறார். அவர் அழைப்பதிலும் கூட வித்தியாசமானவர். நீங்கள் “பின்பற்றும் படி” நான் மாதிரியை வைத்துப் போகிறேன் என்றார். என்னைப் பின்பற்ற தன்னை(சுயத்தை) வெறுக்க வேண்டும் என்றார். இயேசுவைப் பின்பற்றுவதற்கும் சுயத்தை வெறூப்பதற்கும் என்ன சம்பந்தம்? பின்பற்றுவதற்கு நிபந்தனைகளா? இல்லை. இல்லை. இயேசுவைப் பின் பற்றுதல் என்பதே அவரின் அடிச் சுவடுகளில் நடப்பதுதானே. “உமது சித்தத்தின் படி ஆகக்கடவது” என்று பிதாவின் கரத்தில் தனது சுயத்தை கொடுத்து ஜெயத்தை எடுத்தவரன்றோ நம் இயேசு பெருமான். அதையே நாமும் செய்யவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.
” கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் ஆசைகளையும் அதன் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்”

(இன்னமும் பின்தொடர்ந்து வரும்)

No comments: