1.தசம பாகம் கொடுத்தல் என்பது நியாயப்பிரமாணம் கொடுப்பதற்கு முன்பே விசுவாசத்தினால் ஏவப்பட்டு கொடுக்க ஆரம்பித்த ஒரு காரியம்.
2. புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் தசம பாகம் கொடுப்பது தவறு அல்ல, ஆனால் முதலாவது கொடுக்கவேண்டியது நமது இருதயத்தையும் பிற்பாடே நமது பொருளுடைமைகளும்.
3. கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார் என்பதால் நாம் நியாயப்பிரமாணத்தின்படி தசம பாகம் கொடுத்தால் தவறு, ஆனால் விசுவாசத்தினால் கொடுப்பது என்பதில் தசம பாகம் ஆரம்பமே.
4. புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்கள் கொடுப்பதை உற்சாகமாகக் கொடுக்கவேண்டும். உதாரத்துவமாகக் கொடுக்கவேண்டும். விசனமாயும் கட்டாயமாயுமல்ல. அப்படிக் கொடுத்தால் அதிலே ஒரு பிரயோஜனமும் இருக்காது.
5.தசம பாகம் கொடுத்தால்தான் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது தவறு. தேவன் ஆசீர்வதிப்பதிலிருந்து நாம் கொடுக்கிறோம். வாங்குதல் கொடுத்தல் பிரமாணத்தின்படி நாம் தேவனுக்காகக் கொடுக்கும்போது திரும்பவும் பெற்றுக் கொள்கிறோம்.
6. ஊழியக்காரன் தசமபாகம் காணிக்கைக் குறித்து பயமுறுத்தியோ, நயமாகவோ பிரசங்கம் பண்ண வேண்டிய தேவையில்லை. தேவனுடைய வார்த்தையை உண்மையாகக் கூறினால் தேவன் ஒரு காக்கையைக் கொண்டாவது போஷிப்பார். ஊழியக்காரனின் கண்கள் தசம பாகங்கள் காணிக்கை மீதல்ல, தேவன் மீதே இருக்க வேண்டும்.
7. தசம பாகம் கொடுத்தால் பரலோகம், கொடுக்காவிட்டால் நரகம் என்பது மிகவும் தந்திரமான ஒரு நய வசனிப்பு. இதற்கு வேத ஆதாரமில்லை.
8, நீங்கள் உங்களது காணிக்கை தசம பாகங்களை நீங்கள் செல்லுகிற சபைக்கு கொடுப்பது நல்லது என்றாலும் அது கட்டாயமல்ல.
9.தேவன் உங்களுக்கு கொடுக்க ஏவும் எவருக்கும் உங்கள் காணிக்கையைச் செலுத்தலாம். ஏனெனில் உங்களது காணிக்கை தேவனுக்கேயன்றி மனிதருக்கல்ல.
10. தசம பாகம் காணிக்கைகளை விட அதிக முக்கியமானது ஏழைகள், திக்கற்றவர்கள், விதவைகள், ஆதரவற்றவர்கள், அந்நியர்கள் ஆகியவர்களுக்கு உதவுவது ஆகும். ஏனெனில் காணிக்கை என்பதற்கும் கர்த்தருக்கே கடன் கொடுப்பது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா!
11. நமக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிற தேவனுக்கு தசம பாகம் கூட கொடுக்க மனதில்லாதிருப்பதும், உணர்ர்சிவச பிரசங்கங்களைக் கேட்டு உள்ளதையும் கொடுத்து ஏமாறுவதும் தவறு.
12. நாம் தேவனுக்காகக் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று நமது இருதயம் மாத்திரமல்ல, நமது நேரமும் கூட. அவரோடு ஒரு நாளில் குறைந்தது இரண்டு பணிநேரம் செலவிடுவது வாழ்க்கைக் குழப்பங்கள் மாத்திரமல்ல, வேதாகமக் குழப்பங்களும் வரும் வாயிலை மூடிவிடும். நேரம் உங்களைத் தேடி வராது, நீங்கள்தான் அதைத் தேடிப் போக வேண்டும். தூக்கத்தைக் குறைத்தாலே எளிதில் நாம் நேரத்தைக் கண்டுகொள்ளலாம்.
Monday, September 13, 2010
Friday, July 2, 2010
மரணம் - சில சிந்தனைகள்
"விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்" என்று வேதம் கூறுகிறது. ஆனால் எனக்கு இந்த இரு இடங்களுக்கும் போவது சற்று அலர்ஜியான காரியமாகவே இருந்து வந்திருக்கிறது. சிறுவயது முதலே கூட்டத்தை கண்டால் விலகி இருக்கவே விரும்புவேன். அதிலும் துக்க வீட்டிற்குச் சென்றால் எல்லாரும் சோகமாகவும் கண்ணீருடனும் இருக்கும்போது என்னையுமறியாமல் அழுது விடும் காரணத்தால் அங்கே செல்வதையும் தவிர்த்து விடுவேன்.
மேலும் நம்மூர்களில் துஷ்டி வீடுகளில் துக்கம் விசாரித்தல் என்பது எல்லாரும் பின்பற்றும் ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. ஒருவர் மரித்த பின் அவர் எப்போது, எப்படி மரித்தார்? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, வாழும்போது அவர் நல்லவராகவே வாழ்ந்தார் என்ற நற்சாட்சியை கொடுத்து துக்கமாக இருப்பவர்களை தேற்றுவார்கள். அதுவுமல்லாது ஒருவர் மரித்துவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டால், அழைப்பு இல்லாமலேயே அங்கே அனைவரும் (பகை உள்ளவர்கள் கூட) செல்வர், அந்த வீட்டாரின் துக்கத்தில் பங்கு கொள்வர். ஆனால் இதிலும் எனக்கு நீண்ட காலமாக ஒரு தவறான கருத்து இருந்துவந்தது. நாம் துக்கம் விசாரிக்கும்போது அவர்களின் துக்கம் அதிகரிக்கத்தானே செய்யும் என்கிற கருத்தை உடையவனாயிருந்தேன். காரியம் அறியாத மூடனாகவே இருந்திருக்கிறேன். ஆனபடியால்தான் எனக்கு மிகவும் பிரியமான சகோ.பேதுரு அவர்களின் சகோதரன் மரித்த போது வெகுகாலம் அவர்களிடம் பேசுவதைக் கூட தவிர்த்தேன். நான் அது பற்றி விசாரித்தால் அவர்களின் துக்கம் அதிகரித்துவிடுமே என்று அஞ்சினேன் (எவ்வளவு மதியீனம் பாருங்கள். சகோதரன் என்னை மன்னிப்பாராக) இவவாறு எனது கருத்துக்களினால் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு பின்பு வருந்துவதே எனக்கு வேதனையாக இருக்கிறது.
துக்கவீடுகளில் எல்லாம் எடுத்துக்காட்டப்படும் வசனங்களில் ஒன்று, ”விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.” (பிரசங்கி 7:2). துக்க வீட்டுக்குச் செல்கிறவன் சிந்திப்பான் என்று வசனம் கூறுகிறது. நானும் இப்போது ஒரு துக்க வீட்டில் இருக்கிறேன் ஆகையால் சற்று சிந்திக்கிறேன்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதலாம் அற்புதம் ஒரு கல்யாண விருந்திலே ஆரம்பித்தது. ஆனால் அதற்கப்புறம் அவர் கல்யாண விருந்துக்குச் சென்றதாக வேதம் கூறவில்லை. அதேவேளையில் இயேசு சாவு நிகழ்ந்திருந்த பல வீடுகளுக்குச் சென்றதாக வேதம் நமக்கு கூறுகிறது.
1.மரித்துப் போன யவீருவின் மகளை இயேசு உயிரோடே எழுப்பினார். அங்கே இயேசு சொன்ன வார்த்தை “ ’தலீத்தாகூமி’சிறு பெண்ணே எழுந்திரு.”
2. விதவையின் மரித்துப் போன வாலிப மகனை பாடையைத் தொட்டு உயிரோடே எழுப்பினார்.
3. மரித்து நான்கு நாட்கள் ஆன லாசருவை கல்லறையிலிருந்து, “லாசருவே வெளியே வா” என்று கூறி அவனை உயிரோடே எழுப்பினார். (லாசருவிற்குதான் உலகத்தில் இரண்டு கல்லறைகள்)
எல்லாவற்றிற்கும் மேலாக லாசருவின் வீட்டிற்குச் செல்லும் போது இயேசு கண்ணீர் விட்டார் என்றும் வேதம் கூறுகிறது. லாசருவை உயிரோடே எழுப்புவதற்கு முன் இயேசு அவர்களின் துக்கத்திலே பங்கு கொண்டதை நாம் காண்கிறோம். “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்றுதானே வேதம் நமக்குக் கூறுகிறது (ரோமர் 12:15). நம் துக்கத்தில் இயேசுவும் கலந்து கொள்கிறார் என்பதே எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது.
ஆதியிலே ஏதேனின் மனிதன் பாவம் செய்த போது மரணமானது மனிதனுடைய வாழ்க்கையில் பிரவேசித்தது. அங்கே பாவம் செய்த போது, நடந்ததை மூன்று வகைப்படுத்தலாம்.
1. உடனடி ஆவிக்குரிய மரணம் - Immediate Spritual Death (தேவனுடம் தொடர்பு துண்டிக்கப்படுதல்)
2. படிப்படியான சரீர மரணம் - Gradual physical Death
3. நித்திய மரணம் - Ultimate Eternal Death
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்றாலும் கூட “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” பாவம் செய்து ஆத்துமாவிலும் சரீரத்திலும் மரித்து நித்தியத்தை இழந்த மனிதனுக்காகவே இயேசு இந்த பூமிக்கு வந்தார். தம்மையே தந்தார். நம்மையும் உயிர்ப்பித்தார். மரித்தவர்களைக் குறித்த உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும் தாம் உயிர்த்து நம்மிடம் விதைத்திருக்கிறார். ஆகவே ஒரு கிறிஸ்தவன் மரணத்தை கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.”
உயிரோடிருக்கிற நாம் நம் முடிவைக் குறித்து சிந்திக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது. சமீபத்தில் இராபர்ட் ஏனன் என்பவரைக் குறித்து வாசித்தேன். அவர் சீக்கிரம் மரித்துவிடுவார் என்பதை தேவன் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இத்தனைக்கு அவர் நல்ல திடகாத்திரமான வாலிபர். நோயாளி இல்லை. ஒரு நாள் அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது அன்று சற்று விநோதமாக ஒரு சாக்பீஸை எடுத்து தன் வீட்டு கதவில் மரணம் என்று எழுதினார். வெளியே வாசலில் “பரலோகம்” என்று எழுதிவிட்டு சென்றார். சென்ற இடத்தில் அவர் மரித்தும் போனார். பாருங்கள். நாம் மரிக்கும் போது எங்கே செல்வோம் என்கிற நிச்சயமுள்ளவர்களாக இருக்கிறோமா? ஒரு பரிசுத்தவான் தன் மரணப்படுக்கையில் இப்படியாகச் சொன்னார், “நான் இங்கே கண்களை மூடுவேன், விழிக்கும்போது பரலோகத்தில் இருப்பேன்” இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. மரணம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் உயிர்த்தெழுதலானது மறுபிறப்பின் அனுபவம் உடையவர்களுக்கு மாத்திரமே!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது” என்பதை பறை சாற்றியது. உலகப்பிரகாரமாக எவரும் சீக்கிரம் மரிக்க விரும்ப மாட்டார்கள். யாவருமே மரணத்தருவாயில் ஒரு போராட்டத்திற்கு பின்பே பெரும்பாலும் தங்கள் உலக ஓட்டத்தை முடிக்கின்றனர். ஆனால் நாம் மரணத்திற்கு பயப்படுகிறவர்களாக இருக்கக் கூடாது. தேவனுக்கே பயப்படவேண்டும். மரணத்தைப் பார்த்து, “மரணமே உன் கூர் எங்கே?” என்று சவாலிடத்தக்கவர்களாக இருக்கவேண்டும். “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” தேவனுக்கு மாத்திரம் பயப்படுகிறவர்கள் வேறு எதற்கும் அது மரணமானாலும் கூட பயப்பட மாட்டார்கள்.
தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களும் மரணத்திற்கு பயப்பட மாட்டார்கள். “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”
எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ஒருவர் மரிக்கும் தருவாயில் தனது கடைசி ஆசையாக இப்படிச் சொன்னார்: “நான் மரித்த பின்பு, எனது மரணத்திற்காக யாரும் துக்கப்பட கூடாது, மாறாக கர்த்தருக்குள் மரித்தார் என்று மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். ஊரெங்கும் இரங்கல் அஞ்சலி சுவரொட்டிகளுக்குப் பதிலாக நான் கர்த்தருக்குள் மரித்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுதான் அச்சிட வேண்டும் என்று கூறினார். அது போலவே செய்தார்கள். நமக்கு இது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா! சிலருக்கு பைத்தியக்காரத்தனமாகக் கூட தோன்றும். கிறிஸ்தவர்கள் மரிக்கும் போது அவர்களைப் பிரிபவர்களுக்கு நிச்சயம் வேதனை வருத்தம் இருக்கும். ஆனால் மரிப்பவருக்கு அதுவே பரமானந்தத்தின் நித்திய துவக்கம். இப்படிப்பட்ட நம்பிக்கை நமக்கு இருக்கிற படியால் நாம் மற்ற உலகத்தார் போல துக்க முகமாய் இருக்க வேண்டியதில்லை. இப்போது உயிரோடிருக்கிற நாமும் அவர்களுடன் ஒரு நாள் சேர்ந்து கொள்வோம். (1 தெசலோனிகேயர் 4:13-18)
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம் என்று வேதம் 1 கொரிந்தியர் 15:26ல் கூறுகிறது. நமது இயேசு மரணத்தை ஜெயித்தார். நாமும் ஜெயிப்போம். இப்போது ஒருவேளை இழப்பினால் நாம் துவண்டு விடலாம். ஆனால் நாம் நித்தியத்தில் சேரும்போது, “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்ற நிலை உண்டாகும். அல்லேலுயா!
நான் வாழாத ஒரு வாழ்வு
நான் சாகாத ஒரு சாவு
இன்னொருவர் வாழ்வு
இன்னொருவர் சாவு
இவையன்றோ என் நித்ய வாழ்வுக்கு ஈடு
இரு முறை மரித்தால்
ஒரு மரணம்
ஒரு முறை மரித்தால்
இரு மரணம்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.(நீதிமொழிகள் 12:28)
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.(சங்கீதம் 116:15)
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
மேலும் நம்மூர்களில் துஷ்டி வீடுகளில் துக்கம் விசாரித்தல் என்பது எல்லாரும் பின்பற்றும் ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. ஒருவர் மரித்த பின் அவர் எப்போது, எப்படி மரித்தார்? என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, வாழும்போது அவர் நல்லவராகவே வாழ்ந்தார் என்ற நற்சாட்சியை கொடுத்து துக்கமாக இருப்பவர்களை தேற்றுவார்கள். அதுவுமல்லாது ஒருவர் மரித்துவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டால், அழைப்பு இல்லாமலேயே அங்கே அனைவரும் (பகை உள்ளவர்கள் கூட) செல்வர், அந்த வீட்டாரின் துக்கத்தில் பங்கு கொள்வர். ஆனால் இதிலும் எனக்கு நீண்ட காலமாக ஒரு தவறான கருத்து இருந்துவந்தது. நாம் துக்கம் விசாரிக்கும்போது அவர்களின் துக்கம் அதிகரிக்கத்தானே செய்யும் என்கிற கருத்தை உடையவனாயிருந்தேன். காரியம் அறியாத மூடனாகவே இருந்திருக்கிறேன். ஆனபடியால்தான் எனக்கு மிகவும் பிரியமான சகோ.பேதுரு அவர்களின் சகோதரன் மரித்த போது வெகுகாலம் அவர்களிடம் பேசுவதைக் கூட தவிர்த்தேன். நான் அது பற்றி விசாரித்தால் அவர்களின் துக்கம் அதிகரித்துவிடுமே என்று அஞ்சினேன் (எவ்வளவு மதியீனம் பாருங்கள். சகோதரன் என்னை மன்னிப்பாராக) இவவாறு எனது கருத்துக்களினால் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு பின்பு வருந்துவதே எனக்கு வேதனையாக இருக்கிறது.
துக்கவீடுகளில் எல்லாம் எடுத்துக்காட்டப்படும் வசனங்களில் ஒன்று, ”விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.” (பிரசங்கி 7:2). துக்க வீட்டுக்குச் செல்கிறவன் சிந்திப்பான் என்று வசனம் கூறுகிறது. நானும் இப்போது ஒரு துக்க வீட்டில் இருக்கிறேன் ஆகையால் சற்று சிந்திக்கிறேன்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் முதலாம் அற்புதம் ஒரு கல்யாண விருந்திலே ஆரம்பித்தது. ஆனால் அதற்கப்புறம் அவர் கல்யாண விருந்துக்குச் சென்றதாக வேதம் கூறவில்லை. அதேவேளையில் இயேசு சாவு நிகழ்ந்திருந்த பல வீடுகளுக்குச் சென்றதாக வேதம் நமக்கு கூறுகிறது.
1.மரித்துப் போன யவீருவின் மகளை இயேசு உயிரோடே எழுப்பினார். அங்கே இயேசு சொன்ன வார்த்தை “ ’தலீத்தாகூமி’சிறு பெண்ணே எழுந்திரு.”
2. விதவையின் மரித்துப் போன வாலிப மகனை பாடையைத் தொட்டு உயிரோடே எழுப்பினார்.
3. மரித்து நான்கு நாட்கள் ஆன லாசருவை கல்லறையிலிருந்து, “லாசருவே வெளியே வா” என்று கூறி அவனை உயிரோடே எழுப்பினார். (லாசருவிற்குதான் உலகத்தில் இரண்டு கல்லறைகள்)
எல்லாவற்றிற்கும் மேலாக லாசருவின் வீட்டிற்குச் செல்லும் போது இயேசு கண்ணீர் விட்டார் என்றும் வேதம் கூறுகிறது. லாசருவை உயிரோடே எழுப்புவதற்கு முன் இயேசு அவர்களின் துக்கத்திலே பங்கு கொண்டதை நாம் காண்கிறோம். “அழுகிறவர்களுடனே அழுங்கள்” என்றுதானே வேதம் நமக்குக் கூறுகிறது (ரோமர் 12:15). நம் துக்கத்தில் இயேசுவும் கலந்து கொள்கிறார் என்பதே எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது.
ஆதியிலே ஏதேனின் மனிதன் பாவம் செய்த போது மரணமானது மனிதனுடைய வாழ்க்கையில் பிரவேசித்தது. அங்கே பாவம் செய்த போது, நடந்ததை மூன்று வகைப்படுத்தலாம்.
1. உடனடி ஆவிக்குரிய மரணம் - Immediate Spritual Death (தேவனுடம் தொடர்பு துண்டிக்கப்படுதல்)
2. படிப்படியான சரீர மரணம் - Gradual physical Death
3. நித்திய மரணம் - Ultimate Eternal Death
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்றாலும் கூட “தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.” பாவம் செய்து ஆத்துமாவிலும் சரீரத்திலும் மரித்து நித்தியத்தை இழந்த மனிதனுக்காகவே இயேசு இந்த பூமிக்கு வந்தார். தம்மையே தந்தார். நம்மையும் உயிர்ப்பித்தார். மரித்தவர்களைக் குறித்த உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும் தாம் உயிர்த்து நம்மிடம் விதைத்திருக்கிறார். ஆகவே ஒரு கிறிஸ்தவன் மரணத்தை கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம், இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.”
உயிரோடிருக்கிற நாம் நம் முடிவைக் குறித்து சிந்திக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது. சமீபத்தில் இராபர்ட் ஏனன் என்பவரைக் குறித்து வாசித்தேன். அவர் சீக்கிரம் மரித்துவிடுவார் என்பதை தேவன் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இத்தனைக்கு அவர் நல்ல திடகாத்திரமான வாலிபர். நோயாளி இல்லை. ஒரு நாள் அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது அன்று சற்று விநோதமாக ஒரு சாக்பீஸை எடுத்து தன் வீட்டு கதவில் மரணம் என்று எழுதினார். வெளியே வாசலில் “பரலோகம்” என்று எழுதிவிட்டு சென்றார். சென்ற இடத்தில் அவர் மரித்தும் போனார். பாருங்கள். நாம் மரிக்கும் போது எங்கே செல்வோம் என்கிற நிச்சயமுள்ளவர்களாக இருக்கிறோமா? ஒரு பரிசுத்தவான் தன் மரணப்படுக்கையில் இப்படியாகச் சொன்னார், “நான் இங்கே கண்களை மூடுவேன், விழிக்கும்போது பரலோகத்தில் இருப்பேன்” இதுவே கிறிஸ்தவ நம்பிக்கை. மரணம் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் உயிர்த்தெழுதலானது மறுபிறப்பின் அனுபவம் உடையவர்களுக்கு மாத்திரமே!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது” என்பதை பறை சாற்றியது. உலகப்பிரகாரமாக எவரும் சீக்கிரம் மரிக்க விரும்ப மாட்டார்கள். யாவருமே மரணத்தருவாயில் ஒரு போராட்டத்திற்கு பின்பே பெரும்பாலும் தங்கள் உலக ஓட்டத்தை முடிக்கின்றனர். ஆனால் நாம் மரணத்திற்கு பயப்படுகிறவர்களாக இருக்கக் கூடாது. தேவனுக்கே பயப்படவேண்டும். மரணத்தைப் பார்த்து, “மரணமே உன் கூர் எங்கே?” என்று சவாலிடத்தக்கவர்களாக இருக்கவேண்டும். “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.” தேவனுக்கு மாத்திரம் பயப்படுகிறவர்கள் வேறு எதற்கும் அது மரணமானாலும் கூட பயப்பட மாட்டார்கள்.
தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களும் மரணத்திற்கு பயப்பட மாட்டார்கள். “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”
எனக்குத் தெரிந்த ஒரு போதகர் ஒருவர் மரிக்கும் தருவாயில் தனது கடைசி ஆசையாக இப்படிச் சொன்னார்: “நான் மரித்த பின்பு, எனது மரணத்திற்காக யாரும் துக்கப்பட கூடாது, மாறாக கர்த்தருக்குள் மரித்தார் என்று மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். ஊரெங்கும் இரங்கல் அஞ்சலி சுவரொட்டிகளுக்குப் பதிலாக நான் கர்த்தருக்குள் மரித்தேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுதான் அச்சிட வேண்டும் என்று கூறினார். அது போலவே செய்தார்கள். நமக்கு இது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா! சிலருக்கு பைத்தியக்காரத்தனமாகக் கூட தோன்றும். கிறிஸ்தவர்கள் மரிக்கும் போது அவர்களைப் பிரிபவர்களுக்கு நிச்சயம் வேதனை வருத்தம் இருக்கும். ஆனால் மரிப்பவருக்கு அதுவே பரமானந்தத்தின் நித்திய துவக்கம். இப்படிப்பட்ட நம்பிக்கை நமக்கு இருக்கிற படியால் நாம் மற்ற உலகத்தார் போல துக்க முகமாய் இருக்க வேண்டியதில்லை. இப்போது உயிரோடிருக்கிற நாமும் அவர்களுடன் ஒரு நாள் சேர்ந்து கொள்வோம். (1 தெசலோனிகேயர் 4:13-18)
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம் என்று வேதம் 1 கொரிந்தியர் 15:26ல் கூறுகிறது. நமது இயேசு மரணத்தை ஜெயித்தார். நாமும் ஜெயிப்போம். இப்போது ஒருவேளை இழப்பினால் நாம் துவண்டு விடலாம். ஆனால் நாம் நித்தியத்தில் சேரும்போது, “கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்ற நிலை உண்டாகும். அல்லேலுயா!
நான் வாழாத ஒரு வாழ்வு
நான் சாகாத ஒரு சாவு
இன்னொருவர் வாழ்வு
இன்னொருவர் சாவு
இவையன்றோ என் நித்ய வாழ்வுக்கு ஈடு
இரு முறை மரித்தால்
ஒரு மரணம்
ஒரு முறை மரித்தால்
இரு மரணம்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.(நீதிமொழிகள் 12:28)
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.(சங்கீதம் 116:15)
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Sunday, June 27, 2010
இயேசுவைப் பின்பற்றவா
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்? - எந்தன்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்?
சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா -நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்றி வா
ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
.
பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மை பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இரங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன்
தம்பி அண்ணா அழைக்கிறேன் வா, உடன்பிறப்பே ஓடி வா, இரத்தத்தின் இரத்தமே இறங்கி வா என்று அழைக்கும் குரல்களுக்கும், தலைவர்களுக்கும் உலகில் பஞ்சமில்லை. பின்பற்றி எதிர்பார்த்து ஏமாந்து ஒன்றும் மிஞ்சாமல் நொந்து மனம் வெதும்பும் மனிதர்களே உலகில் ஏராளம். ஏமாற்றும் தலைவர்களும் மாற்றம் தராத கொள்கைகளும் உண்டு. எல்லாரும் கொள்கைகளைக் காட்டி, இலட்சியங்களை முன்னிறுத்தி பெரும் மனக்கோட்டை எழுப்பி, எப்படியாவது அடைந்திடலாம் வா என்றழைக்கின்றனர்.
இயேசுவோ ”என்னைப் பின்பற்றி வா” என்றழைக்கிறார். அவர் அழைப்பதிலும் கூட வித்தியாசமானவர். நீங்கள் “பின்பற்றும் படி” நான் மாதிரியை வைத்துப் போகிறேன் என்றார். என்னைப் பின்பற்ற தன்னை(சுயத்தை) வெறுக்க வேண்டும் என்றார். இயேசுவைப் பின்பற்றுவதற்கும் சுயத்தை வெறூப்பதற்கும் என்ன சம்பந்தம்? பின்பற்றுவதற்கு நிபந்தனைகளா? இல்லை. இல்லை. இயேசுவைப் பின் பற்றுதல் என்பதே அவரின் அடிச் சுவடுகளில் நடப்பதுதானே. “உமது சித்தத்தின் படி ஆகக்கடவது” என்று பிதாவின் கரத்தில் தனது சுயத்தை கொடுத்து ஜெயத்தை எடுத்தவரன்றோ நம் இயேசு பெருமான். அதையே நாமும் செய்யவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.
” கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் ஆசைகளையும் அதன் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்”
(இன்னமும் பின்தொடர்ந்து வரும்)
இந்தப் பூவுலகில்? - எந்தன்
இயேசுவைப் பின்பற்றும் மனிதர்கள் யார்
இந்தப் பூவுலகில்?
சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா
நயமாக அழைக்கிறார் வா -நீ வா
உலக மாமிச ஆசை
வீண் என தள்ளி விட்டு வா வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
எல்லாவற்றையும் விட்டு வா - நீ வா
எல்லாவற்றையும் விற்று வா - நீ வா
பிசாசின் வலையில் சிக்கி
பாழாய் போய் விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்றி வா
ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா
உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா
இச்சையின் வலையில் நீ
சிக்கி விடாதே வா, வா - நீ வா
இயேசுவைப் பின்பற்ற வா
.
பின்பற்ற வருகிறேன் நான் - நானே
உம்மை பின்பற்ற வருகிறேன் நான் - நானே
இயேசுவே இரங்கிடும்
ஏற்றிடும் என்னையும் வந்தேன் தந்தேன்
இயேசுவைப் பின்பற்றுவேன்
தம்பி அண்ணா அழைக்கிறேன் வா, உடன்பிறப்பே ஓடி வா, இரத்தத்தின் இரத்தமே இறங்கி வா என்று அழைக்கும் குரல்களுக்கும், தலைவர்களுக்கும் உலகில் பஞ்சமில்லை. பின்பற்றி எதிர்பார்த்து ஏமாந்து ஒன்றும் மிஞ்சாமல் நொந்து மனம் வெதும்பும் மனிதர்களே உலகில் ஏராளம். ஏமாற்றும் தலைவர்களும் மாற்றம் தராத கொள்கைகளும் உண்டு. எல்லாரும் கொள்கைகளைக் காட்டி, இலட்சியங்களை முன்னிறுத்தி பெரும் மனக்கோட்டை எழுப்பி, எப்படியாவது அடைந்திடலாம் வா என்றழைக்கின்றனர்.
இயேசுவோ ”என்னைப் பின்பற்றி வா” என்றழைக்கிறார். அவர் அழைப்பதிலும் கூட வித்தியாசமானவர். நீங்கள் “பின்பற்றும் படி” நான் மாதிரியை வைத்துப் போகிறேன் என்றார். என்னைப் பின்பற்ற தன்னை(சுயத்தை) வெறுக்க வேண்டும் என்றார். இயேசுவைப் பின்பற்றுவதற்கும் சுயத்தை வெறூப்பதற்கும் என்ன சம்பந்தம்? பின்பற்றுவதற்கு நிபந்தனைகளா? இல்லை. இல்லை. இயேசுவைப் பின் பற்றுதல் என்பதே அவரின் அடிச் சுவடுகளில் நடப்பதுதானே. “உமது சித்தத்தின் படி ஆகக்கடவது” என்று பிதாவின் கரத்தில் தனது சுயத்தை கொடுத்து ஜெயத்தை எடுத்தவரன்றோ நம் இயேசு பெருமான். அதையே நாமும் செய்யவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார்.
” கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் ஆசைகளையும் அதன் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்”
(இன்னமும் பின்தொடர்ந்து வரும்)
Friday, June 18, 2010
தமிழின் முதல் உரைநடைத்தமிழ் நூல் - கிறிஸ்தவ நூலும் கூட
நாம் பள்ளிக்கல்வி பயிலும் போது தமிழின் முதல் உரைநடைத்தமிழ், முதல் நாவல் (புதினம்) பிரதாப முதலியார் சரித்திரம் என்று படித்திருப்போம். அதற்கு மேல் அதைக் குறித்து பெரும்பாலும் பெரும்பாலானோர்க்கு (எனக்கும்தான்) எதுவும் தெரியாது. அதை எழுதின மாயூரம் வேதநாயகம் குறித்தாவது எதாவது தெரிந்திருக்குமா என்றால் அதுவும் எங்கேயோ கேட்ட குரல்தான்.
தமிழ் செம்மொழி அந்தஸ்தை இந்தியாவில் பெற்று சில வருடங்களே ஆகினும் உலக மொழிகளில் தொன்மையான நூல்களை கொண்ட ஆறே ஆறு நூல்களில் தமிழும் ஒன்று என்பது எவ்வளவு பெருமைக்குரியது. இந்தியாவில் தமிழும் சமஸ்கிருதமும் தொன்மையானவை. ஆனால் சமஸ்கிருதம் பேச்சுமொழி அல்ல. அந்து மந்திரம் ஓதுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுத்துமொழியாகவும் பேச்சுமொழியாகவும் இருந்து சாதனை புரிந்து வருகிறது. அதுவே சிலருக்கு வேதனையாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. தொல்தமிழானது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று வகைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. உலகில் வேறெந்த மொழிகளிலும் இம்மாதிரியான பகுப்புகள் கிடையாது என மொழியியலார் கூறுகின்றனர். இவ்வகையான சிறப்புகள் தமிழுக்கு இருந்தாலும் பாமரனுக்கும் படிக்காதோருக்கும் புரியும் வண்ணம் தமிழ் நூல்கள் இருக்கவில்லை. இதற்கு காரணம் பேச்சுத்தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் காணப்பட்ட இடைவெளிதான். ஏன் நீங்களே ஏதாகிலும் பழைய செய்யுளை எடுத்து படித்தால் தலையும் புரியாமல் காலும் புரியாமல் திருதிருவென நாம் முழிப்பதே இதற்கு சாட்சி. சாம்பிளுக்கு ஒன்றை தருகிறேன்.
காக்கக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
நோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்குக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா. பாடியவர் - காளமேகப் புலவர்)
என்ன வாசித்துப் பார்த்தீர்களா? நாக்கு சுளுக்கிவிட்டதா? நாம் பள்ளிக்கூடத்தில் படித்த இந்த பாடலின் பொருள் எளிமையானதுதான் (தெரிந்தால் அட இவ்வளவுதானா? இதற்கா இந்த பில்டப்பு என்று சொல்லிவிடுவீர்கள்). ஆனால் எல்லாருக்கும் பொருள் புரியாது கற்றறிந்தவர்களே தமிழை ரசிக்க ருசிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. எதுவரைக்கும்? உரைநடைத்தமிழ் என்ற ஒன்று வரும் வரைக்கும். உரைநடைத்தமிழுக்கான தேவை உணரப்பட்டு வந்தாலும் அதைச் செய்ய எவரும் முன்வருகிலர். ஏனெனில் முன்னைய பாரம்பரியங்களிலிருந்து விடுபட்டு புதிய பாதை போட எவருக்கும் துணிவு இல்லை.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்பார் அத்தகைய துணிவு பெற்று தமிழின் முதல் உரைநடை நூல், முதல் புதினம் ஆகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதினார். இந்நூல் பிரதாப முதலியார் என்பவர் தனது சுய சரிதையை சொல்லும் பாங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலைக்குறித்து சொல்லுவதற்கு முன்பு நூலாசிரியர் வேதநாயக்ம் குறித்து கொஞ்சமாவது சொல்ல வில்லை எனில் நான் பெரும் பாவியாவேன். ஏனெனில் தமிழ்கூறும் நல்லுலகில் இவர் குறித்த தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதே! இவர் கிறிஸ்தவர் என்பதினாலோ என்னவோ!
மாயூரத்தில் நீதியரசராக பணியாற்றிய வேதநாயகம் திருச்சி குளத்தூரில் பிறந்தவர். இவரே இந்தியாவின் முதல் இந்திய மற்றும் தமிழ் நீதிபதி ஆவார் என்பது ஒரு ஆச்சரியமான செய்திதான். தமிழுக்காக தமிழ் கிறிஸ்தவர்களும் அயல்தேச மிசனெரி ஊழியர்களும் ஆற்றிய திருத்தொண்டை எவ்வளவுதான் மறைக்க பலர் முயன்றாலும் ஆயிரம் கைகளை வைத்தாலும் ஆதவனை மறைக்க முடியுமோ? என்பதுபோல நம்மவர்களின் படைப்புக்கள் அவர்களின் நல் முயற்சிகளுக்கு சான்றாக உள்ளன.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூல் கதைநாயகன் தனது சுய சரிதையை கூறுமாறு தன்னிலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் இவ்வகைப் படைப்புகள் இன்றளவும் மிகவும் குறைவே. ஆங்கிலமொழியில் தன்னிலை தன்மையிலான படைப்புகள் ஏராளம் உண்டு. தமிழில் மிகவும் குறைவாக இவ்வகையில் படைப்புகள் இருப்பதற்கு முழு நூலையும் தன்னிலையில் எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதன்று.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற தலைப்பு நமக்கு வாசிக்கும் விருப்பத்தை அவ்வளவாக தூண்டாவிடினும் நூலின் உள்ளடக்கம் மிகவும் சுவையாகவும் வாசிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதாகவும் உள்ளது. இந்த நூலை ஆசிரியர் எழுதக் காரணம் முதல் நாவலை எழுதி புகழ் பெற வேண்டும் என்பதல்ல... ஏனெனில் அவர் ஏற்கனவே மிகவும் புகழ்பெற்றவர், முதல் இந்திய நீதிபதி. தாம் ஏன் எழுதினோம் என்பதைப் பாடலாகவே எழுதி வைத்திருக்கிறார்.
"வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமேயல்லாது
செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா!
நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல்
இருக்கிற வரையில் இந்த தேசம் சரியான சீர்திருத்தம் அடையாது
என்பது நிச்சயம்'
செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா!
நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல்
இருக்கிற வரையில் இந்த தேசம் சரியான சீர்திருத்தம் அடையாது
என்பது நிச்சயம்'
பிரதாப முதலியார் சரித்திரம் நூல் வெறும் நாவல் மட்டுமல்ல, பல உலகச் சம்பவங்களையும், தத்துவங்களையும் அதைவிட முக்கியமாம சிறந்த நகைச்சுவைகளையும் உடையதாக உள்ளது. நகைச்சுவை என்பது இன்னாட்களில் திரைப்படங்களில் வருவது போல தனி டிராக்கில் செல்லாமல் கதியினூடேயே பின்னிப்பிணைந்து வருகிறது. உதாரணமாக ..,
“நாங்கள் வந்தபோது எங்கள் வீட்டிற்கு வீட்டிற்கு எதிரேயிருக்கிற மைதானத்தில் கூத்தாடிகள் வேஷம் போட்டுக்கொண்டு, இராம நாடகம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வந்த போது இராமரும், ல்ஷ்மணனும் நகரத்தை விட்டு புறப்பட்டு காட்டுக்குப் போகிற சமயமாயிருந்தது; அப்பொழுது தசரதல் கௌசல்யை முதலான சகல ஜனங்களும் அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். அதை கண்டவுடனே நான் கனகசபையைப் பார்த்து, “ அந்தப் பொல்லாத கைகேசியினாலே இராமர் பட்டத்தை இழந்து மனமுருகி வாழவும் சம்பவித்திருக்கிறதே! இந்த அநியாயத்தை பார்த்துக் கொண்டு நான் சும்மா இருப்பது தர்மமா?” என்று கேட்க அவன் “இந்த அக்கிரமத்தை தடுக்க முயற்சிக்காமல் நாம் சும்மா இருப்பது அழகல்ல” என்றான். நானும் அவனும் மற்றப்பிள்ளைகளும் எங்கள் கைகளில் இருந்த சிலம்பக் கம்முகளுடன் சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஜனங்களின் தலைமேல் ஏறிமிதித்துக் கொண்டு, நாடகசாலைக்குள்ளே பிரவேசித்துவிட்டோம். அங்கே தன் பிள்ளைக்கு பட்டாபிசேகம் ஆகுமென்கிற அகக்களிப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்த கைகேயியை வளைத்துக் கொண்டு எங்கள் கை சலிக்கிற வரையில் அடித்தோம். அவள் “ பரதனுக்கு பட்டம் வேண்டாம், வேண்டாம்” என்று சொல்லிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள். அப்பொழுது கூனி அகப்பட்டிருந்தால் அவளை எமலோகத்துக்கு அனுப்பியிருப்போம். அவளுடைய அதிர்ஷ்ட வசத்தால் அகப்படாமல் தப்பித்துக் கொண்டாள்: காட்டுக்குப் போகிற இராமரிடம் நகரத்துக்கு திரும்பும்படிச் சொன்னோம். அவர் “பிதுர் வாக்கிய பரிபாலனம் (தந்தையின் வாக்கை நிறைவேற்ற) செய்வதற்காக நான் காட்டுக்கு போவது அகத்தியம்” என்றார். நீர் போனால் காலை ஒடித்துவிடுவோம் என்று வழிமறித்துக் கொண்டு அவருக்கு நியாயத்தை எடுத்துக் காட்டி மெய்ப்பித்தோம். எப்படி என்றால் “ சும்மா இருந்த உம்மை உம்முடைய தகப்பனார் அழைத்து உம்மைப் பட்டங்கொள்ளும்படி சொல்லி, நீரும் அதற்கு சம்மதித்து ஊருக்கு முரசறைவித்த பின், உமக்குக் கொடுத்த இராச்சியத்தை பரதனுக்கு கொடுக்க அவருக்கு அதிகாரம் உண்டா? அப்படி அவர் கொடுத்தால் அது அசத்தியமல்லவா? உமக்கு பட்டாபிஷேகம் ஆனால்தான் உம் தந்தையாருடைய சத்தியம் நிலைக்கும்.
“என்னே அரசர் இயற்கை யிருந்தவா
தன்னே ரிலாத தலைமகற்கு தாரணியை
முன்னே கொடுத்து முறைதிறம்பத் தம்பிக்குப்
பின்னே கொடுத்தாற் பிழையாதோ மெய்யென்பார்”
என்று கம்பரும் சொல்லியிருக்கிற படியால், ஊருக்குத் திரும்பும் என்றேன். இராமர் நான் சொன்ன வாய் நியாயத்தைப் பார்க்கிலும், தடியடி நியாயத்துக்கும் பயந்து உடனே நகரத்துக்கு திரும்பினார். நான் வசிட்டர் முதலானவர்களை அழைத்து இராமருக்கு மகுடாபிஷேகம் செய்வித்தேன். இந்தப் பிரகாரம் இராமாயணம் சப்த காண்டத்தை ஒன்றரைக் காண்டத்துக்குள் அடக்கி, இராமரும் அவருடைய தம்பியும் சீதையும் வனத்துக்குப் போகாமலும், தசரதர் இறவாமலும், இராவணன் சீதையை எடுத்தானென்ற அ அபவாதம் இல்லாமலும் இராவணாதிகளை ராமர் கொலை செய்தாரென்கிற பழிச்சொல் இல்லாமலும், சிறு பிள்ளையாகிய பரதன் ராஜ்ஜியபாராம் தாங்கி வருந்தாமலும் செய்து, பிரதாப முதலி என்னும் பேரை நிலை நிறுத்தினேன்.”
ஒரு நாள் எங்கள் குடும்ப வைத்தியர் வீதியில் வருகிறதைக் கண்டு அவர் கண்ணில் படாமல் நான் ஓடி ஒளிந்து கொண்டேன். கனகசபை “ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்?” என்று கேட்டான். “நமக்கு சில நாளாய் வியாதி வரவில்லையே! வைத்தியருக்கு கோபமாயிருக்குமென்றூ பயந்து ஒளிந்து கொண்டேன் ” என்றேன். மறுபடி ஒரு நாள் அந்த வைத்தியர் என்னைக் கண்டு, “ பூர்வீக மனுஷர்கள் எல்லாரும் தீர்க்காயுசாயிருந்தார்கள்; இந்தக் காலத்து மனுஷர்களுக்கு ஆயுசு குறைந்துபோனதற்கு காரணமென்ன?” என்றூ கேட்டார். நான் அவ் அரைப் பார்த்து “ பூர்வீகத்தில் வைத்தியர்கள் இல்லாதபடியால் அவர்கள் நீடிய ஆயுசு உள்ளவர்களாயிருந்தார்கள்; இந்தக் காலத்தில் வைத்தியர்கள் அதிகமாயிருப்பதால் ஆயுசு குறைந்து விட்டது” என்றேன்.
மேலே சொன்னவை பிரதாப முதலியார் சரித்திரம் நூலில் உள்ள கடலளவு நகைச்சுவையில் ஒரு துளியே. மேலும் மூட நம்பிக்கைகளுக்கெதிராகவும் பல சிந்திக்கக் கூடிய கருத்துக்களையும் இந்நூலில் நாம் அடிக்கடி காணலாம்.
பிரதாப முதலியார் சரித்திரம் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதை நீங்கள் வாசித்தால்தான் முழுமையான சுவையை நீங்கள் பெற முடியும். வாசிக்க ஆரம்பித்தால், முடிப்பது கடினம். இந்நூலின் மின் பதிப்புக்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். வாசித்து மகிழுங்கள்.
Download Link:
http://uploading.com/files/1b3489dd/pirathabamuthailyar.PDF/
இன்னுமதிக தகவல்களுக்கு:
2. ஆண்களுக்குத் தலை பத்தா? வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-1
3.மாயூரம் வேதநாயகர் நாவல் மட்டுமா எழுதினார்?
4.மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள் - வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும் பகுதி-3
5. மாமிசம் உண்ணும் பிராமணர்கள்
6. மாயூரம் வேதநாயகரின் சமுதாயப்பணி
7. சாதனையாளர் மாயூரம் வேதநாயகர்
8. மறக்கப்பட்டாரா மாயூரம் வேதநாயகம் பிள்ளை?
Tuesday, May 11, 2010
ஆதியாகமம் - வெளிப்படுத்தல் ஒரு ஒப்பீடு
1. ஆதியாகமம் : வானமும் பூமியிம் படைக்கப்பட்டன. (1:1)
வெளிப்படுத்தல் : முந்தின வனமும் பூமியும் ஒழிந்து போயின (21:1)
2. ஆதியாகமம் : பாழும் வெறுமையுமான பூமி (1:2)
வெளிப்படுத்தல் : புதிய பூமி (21:1)
வெளிப்படுத்தல் : புதிய பூமி (21:1)
3. ஆதியாகமம் : இருள் மூடியிருந்தது ( 1:2)
வெளிப்படுத்தல் : இரவே இல்லை(22:5)
வெளிப்படுத்தல் : இரவே இல்லை(22:5)
4. ஆதியாகமம் : சூரிய சந்திராதிகள் படைக்கப்பட்டன. (1:14,15)
வெளிப்படுத்தல் : சூரியன் சந்திரன் தேவையில்லை (21:23)
வெளிப்படுத்தல் : சூரியன் சந்திரன் தேவையில்லை (21:23)
5. ஆதியாகமம் : சாத்தான் சுயாதீன மக்களை தண்டிக்கிறான் (3:1-7)
வெளிப்படுத்தல் : சாத்தான் எரி நரகத்தில் எறியப்படுகிறான் (20:10)
வெளிப்படுத்தல் : சாத்தான் எரி நரகத்தில் எறியப்படுகிறான் (20:10)
6. ஆதியாகமம் : மனிதன் சாத்தானுக்கு அடிமை ஆகிறான். ரோமர் 6:16; ஆதி.3:6)
வெளிப்படுத்தல் : மனிதன் அரசாளுகிறான் (20:4)
7. ஆதியாகமம் : மனிதன் வெட்கத்தாலும் பயத்தாலும் ஒளிந்து கொள்கிறான்.(3:8,9)
வெளிப்படுத்தல் : மனிதன் ஆனந்தத்தால் ஆரவாரிக்கிறான் (19:4, 5:10)
வெளிப்படுத்தல் : மனிதன் ஆனந்தத்தால் ஆரவாரிக்கிறான் (19:4, 5:10)
8. ஆதியாகமம் : மனிதன் தேவ சமூகத்தை இழக்கின்றான் ( 3:23)
வெளிப்படுத்தல் : மனிதன் தேவனோடு கூடவே தங்குகிறான் (21:3)
வெளிப்படுத்தல் : மனிதன் தேவனோடு கூடவே தங்குகிறான் (21:3)
9. ஆதியாகமம் : தேவன் மனிதனை துரத்துகிறார் (3:24)
வெளிப்படுத்தல் :தேவன் மனிதனை அழைக்கிறார் (22:17)
வெளிப்படுத்தல் :தேவன் மனிதனை அழைக்கிறார் (22:17)
10. ஆதியாகமம் : மரணம் மக்களை ஆண்டு கொள்கிறது (2:17)
வெளிப்படுத்தல் : மரணமே இல்லை (21:4)
வெளிப்படுத்தல் : மரணமே இல்லை (21:4)
11. ஆதியாகமம் : சாபம் உலகத்தை பிடிக்கிறது (3:17)
வெளிப்படுத்தல் : சாபமே இல்லை (22:3)
வெளிப்படுத்தல் : சாபமே இல்லை (22:3)
12.ஆதியாகமம் : ஜீவ கனி புசிக்கமுடியாதவாறு விலக்கப்படுகிறது (3:24)
வெளிப்படுத்தல் : ஜீவ கனி புசிக்க கொடுக்கப்படுகிறது. (22:2)
வெளிப்படுத்தல் : ஜீவ கனி புசிக்க கொடுக்கப்படுகிறது. (22:2)
Subscribe to:
Posts (Atom)