Sunday, April 25, 2021

தேவன் சாகவில்லை

வாசிக்க:  நியாயாதிபதிகள் 19-21; சங்கீதம் 115; லூக்கா 14: 1-24

வேதவசனம்: சங்கீதம் 115: 17. மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.
18. நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.

கவனித்தல்: சங்கீதம் 115ன் கடைசி இரண்டு வசனங்களும் அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற வசனங்களிடம் இருந்து வித்தியாசமானவை போலத் தோன்றினாலும், அவை நமக்கு முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கின்றன. நாம் வாழும் இந்தச் சூழலில், இந்த வசனங்கள் நமக்கு மிகவும் தொடர்புள்ளவையாக இருக்கின்றன. மரித்துப் போன ஒரு மனிதர் எதுவும் செய்ய முடியாது என்பதை நாமனைவரும் அறிவோம். ஆயினும், நமக்கு மிகவும் பிரியமானவராக இருப்பவரை நாம் இழந்து போகும்போது, நம்மில் பலர் அதை ஏற்றுக்கொள்ள கஷ்டப்படுகிறேன். சிலர் தேவனைப் பற்றியும் அவரு இருக்கிறாரா என்பதைப் பற்றியும் கேள்விகேட்க ஆரம்பித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட தருணங்களில், நம் மனதிலும் புறம்பே இருந்தும் நம்மை தொந்தரவுபடுத்தும் பல கேள்விகளைக் கேட்கக் கூடும். மரித்துப் போன ஒருவரைப் பற்றி நாம் செய்யக் கூடிய ஒரு நல்ல காரியம் உண்டு எனில், அவருடைய வாழ்க்கைக்காக தேவனைத் துதிக்க வேண்டும். மரித்தவர்களால் அதைச் செய்ய முடியாது. உயிரோடிருக்கும் நாமே தேவனைத் துதிக்க முடியும். இது அர்த்தமுள்ளதாக இருக்கிறதா! எசேக்கியா ராஜா சாவுக்கேதுவான வியாதியிலிருந்து பிழைத்துக் கொண்ட போது, அவரும் இது போன்று ச்ன்னார். (ஏசாயா 38:18,19). நம் தேவன் சாகவில்லை, ஆகவே நாம் உயிரோடிருக்கிறோம். தேவனுடனான உறவை இழந்து, ஆன்மீக வாழ்வில் மரணமடைந்த ஒருவர் பற்றி என்ன? தேவனுடனான உறவைச் சரிசெய்யுமட்டும், அவர்களாலும் தேவனைத் துதிக்க முடியாது. உயிருள்ள ஆன்மீக வாழ்வைக் கொண்ட ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும், இப்பொழுதும் எப்பொழுதும் தேவனைத் துதித்துக் கொண்டிருப்பார்.

பயன்பாடு: தேவன் மீது உள்ள என் விசுவாசத்தை அசைக்கக் கூடிய கேள்விகளை நான் எதிர்கொள்ளும்போது, என் தேவன் சாகவில்லை என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். என் மேல் கரிசனையுள்ள உயிருள்ள தேவனை நான் ஆராதிக்கிறேன் என்பதை நான் உணர வேண்டும்.  ” இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி.13:8). அவர் சொல்கிறார்: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” (வெளி.1:18). அவர் உயிரோடிருக்கிறபடியால், நானும் பிழைத்திருப்பேன் (யோவான் 14:19). ஆவிக்குரிய மந்தநிலையினூடாக அல்லது தேவனைத் துதிப்பதற்குக் கடினமாக இருப்பதை உணரும்போது, நான் தேவனை நினைத்துப் பார்க்க வேண்டும். என் சுவாசம் முதல் இந்த உலகில் என்னிடம் இருக்கும் அனைத்தும் அவரிடம் இருந்து வந்தவை ஆகும். ”கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.” உயிருள்ள ஒரு மனிதனாக, நான் இப்போதும் எப்போதும் தேவனைத் துதிப்பேன். 

ஜெபம்: பிதாவே, நீர் எனக்குத் தந்திருக்கிற அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, நீர் என் தேவன். நீரே நித்தியப் பிதா. தேவனே, நான் உயிருள்ள நாட்களிலெல்லாம் உமக்கு நன்றியறிதலுள்ளவனாகவும், உம்மைத் துதிக்கிறவனாகவும் இருக்க எனக்கு  அருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

No comments: