Wednesday, January 12, 2011

வாழ்வு தரும் உணவு

அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார் (யோவான் 6:27)

இயேசு கிறிஸ்து ஐந்து அப்பம் இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார் என்பது உண்மைதான் என்றாலும் கூட, அவர் தம் போதனைகளைக் கேட்பவர்கள் வெறும் உணவுக்காக தம்மைப் பின்பற்றுகிறவர்களாக இருக்கக் கூடாது என்ற எச்சரிப்பைத் தர தவற வில்லை.
உணவும், உண்ணும் உடலும் அழிந்து போம். ஆகவே, அழிந்து போகிறவைகளைக் குறித்து கவலைப் படுவதை விட அழியாமல் இருக்கப் போகிறவைகளைக் குறித்து உங்கள் எண்ணம் இருக்கட்டும் என்கிறார்.
நித்திய ஜீவனைப் பெற நாம் தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்க வேண்டும். அஃது இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதேயாம். இயேசு கிறிஸ்துவை நாம் ஏன் விசுவாசிக்க வேண்டும்?
வனாதிர யாத்திரையில் ஆதி இஸ்ரவேலர்கள் வானத்திலிருந்து பொழிந்தருளப்பட்ட மன்னாவை (இது என்ன?) உண்டு கானான் வந்து சேர்ந்தனர். ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நாம் வானத்திலிருந்து இறங்கின மன்னாவாம் ம்ன்னன் இயேசுவை உண்டு பரலோகக் கானான் சேர வேண்டும் என்பதே தேவன் நமக்கு வைத்திருக்கிற திட்டமாக இருக்கிறது.


வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் (யோவான் 6:33)

இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தில் சாப்பிட்ட மன்னாவானது தேனிட்ட பணிகாரம் போல ருசிகரமானதாயிருந்தது (யாத்.16:31) ஆனால் தேவன் நமக்கு அருளுகிற ம்ன்னாவோ தேனிலும் தெளி தேனிலும் மதுரமுள்ளதாயிருக்கிறது (சங்கீதம்19).

நாம் செய்ய வேண்டியதெல்லாம் “ருசித்து” வாழ்வதே! ( சங்கீதம்34:8). என்றாவது ஒரு நாள் அல்ல்ல, என்றும் எந்நாளும் நாம் உண்டால்தால் உயிர் வாழ முடியும் என்பது உண்மை. ஆம் ஆவிக்குரிய உணவாக அனுதினமும் அவரை உட்கொண்டால்தான் நாம் ஆவிக்குரிய உலகில் (ஆவி உலகில் அல்ல^_^ ) உயிர் வாழ முடியும்.


ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும். ஆமென். (யோவான் 6:34)

No comments: