Saturday, September 30, 2017

"இயேசுவுக்காக…" பாடல்கள் பிறந்த கதை - 3



முந்தின பதிவில் எனக்கு மிகவும் பிடித்த “இயேசு எந்தன் கன்மலை” என்று ஆரம்பிக்கும் நான் எழுதியப் பாடலைப் பற்றி எழுதி இருந்தேன். எனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது பாடல் எழுதுகிற எல்லாருமே இது போன்று தான் பாடல்களைப் பெறுகிறார்களா என்று அறியேன். என்னைப் பொறுத்தவரையில், ஒரு பாடலை எழுத வேண்டும் என்று உட்கார்ந்து யோசித்து எழுதியப் பாடல்கள் மிகவும் குறைவு. ஆனால் ஒரு பாடல் கர்த்தரிடம் இருந்து வரும்போது, அதைத் தொடர்ந்து அடுத்து சில நாட்கள் ஒவ்வொருப் பாடல்களாக கர்த்தர் எனக்குக் கொடுப்பதை நான் காண்கிறேன். இந்தப் பதிவில் போன வருடம் நான் பெற்ற சிலப் பாடல்கள் பெறத் துவக்கமாக இருந்த ஒரு பாடலைப் பற்றி எழுதுகிறேன்.
3. உம் பாதம் சரணடைந்தேன் மனதெல்லாம் உம் நினைவே
உங்களில் பலர் அறிந்திருக்கிறபடி, நான் பெங்களூரில் உள்ள SAIACS எனும் இறையியல் கல்லூரியில் Training Coordinator ஆக பணிபுரிந்து வருகிறேன். கல்லூரிப் பணி,  ஊழியம், இதன் நடுவில் குடும்பம் என வாழ்க்கை பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகச் செல்வது போலத் தோன்றினாலும், என் மனதில் ஒரு வெறுமையை உணர்ந்தேன். வேதம் வாசிப்பு, ஜெபம், ஆராதனை எல்லாம் நான் வழக்கம் போல செய்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் எதையோ மிஸ் பண்ணுகிறோம் என்ற உணர்வு எனக்குள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அது என்ன என்பதுதான் எனக்குப் புரியாதப் புதிராக இருந்தது.
நான் எனக்கு நானே ஒரு சுயபரிசோதனை செய்து பார்த்தேன். எங்கேயாவது நான் தவறி இருக்கிறேனா என்பதை ஆராய்ந்து பார்த்தேன். ஆண்டவருக்கும் எனக்கும் இடையில் உள்ள உறவில் விரிசல் வருமளவுக்கு நான் எதையாவது செய்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தேன். குழப்பமாகவே இருந்தது. என்ன செய்யலாம் என்பதே என் மனதின் நினைவாக எப்போதும் இருந்தது.

அப்படிப் பட்ட காலத்தில் ஒரு நாள் இரவு கிதாரை எடுத்து எனக்குத் தெரிந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருக்கிறேன். அப்படிப் பாடும்போது, எனக்குத் தெரிந்த சில இராகங்களின் சுருதிகளை வரிசையாக வாசித்துக் கொண்டு வந்தேன். அப்படிச் செய்து வருகையில் என் மனதில் இருந்து ஒரு புதிய இராகம் வருவதை என்னால் உணர முடிந்தது. அப்படியே என் செவியையும், புலனையும் கூர்மையாக்கி என் மனதில் மெதுவாக கேட்கிற சுருதிகளை ஒவ்வொன்றாக தட்டிப் பார்க்கிறேன். ஐந்து சுருதிகளை (penta tonic scale) மட்டுமே கொண்ட ஒரு இராகத்தில் 7/8 தாளத்தில் இயல்பாக ஒரு பாடல் எனக்குள் வந்தது. அப்போது நான் இருந்த குழப்பமான சூழ்நிலை மற்றும் வெறுமைக்குப் பதில் தேடி, “தகப்பனே நான் உம்மிடமே வருகிறேன்” என்று ஆண்டவரிடம் என்னை ஒப்புக் கொடுக்கையில் பாடல் வரிகள் எழுத ஆரம்பிக்கிறேன்,
“உம் பாதம் சரணடைந்தேன்
 மனதெல்லாம் உம் நினைவே
 பலவீனன் பெலன் தாருமே
உந்தன் அருள் தாருமே”

இந்த வரிகளை எழுதியதும், அதுவரை இருந்த வெறுமையுணர்வு போன இடம் தெரியவில்லை. அதான் அனைத்தையும்  ஆண்டவரிடம் கொடுத்தாச்சுதே! எழுதியது போல, மனதெல்லாம் இறைவனைப் பற்றிய உணர்வு நிரம்பியது.  அந்த உணர்வின் மகிழ்ச்சியில் அந்தப் பாடலைப் பற்றி நள்ளிரவு என்றும் பாராமல் நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களுக்கு போன் பண்ணி தெரிவிக்கிறேன். அவர் கேட்டவுடனே, இது கம்பீர நாட்டையில் இருக்கிறதே, அட! என்று உற்சாகப்படுத்தினார். போனை கீழே வைத்து விட்டு, அதே உற்சாகத்தில் தேவ கிருபையால் மேலும் மூன்று சரணங்களை எழுதினேன். இந்தப் பாடலுக்கு நண்பர் Fairy Eby  மிகச் சிறப்பானதொரு இசையமைத்திருக்கிறார். அதை நீங்கள் சிடியில் கேட்கலாம். யூடியுபிலும் கூட விரைவில். அதற்கு முன் உங்களுக்காக அந்தப் பாடலின் வரிகள்:
உம் பாதம் சரணடைந்தேன் மனதெல்லாம் உம் நினைவே
பெலவீனன், பலம் தாருமே உந்தன் அருள் தாருமே

உம் பாதம் சரணடைந்தேன்
குறையெல்லாம் நீக்கிடுமே
பரிசுத்தம் பெற வேண்டுமே
உந்தன் அருள் போதுமே

 உம் பாதம் சரணடைந்தேன்
உமக்காக வாழ்ந்திடுவேன்
தடையெல்லாம் தகர்த்திடுமே
எந்தன் தகப்பன் நீரே

உம் பாதம் சரணடைந்தேன்
பயமெல்லாம் பறந்திட்டதே
சகலமும் படைக்கின்றேன் நான்
எந்தன் சகாயம் நீரே
இந்தப் பாடலின் சிறப்பு கருதி, இதை ஆங்கிலத்திலும் பாட வசதியாக English lyrics ஐயும் கொடுத்திருக்கிறேன். மொழிபெயர்ப்பைச் சரிசெய்து ஒரு poem ஆக மாற்றிய நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி.

I surrender me to thy feet
I’m filled with your thoughts so sweet
I’m weak, Lord, your strength I need
For your mercies I plead

I surrender me to thy feet
Perfect me, I’m incomplete
Holiness I should receive
In your mercies I believe

I surrender me to thy feet
To thee my life I commit
Remove all obstacles in my way
You’re my father to whom I pray

I surrender me to thy feet
You give me a fearless spirit
I offer my all before your throne
Helping hand to me you’ve shown

Arputharaj
9538328573

2 comments:

Deni Prakash D said...

Good translation too...waiting for the songs to touch and transform lives.

Deni Prakash D said...

Good translation too...waiting for the songs to touch and transform lives.