Saturday, January 16, 2021

தேவனே, என்னைக் காப்பாற்றும்

வாசிக்க: ஆதியாகமம்  31, 32; சங்கீதம் 16; மத்தேயு 8:18-34

வேதவசனம்: மத்தேயு 8:24  அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று; அவரோ (இயேசு) நித்திரையாயிருந்தார்.

கவனித்தல்: இந்த வசனத்தை வாசிக்கும்போது, புயலின் நடுவில் ஒரு மனிதன் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும் என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு.  இயேசுவும் அவருடைய சீடர்களும் ஒரு படகில் இருந்தார்கள், நன்றாக தூங்க வசதியான ஒரு இடத்தில் அவர்கள் இருக்கவில்லை. அலைகளினால் தடுமாறும் ஒரு படகில், நேராக நிற்பதே கடினமாக ஒரு  காரியம். ஆனால்  “அவரோ நித்திரையாயிருந்தார்.” தண்ணீரில் மூழ்கிவிடுவோம் என்று அவருடைய சீடர்கள் மிகவும் பயத்தில் இருந்தனர். ஆகவே, அவர்கள் இயேசுவின் உதவியை நாடினர். இயேசு அவர்களுக்குச் சொன்ன பதிலை நான் பின்வருமாறு பார்க்கிறேன். நான் படகில் இருக்கும்போது “ஏன் பயப்படுகிறீர்கள்” என்று இயேசு தம் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இயேசுவின் கட்டளைக்கு காற்றும் கடலும் கீழ்ப்படிந்ததைக் கண்டு அவர்கள் மிகவும் “ஆச்சரியப்பட்டனர்.” அற்புதங்களை நம்புவது சிலருக்குக் கடினமானதாக இருக்கிறது. ஆயினும், இந்த வேத பகுதி சொல்வது போல, காற்று மற்றும் கடலின் மீதும் கூட இயேசு அதிகாரமுடையவர். தேவனுடைய எல்லா படைப்புகளின் மீதும் அதிகாரமுள்ள ஆண்டவராக இயேசு இருக்கிறார். நம் வாழ்க்கையில் நாம் சில சமயங்களில் எதிர்பாராத அல்லது திடீரென நடக்கிற சம்பவங்களைக் காணக்கூடும்.  இயேசு நம்முடன் இருக்கும் வரைக்கும், நாம் எதைப் பற்றியும் பயப்படத் தேவை இல்லை.

பயன்பாடு: எதிர்பாராத ஒரு புயலை என் வாழ்வில் நான் சந்திக்க நேரிடும்போது, நான் என்ன செய்கிறேன்? என் வாழ்க்கை மற்றும் என் எதிர்காலம் குறித்து நான் கவலைப்பட்ட தருணங்கள் உண்டு. நிம்மதி இன்றி, புயலில் இருந்து என் வாழ்க்கையைக் காத்துக் கொள்ள நான் பல காரியங்களைச் செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என் சூழ்நிலையை என்னால் கட்டுப்படுத்த இயலாது என்று உணர்ந்து, தேவனே என்னைக் காப்பாற்றும் என்று நான் இயேசுவின் கேட்க்கும் அந்த நொடிப் பொழுதிலே, என் இருதயத்தில் தேவ சமாதானத்தை நான் பெற்று அனுபவிக்க முடியும்.  அவர் என்னுடன் எப்பொழுதும் இருக்கிறார். அவரே என் ஆண்டவர்! 

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் என்னுடனே இருக்கிறீர் என்பதையும், எல்லாம் உம் ஆளுகைக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்தும் உம் நல்ல வார்த்தைக்காக நன்றி. நீரே என் வாழ்க்கையின் நாயகர். உம் சமாதானத்தை  மனதில் உணர்ந்து அனுபவிக்கவும், உம் நாமத்தை உயர்த்தி நான் இன்று வாழவும் எனக்கு உதவும். ஆமென். 


- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
16 ஜனவரி 2021

No comments: