Thursday, April 16, 2009

கரை சேர்வோம் கரை சேர்ப்போம்



ஆதியில் ஏதேனில் ஒருவர்
ஆனார் இருவர் ஆண்டவர் செய்தது ஆபரேஷன்
ஆதாமிலிருந்து ஏவாள்
ஆதிக் குடும்பம் ஆரம்பம்

அனுதினமும் ஆண்டவர்
இறங்கிவந்தார் ஈந்தாரின்பமதை
உணவு ஊண் உறைவிடம்
எல்லாம் ஏதேனிலுண்டு
ஐம்பொறிகளையும் ஒடுக்காததால்
ஓங்கிற்று பாவம்
அதனால் மனுக்குலம் ஐயோ பாவம்

சாபமதை நீக்க வந்த எம்பெருமான்
பாவமற வாழ்ந்து மாண்டுயிர்த்தார்
பாவிகளை இரட்சிக்கும் வழிதிறந்தார்
ஆதிக் குடும்பம் பெற்ற பேரின்பம்
இன்றும் நாம் பெற்றிடவே
இன்ன்னலற வாழ்ந்திடவே

வாழ்க்கையெலாம் வளமாகி
அவர் வார்த்தை நம் பலமாகி
அனுதினமும் ஜெயம் சூடி
அவரன்பில் நாம் மூழ்கி
கரை சேர்வோம் கரை சேர்ப்போம்

No comments: