Saturday, April 11, 2009

இன்றியமையாத ஏழு கேள்விகள்


ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னைப் பார்த்து ஏழு கேள்விகளை வினவ வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அவை உயிர்நாடி போன்றவை. அவற்றை அசட்டை செய்தால் ஆபத்து விளையும். அவற்றை ஒவ்வொன்றாக கவனிப்போம். உண்மையுடன் அவற்றிற்கு விடையளிக்க ஆண்டவர் அருள் புரிவாராக!


1.துணிகரமான பாவத்தை செய்து கொண்டிருக்கிறேனா?
"என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால் ஆண்டவர் எனக்கு செவி கொடார்" (சங்கீதம்.66:18) என் வேண்டுதலுக்கு அவர் செவி சாய்க்கவும் மாட்டார். அறிந்த பாவத்திற்கு இடங்கொடுக்கும் மட்டும் என் ஜெபத்திற்கு பதில் பெற்றுக் கொள்ள மாட்டேன்.


"அறிந்த பாவம்" என்று நான் கூறினதை கவனிக்கவும். ஏனென்றால் உன் வாழ்க்கையில் "நம்மை எளிதில் அகப்படுத்தும் பாவம்" என்று வேதம் விளம்புகிறதை முன்னிட்டு நீ முடிவு செய்ய நேரிடும். யாதாமொரு பாவத்திற்கு நீ அடிக்கடி இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறாய். அது ஒரு சுமை போலும் விக்கிரகம் போலுமிருக்கும். ஆயினும் அது பாவமே. அதை விட்டு நீ விலகவேண்டுமென்று கர்த்தர் உரைக்கிறார். 

"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது" (ஏசாயா.59:2). 

பாவம் பிரிவினை உண்டாக்குகிறது. தேவனின் முகத்தை மறைக்கிறது. பாவமிருக்கும் இடத்தில் ஐக்கியமும் கூட்டுறவும் நிலவ முடியாது. " கிறிஸ்துவின் நாமத்தை சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக் கடவன்" (2தீமோத்தேயு.2:19)அது தேவனின் கட்டளையாகும். அவருக்கு பிரியமானவர்களாயிருக்கும்படிக்கு நாம் அறிந்து செய்யும் பாவங்களனைத்தையும் விட்டு விலக வேண்டும். அப்படியானால் அன்பரே தீமையென்று தெரிந்த எவற்றையும் விட்டு விலகுவோமாக. 

ஆம். ஆவியானவரை துக்கப்படுத்தும் யாவற்றையும் அகற்றிப்போடுவோமாக. நமது வாழ்க்கையினின்று அவற்றை புறம்பே தள்ளுவோம். பாவத்தை விட்டு விலகும்வரை கிறீஸ்தவ வாழ்கையில் நாம் முன்னேற முடியாது. ஒரு ஏந்திரக் கல்லுக்கு ஒப்பானது பாவம். அது நம்மை தாழ இழுத்துக் கொண்டிருக்கும். அதற்கு இடங்கொடுத்தால் மேலும் அதிகமதிகமாக அதை விரும்புவோம். நமது ஆசையை நிறைவேற்றுவதால் என்றும் அணையாத ஒரு தீயை சுவாலித்தெரிய செய்கிறோம். இப்படியாக பாவத்திற்கு இடமளித்த இருதயத்தின் வேதனையையும் அங்கலாய்ப்புமே ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையில் தோன்றக்கூடிய ஆறாத்துயரமாயிருக்கும்.

எனவே அன்பரே பாவத்தை அறவே ஒழித்துவிடுவோமாக. அது வெகுக்கடினமாயினும் பரவாயில்லை. மற்றபடி "எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை" நாம் கண்டடைய முடியாது. பாவத்தை விட்டு விலகாவிட்டால் அது நம்மை நாசமாக்கும்." துரோகிகள் வழியோ கரடுமுரடாம்" என் நண்பனே இயேசுகிறிஸ்துவை நினைவு கூர். அவர் எவ்வித விலங்கையும் தகர்த்து எந்த சங்கிலியையும் முறித்து விடுவோர். சிறையுற்றவனை விடுவிப்பார். அவர் உன்னை விடுதலையாக்குவார். ஆம். உன்னை அடிக்கடி மேற்கொள்ளும் பாவத்தினின்றும் விடுவிப்பார். இரட்சிக்க வல்லமை உள்ளவராக இருப்பதுடன் அவர் உன்னை வழுவாமல் காக்கவும் வல்லவர். உன்னில் வாசமாயிருக்கும் ஆவியானவரின் வல்லமையினால் அறிந்து செய்யும் சகல பாவங்களின் பேரிலும் நீ வெற்றி சிறப்பாய். ஆம், "ஜெயங்கொண்டவனாய் இருப்பது" எத்துணை பாக்கியமுள்ளது.


2.கர்த்தருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிகிறவனாய் நான் வாழ்கிறேனா?
"உங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்" (ரோமர்.6:18). சகலத்தையும் நான் ஒப்படைத்து விட்டேனா? அப்படிச் செய்வதாக நான் பாடுகிறேன். ஆண்டவரே உமது சித்தப்படியே செய்யும் என்று நான் அடிக்கடிக் கூறுவது உண்மையே. 

ஆயினும் மெய்யாக அதை நாடுகிறேனா? அவர் போகச் சொல்லும் இடத்திற்கு நான் செல்லுகிறேனா? அல்லது என் சொந்த வழியை விரும்புகிறேனா? கிறீஸ்துவுக்குப் பதிலாக சுயத்திற்கு முதல் இடம் கொடுக்கிறேனா? என் வாழ்க்கைக்கு அவரே ஆண்டவரும் எஜமானனுமாக விளங்குகிறாரா?கீழ்ப்படிகிற பிள்ளைகளே தேவனுக்கு வேண்டும். நாம் பிடிவாதமுள்ளவர்களாயிருந்தால் அவர் நம்மை பயன்படுத்த முடியாது. "பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிகிறதே நலம்" போர்முனையில் நேரும் கலகம் அதன் இலட்சியத்தை சிதைக்கும். அவருக்கு உத்தம விசுவாசமுள்ளவர்களாக விளங்க வேண்டும். அறியாத தவறுதல், குற்றங்குறைகள் மன்னிக்கப்படும். ஆனால் துரோகத்தை அவர் ஒருக்காலும் சகிக்க மாட்டார். 

தேவன் நம்மை பயன்படுத்த வேண்டுமானால் நாம் கீழ்ப்படிய வேண்டும். தேவன் நம்மை எங்கே போக அழைக்கின்றாரோ அங்கு செல்ல நாம் ஆயத்தபாயிருக்கவேண்டும். நம்முடைய வழியில் அல்ல அவர் ஏவும் வழியில் செல்ல வேண்டும். நாம் அல்ல, அவரே சகலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். தேவனுக்கு ஸ்தோத்திரம். அவருக்கு நம்மை உண்மையாக ஒப்புக் கொடுக்கையில் அவருடைய திட்டங்கள் நம்முடையவையாகும். அவர் சித்தத்தை செய்வதில் நாம் மகிழ்ச்சியாக இருபோம்.நமக்குப் பிரியமானதைச் செய்ய வற்புறுத்தும் ஒரு கடினமான ஆளோட்டியாக அவரைப் பாவிக்கலாகாது. நமக்குப் பிரியமற்றதையே எப்போதும் செய்ய வற்புறுத்த மாட்டார். அவர் நமது பிதாவாயிருக்கிறார். 


அமர்ந்த தண்ணீர்களண்டையில் நம்மைக் கொண்டு போய்விட ஆவலாயிருக்கிறார். அவருக்குப் பிரியமான பல விருப்பங்களை நமது உள்ளத்தில் உருவாக்குகிறார். நம்மை ஒப்புக் கொடுக்கவேண்டுமென்பதே அவருடைய ஒன்றான விருப்பம். ஏனென்றால் நமது ஆவி ஆத்மா, சரீரம் யாவும் அவருடையாது. எனவே கீழ்ப்படியாமல் அவருடன் ஐக்கியப்பட்டிருபது கூடாத காரியம். 


3. தினசரி தனி ஜெபத்தில் என் நேரத்தை செலவிடுகிறேனா?
ஜெபமின்றி ஒருவரும் வெற்றி வாழ்க்கை வாழ முடியாது. ஜெபிக்காமல் கிறீஸ்தவ வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது. ஜெபத்தை அசட்டை செய்தால் ஆவியில் பலவீனமுள்ளவர்களாயிருப்பீர்கள். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் மாத்திரமே புதுப் பெலனடைவர். விண்ணப்பமாகிய சூழ்நிலையில் வாழத்தவறினால் சத்துருவினால் தாக்கப்பட ஏதுவாகும். ஆண்டவராகிய இயேசு இடைவிடாமல் மன்றாடினார். இராமுழுவதையும் ஜெபத்தில் கழித்தார். பவுல் ஜெபித்தார். ஆதி திருச் சபை ஜெபிக்கும் சபையாக விளங்கியது. தேவனால் அது பயன்படுத்தப்பட்டது. ஆடவரும் பெண்டிரும் ஜெபவீரராக விளங்கினர்.


ஆகவே ஜெபத்தில் காத்திருக்கிறேனா என்று என்னையே விசாரித்துக் கொள்வேனாக. தேவனுடன் உறவாட எனக்கு நேரமுண்டா? ஒவ்வொரு நாளும் அவரை சந்திக்கும்படி சமயத்தைக் குறிப்பிட்டிருக்கிறேனா? அதை தவறாமல் கடைபிடிக்கிறேணா? நான் ஜெபிக்கிற மனிதன் என்று தேவன் அறிவாரா? அப்படியானால் மீண்டும் என் உடன்படிக்கையை 
புதுப்பிக்க அவர் உதவிபுரிவாராக. அவர் வந்து என்னை தூங்குகிறவனாக கண்டு பிடியாதபடிக்கு காலைதோறும் அவரை சந்திக்க நான் ஆயத்தமாயிருப்பேனாக.


4.தேவனுடைய திருவசனத்தை கருத்துடன் ஆராய்கிறேனா?
தேவனுடைய வசனத்தை அசட்டை செய்தால் அவர் சத்தத்தைக் கேளாதபடிக்கு விலகிவிடுகிறேன். ஏனென்றால் தமது வசனத்தின் வாயிலாகவே அவர் நம்மோடு பேசுகிறார். ஆகவே வேதத்தை தியானியாதிருந்தால் அவரால் வழி நடத்தப்படாதிருக்கிறேண். திருவசனத்தை வாசியாதபடியினால் பலர் வழிவிலகிப் போயிருக்கின்றனர். அதற்குரிய 

இடத்தை மற்றொன்றும் பெற முடியாது. தேவன் மனிதருக்கு விளம்புகிற செய்தி வேதவசனமேயாகும். நான் அவரை உண்மையாக அறிந்திருந்தால் அதை படிக்க ஆவல் கொண்டிருப்பேன். எவ்வளவு அதிகமாக வாசிக்க முற்படுகிறேனோ அவ்வளவுக்கு அது எனக்கு இனிமையாயிருக்கும். அதை ஆராய்ந்தறியாமல் நான் வாழ முடியாது 
என்றறிவேன். அன்றாடக கடமைகளை நிறைவேற்ற அது எனக்கு ஜீவ ஆகாரமும், பானமுமாக விளங்கும். 

கிறீஸ்த்வ வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் மீண்டும் மீண்டும் அதை வாசிக்க முற்படுவேன். நான் இரட்சிக்க பட்டபோது தினந்தொறும் அதை வாசித்தேன். ஆனால் இன்னும் அதை ஆவலுடன் வாசிக்கிறேனா? முதலாவதாக வாசித்தபோது எனக்குப் புதிதாக தோன்றினபடிக்கு இன்றும் அதைக் காண்கிறேனா? அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகளின் ஆன்மீக அனுபவங்களை நான் ஆனந்திக்கிறேனா? தாவீதின் சங்கீதங்களில் இன்றும் நான் ஆறுதலைக் கண்டடைகிறேனா? தேவனின் திருவசனம் ஒரு உயிர்ப்பிக்கும் வசனமாக விளங்குகிறதா? நாள்தோறும் என் ஆத்துமாவிற்கு ஆகாரமாக அதை உட்கொள்ளுகிறேனா?
ஒருக்கால் நான் ஆவியில் இன்று பலவீனமாக இருக்கிறேனா? தேவன் தமது வசனத்தைப் பாலுக்கும் உணவுக்கும் அவர் ஒப்பிடுகிறார். அப்படியானால் நான் திடனுற்றிருக்கும்படி அடிக்கடி அதை ஆராய வேண்டும். திருவசனத்தை கருத்துடன் ஆராயும் மாணவனாயிருக்க தேவன் அருள்புரிவாராக!


5.பகிரங்கமாக கிறிஸ்துவை அறிக்கையிடுகிறேனா?
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஆரம்ப நாட்களில் ஆத்துமாக்களை பற்றின வாஞ்சையினால் அனல் கொண்டிருந்தேன். தேவனுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து வீதிகளில் சென்று என் சாட்சியை அறிவிக்க ஆர்வமுற்றிருந்தேன். வழி தப்பினவரை மீட்கும் சேவையிலும் ஆத்துமாக்களுக்கு இயேசுவை இரட்சகராக சுட்டிக்காட்டுவதிலும் ஆனந்தமாயிருந்தேன். குணப்படாதவரின் நிலைமைக்காக என் மனம் பாரமுற்றீருந்தது. கிறிஸ்துவின் பேரில் உள்ள ஆதிஅன்பினால் நிறைந்தவனாக எனக்கு அவர் அருளின நன்மைகளை அடுத்தவருக்கு அறிவிக்க ஆவல் கொண்டிருந்தேன். லேகியோனைப் போல என் குடும்பத்தாரிடமும் நண்பரிடமும் சாட்சி கொடுக்கச் சென்றேன்.

ஆனால் இன்றைய நிலைமை என்ன? ஆதி அன்பை இழந்துவிட்டேனா? குளிர்ந்து போய் அதையடுத்து அசட்டையாயிருக்கிறேனா? தேவனால் தூண்டப்பட்ட அக்கினி அணைந்து போயிற்றா? கெட்டுப்போனவர்களைப் பற்றி சற்றும் மனப்பாரமின்றீ நான் ஆராதனைகளிலும் மார்க்கசடங்குகளிலும் கலந்து கொள்ளுகிறேனா? அப்படியானால் அதற்குக் காரணமென்ன? 

"கெட்டோனை இரட்சியும்" என்றூ பாடுகிறேன். ஆனால் அவர்களை மீட்க ஏதாவதொன்றை செய்ய முன்வருகிறேனா? "அழிந்துகொண்டிருப்போரை காப்பாற்றும் " என்று பாடுகிறேனே, அவர்களுக்காக நான் கவலைப்படுகிறேனா? "விழுந்துபோனவருக்காக கண்ணீர்விடும் " என்று பாடுகிறேனே - அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காக --நான் கண்ணீர் உதிர்க்கிறேனா? கெட்டுப்போன மக்களின் இரட்சிப்பில் என் ஆத்துமா அக்கறை கொண்டுள்ளதா? அப்படியிராவிட்டால் என் நிலைமை இன்னும் மோசமானதாகும். உடனடியாக அதன் காரணத்தை கண்டுபிடித்து அகற்றுவேனாக. பகிரங்கமாக ஆண்டவரைப்பற்றி சாட்சி கூறவேண்டும். மக்களுக்கு கிறிஸ்துவைப் பிரஸ்தாபப்படுத்தவேண்டும். சாட்சிபகர அவர் 

கட்டளையிட்டிருக்கிறார். மீண்டும் அவரின் மகத்துவத்தை எடுத்துரைப்போமாக. சுவிசேச துண்டுப்பிரதிகளை பிறருக்கு நான் வினியோகிக்கலாம். ஆம். என் நண்பருக்கு அவர்கள் ஆத்தும இரட்சிப்பை குறித்து கடிதங்கள் எழுதலாம். தேவனுடைய பிரதிநிதியானால் நான் அவருக்கு உண்மையுள்ளவனாக விளங்கவேண்டும்.


6. தேவன் என்னை ஆசீர்வதித்ததிருப்பதற்கேற்ப என் ஈகை தாராளமாயிருக்கிறதா?
"கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்" (லூக்க.6:38). 
நாம் கொடுப்பதற்குத்தக்கதாக தேவன் நமக்கு ஈந்தருளுகிறார். அவர் ஒருபோதும் மனிதனுக்கு கடன்படவரல்லர். தேவனின் ஈகைக்கு மேலாக நீ அளிக்கமுடியாது. தேவனுடைய பணிவிடைக்கென்று குறைந்தது உன் வருமானத்தில் பத்தில் ஒருபங்கை நீ கொடுக்க வேண்டும். அதற்கு மேலாக அவர் உன்னிடம் கேட்பதையும் தரவேண்டும். 

நீ அவருக்கு உண்மையுள்ளவனாக இருந்தால் அவரும் உனக்கு உண்மையுள்ளவராக இருப்பார். ஏராளமானவற்றை உடையவராக இருந்த காலத்தில் தேவனுக்கு கொடுப்பதில் உண்மையில்லாதவர்களாக இருந்த பலர் இன்று நெருக்கத்திலிருக்கின்றனர். திருப்பணிகென்று உண்மையாக காணிக்கை கொடுத்தவரில் ஒருவராவது குறைவுற்ற 
நிலைமையிலிருப்பதை நாம் காண முடியாது. "உதார குணமுள்ளவன் செழிப்பன். தண்ணீர் பாய்ச்சுபவன் தண்ணீர் பாய்ச்சப்படுவான்."

ஆனால் திட்டமாக ஆத்தும ஆதாயஞ்செய்யப்படும் ஊழியத்திகேயன்றி சமுதாய சேவைக்கும் வேதாகமத்தை சந்தேகிக்கின்ற மக்களுக்கும் உன் பணத்தை கொடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. உன் நன் கொடை பயன்படுத்தப்படுகின்றதை முன்னிட்டு தேவனுக்கு நீ பொறுப்பாளியாக இருக்கிறாய்.மனமகிழ்ச்சியுடன் கொடு. ஏனென்றால் "உற்சாகமாய் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாயிருக்கிறார்." 

மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் ஒழுங்குமுறையாக அளிக்கவேண்டும். தேவனுக்கென்று கவனமாக கணக்குவை. எவ்விதமாகவாவது அவருக்குக்கொடு. " அனுப்பப்படாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?" உலகத்தாருக்கு சுவிசேசம் அறிவிக்கப்படவேண்டுமானால் அதற்Kஆன செலவை யாராவது ஒருவர் ஏற்க வேண்டும். 

தண்ணீர் இலவசமானது. ஆனால் அதை குழாய்கள் வழியாக எடுத்துச் செல்ல பணம் செலவழிக்கவேண்டும். அவ்வாறே இலவசமான இரட்சண்யத்தை பிறருக்கு அறிவிக்க தூண்டுகிறவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். உலகத்தின் கடைசி முனைமட்டும் அது துரிதமாக பிரசங்கிக்க்கப்பட நாம் முயல்வோமாக. எனவே ஈகை என்பது பவுல் 
விளம்புகிறபடியே கிறிஸ்தவனுக்கு கிடைக்கும் ஒரு கிருபையாக விளங்குகிறது. நாம் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் கிறிஸ்தவராக இருப்போமேயானால், நாம் கொடையாளிகளாயும் , ஆம் தாராளமாக கொடுக்கிறவர்களாயும் விளங்குவோம்.

7.ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கென்று ஏதாவது செய்கிறேனா?
தேவனால் பயன்படுத்தப்படும்படிக்கு சாட்சி கொடுக்கக்கூடிய ஓரிடத்தையும் மக்களையும் நான் கண்டுபிடிக்க வேண்டும். என் செய்கையை தவறென்று அடுத்தவர் கருதுகின்றனர் என்ற நினைவால் நான் பாதிக்கப்படலாகாது. 

ஆத்தும ஆதாயத்தில் ஆர்வமுற்றிருக்கும் ஒரு சபை எனக்கு உறைவிடமாயிருக்கவேண்டும். சேவையில் ஈடுபடவே நான் மீட்கப்ப்பட்டேன். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஏதாவதொன்றை நான் செய்யாவிட்டால் அவர் எனக்களைத்த பரம தரிசனத்திற்கு நான் உண்மையற்றவனாக இருப்பேனல்லவா? பல வரங்கள் எனக்கில்லாதிருப்பினும் நான் ஏதோ ஒன்றில் ஈடுபடலாம். நோயாளிகளை கண்டு சந்திக்கலாம். சுவிஷேசப் பிரதிகளை வினியோகிக்கலாம். என் சாட்சியத்தை அறிவிக்கலாம். தனித்து ஆட்களை சந்திந்துப் பேசி அவர்களை கர்த்தருக்கென்று ஆதாயஞ்செய்யலாம். இப்படி ஏதாவது ஒரு காரியத்தை செய்ய முன் வரவேண்டும். யாராவது தங்களைக்கண்டு சன்ந்தித்து தூண்டிவிடும் மட்டும் சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆலயத்திற்கு வந்து ஆராதனைகளில் கலந்து கொள்ளுகின்றனர். ஆனால் தாங்களும் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமென்று கனவில் கூட நினைத்துப்பார்ப்பதில்லை. போதகருக்குத் தேவையானால் அவர் தேடி வந்து அவர்களை ஊழியத்திற்கு அழைப்பார் என்று கருதுகின்றனர். ஆனால் இரட்சிக்கப்பட்டது உண்மையானால் தாங்களே ஏதாவதொன்றை செய்ய முன்வருவர். "ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?" என்று பவுல் முதலாவது விசாரித்தான். மறுபிறப்படைந்த ஒரு ஆத்துமாவின் பேராவலும் அதுவே. அன்பு சேவை 
செய்யும். ஆண்டாவராகிய இயேசுவை உத்தமமாக நேசிப்போர் அவரை சேவிக்க வாஞ்சிப்பர். சோம்பேறிகளாயிருக்க மாடார்கள். போதகரோ மற்றவரோ ஏவுமட்டும் காத்திராமல் அவர்கள் தேவனிடம் சென்று அவர் உத்தரவை பெற்றுக் கொள்வர். ஓய்வு நாள் பாடசாலையில் அவர்கள் ஆசிரியராயிருக்கக்கூடும். அப்படியானால் அந்தக்குழுவின் தலைவரை அணுகி 

விசாரிக்க வேண்டும். நல்ல குரல் வளம் உடையவராயிருப்பின் பாடகர் குழுவில் சேர்ந்து கொள்ளலாம். அல்லது வாத்தியக்கருவியில் பழக்கப்பட்டிருந்தால் அதௌ வாசிக்க வாய்ப்பு கிடைக்கும்.

ஆராதனை முதலிய கூட்டங்களுக்கு மற்றவரை அழைத்து வந்து இடமளிக்கும் பணிவிடையிலும் இளைஞர் குழுவிலும் பிறருக்காக மன்றாடும் ஜெபக்கூட்டங்களிலும் சேவைபுரியலாம். தூர இடங்களுக்கு சென்று நற்செய்தி அறிவிக்க ஒருக்கால் ஆண்டவர் உன்னை அழைப்பார். அப்படியானால் அதற
குப் பயிற்சி பெற்று வாழ்க்கையை அதில் பயன்படுத்தலாம். இப்படியாக ஒருவன் ஜீவனைப்பெற்றது உண்மையாயின் தன் ஆண்வருக்கு ஏதோ ஒன்றில் தொண்டாற்றும் வரை அவன் மனம் அமர்ந்திராது.

மீண்டும் நான் கிறிஸ்துவை சேவிக்கிறேனா? அவருக்கு உழைக்கிறேனா? என் காலத்தை அவருக்காக செலவழிக்கிறேனா? 

அல்லது ஏதோ ஒரு அழைபு வரக்காத்திக்கொண்டிருக்கிறேனா? என்று வினவுவோம். முயற்சியுடையவர் முயற்சியில்லாதவர் என்று இருவகைத் தொண்டர் உளர். "ஆண்டவரே இதோ இருக்கிறேன்" என்று சுறுசுறுப்புள்ளவர்கள் கூறுவர்./ "என்னை அனுப்பும்" 
என்று முயற்சியுடையவர்கள் ஆர்வமுற்றீருப்பர். நான் எந்த வகுப்பை சேர்ந்தவன்? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கென்று ஏதாவதொன்றை செய்ய முற்படுகிறேனா? 

னம்மை உத்தமரென்று அவர் அங்கீகரிக்க வேண்டுமானால் மேற்கண்ட கேள்விகளைக் குறீத்து தீவிரமாய் ஆராய்வது 

அவசியம். "நீ வெட்கப்படாத ஊழியக்காரனாய் தேவனுக்கு முன் உன்னை உத்தமனாய் நிறுத்தும்படி 

கருத்துள்ளவனாய் இரு" என்று திருவசனம் விளம்புகிறது. அவர் கரத்தினின்று பூரணமான பிரதிபலனை 

பெற்றுக்கொள்ளவௌம் " நல்லது உண்மையும் உத்தம்ய்மான ஊழியக்காரனே" என்ற மேன்மையான வாழ்த்துரையைக் 

கேட்கவும் பாத்திரராயிருக்க நம்மையே ஆராய்ந்தறிந்து அவர் எதிர் நோக்கும் உன்னத நிலையை அடைவோமாக.  

Courtesy: Taken from The Man who God uses by Oswald smith

No comments: