Sunday, August 27, 2017

அ முதல் அவரே எனக்கும் எவருக்கும்

அண்ட சராசரம் அனைத்தையும்
அன்பினால் அணைத்து
அமுதமாம் இணையில்லா வார்த்தைகளால்
அற்புதமாய் படைத்து
அடியேனை உம் சாயல்போல் மாற
அளவெடுத்து மண் பிசைந்து
அழகாக ஆணும் பெண்ணுமாக
அதிசய உரு கொடுத்து
அவர்களே ஆளட்டுமென
அதிகாரத்தையும் கொடுத்து பின்
அனுதினமும் அன்புறவு
அலகின் சூழ்ச்சியினால்
அதில் வீழ்ச்சி வந்தும்
அவதரித்து மரித்து மீட்டீர்
அகோர பாவத்தின் சாபம்
அதற்கான கிரயம் உம் ஜீவன்
அறிய முடியவில்லை
அன்பின் ஆழம் அகலம் உயரம்
அண்டினால் தீருமென் துயரம்
அன்பரின் சொல் மதுரம்
அவர் சிந்தின உதிரம்
அறிக்கையிட்டால் கழுவும் இதயம்
அவரிடமே அடிபணிகிறேன்
அனைத்தையும் நான் படைக்கிறேன்
அணுவளவும் பயமில்லையே!

 - by Arputharaj

No comments: