Wednesday, July 25, 2018

ஏசுவைப் பாடுவேன் ஏனென்று கேட்காதீர்கள்

ஏசுவைப் பாடுவேன்
ஏனென்று கேட்காதீர்கள்
ஏழை என் மனதிலுள்ள
ஏக்கங்கள் அனைத்திலும்
ஏமாற்றாமலெனை மாற்றினார்
ஏசியவர்கள் மத்தியில்
ஏளனம் செய்தவர் காண
ஏற்றமுறச் செய்தாரவர்

ஏன் என்ற கேள்விகள்
ஏராளம் இருந்தன
ஏதேதோ குழப்பங்கள்
ஏவினவன் மகிழ்ந்தான்
ஏதேனினின் தொடர்ச்சி என
ஏகடியம் செய்து வீழ்த்தப் பார்த்தான்

ஏந்தினார் தம் கரங்களில்
ஏதுக்கழுகிறாய் நான் இருக்கிறேன்
ஏகாதிபதி, என் கைகளில் அதிகாரம்
ஏசாயா முதலிய தீர்க்கருரைத்தபடி
ஏறினேன், கொல்கதாவில் பாவத்தை கொன்றுபோட்டேன்
ஏனெனில் நீ என் பிள்ளை, உனக்காகவே உயிர்கொடுத்தேன்
ஏற்பாட்டில் உள்ள படி உயிர்த்தெழுந்தேன்
ஏற்ற தந்தை நானிருக்க கலங்காதே
ஏக மனதோடு என்னிடம் வா என்றவர்
ஏனையோர் விலகினாலும், எப்போதும் உடன் இருப்பேன்
ஏசுவே என்றழைத்தால், நான் பேசுவேன்
ஏன் என்ற கேள்விக்கு பதில் தருவேன்
ஏனெனில் நானே உன் பதில் என்றார், இயேசு.

- அற்புதராஜ்
#Tamil_Christian_poem
#தமிழ்_கிறிஸ்தவ_கவிதை

No comments: