ஒரு ஒழுங்குக்கு உட்பட்டு இசைவாகச் செல்வதே இசை என்று சொல்லகராதிகள் விளக்கம் தருகின்றன. முதன் முதலாக இசையுடன் எனக்கு அறிமுகம் உண்டானது எப்படி?

ஆயிரம் ஆயிரம் பாடல்களை
ஆவியில்
மகிழ்ந்தே பாடுங்களேன்!
யாவரும்
தேமொழிப் பாடல்களால்
இயேசுவைப் பாடிட வாருங்களேன்
அல்லேலூயா! அல்லேலூயா!
என்றெல்லாரும் பாடிடுவோம்
அல்லலில்லை! அல்லலில்லை!
ஆனந்தமாய்ப்
பாடிடுவோம்
அன்று நான், அந்த நள்ளிரவில் அந்தப் பாடலைக் கற்றும் கொண்டேன். அதன் பின் நான் நடந்தாலும், படுத்திருந்தாலும் எப்போதும் அந்தப் பாடலை என்னையுமறியாமல் பாடுவது எனக்கு வழக்கமாயிற்று. அந்தப் பாடலைத் தொடர்ந்து நான் கற்றுக் கொண்ட பாடல்களை என்னையுமறியாமல் நான் எதைச் செய்தாலும் பாடிக் கொண்டே இருந்ததால் எனக்கு “உளத்தி” என்ற ஒரு பட்டத்தைக் கொடுத்தனர். இப்போதும் ஊருக்குப் போனால் சித்தியிடம் இருந்து சமயங்களில் இப்பட்டம் கிடைக்கும். அன்று கற்றுக்கொண்ட பாடல் மட்டுமல்ல, நான் அன்று தென்கலம் பரி. பேதுரு தேவாலயத்தில்ஆவியில் நிறைந்து ஜனங்கள் ஜெபித்த காட்சிக்கொப்பாக இன்று வரை வேறு எதையும் காணவில்லை. ஒரு சிறுவனாக என் வாழ்வில் அந்த இரவு ஜெபம் மிகவும் முக்கியமான பங்கு வகித்தது. தேவனுடனான என் தனிப்பட்ட உறவின் ஆரம்பம் அது என்றுகூட சொல்லலாம். - பயணம் ஆரம்பம்
எனது இசைத் தொகுப்பு பற்றிய ஒரு சிறிய கட்டுரை
No comments:
Post a Comment